வலி உணரு
கவிபாஸ்கர்
கடல் அலையில்
கால் நனைக்காதே
அது என் ஈழத்துத்
தோழர் தோழிகளின்
உப்புக் கண்ணீர்..
பக்கத்து ஊருக்கு
பரிசலில் போனவளே
பரிசலில் ஏறியதும்
மூக்கைப் பிடிக்காதே
அது மீன் கவுச்சி அல்ல...
ஈழ விடுதலைக்கு
சிந்திய இரத்தம்..
அடியே என்
அடி மனசில்
ஆணி அடித்தவளே..
பனை மரத்தில்
ஆணி அடிக்காதே
அது
ஈழப்போராளிகளின்
குகை வீடு....
கடல் ஆழத்தில்
மூழ்கு
வலம்புரி சங்கை எடு
தமிழீழ மக்களின்
அழுகுரல் கேள்
அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...
Tuesday, June 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
ஈழம் : இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது க.அருணபாரதி “ இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ” – 4 நாள் சுற்று(லா)...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...
-
'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...
-
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...
-
ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...
0 கருத்துகள்:
Post a Comment