சென்னையில் மிகப் பிடித்த இடங்கள்
தந்தை பெரியார் சமாதி
பெரியார் என்ற மாமனிதரின் அருமைப் பெருமைகளை உணர்த்திய இடம். அங்கு அமைந்துள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் புத்தகங்கள் தான் என்னை சுயமரியாதை பகுத்தறிவு சிந்தனைகள் பக்கம் இழுத்துச் சென்றன….
கண்ணகி சிலை புத்தகக்கடைகள் சாலை
புத்தகங்கள் வாசிப்பதின் மீது எனக்கு தீராத தாகத்தை ஏற்படுத்தியது இந்த சாலை தான். எனது நண்பர்கள் என்னுடன் கடற்கரைக்கு வர பயப்படுவதும் இந்த கடைகளால் தான்.
புதுச்சேரியில் பிடித்த இடங்கள்
மகாகவி பாரதியார் புதுவையில் வாழ்ந்த வீடு
எங்கள் வீட்டிலிருந்து சில தூரத்திலேயே உள்ள இந்த வீட்டீல் தான் நான் எனது கனவு நாயகராகக் கருதி வாழ்ந்து கொண்டிருக்கும் மகாகவி வாழ்ந்தார் என்று நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது.
புதுவை கடற்கரை
இந்த கடற்கரை கரையில் தான் எமது புதுவை நண்பர்களின் சந்திப்பு நடைபெறும். புதுவை வரும்போதெல்லாம் இங்கு சந்தித்து பேசிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. இதே கடற்கரையில் எனது கவிதைகளுக்கு காரணமானவள் வருகை தந்திருக்கிறாள் என்று அறிந்த போது அதன் மதிப்பு மேலும் உயர்ந்து நிற்கிறது.
வாழ்வில் மறக்கவே முடியாத இடங்கள்
நான் படித்த கல்லூரி
கல்லூரி பருவம் தான் என்னை முழு மனிதனாக்கியது. சென்னை புந்தமல்லி அருகே உள்ள எனது கல்லூரி மறக்கமுடியாத பலவற்றை எனக்கு பரிசாக கொடுத்து உதவியது. எனது நண்பர்கள் எல்லோரும் திடலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் தனியே அலைந்த புல்வெளிகள், காடு மேடுகள் என அங்குள்ள அனைத்தும் எனக்கு புதுப்புது அர்த்தங்களை சொன்ன ஆசிரியர்களாக விளங்கின. தனிமையில் இருக்கும்போது அவையே என் வாழ்வை இனிமையாக்கின..
No comments:
Post a Comment