திரைப்படங்கள் மீது எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. அதில் கலைக்கும் காதலுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதையே அதற்கு காரணம். வெகுஜன ஊடகமான இதில் இன்று ஆபாசமும் வன்முறையும் வக்கிரமும் மிகுந்து காணப்படுவதால் அதன் மேலிருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது.
ஞானராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’
வரலாற்றில் இன்றும் நிலைத்திருக்கும் மாமனிதர்களின் வாழ்க்கையை படம் பிடிப்பது இயல்பான காரியம் என்றாலும், இந்த திரைப்படம் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு பாரதியை புரிந்து கொள்ள மட்டுமல்லாமல் சுவாரசியமாக அதனை படம்பிடித்திருந்தார். அதன் தாக்கம் தான் எனது பாரதிப் பற்றை வளர்த்தது.
சத்தியராஜின் ‘புரட்சிக்காரன்’
நான் எதை நினைத்தேனோ அதை படமாக்கியிருந்தனர். சமூகத்தில் வேரூன்றியிருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு சாவு மணியடிக்க வேண்டும் என்கிற பெரியாரின் கொள்கையையே படமாக்கியது பிரமாதம். கடவுளை ஏற்பவர்கள் சிந்தனைக்கு இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன்.
கதிரின் ‘காதல் வைரஸ்’
எனது கதையோ என்று நினைக்கும் அளவிற்கு என் வாழ்வில் நான் அனுபவித்த பல சம்பவங்களை எனக்கு பட்டியலிட்டு ஞாபகபடுத்திய படம்.
செல்வராகவனின் ‘ரெயின்போ காலனி’
காதலின் வலியை வலிமையை உணர்த்திய காவியம். இன்றும் இந்த படத்தின் பாடல்களை தான் தினமும் முனுமுனுத்துக் கொண்டிருப்பேன். எனது நெஞ்சில் பதிந்த சில நினைவுகளை எழுப்பக்கூடிய வல்லமை இந்த படத்திற்கு உண்டு.
சீமானின் ‘தம்பி’
இந்த படத்தை பார்த்த பிறகு தான் கொள்ளைகளை திரைத்துறையில் பரப்ப முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ‘எமது ஆயுதங்களை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்’ என்ற பொதுவுடைமை பேரறிஞர் தோழர் மாவோவின் வைரவரிகளை கொண்டு தொடங்கும் இந்த படம் எதிர்காலத்திற்கான ஒரு அறைகூவல்.
மிகப்பிடித்த திரைப்பாடல்கள்
பாரதி- கேளடா மானிடா…
புரட்சிக்காரன் - தூங்கும் புலியை…
காதல் வைரஸ் - எந்தன் வாழ்வின்…
ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து…
Sunday, November 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
ஈழம் : இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது க.அருணபாரதி “ இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ” – 4 நாள் சுற்று(லா)...
-
'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...
-
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...
-
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...
-
ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...
0 கருத்துகள்:
Post a Comment