சென்னையில் மிகப் பிடித்த இடங்கள்
தந்தை பெரியார் சமாதி
பெரியார் என்ற மாமனிதரின் அருமைப் பெருமைகளை உணர்த்திய இடம். அங்கு அமைந்துள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் புத்தகங்கள் தான் என்னை சுயமரியாதை பகுத்தறிவு சிந்தனைகள் பக்கம் இழுத்துச் சென்றன….
கண்ணகி சிலை புத்தகக்கடைகள் சாலை
புத்தகங்கள் வாசிப்பதின் மீது எனக்கு தீராத தாகத்தை ஏற்படுத்தியது இந்த சாலை தான். எனது நண்பர்கள் என்னுடன் கடற்கரைக்கு வர பயப்படுவதும் இந்த கடைகளால் தான்.
புதுச்சேரியில் பிடித்த இடங்கள்
மகாகவி பாரதியார் புதுவையில் வாழ்ந்த வீடு
எங்கள் வீட்டிலிருந்து சில தூரத்திலேயே உள்ள இந்த வீட்டீல் தான் நான் எனது கனவு நாயகராகக் கருதி வாழ்ந்து கொண்டிருக்கும் மகாகவி வாழ்ந்தார் என்று நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது.
புதுவை கடற்கரை
இந்த கடற்கரை கரையில் தான் எமது புதுவை நண்பர்களின் சந்திப்பு நடைபெறும். புதுவை வரும்போதெல்லாம் இங்கு சந்தித்து பேசிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. இதே கடற்கரையில் எனது கவிதைகளுக்கு காரணமானவள் வருகை தந்திருக்கிறாள் என்று அறிந்த போது அதன் மதிப்பு மேலும் உயர்ந்து நிற்கிறது.
வாழ்வில் மறக்கவே முடியாத இடங்கள்
நான் படித்த கல்லூரி
கல்லூரி பருவம் தான் என்னை முழு மனிதனாக்கியது. சென்னை புந்தமல்லி அருகே உள்ள எனது கல்லூரி மறக்கமுடியாத பலவற்றை எனக்கு பரிசாக கொடுத்து உதவியது. எனது நண்பர்கள் எல்லோரும் திடலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் தனியே அலைந்த புல்வெளிகள், காடு மேடுகள் என அங்குள்ள அனைத்தும் எனக்கு புதுப்புது அர்த்தங்களை சொன்ன ஆசிரியர்களாக விளங்கின. தனிமையில் இருக்கும்போது அவையே என் வாழ்வை இனிமையாக்கின..
Sunday, November 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
ஈழம் : இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது க.அருணபாரதி “ இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ” – 4 நாள் சுற்று(லா)...
-
'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...
-
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...
-
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...
-
ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...
0 கருத்துகள்:
Post a Comment