Wednesday, October 27, 2010

இந்தியாவே வெளியேறு - க.அருணபாரதி


‘இந்தியாவே வெளியேறு’ என்ற ஒற்றை முழக்கம் ஜம்மு - காசுமீர் பள்ளத்தாக்குகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசின் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக காசுமீர் மக்களின் போராட்டம், மீண்டும் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

காசுமீரி தேசிய இனத்தவரின் தாயகமான காசுமீரை, ஆக்கிரமித்த இந்தியா, அங்கு தன் இராணுவத்தை நிறுவி பேயாட்சி நடத்தி வருகின்றது. பதவிக்காகவும், பணத்திற்காகவும் இன உரிமையை விலை பேசுகின்ற, தேர்தல் கட்சிகளை வைத்துக் கொண்டு அங்கு சனநாயகம் தழைத்தோங்குவதாக இந்திய அரசு வெளியில் பொய் சொல்லி வருவதை இப்போராட்டங்கள் அம்பலப் படுத்துகின்றன.

1 இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத் தினரையும், சி.ஆர்.பி.எப். எனப்படுகின்ற நடுவண் காவல் படையினர் சுமார் 70,000க்கும் மேற் பட்டோரையும் காஷ்மீர் மண்ணில் குவித்து வைத்துக் கொண்டு அங்கு சனநாயக ஆட்சி நடைபெறுவதாக கூறுகின்றது, இந்திய அரசு. நடைமுறையில் அங்கு இராணுவ ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அத்துமீறல்களிலும், அடாவடித்தனங்களிலும் ஈடுபட்டு வந்ததன் காரணமாக, 2005ஆம் ஆண்டு நடுவண் துணை இராணுவப் படையினர் திரும்பப் பெறப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கென ஒரு சிறுதுரும்பைக் கூட இந்திய அரசு இதுவரைக் கிள்ளிப் போடவில்லை.

பாகிஸ்தானும் தன் பங்கிற்கு அம்மண்ணை, தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. காசுமீரிகளின் தாயகமான காசுமீரை இந்தியாவும், பாகிஸ்தானும் பங்குபோட்டுக் கொண்டு உள்ளன.

இவ்விரு அரசுகளும், தங்களது ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல போராளிக் குழுக்களை தானே உருவாக்கியும் இருந்தன. இந்தக் குழுக்களிடையே நடைபெறும் மோதல்களை முன்னிறுத்தி, காசுமீர் தாயகத்தின் விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களை இவ்விரு அரசுகளும் இணைந்தே ஒடுக்கி வந்துள்ளன.

தம் மண்ணை மீட்கப் போராடுகின்ற காசுமீர் விடுதலை இயக்கங்களுக்கு தீவிரவாத முத்திரைக் குத்துவதும், அதற்கு இந்து - முஸ்லிம் மதவாத சாயம் பூசுவதும், ஏகாதிபத்தியங்களின் சதி என்று இட்டுக் கட்டுவதுமாக தொடர்ந்து காசுமீர் விடுதலைப் போராட்டம் இவ்விரு அரசுகளால் ஒடுக்கப்பட்டு வருகின்றது.

போலி மோதல் என்ற பெயரில் அப்பாவி காசுமீர் மக்களும், காசுமீர் விடுதலைப் போராளிகளும் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கதையாகவே நடந்து வருகின்றது. இந்தியப் படையினர் காசுமீரிப் பெண்களை வல்லுறவு கொள்வதும் அன்றாடம் தொடர்கிறது.

இந்திய இராணுவத்தின் இந்த அத்து மீறல்களுக்கு எதிராக, விடுதலை வேட்கையோடு காசுமீர் மக்கள் அவ்வப்போது போர்க் குணமுள்ள போராட்டங்களையும் முன்னெ டுத்தே வருகின்றனர். பல் வேறு மனித உரிமை ஆர்வலர் களும், பத்திரிக்கை யாளர்களும் இந்திய அரசின் இந்த அடக்குமுறை களுக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப் பியும் வருகின்றனர்.

இந்நிலையில் தான், கடந்த 30.04.2010 அன்று மச்சீல் செக்டர் என்ற பகுதியில், வீடு ஒன்றில் ‘தீவிரவாதிகள்’ பதுங்கி யிருப்பதாகக் கூறி, மூவர் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

விசாரணையில் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் ரபியாபாத் பகுதியிலிருந்து இராணுவத்தினரால், கடத்திக் கொண்டு வரப்பட்ட அப்பாவிகள் எனத் தெரிய வந்தது. பதவி உயர்வுக்காக இராணுவ மேஜர் உபேந்தர் என்பவன் அந்த போலி மோதலுக்கு உத்தரவிட்டிருந்ததும் அம்பலமானது. இது தொடர்பான இராணுவ அதிகாரிகளின் பேச்சுகள் ஊடகங்களில் வெளியாயின.

குற்றச்சாட்டுகள் உறுதியான பின், இந்த போலி மோதலை நிகழ்த்திய, இராணுவப் படையைச் சேர்ந்த அப்பாஸ், இராணுவத்திற்கு தகவல் கொடுக்கும் பஷிகர் அகமது, அப்துல் ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேஜர் உபேந்தர் தலைமறைவானார். அவரை காவல்துறை இன்னும் தேடி வருகிறதாம்.

இந்தியத் தேசிய வெறியின் நிழலில் இந்த படுகொலைகள் மூடிமறைக்கப் படுவதும், இந்தியத் தேசப் பக்தியின் பெயரால் இப் படுகொலைகள் நியாயப் படுத்தப் படுவதும், இந்த போலி மோதலை விடக் கொடுமையானது.

தற்போது நிகழ்த்தப்பட்ட இந்த போலி மோதலையடுத்து, காசுமீரெங்கும் இந்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் ஒலித்தன. இந்திய இராணுவத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக, 11.06.2010 அன்று பாரமுலா மற்றும் சிறீநகர் மாவட்டங்களில், ஆர்ப் பாட்டம் நடத்திய பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது நடுவண் துணை இராணுவப் படை. அதில் பள்ளிக்கு சென்று கொண் டிருந்த 16 வயது மாணவன் துஃபைல் அகமது சுட்டுக் கொல்லப் பட்டான். பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், 25.06.2010 அன்று சுபோரில் பகுதியில் மீண்டும் ஒரு போலி மோதல் நிகழ்த்தப்பட, அதில் அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் ‘தீவிரவாதிகள்’ என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல் களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்தது, இந்திய இராணுவம். இந்நிலையில் அவர் களது உடலை ஒப்படைக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில், அஹமத் பட் என்ற 9 வயது சிறுவனின் உயிரைக் குடித்தன, துப்பாக்கிக் குண்டுகள்.

இவ்வாறு, ஜூன் 11 லிருந்து 27 வரை தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது மட்டும், 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போராடிய மக்கள் மீது நடுவண் துணை இராணுவப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதை, காசுமீர் மாநில அரசின் சட்ட அமைச்சர் அலி முகம்மது சாகர் கூட கண்டித்தார். நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள், மக்களை மேலும் மேலும் கொதிப் படையச் செய்தன. ஊரடங்கு உத்தரவுகளையும் மீறி மக்கள் ஒன்றுகூடிப் போராடினர்.

இந்திய இராணுவத்தின் இக்கொடுஞ்செயல்களைக் கண் டிக்கும் வகையில், ஜம்மு - காசுமீர் விடுதலை முன்னணி, ஹூரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டங்களை நடத்தின. காவல் துறையும், நடுவண் துணை இராணுவப் படையும் இணைந்து, இப்போராட்டங்களின் போதும் வன்முறையை ஏவின. இப் போராட்டங்களை நடத்திய ஜம்மு - காசுமீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் மீர்வாஜ் உமர் பாரூக் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்ட போதும், போராட்டங்கள் தொ டர்ந்தன.

இப்போராட்டங்களின் போது காசுமீரி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஓங்கி உச்சரித்த ஒரே முழக்கம் ’இந்தியாவே வெளியேறு” என்பது தான்.

காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா இப்போராட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக வெட்கமின்றிப் புளுகித் தள்ளினார். இந்தப் புளுகலை அப்படியே ஒப்பிவித்தது பார்ப்பன பாரதிய சனதா கட்சி. பாதுகாப்புப் படை யினர் மீது விசாரணை செய்வதை விட ‘பிரிவினைவாத’ அமைப்புகள் மீது முதலில் நடவடிக்கை எடுங்கள் என்றார், பா.ச.க. செய்தித் தொடர்பாளர் அருண் ஜெட்லி. அதனை அப்படியே வழி மொழிந் தார், நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

போலி மோதல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் கடுமை யாக தண்டிக்கப்பட வேண்டும். காசுமீரில் குவிக்கப்பட்டுள்ள நடுவண் துணை இராணுவப் படை யினரும், இந்திய இராணுவத்தினரும் திரும்பப் பெற வேண்டும். இந்திய அரசு காசுமீர் மண்ணை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும். இதுவே காசுமீர் மக்களின் நலன் விரும்புகின்ற, மனித நேயர்களின் கோரிக்கையாகும்.
(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Friday, October 01, 2010

நடந்தேறியது என் திருமணம்..!


தோழருக்கு வணக்கம்...!


அவசரமாய் நடந்ததால், அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை. மேளதாளங்கள் இல்லை. ஆனாலும், எளிமையாக இனிமையாக நடந்தேறியது என் திருமணம்..!



இரு வீட்டுப் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி நடந்த இந்த திருமணம், முறைப்படி தஞ்சை மாவட்ட பதிவு அலுவலகத்தில் 21.09.2010(செவ்வாய்க்கிழமை) அன்று காலை பதிவு செய்யப்பட்டது. 23.09.2010 அன்று தஞ்சையில் எளிமையான முறையில் தமிழ்த் தேசிய இன உணர்வாளர்கள் முன்னின்று, சரோஜ் நினைவகத்தில் வரவேற்பு நிகழ்வை நடத்தி வைத்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர். பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் இன உரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்து அதிக முறை சிறை சென்றவரும், தஞ்சை த.தே.பொ.க. நகரச் செயலாளருமான தோழர் இராசு.முனியாண்டி வரவேற்புரையாற்றினார்.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளருமான தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியரும், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, இளந்தமிழர் இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ம.செந்தமிழன், கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினரும், திரைப்படபாடலாசிரியருமான கவிஞர் கவிபாஸ்கர், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு, வழக்கறிஞர் கரிகாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பேசினர்.

தமிழ் மொழியை புறந்தள்ளி வடமொழியை முன்னிறுத்தும் புரோகித முறையை புறந்தள்ளியும், பெண்களை அடிமைப்படுத்தும் தாலியை அணிவிக்காமலும் தந்தைப் பெரியார் காட்டிய சீர்திருத்த வழியில் இத்திருமணம் இனிதே நடந்தது.

என்னை பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்கும் தோழர்களுக்கு, எனது துணைவியார் சத்யாவையும் அறிமுகப்படுத்தி வைப்பதில் மகிழ்கிறேன்.

நன்றியுடன்,

க.அருணபாரதி


Tuesday, July 13, 2010

தலையிடக்கூடாதாம் – சிங்களத்தின் திமிர்வாதம் - க.அருணபாரதி


கடந்த ஆண்டு தமிழீழத்தின் மீது நடத்தப்பட்ட இனவெறிப் போரின் போது, சிங்கள இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான பல புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சேனல் 4 செய்தி நிறுவனம், சர்வதேச நெருக்கடிக் குழு, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.

இவற்றை முன்வைத்து, உலக நாடுகள் பலவற்றிலும் வாழுகின்ற புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தத்தமது நாடுகளை பணிய வைத்ததன் காரணமாக, சிங்கள அரசின் மீது ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்ட புதிய ஒளிப்படம்

நிர்வாணப்படுத்தப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில் போராளிகளை சிங்கள இராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் ஒளிப்படக் காட்சிகளை சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தொடக்கத்தில் இலங்கை அரசு அக்காணொளியை மறுத்த நிலையில், அக்காணொளி உண்மையானது தான் என்று ஐ.நா. சபை நியமித்த நிபுணர் குழுவும் சான்று வழங்கியிருந்தது. தற்போது புதியதொரு ஒளிப்படக் காட்சியையும் சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இக்காணொளியில், இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட வைக்கப்பட்டிருப்பதும், பெண் போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடப்பதும் பதிவாகியுள்ளது.

மேலும், இக்காணொளியை தமக்கு அனுப்பிய சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் பேட்டியையும் இச்செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில், அவர் தமது உயரதிகாரிகளின் கட்டளைக்கு ஏற்பவே தாம் மக்களை படுகொலை செய்ததாக அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். சரணடைந்தவர்களை சித்திரவதை செய்து கொன்றதையும் அவர் கூறினார்.

இதே போல, கொல்லப்பட்ட ஆண் மற்றும் பெண் போராளிகளின் பிணங்களைக் கூட நிர்வாணப்படுத்தி விலங்குகளைப் போல அவர்களை இராணுவத்தினர் வீசியெறிவது போன்ற காட்சிகளைக் கொண்ட புதிய காணொளியை ‘அதிர்வு’ இணையதளம் வெளியிட்டுள்ளது. இராசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரமாக உடல்கள் கருகிக் கிடப்பதையும் இக்காணொளியில் காண முடிகின்றது.

சர்வதேச நெருக்கடிக் குழு அறிக்கை

இலங்கை அரசு போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறது என்றும் அதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரஸல்ஸ் நகரைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் ‘சர்வதேச நெருக்கடிக் குழு’ (International Crisis Groups) என்ற மனித உரிமை அமைப்பு மே 17 அன்று தனது அறிக்கையில் கூறியது. இதற்கு வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரும், ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருமான லூயிஸ் ஆர்பர் ஐ.நா. சபைக்கும் இப்போர்க் குற்றங்களில் பங்குண்டு என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

இலங்கை அரசு நியாயமான நீதி விசாரணையை மேற்கொள்ளாது என்றும், உள்நாட்டு முரண்பாடு களை தீர்த்துக் கொள்ள, இலங்கை அரசை முன்மாதிரியாக கொண்டு உலக நாடுகள் செயல்படக்கூடிய அபாயம் உள்ளது என்றும் அவ்வமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

• தமிழ் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குண்டுகளை வீசியது,

• குறுகிய பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் மக்களை வற்புறுத்தி அழைத்து குண்டு வீசிக் கொன்றது,

• சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் அரசுக்குத் தகவல் தெரிவித்தும் கூட, காயம்பட்டவர்களும், நோயாளி களும் நிரம்பிய மருத்துவமனைகள் மீது குண்டு வீசியது,

• மனிதாபிமான பணியாற்றிக் கொண்டிருந்த அமைப்புகள் மற்றும் ஊழியர்களை அறிந்து அவர்கள் மீது குண்டு வீசித்தாக்கியது,

• பொதுமக்கள் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைத்துக் காட்டி, உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகித்தலை தடுத்து நிறுத்தியது

மேற்கண்ட குற்றச்சாட்டு களுக்கு இலங்கை அரசு பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தனது அறிக்கையில் அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதே போல புலிகள் மீதும் அவ்வமைப்பு குற்றச்சாட்டு களை முன் வைத்துள்ளது. சர்வதேசச் சமூகம் இனப்படுகொலை நடந்த போது அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததையும் அவ்வறிக்கை சுட்டுக்காட்டி சாடியுள்ளது. ஐ.நா.வின் நம்பகத்தன்மையும் குலைக்கப்பட்டு விட்டதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை

இதனைத் தொடர்ந்து மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) அமைப்பு, மே 25 அன்று இலங்கை மீதான போர்க் குற்றங்களை விசாரிக்கும் நிபுணர் குழு அமைக்கும் முடிவை எக்காரணம் கொண்டும் ஐ.நா. கைவிடக் கூடாது என்று கோரியது. அத்துடன், உயிருடன் இருந்த தமிழ்ப் போராளி ஒருவர் இரத்தம் கசிய அடித்துக் கொல்லப்படும் கோரக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களையும் மற்றொரு மொரு போர்க்குற்ற ஆவணமாக வெளியிட்டது.

கொல்லப்படுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு அவரை இராணுவத்தினர் கத்தியைக் காட்டி மிரட்டுவதும், இறந்த பின் அவர் மீது புலிக்கொடியை வீசுவதும் அதில் பதிவாகியுள்ளது. கோடரியால் தலை சிதைக்கப்பட்டு அவரது மூளை சிதறிக்கிடப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பக அமைப்பு தன் அறிக்கையில் கூறியிருந்தது.

‘இலங்கை அரசு தானே நியமித்துள்ள விசாரணைக்குழு கண் துடைப்பு நடவடிக்கை தான். இதற்கு முன்பு இதே போல இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட 9 குழுக்கள் எவ்வித உருப்படியான பரிந்துரை களையும் வழங்கவில்லை. எனவே, இலங்கை அரசு நியமித்துள்ள குழுவை ஐ.நா. சபை நம்பக்கூடாது’ என்றும் இவ்வமைப்பின் அறிக்கைத் தெரிவித்தது.

சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு, போர் முடிந்து ஓராண்டாகிவிட்ட சூழலிலும் கூட இவை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் சுதந்தி ரமாக நடமாட இலங்கை அரசு தடை விதித்திருந்து என்றும் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது.

கடந்த ஓராண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை காண அனுமதி மறுத்துள்ள இலங்கை அரசு, அவர்களின் நிலையை தெரியப் படுத்தவும் தவறிவிட்டது என மன்னிப்புச் சபை கூறியுள்ளது. ஐ.நா. செயலாளர் பான் கீ மூனை மன்னிப்புச் சபையின் செயலாளர் கிளொடியோ கோர்டான் நேரில் சந்தித்தும் இதனை வலியுறுத்தினார்.

இதனிடையே, அமெரிக்க காங்கிரசு உறுப்பினரும், நிதிச் சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஸ்டிவ்டிரை கோஸ் என்பவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரிக்கு இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் எழுதினார்.

ஏற்கெனவே, கடந்த சனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இலங்கை மீதான போர்க்குற்றங்களை விசாரணை செய்த பின், இலங்கை அரசை போர்க் குற்றவாளி அரசு என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். இத்தீர்ப்பாயத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 நீதிபதிகள் பங்கு பெற்றிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

விசாரிக்குமா ஐ.நா.?

டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் வெளிவந்த பின்னர், கடந்த மார்ச் மாதம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை மீது விசாரணை நடத்த ஓர் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அக்குழுவிற்கென ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அடுத்தடுத்து வெளியிட்ட அறிக்கைகளையும், போர்க்குற்ற ஆவணங்களையும் தொடர்ந்து, பான் கீ மூன் மீண்டும் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை அவசியம் தான் என்று கூறினார்.

இதனைக் கண்டு பதறிய இலங்கை அரசு மே 23 அன்று அவசர அவசரமாக, இது குறித்து தாமே ஒரு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கிறோம் என்று ஐ.நா.விற்கு வேண்டுகோள் விடுத்தது, இலங்கை அரசு. இந்த விசாரணைக் குழுவும் கூட 2002ஆம் ஆண்டு புலிகளும் இலங்கை அரசும் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்பாடு ஏன் சீர்குலைந்தது என்பதனை ஆராய்வதற்குத்தான் என்பதும் வேதனையான வேடிக்கை. இந்த இலட்சணத்தில் இந்த விசாரணைக் குழுவை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாகச் சென்றிருந்த இலங்கையின் வெளி யுறவுத்துறை அமைச்சர் பெரிஸ் ‘இலங்கையின் உள்நாட்டு விவகாரங் களில் தலையிட வேண்டாம்’ என்று கூறினார். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழிப்பதும், முகாம்களில் அவர்களை அடைத்து வைத்துத் துன்புறுத்துவதும் தான் ‘உள்நாட்டு’ உரிமை என்று, வெளிப்படையாக சொல்லாமல் சொல்லியிருக்கிறது, சிங்கள அரசு.

இதனிடையே, இலங்கை அமைச்சர் பெரிஸின் பதிலை நிராகரித்துப் பேசிய பான் கீ மூன் விசாரணைக் குழு திட்டவட்டமாக அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விசாரணைக் குழுவிற்கு ஒத்து ழைப்பு வழங்கப் போவதில்லை என திமிருடன் அறிவித்தார், ஐ.நா.வுக்கான இலங்கை தூதர் பாலித கொஹன்னா. உலக நாடுகளின் சபையான ஐ.நா.வையே எதிர்த்துப் பேசுகின்ற அளவிற்கு இலங்கை அரசிடம் வெளிப்படுகின்ற திமிர், அவர்களிடமிருந்து முளைத்தது அல்ல. இந்தியாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும், இலங்கைக்கு ஆயுத வியாபாரம் செய்த ஏனைய நாடுகளிடமிருந்தும் கிடைத்த திமிர் அது.

ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையான ஐ.நா. அமைப்பு அமைக்கும் விசாரணைக் குழு இலங்கை அரசை எந்தளவு குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் என்பது கேள்விக் குறியே என்றாலும், அதற்குக் கூட ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறுகிறது இலங்கை.

போர்க் குற்றத்திலும், இன அழிப்பிலும் ஈடுபட்ட சிங்கள அரசை உலகின் முன் விசாரணைக் கூண்டில் நிறுத்த தமிழினமும், உலக மனித உரிமை அமைப்பினரும் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதையே இது காட்டுகிறது.

Wednesday, June 09, 2010

சூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட்

உலகமயத்தின் தொடர் தாக்குதலின் விளைவால், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, “விளையாட்டு’ என்ற தன் இயல்பு நிலையை இழந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுத் தளத்திலிருந்த மட்டையடிப் போட்டிகள் வணிகத் தளத்திற்கு மாறி, பிறகு சூதாட்டக் களத்திற்குப் போய்விட்டன. இது பற்றி முன்னணி மட்டையடி வீரர்கள் பலரும் கூட கவலை வெளியிட்டிருந்தனர்.

ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) அமைப்பின் பரிணாம வளர்ச்சியின் அண்மைய வெளிப்பாடே, ஐ.பி.எல். சர்ச்சையாக இன்று நாடெங்கும் பேசப்படுகின்றது. விலைவாசி உயர்வு, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், உழவர்களை அழித்து விட்டு பன்னாட்டு நிறுவனங் களுக்கு வேளாண்மையைத் தாரை வார்க்கும் அதிரடிச் சட்டங்கள் என விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் மறக்கப்பட்டு, அவை துண்டுச் செய்திகளாயின. ஐ.பி.எல். தலைப்புச் செய்தியானது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, மட்டையடி விளையாட்டு வீரர்களை வெளிப்படையாக ஏலத்தில் எடுத்து, தொடக்கத்திலேயே தன் வணிகத்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டது தான், ஐ.பி.எல். அமைப்பு.

2008 ஆம் ஆண்டு, முன்னணி மட்டையடி வீரர் கபில் தேவ், ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தோடு இணைந்து “இந்தியன் கிரிக்கெட் லீக்” (ஐ.சி.எல்.) என்ற ழைக்கப்பட்ட அமைப்பைத் தோற்றுவித்தார். பல்வேறு நாட்டு ஓய்வு பெற்ற மட்டையடி விளையாட்டு வீரர்களையும் உள்ளடக்கிய விளையாட்டு அணிகளை உருவாக்கி, விளையாட்டு நேரத்தைக் குறைத்து பரபரப்பானப் போட்டிகளை நடத்தி, அதன் ஒயூரப்பு உரிமைகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதே இவ்வமைப்பின் ‘உயரிய’ நோக்கம்.

இவ்வமைப்பின் இந்த நோக்கத்தை உணர்ந்து கொண்ட, இந்திய மட்டையடி வாரியத்தின் பண முதலைகள், அவ்வமைப்பன் வழியே தானும் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டது. ஐ.சி.எல். அமைப்பை சீர்குலைக்கும் வகையில், ஐ.பி.எல். என்ற புதிய அமைப்பை உருவாக்கியது. நடுவண் காங்கிரஸ் அரசில் பங்கு வகிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் இந்திய மட்டையடி வாரியத்தின் பேரங்களை முன்னின்று நடத்துபவருமான அமைச்சர் சரத் பவார் இதற்கு பின்னணியில் இருந்தார். அவரைப் போன்றே தரகு வேலைகளில், ஈடுபடுவதில் ‘திறமைசாலி’யான இந்திய மட்டையடி வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி ஐ.பி.எல். அமைப்பின் ஆணையராக அமர்த்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்தே, ரோமானிய அடிமைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது போல ‘விளையாட்டு’ வீரர்கள், ஐ.பி.எல். போட்டிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அம்பானி, விஜய் மல்லையா போன்ற பன்னாட்டுப் பெரு முதலாளிகளும், இந்தியா சிமெண்ட்ஸ் போன்ற தனியார் பெரு நிறுவனங்களும், சீரழிந்த உலகமயப் பண்பாட்டை போதிக்கும் ‘டெக்கான் க்ரோனிக்கல்’ போன்ற ஊடகங்களும், அப்பண்பாட்டை செயலில் காட்டும் சாருக்கான், ப்ரீத்தீ ஜிந்தா போன்ற நடிகர்களும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தின் மூலம் ஏறக்குறைய ரூ. 2000 கோடி இலாபம் சம்பாதித்தத்தோடு மட்டுமின்றி, போட்டிக்கான பார்வையாளர் நுழைவுச் சீட்டு, ஒயூரப்பு உரிமை, விளம்பரங்கள் என மேலும் பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்தது, ஐ.பி.எல்.

ஐ.பி.எல். ஏலம் எடுக்கப்பட்ட போதே, அந்த ஏலத்தில் புழங்கியப் பணம் எங்கிருந்து வந்தது என்று நடுவண் அரசு கூட ஆராய்ந்திடவில்லை. உழவர்கள் தற்கொலை, சிறுதொழில்கள் நசுக்கப்பட்டது குறித்தெல்லாம் வாய் திறக்காத ஊடகங்கள், ஐ.பி.எல். ஏலத்தொகையைக் கணக்குக் காட்டி ‘இந்தியா’ வளர்ந்து விட்டதாக பெருமையடித்தன.

ஐ.பி.எல். மட்டையடிப் போட்டிகளின் நடுவில் ‘இளைப்பாறுதல்’ என்ற பெயரில், அரைகுறை ஆடைப் பெண்களை ஆடவிடுவதும், நடிகைகளை விட்டுக் கட்டிப்பிடிக்க வைப்பதும், போட்டி முடிந்ததும் தினமும் நடத்தப்படுகின்ற, ‘இரவு’ ‘விருந்தில்’ நடக்கும் ஆட்டம் பாட்டம் கேளிக்கைகளும், அது சார்ந்திருக்கும், உலகமய நுகர்வியப் பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கின்றன. யார் வேண்டுமானாலும் யாருடனும் உறவு கொள்ள வலியுறுத்துகின்ற இந்த, உலகமய பாலியல் சீரழிவுகளுக்கு ‘பாலியல் விடுதலை’ என்று புதுப்பெயர் வைத்து, வளர்க்கின்றன ஊடகங்கள். கோடி கோடியாகக் கொள்ளையடித்த முதலாளிகளும், அவர்தம் கையாள் அரசியல்வாதிகளும், அவர்களது வாரிசுகளும், விலை மாதர்களுடன் கொஞ்சிக் குலாவுகின்ற, அந்த இரவு விருந்துகளில் கலந்து கொள்ள ஒருவருக்கான அனுமதிச் சீட்டின் இன்றைய நிலவரப்படி, விலை 40,000 ரூபாய் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

உலகமய நுகர்வியத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிய, மேட்டுக்குடியினர் மட்டுமின்றி, உலகமயப் பாலியல் சீரழிவுகள் மீதான கவர்ச்சியால் ஈர்க்கப்படும் நடுத்தர வர்க்கத் தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களும், ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்ப்பதோடு, இந்த இரவு விருந்துகளில் பெருமளவில் கலந்தும் கொள்கின்றனர்.

இவ்வாறு, கோடி கோடியாக இலாபம் சம்பாதித்து வந்த ஐ.பி.எல். இந்தக் கொள்ளையின் இலாபம் போதாமல், இவ்வாண்டு மேலும் 2 புதிய அணிகளை உருவாக்கிக் கொள்ளையிடத் திட்டமிட்டது. இதன் விளைவாகவே புனே, கொச்சி என புதிய அணிகள் உருவாக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டன. கொச்சி அணி அதிகபட்சமாக ரூ. 1553 கோடி களுக்கு ஏலம் போனது.

மொரீசியஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா வுக்கு வரும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு உண்டு என்பதால், அங்கிருந்து செயல்படுவதாக கூறிக் கொள்ளும் பல போலி நிறுவனங்கள் கருப்புப் பணத்தை ‘முதலீடு’ என்ற பெயரில், இந்தியாவிற்கு அனுப்பி வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றன. இவ்வகை முதலீடுகள் ஐ.பி.எல். போட்டியிலும் பெருமளவு குவிந்துள்ளன என்பதை, ஐ.பி.எல். ஏலத்தில் ஈடுபட்ட நிறுவனங்களின் பின்னணியை ஆராய்ந்த போது தெரியவந்தது.

தமது ட்விட்டர் இணைய தளப்பக்கங்களில், கொச்சின் அணியின் உண்மையான உரிமை யாளர்கள் யார் யார் என, ஐ.பி.எல். ஆணையர் லலித் மோடி ஒரு பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டதும், ஐ.பி.எல். விதிமுறைகள் மீறப்பட்டு, அதன் மரியாதை மீது பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதாகக் கொதித்துப் போய் அறிக்கை வெளியிட்டார், காங்கிரஸ் நடுவண் அமைச்சர் சசி தரூர். இந்திய மட்டையடி வாரியத் தலைவர் சசாங் மனோகரும், லலித் மோடி வெளியிட்ட ‘இரகசியங்களுக்கு’ எதிராகக் கண்டனம் தெரிவித்தார்.

நடுவண் அமைச்சர் சசி தரூரின் பதட்டப் பின்னணியை ஆராய்ந்த போது, கொச்சி அணியின் ரூ. 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருப்பது, துபாயில் வசிக்கும் அழகுக்கலை நிபுணரான சுனந்தா புஷ்கர் என்று தெரியவந்தது. அவர் சசி தரூரின் வருங்கால மனைவி என பேசப்படுபவர். பட்டியலை வெளியிட்ட பின், இதனை வெளியிடக் கூடாது என தம்மை அமைச்சர் சசி தரூர் மிரட்டினார் என்று லலித் மோடி மேலும் கூறினார்.

“மெத்தப் படித்தவர், நிர்வாகவியல் தெரிந்தவர், ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர்” என்றெல்லாம் ஊடகங்களால் காட்டப்பட்ட சசி தரூர், அந்த செல்வாக்கின் மூலம் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்று, அமைச்சராகவும் வலம் வந்து கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மலையாளி என்பது அவருக்குள் சிறப்புத் தகுதி. தற்போது, தம் காதலி சுனந்தாவிற்கு ஐ.பி.எல். அணியின் பங்குகளை வாங்கிக் கொடுத்தது போல், வேறு சில பினாமிகளின் துணையோடு வேறு அணிகளையும் தம் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தாரா என்ற ஐயம் அனைவரிடத்தும் வலுவாக எழுந்தது.

‘நல்ல நிர்வாகி’ என்றெல் லாம் போற்றப்பட்ட லலித் மோடி, ‘அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், அடிதடி வழக்கில் கைதாகி 2 ஆண்டுகள் சிறையிலிருந்தவர். அவருக்குத் தான் நாம் உயர்பதவி கொடுத் திருக்கிறோம்’ என அமைச்சர் சசி தரூரின் செயலாளர் ஜாக்கப் ஜோசப், லலித் மோடிக்கு எதிராக வெளிப் படையாக சீறி எழுந்தார்.

பெருமுதலாளிகளும், முதலாளிகளின் ஊடகங்களும், அதில் நடித்த நடிகர்களும் தாம் கொள்ளையடித்தப் கருப்புப் பணத்தை, கண் முன்பே வெள்ளை யாக மாற்றுவது குறித்தும் எந்த தேர்தல் கட்சியும் சீறவில்லை. மாறாக, அதில் பங்கு கிடைக்காதா என்ற ஏக்கப் பார்வையோடே ஐ.பி.எல். மீது கரிசனத்தோடு கிடந்தனர். இந்நிலையில், பா.ச.க. அதுவரை ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்த்து வந்தது. ஆனால் காங்கிரஸ் நடுவண் அமைச்சர் ஒருவர் தம் அதிகாரத்தின் மூலம், தம் காதலிக்கு பங்குகள் வாங்கிக் கொடுத்தது அம்பலமானதும், ‘திடீர்’ அக்கறை யோடு நாடாளுமன்றத்தை கேள்வி களோடு முற்றுகையிட்டது.

உழவர்களை நசுக்கும் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழாத பா.ச.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப் பனர்கள், சசி தரூரின் அதிகார மீறலுக்கு எதிராக ‘பொங்கி’ எழுந்தனர். எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்குப் படிந்து, சசி தரூரின் பதவியைப் பறித்து, நல்லவர் போல தமக்கு ஏதும் தெரியாதது போல் வேடமிட்டுக் கொண்டு, சிக்கலை அத்தோடு முடிக்க நினைத்தது சோனியா - மன்மோகன் அரசு.

2009ஆம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை வைத்த போது கூட, அதனை மதிக்காது புறந்தள்ளி, இந்திய அரசுக்கு சவால் விடுக்கும் விதமாக அப்போட்டிகளை தென் னாப்பரிக்காவில் நடத்தியது, ஐ.பி.எல். அமைப்பு. அப்போதும், நடுவண் அரசு லலித் மோடி மீது சினங்கொள்ளவில்லை. தற்போது, ஐ.பி.எல். ஊழலில் தம் கட்சி அமைச்சர் ஒருவர் பதவி இழந்து, ஊரெல்லாம் காறி உமிழும் நிலைவந்த பின்னர் தான், அவமானம் தாங்காமல் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது, நடுவண் காங்கிரஸ் அரசு.

இதுவும் தற்காலிகமான நடவடிக்கைகளே. திரைமறைவு பேரங்கள் நடத்தப்பட்டு, அதில் நல்ல ‘விலை’யும் பேசப்பட்டு விட்டால், காங்கிரஸ் அரசு ஐ.பி.எல். அமைப்பின் கொள்ளைகள் குறித்து சிறிதும் கண்டு கொள்ளாது என்பதே உண்மை. ஐ.பி.எல். அமைப்பு தான் கொள்ளையடித்த பணத்தில், பா.ச.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி களுக்கும் பங்கு கொடுத்திருந்தால், பாராளுமன்றத்தில் அவர்களும் போர்க்கொடி தூக்கியிருக்கமாட் டார்கள். பங்கு கொடுக்காததால், ஐ.பி.எல்.லுக்கு வந்தது சிக்கல்.

ஐ.பி.எல். அமைப்புக்கு மட்டுமின்றி, உற்பத்தியில் ஈடுபடாத நிதி புழங்குகின்ற எந்தவொரு தனியார் அமைப்பின் ஊழல்கள் - மோசடிகள் அம்பலமாகின்ற தென்றால், அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கும் பண பேரம் படியவில்லை என்று தான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. ஏனெனில், இதுவே இன்றைய உலகமய காலகட்டத்தின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.

அரசுக்கு சவால் விடுக்கும் அளவிற்குப் பணவலு பெற்றிருந்த ஊழலிலும் கூட லலித் மோடி மீது ஐயம் கொள்ளாத நடுவண் காங்கிரஸ் அரசு, இச்சிக்கலில் தம் அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில் தான் ஐ.பி.எல். குறித்து உற்று நோக்கத் தொடங்கியது. ஐ.பி.எல். அணிகளை ஏலம் எடுத்தவர்களின் அலுவலகங்கள், ஒயூரப்பு உரிமை பெற்ற நிறுவனங்கள், உரிமையாளர்கள், பங்குதாரர்கள் என பலரது வீடுகளும் வருமானவரித் துறை யினரால் முற்றுகையிட்டு சோதனை யிடப்பட்டன.

மும்பையில் இயங்கிய லலித் மோடி அலுவலகத்தில் வருமானவரித் துறையினர், சோதனை நடத்தவருவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள் லைலா அங்கிருந்த முக்கிய கோப்புகளை எடுத்துச் சென்றது, அங்கிருந்த ஒளிப்பதிவுக் கருவியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதனை விஜய் மல்லையாவும் ஒப்புக் கொண்டார். இருந்த போதும், அவர் எடுத்துச் சென்ற கோப்புகள் குறித்து லைலாவிடம் விசாரித்து, விஜய் மல்லையாவின் கோபத்தை சம்பாதிக்க காங்கிரஸ் அரசு ஒன்றும் ஏமாளி அரசல்ல. அடுத்த தேர்தலில் அவரிடம் தான் தேர்தல் நிதி வசூலுக்குப் போய் நிற்க வேண்டியிருக்கும். எனவே, அந்தக் கோப்புகள் காணாமல் போனது போனதாகவே இருக்கட்டும் என அங்கிருந்து கிளம்பினர் வருமான வரித் துறையினர்.

இந்த சோதனைகளின் முடிவில், சசி தரூர் மீது புகார் கூறிய, லலித் மோடி அவரை விடப் பெரிய மோசடிக்காரர் என்பதும் தெரிய வந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரூ. 19 இலட்சம் வருமானவரி செலுத்திய லலித் மோடி, 2008-2009 நிதியாண்டில் 32 இலட்சம் வரி செலுத்தினார். 2009ஆம் ஆண்டு அதிக வரி செலுத்திய 100 பேர் பட்டியலில் இடம் பிடித்தார். 2010ஆம் ஆண்டிற்கு 11 கோடி ரூபாய் வரியை முன்பணமாக செலுத்திவிட்டார். லலித் மோடியின் இந்த ‘அபார’ வளர்ச்சி, அரசியல்வாதிகளை மட்டுமின்றி இந்திய மட்டையடி வாரிய உறுப்பனர்களில் பலருக்கும் எரிச்சலூட்டத் தொடங்கியது.

வருமானவரித் துறை யினரின் பல்வேறு கட்ட சோதனை களுக்குப் பின், லலித் மோடி செய்த பல்வேறு தில்லுமுல்லுகள் தெரிய வந்தன. ‘அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்’ என சசி தரூரை குற்றம் சாட்டிய லலித் மோடியோ, தம் சுற்றத்தாரை பினாமிகளாக்கி அணிகளை ஏலத்தில் எடுத்திருந்தது அம்பலமானது. மேலும், போட்டி யின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்து சூதாட்டம் நடத்தியது உட்பட பல்வேறு மோசடிகளில் அவர் ஈடுபட்டிருந்தது குறித்தும் ஐயப்பாடுகள் எழுந்தன.

“ராஜஸ்தான் அணியின் 25 விழுக்காட்டுப் பங்குகள், நைஜீரியா வைச் சேர்ந்த லலித் மோடியின் ஒன்று விட்ட சகோதரர் சுரேதீ செல்லாராம் என்பவர் வைத்திருக் கிறார். கொல்கத்தா அணியின் 45 விழுக்காட்டுப் பங்குகளை மொரீசியசைச் சேர்ந்த ‘சீ ஐலாண்டு’ நிறுவனத்தின் தலைவர் ஜெய் மேத்தா என்பவர் பெற்றுள்ளார். இவர் நடிகை ஜூகி சாவ்லாவின் கணவர் மட்டுமின்றி லலித் மோடியின் பினாமி என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, லலித் மோடியின் வளர்ப்பு மகளின் கணவர் கவுரவ் பர்மா இங்கிலாந்தில் இயங்கும் ‘பெட்பேர்’ எனப்படும் சூதாட்ட நிறுவனத்துடன் தொடர் புடையவர்” என, வருமான வரித்துறையினரின் கமுக்க அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, ‘தி எக்னாமிக் டைம்ஸ்’ ஏடு எழுதியது. (காண்க: எக்னாமிக் டைம்தி, ஏப்ரல் 19, 2010).

அணிகளைப் பினாமிகளின் பெயரால் வாங்கிய குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி மீது மேலும் எழுந்தன. ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக் காட்சி ஒயூரப்பு உரிமைகளில் மோசடி நடந்ததும் அம்பலமானது. போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒயூரப்புவதற்காக, ரூ. 8225 கோடி ரூபாய்க்கு, மொரீசியசில் உள்ள வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் மற்றும் சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கீரீன் மீடியா ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த உரிமையை பெறுவதற்காக, சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத் திடமிருந்து ரூ. 125 கோடி கைளிட்டு பெற்றதை வெளிப் படையாகவே ஒத்துக் கொண்டது, வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனம். இதிலும், லலித் மோடியின், மோடி என்டர்டெய்ன் மெண்ட் நிறுவனத்திற்கு தொடர் பிருந்தது தெரியவந்தது.

“அரசுத்துறை நிறுவனங்கள் லஞ்சத்தில் திளைப்பவை. அரசு ஊழியர்கள் அனைவரும் சோம் பேறிகள். தனியார் நிறுவனங்களே வெளிப்படையான நிர்வாகத்தை நடத்த வல்லவை” என்று உலகமய ஊடகங்கள் போதித்து வருகின்றன. ஆனால், இன்றோ அந்த ஊடகங் களில் நடைபெறுகின்ற லஞ்ச ஊழல்களே வாய்பிளக்க வைக்கின்றன.

வேகமாக வளர்ந்து வரும் லலித் மோடியின் செல்வாக்கால் திணறிய இந்திய மட்டையடி வாரியமும், நடுவண் காங்கிரஸ் அரசும் இந்த ஊழலை, பயன்படுத்தி லலித் மோடியை அப்பதவியிலிருந்து தூக்கி விட்டு, வேறொருவரை அப்பதவியில் அமர்த்தும் நடவ டிக்கையில் இறங்கின. “முடிந்தால் நீக்கிப் பாருங்கள்” என சவால் விடுத்தார் லலித் மோடி. மோடியின் சவாலுக்கு பின்புலமாக, ஐ.பி.எல். அணிகளை ஏலத்தில் எடுத்த பண முதலைகள் நிற்பது உலகறியாததல்ல.

முற்றிலும் வணிகமயமாகி சூதாட்ட மாகவும் விபச்சாரமாகவும் ஆகிவிட்ட மட்டையடி விளையாட்டைப் புறக்கணித்து, உடலுக்கு உற்சாகம் தருவதோடு தம் இனத்தின் பெருமையையும் பறைசாற்றுகின்ற தேசிய இன விளையாட்டுகளில் நடுத்தர வர்க்க இளைஞர்கள் கவனம் செலுத்தி ஈடுபட வேண்டும்.

மேலும், ‘தேசிய விளையாட்டு’ என இந்திய அரசு பறைசாற்றிக் கொள்ளும் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு, சம்பளம் தராமல் இழுத்தடிப்பதும், அயலார் விளையாட்டான மட்டைப்பந்து போட்டிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதும், இந்திய அரசுக்கே உரிய ‘வந்தேறித் தன்மை’யைத்தான் வெளிப்படுத்து கின்றது.

தேர்தல் அரசியல்வாதிகளும், முதலாளியத் தரகர்களும் இணைந்து நடத்துகின்ற சூதாட்டத் திருவிழாவான, இந்த ஐ.பி.எல். விளை யாட்டுப் போட்டிகள் தடை செய்யப் பட வேண்டும். ஐ.பி.எல். உள்ளிட்ட அமைப்புகள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை அரசு டைமையாக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, எந்த அரசும் முன்வராது என்று தெரிந்தே இக்கோரிக்கைகளை நாம் எழுப்புகிறோம். மக்களை ஆளுகின்ற அரசுகளிடம் அல்ல, ஆளு கின்ற அரசுகளைத் திருப்பித் தாக்கும் திறனுள்ள மக்களிடம் தான் இதனை எழுப்பியாக வேண்டும்.
நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 2010 இதழ்

Friday, May 14, 2010

மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு (16.05.2010)

முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்
மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு
இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
சென்னை, 17. 29.04.2010.

தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.

இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவு+ர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.
சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் திரு. ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ம.செந்தமிழன், சிறப்புரையாற்றுகிறார்.

சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பு+தலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது.

மாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

சிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு
நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து!

ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை எழுப்புவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில், நோர்வே ஈழத்தமிழர் அவை இளந்தமிழர் இயக்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் வைத்திய கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தை மகிழ்வுடன் யாம் வெளியிடுகின்றோம்.

இளந்தமிழர் இயக்க பணி சிறக்க வாழ்த்துகள்!





வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயினில் உருவாகி, எம் இன விடுதலைக்கு அயராது பாடுபடும் இளந்தமிழர் இயக்கத்திற்கு நோர்வே ஈழத் தமிழர் அவையின் வணக்கம்.

வரலாற்றின் ஆதி காலம் முதல் இன்று வரை மொழி, இன, பண்பாட்டால் தமிழகமும் தமிழீழமும் ஒன்றென வாழ்ந்து வந்தாலும், முத்துகுமாரின் உயிர் தியாகம் நம் உறவின் மேன்மைக்கு புதியதோர் அத்தியாத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வீர இளைஞனுக்கு இளந்தமிழர் இயக்கம் நினைவு சின்னம் எழுப்புவதை முன்னிட்டு, நோர்வே ஈழத் தமிழர் அவை பெரு மகிழ்ச்சி அடைவதுடன், தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. வன்னிப் போரின் பொழுதும் இன்றும் இளந்தமிழர் இயக்கத்தின் சீர்மிகு வரலாற்றுக் கடமையினை நோர்வே ஈழத் தமிழர் அவை அறிந்தே வைத்துள்ளது.

எம் மாவீரர்களின் தியாகத்தால் தணல் விட்டு எரியும் விடுதலை தாகம், தமிழக மக்களின் உறுதுணையுடன் தான் விடை காணும் என்பதில் எமக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. எம் இலட்சிய தீயை அணையாமல் எடுத்து சென்றிட யாம் புதிதாக அரசியல் வழிப் போராட்டத்தை முன்னெடுத்து உலகின் மனசாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளோம். எம் வரலாற்றில் முதல் முறையாக புலம் பெயர்ந்த தேசத்தில் வாழும் மக்களின் ஆணையை வாக்கெடுப்பின் மூலம் பெற்று பலம் மிக்க அமைப்பாக நோர்வே ஈழத் தமிழர் அவை செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலாக்கத்தைப் பற்றி எம் தமிழக உறவுகளிடையே எடுத்தியம்பி எம் விடுதலைக்கு வலு சேர்க்க இவ்வேளையில் வேண்டிநிற்கிறோம்.

மேலும், எம் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ்த் தேசிய சிந்தனையின் விதியினை விதைப்பது நம் போன்றோரின் கடமை என்பதனையும், கடல் கடந்து வாழ்ந்தாலும் எம் கைகள் ஒன்று சேர்ந்தால் பல பணிகளை நாம் செய்யலாம் என்பதனையும் இங்கு நினைவு படுத்துகிறோம்.

இவ்வாறு தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளந்தமிழர் இயக்கம் நன்றி

நோர்வே ஈழத்தமிழர் அவையின் வாழ்த்துக் கடிதத்திற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமது கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போன்று தொடர்ந்து இன விடுதலைக்காக இணைந்து செயல்படுவோம் என்றும் நாம் உறுதியளிக்கிறோம்.

குமுதம் ரிப்போhட்டரில் சிலை திறப்பு நிகழ்வு குறித்த செய்தி

தமிழகத்திலிருந்து வெளியாகும் பிரபல செய்தி வார இதழான 'குமுதம் ரிப்போர்ட்டர்” ஏடு, முத்துக்குமார் சிலை தொடர்பாக இவ்வாரம் செய்தி வெளியிட்டுள்ளது.


சிலை திறப்பு நிகழ்வு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வையும், முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்ட நிகழ்வையும் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்திட, மீனகம்.காம் இணையதளத்தினர் முன் வந்துள்ளனர். அவர்களுக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்களிப்பு செய்ய விரும்புவோர்க்கு...

மாவீரன் முத்துக்குமார் சிலையில் தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இன உணர்வாளர்கள் தமது பங்களிப்புகளை 14.05.2010 மாலைக்குள் அனுப்பி வைக்கமாறு அன்புடன் வேண்டுக் கேட்டுக் கொள்கிறோம். இதற்குரிய வங்கிக் கணக்கு எண் விபரத்தையும் யாம் இங்கு வெளியிடுகின்றோம்.

வங்கிக் கணக்கு விவரங்கள்:


தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழர் இயக்கம்
Cell : +91 9841949462

Thursday, May 13, 2010

தமிழ் எழுத்து சீர்திருத்த எதிர்ப்பு மாநாடு(16.05.2010) வெற்றி பெற வாழ்த்துகள்!

செவ்வணக்கம் தோழர்களே..

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் முக்கியக் காரணியாக விளங்கும் தமிழ் மொழியை, சிதைக்கும் நோக்கிலேயே இந்த எழுத்து மாற்றம் அறிவிக்கப்பட உள்ளதோ என்ற கேள்வி தான், எழுத்து மாற்றம் குறித்து முதன் முதலில் அறிந்த போது ஏற்பட்டது.

எழுத்து மாற்றும் குறித்து அறிந்த போது, தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் கொண்டு வருகிறோம் என்ற பெயரில், மொழியை சிதைக்கும் நோக்கில் செயல்படும் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமையாகும என்றும் உணர்ந்தேன்.

இந்த தருணத்தில் தான், தமிழ் எழுத்துகளை சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்க நினைக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள தமிழ் எழுத்து சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புதுச்சேரியில், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் 16.05.2010 அன்று 'தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு” மாநாடு ஏற்பாடாகியுள்ளது.

இந்த மாநாடு தொடர்பான புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தொடக்க நிலை ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். மாநாட்டு ஏற்பாடுகளிலும் பங்கு வகிக்க நினைத்திருந்தேன். ஆனால், நான் சார்ந்துள்ள இளந்தமிழர் இயக்கம் சார்பில் தஞ்சையில் மாவீரன் முத்துக்குமார; சிலை திறப்பு நிகழ்வை நடத்த திட்டமிட்டதால், மாநாட்டில் பங்கு பெற இயலாமல் போனதற்கு மிகவம் வருந்துகிறேன்.

எனினும், மாநாடு வெற்றி பெறவும், மாநாட்டில் உரையாற்றும் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்க்கணினி ஆர்வலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் இந்த முயற்சி பெரு வெற்றி பெற்று, தமிழ் எழுத்து சீர்திருத்த எதிர்ப்பிற்கு மேலும் உதவும் என்று மனதார நம்புகிறேன்.

வாய்ப்புள்ள நண்பர்கள், பதிவர்கள், இம்மாநாட்டில் நிச்சயம் பங்கு பெற வேண்டும். எழுத்து சீர்திருத்தம் தொடர்பான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து நாம் உறுதுணையாக நிற்கவும் உறுதியேற்க வேண்டும்.

தோழமையுடன்,
க.அருணபாரதி


"தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு” மாநாடு" - 16.05.2010


நாள்; 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை

இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,

காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை

உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை

பிற்பகல் அமர்வு : 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்
  1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,

  2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர், உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,

  3. பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர் லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  4. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  5. திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,

  6. முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  7. பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி

  8. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.

  9. திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)

  10. தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை

  11. திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி

  12. புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,

  13. திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி

  14. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்

  15. பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி

  16. திரு.விருபா. குமரேசன் சென்னை

  17. திரு,எழில் இளங்கோ விழுப்புரம்,

அனைவரையும் வருக என வரவேற்கும்,


Wednesday, April 21, 2010

உலகமயம் உருவாக்கிய நவீன சாமியார்கள் - க.அருணபாரதி

(தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)





  • பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்றறியப்பட்ட ஒரு சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. அவரது ஆசிரமங்கள் தாக்கப்பட்டன.



  • கல்கி பகவான் என்றறியப்பட்ட சாமியாரின் மடத்தில். அவரது பக்தர்களுக்கு போதை மருந்து கொடுத்திருந்தது அம்பலமானது.



  • சங்கரமடத் தலைவர் காஞ்சி ஜெயந்திரர், கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானார்.



  • சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு வைத்துக் கொண்ட கிறித்தவ ஆயர்களை போப் ஆண்டவர் அனுமதித்திருந்தது, அம்பலமானது.


சமயவாதிகள் என சமூகத்தில் அறியப்படும் மேற்படியானவர்கள் அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், மாட்டிக் கொள்வதும் அன்றாடச் செய்திகளுள் ஒன்றாகி விட்ட இன்றைய சூழலில், மக்கள் இந்தச் சாமியார்களிடம் சென்று சிக்கிக் கொள்ளும் நிலை, அதிகரித்துள்ளதன் காரணத்தை ஆராய்வது நமக்கு அவசியம்.


நித்தியானந்தரின் மோசடி அம்பலமானவுடன், தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘என்ன தான் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தாலும் இந்த மக்கள் திருந்தப்போவதில்லை’ என்றும் தெரிவித்திருந்தார். நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து தேர்தலில் போட்டியிடும், தன் ‘கழகக் கண்மணி’களைக் கூட பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, திருத்த முடியாத கருணாநிதியின் அறிக்கை வேடிக்கையானது.

மோசடி சாமியார்களை அம்பலப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிட்ட காரணத்தால், ஊடகங்களுக்கு, ஏதோ சமூகப் பொறுப்புணர்வு வந்துவிட்டதாக நாம் கருதிக் கொண்டால் அது பிழையே ஆகும்.

சாமியார்களின் புனிதப் பிம்பத்தை உடைத்தெறியும் முன்பு, கோடிகளில் திரைமறைவு பேரம் நடத்தப்பட்டு, அதில் உரிய விலை கிடைக்கப் பெறாத காரணத்தினாலேயே, இந்த மோசடிச் சம்பவங்கள் வெளியிடப்பட்டிருக்கக் கூடும். பரபரப்புக் காட்சிகளை வெளியிட்டுக் காசாக்குவதில் கைதேர்ந்த, ஊடகங்களுக்கு இதில் நிச்சயம் பங்கு இருந்திருக்கும்.

ஏனெனில், நித்தியானந்தரோ, கல்கியோ சாதாரணமானவர்கள் அல்லர். பல்வேறு நாடுகளில் தனது ஆசிரமங்களின் கிளைகளைப் பரப்பி, அதிகார வர்க்கத்தினருடன் கை குலுக்கி நின்றவர்கள். முற்றும் துறந்த துறவிகளான இவர்களின் சொத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஈடானவை. உலகமய காலகட்டத்திற்கு முன்பிருந்த, குறிச்சொல்லும் காவிச் சாமியார்களல்ல இவர்கள். மாடமாளிகைகள் போல ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு, கண்டம் விட்டு கண்டம் பறந்தோடி, கோடிகளில் விளையாடுகின்ற நவீன உலகமய சாமியார்கள் தான் இவர்கள்.

நித்தியானந்தர் போன்ற மோசடிச் சாமியார்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் விதமாக முன்னின்று உழைத்த ஊடகங்கள், இன்று அவர்களது மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும் முன்னிற் கின்றன. ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தொடர் மூலம் நித்தியானந்தாவிற்கு அடையாளம் கொடுத்த ‘குமுதம்”, அவரது காமலீலைகளை தம் இணையதளத்தில் வெளியிட்டு காசு சம்பாதிக்கவும் கூச்சப்படவில்லை. ‘நாங்களும் ஏமாந்து விட்டோம்’ என்று அப்பாவி பக்தர்களைப் போல் இதற்கு ஒரு சமாதானமும் கூறிக் கொண்டது. ஊடகங்களின் இந்த கூச்சமற்றத் தன்மை தன்னிலிருந்து பிறந்ததில்லை. தம்மை இயக்கும் முதலாளியத்திலிருந்து பிறந்தது அது.

கடவுள் நம்பிக்கையின் பெயரால், சோதிடப்பலன், எண் கணிதம், கைரேகை என பல்வேறு நம்பிக்கைகளை வீட்டிற்குள் திணிக்கும் தொலைக்காட்சிகளும், அவற்றையே பிரதானமாகக் கொண்ட பத்திரிக்கைகளும், உழைக்கும் மக்களிடையே அவர்களது எதிர்காலம் குறித்த அச்சத்தை கிளறிவிடுகின்றன. இதன் விளைவாக, மக்கள் இது குறித்த ஆழ்ந்த சிந்தனையிலேயே விழுந்து கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தமது மொழி, இனம், கல்வி, வாழ்வாதாரம் என சராசரி மனிதர்களின் உரிமைகள் அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இன்றைய உலகமயச் சூழலில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் இந்த ‘எதிர்காலம் குறித்த அச்சம்’ என்ற காரணி, மதங்களின் இருப்புக்கு உதவுகிறது.

முதலாளியத்தின் உழைப்புச் சுரண்டலால் தம் வசந்தங்களை இழந்து, ஒடுக்கப்பட்டு நிற்கின்ற உழைக்கும் மக்கள், தம் அவலங்களுக்கு காரணம் முதலாளியமே என்று எளிதில் உணர்ந்து விடுவதும் இல்லை. அவ்வாறு அவர்கள் உணராததற்கு முக்கியக் காரணியாக மக்களிடையே நீடிக்கும் கடவுள் நம்பிக்கையும் விளங்குகிறது. தாம் அறிந்து கொள்ள முடியாத பலவற்றுக்கும் கடவுளின் பெயரால் நியாயம் கற்பித்துக் கொள்கிற ‘சமரச’ மனநிலையே இதனை தீர்மானிக்கிறது.

இதன் பின்னணியில் தான், ‘தம் பிறப்பையும், தம் வாழ்வையும், தம் துன்பங்களையும் தீர்மானிப்பது கடவுள் தான்’ என்று, தமக்குத் தாமே கற்பிதம் செய்து கொள்ளுமாறு உழைக்கும் மக்கள் பணிக்கப்படுகின்றனர். அதனை அவர்கள் பெருமளவில் ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.

கடவுள் நம்பிக்கையின் பெயராலும், விதியின் பெயராலும், உழைக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதனால் தனியுடைமை யானது மக்களிடம் நிலவும் கடவுள் நம்பிக்கையை நிறுவனமயப்படுத்துகிறது. மதநிறுவனங்களை வளர்த்து விடுகிறது.

உழைக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இன்றைய உலகமய காலகட்டத்தில், உழைக்கும் மக்கள் கொடுந்துன்பம் அடைந்து வருகின்றனர். வேலை வாய்ப்பில் ஒரு நிச்சயமற்ற நிலை, சிறு தொழில் - வணிக நிறுவனங்கள் தொடர முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மன உளைச்சலிலேயே உழல்பவர்கள் அதிகம். மக்கள் தம் துன்பங்களுக்கு மருந்து தேடி மத நிறுவனங்களிடம் சிக்குவதும் அதிகரித்துள்ளது. ஏழை எளிய மக்கள் தம் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள சிறு சிறு சாமியார்களிடமும், படித்த - நடுத்தர வர்க்க மக்கள் நித்தியானந்தர் போன்ற நவீன சாமியர்களிடமும் சிக்குகின்றனர்.

இதே காலகட்டத்தில் தான், சுரண்டும் மேட்டுக் குடியினர் தம் சுரண்டலின் மூலமாக கிடைத்த பணத்தை பதுக்கிக் கொள்ளவும், அந்தச் சுரண்டலுக்கு துணை போன அரசியல்வாதிகள் தம் கருப்புப் பணத்தை பதுக்கிக் கொள்ளவும் ஓர் இடமும் தேவைப்பட்டது. அவ்விடத்தையும் இந்த நவீன சாமியார்களே நிறைவு செய்தனர்.

சுரண்டி சேர்த்துப் பதுக்கியப் பணம் குறித்த கவலையால் நிம்மதியிழக்கும் மேட்டுக்குடியினர் “எதையோ” இழந்து விட்டதாகப் புலம்பியபடி இந்த நவீன சாமியார்களிடம் தான் வருகிறார்கள். அண்மையில், தில்லியில் ‘ஜீவ் முராத் திவிவேதி என்ற சாமியார் பகலில் யோகம், தியானம், சொற்பொழிவு என்று நடித்து விட்டு, இரவில் விபச்சாரத் தரகு வேலை பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டு கைதான பெண்கள் பலரும் படித்த, நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்கள் தான் என்பதும் தெரியவந்தது.

இந்த நவீன சாமியார்கள் குறிவைத்து, இழுப்பதும் இது போன்ற பின்னணி கொண்டவர்களைத் தான். பணக்கார வெளிநாட்டு பக்தர்களின் மனநிலையும் கூட அது தான். இவ்வாறு தான் இந்த நவீன சாமியார்கள் உருவெடுக்கிறார்கள்.

நாம் அன்றாட வாழ்வில் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள், பொருளியல் ரீதியாக தமக்குக் கீழானவர்களிடமும் அன்பு செலுத்துதல், வேலைப்பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி, மனம் திறந்து பேச ஏற்பாடு செய்தல், தமது மன உளைச்சலை போக்கும் விதமாக அவர்களை நடனம் ஆட விடுதல், வாய்விட்டு கத்தக் கூறுதல், ’பேரானந்தம்’ - ‘மகிழ்ச்சி’ போன்ற பற்பலப் பெயர்களிட்டு அவர்களை மனம் விட்டு சிந்திக்கக் கூறுதல். இவை தான் இந்த நவீன சாமியார்கள் செய்பவை. இதற்காக ஆயிரக்கணக்கில் அவர்கள் கட்டணம் வசூலிப்பதும் உண்டு. சொற்பொழிவுகளுக்கு, சில மணிநேரங்கள் அவருடன் கழிக்க, அவர் ஆசிர்வாதம் செய்வதற்கு என இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதும் உண்டு.

மன உளைச்சலுக்கு ஆளான தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் பலரும் இந்த நவீன சாமியார்களின் பிடியில் விழுவது இன்று அதிகரித்துள்ளது. மன உளைச்சலைப் போக்க அந்த சாமியார்கள் கொடுக்கும் பயிற்சிகள் எதுவும் தேவையில்லை. சின்னஞ்சிறு குழுந்தைகளிடம் குடும்ப உறவுகளிடமும் மனம் விட்டுப் பேசினால் கூட மன உளைச்சலைப் போக்கி விடலாம் ஆனால், கணினி, கைப்பேசி என நீண்ட நேரம் இயந்திரங்களுடன் இயங்கியே பழகி விட்ட, இவர்களுக்கு மனிதர்களுடன் பழகுவது அபூர்வமானதல்லவா? உயிரற்ற இயந்திரங்களுடன் வாழ்ந்து, உயிருள்ள இயந்திரங்களாகவே மாறிப் போன தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இதற்கென்று நேரம் வேண்டும் அல்லவா? எனவே, இதற்கென தனியாக நேரம் ஒதுக்கி அவர்கள் நவீன சாமியார்களை நாடுகிறார்கள்.

“மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!” என்று சுவாமி சுகபோதானந்தா ஆனந்த விகடனில் எழுதியத் தொடர், இந்த நோக்கிலேயே எழுதப்பட்டது. 2008ஆம் ஆண்டு உலகமயப் பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின், உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டதால், உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை போக்கும் விதமாக வெளிவந்த சின்னத்திரை சிரிப்பு நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதன் பின்னணியிலும், உலகமயமே நிற்கிறது. கிராமங்களை அழித்த உலகமயம், நகரங்களில் இளைஞர்களை இடம் பெயர்த்ததன் பின்னணியில் தான், கிராமத்துக் கதைப் பின்னணி கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் வெற்றி பெற்று ஓடியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிராம வாழ்வை இழந்த இளைஞர்கள் இவ்வாறான படத்தில் ஆறுதல் அடைகிறார்கள்.

இவ்வாறு, உழைப்புச் சுரண்டலால் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் மக்கள், பிறரோடு அன்பாக தாம் பேசுவதற்கும், பழகுவதற்கும் கூட ஓரு சாமியாரின் வழிகாட்டுதலுக்காக நிற்க வேண்டிய அவல நிலையை, உலகமயம் நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறது.

இந்தச் சாமியார்கள் இதற்கென பல்வேறு பயிற்சிகள் அளிப்பதோடு மட்டுமல்லாமல், உலகமயம் வலியுறுத்துகின்ற நுகர்வியப் பண்பாட்டையும், தம் போதனைகள் வாயிலாக புதிய வகையில் மக்கள் மனதில் புகுத்தும் வேலையை செய்கிறார்கள். இதற்காகவே, இவா;களை மேலும் ஊக்கமளித்து வளர்க்கின்றன, ஊடகங்கள். இந்த போதனையைத் தான் உலகமயமும் அதனால் பயன்பெறுகின்ற ஆளும் வர்க்கங்களும் விரும்புகின்றன.

‘இன்றுள்ள சமூக அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு யோசிங்கள்’ என்கிறது உலகமயம். அதனையே இந்த நவீன சாமியார்களும் வழிமொழிகிறார்கள்.

“அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீயும் நானும் தோழர்களே! என்று கூறிய சேகுவேராவின் கருத்து மிகவும் மோசமான கருத்து. அவரை இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது’’ என ஒரு நூல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே பேசினார் ஜக்கி வாசுதேவ்.

‘புவி வெப்பமயமாதலிலிருந்து உலகைக் காக்க மரம் நடுங்கள்’ என்று, மரங்கள் நடுவதற்கான திட்டம் தீட்டிய ஜக்கி வாசுதேவ், முதலாளிகளின் இலாப வேட்டைக்காக உலகெங்கும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதன் விளைவு தான் புவி வெப்பமயமாதல் என்ற உண்மையை பேசுவதில்லை. அதற்கெதிராகப் போராடுவதும் அவரைப் பொறுத்தவரை “வன்முறை கருத்து”.

அதாவது, ‘போராட்டம் என்பதே கூடாது. ஒவ்வொரு தனிமனிதரும் அவரவர் வாழ்க்கையை ஒழுங்காய் நடத்தினால் போதும்” என்று கூறி, மனிதர்களை குழுவாக இயங்க விடாமல் செய்து, உதிரிகளாக்கிட விரும்புகின்ற முதலாளியத்தின் குரலைத் தான் இந்த நவீன சாமியார்கள், “உள்ளுணர்வு”, “தனிமனித ஒழுக்கம்’, “தன்னிலிருந்து யோசி” என்று பல்வேறு வடிவங்களில் கூறுகிறார்கள்.

இலாப வேட்டைக்காக காத்து நிற்கும் உலகமயம், ‘அனைத்துப் பொருட்களையும் நுகருங்கள்’ எனக் கூறுகின்றது. அதனையே, “அத்தனைக்கும் ஆசைப்படு” என்கிறார்கள், இந்த நவீன சாமியார்கள்.

‘பாலியல் சுதந்திரம்’ என்ற பெயரில் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளை வளர்க்கக் கோருகிறது உலகமயம். இதன் மூலம், குடும்ப உறவுகளை சிதைத்து, மனிதர்களை உதிரிகளாக்கி இலாபம் கொழுக்கவும் அது திட்டமிடுகிறது. இதனையே வழிமொழிந்து, ‘உன்னை மட்டும் யோசி, உன்னிலிருந்து தான் எல்லாம் பிறக்கிறது’’ என்று போதிக்கிறார்கள் நவீன சாமியார்கள். ”இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்; மாற்ற முயலாதே” என்பதும் சிறீ சிறீ ரவிசங்கரின் உபதேசம்.

பெருமளவில் நிதிக்குவிந்து நிறுவனமயமான காரணத்தால் இந்த நவீன சாமியார்களுக்கு எளிதில் அரசியல் செல்வாக்கும் வந்து சேர்கிறது. சந்திராசாமி, ஜெயேந்திரர் போன்ற மோசடி சாமியார்கள் ஒரு நாட்டிற்குள் உள்ள அரசியல்வாதிகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலை மாறி, இன்று சிறீ சிறீ ரவிசங்கர் போல பல நாடுகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலையாக இந்த நவீன சாமியார்களின் நிலை முன்னேறியுள்ளது.

மதங்களைக் கடந்த ஆன்மிகம் என இந்த நவீனச் சாமியார்கள் கூறினாலும், அவர்கள் மூழ்கிக் கிடப்பதென்னவோ இந்துத்துவ அரசியலில் தான். இதனை அவர்களது, இந்துமத சார்பு - வடமொழி சார்பு நிலையை மட்டும் வைத்து உணர்த்தவில்லை. நேரடியான அரசியல் நடவடிக்கையின் மூலமாகவே உணர்த்தியிருக்கின்றனர்.

சிறீ சிறீ ரவிசங்கர், ராமர் பாலத்தை முன்னிறுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் கொண்டுள்ளார். இட ஒதுக்கீட்டையும் ரவிசங்கர் எதிர்க்கிறார். நித்தியானந்தர் தலைமறைவானதும் இந்து மதவெறிக் கட்சியான சிவசேனாவின் தலைவர் தான் செய்தியாளர்களை சந்தித்தார்.

எனவே, இந்த நவீனச் சாமியார்களின் குற்றங்களை தனிநபர் குற்றங்களாக மட்டும் கருதாமல் அதனை சமூகப் பின்னணியுடன் தொடர்பு படுத்தி ஆராய்தலே நமக்கு உண்மைக் குற்றவாளியை அடையாளம் காட்டும்.

வரம்பற்ற வேலை நேரம், தலையை கொதிக்க வைக்கும் வேலைச்சுமை, எந்த நேரத்திலும் வெளியில் வீசப்படலாம் என்ற நிலை இவற்றுக்கிடையே உயர் ஊதியத்திற்காக பணியாற்றிக் கொண்டு, குடும்ப உறவை, மன அமைதியை, சமூக வாழ்க்கையை இழந்து தவிக்கும் உயர் நடுத்தர இளைஞர்களுக்கு உடனடி நிவாரணமாக பலவித போதைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த உலகமய உயர்நுட்ப சாமியார்களின் உபதேசங்கள். காரணங்களைப் போக்காமல் விளைவுகள் மீது கவனத்தைத் திருப்பும் உலகமய உத்திகளில் ஒன்று தான் சாமியார்களின் வளர்ச்சி.

இதைப்புரிந்து, காரணங்களுக்கு எதிராகப் போராடுவதே மக்கள் விடுதலைக்கு வழி.

(தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Tuesday, April 13, 2010

ஹைத்தி: ஏகாதிபத்தியத்தின் பிண அரசியல் - க.அருணபாரதி

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

கடுமையான நிலநடுக்கத்தால் குலைந்து போயுள்ளது, ஹைத்தி தீவு. கடந்த சனவரி 12ஆம் நாள், அத்தீவைக் குலுக்கிய 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்களின் படி, சுமார் 1.5 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.

அந்நாட்டின் தலைநகரான, போர்ட் ஆவ் பிரின்ஸ் (Port – Au - Prince) நகரின் 8 மருத்துவமனைகள் நிலநடுக்கத்தால் நொறுங்கிக் கிடக்கின்றன. அங்குள்ள பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பலர், தாம் இன்னும் தொட்டுக் கூடப் பார்க்காத நோயாளிகள் பலர் காத்துக் கிடக்கின்றனர் என்றும், பலர் இரத்தமின்றியும் உயிர்காக்கும் மருந்துகள் இன்றியுமே உயிரிழந்தனர் என்று தெரிவித்தனர்.

அந்நாட்டில், போதிய மருத்துவர்களும் மீட்புக் குழுவினரும் இல்லாததால் பணிகள் தேங்கிக் கிடக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான முழுகட்டமைப்புகளும் அந்நாட்டில் இல்லாததால், அந்நாடு சர்வதேச சமூகத்திடம் உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

ஹைத்தியின் இக்கோரிக்கையை பயன்படுத்தி, அங்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஒரு பெரும் பேரழிவு நடந்த இடத்தில், “மீட்புக்குழு” என்ற பெயரில் பிணங்களை தள்ளிவிட்டு, ஆதிக்கம் செலுத்தத் துணிந்திருக்கிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். ஹைத்தி மேல் அமெரிக்காவிற்கு இருக்கும் இந்த ஆதிக்கவெறிக்கும் ஒரு வரலாறு உண்டு.

சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட தீவு ஹைத்தி தீவாகும். இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஒரு நாளைக்கு, வெறும் 2 டாலர்கள்(அதாவது ரூ.90) வருமானம் பெறுகின்றனர். 18ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு காலனியாக இருந்த ஹைத்தியில், கருப்பின மக்களின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடந்துள்ளன. கருப்பர்களின் அரசு என அமெரிக்கா உள்ளிட்ட வெள்ளை இனவெறி நாடுகளால் ஹைத்தி வர்ணிக்கப்படுவதும் உண்டு. கருப்பர்களை அடிமைகளாக்கி அவர்களது உழைப்பை ‘கருப்புத்தங்கம்’ என்றும் வெள்ளையர்கள் அழைத்து வந்திருக்கின்றனர்.

தொழில்மயமாவது என்ற பெயரில், வேகவேகமாக காடுகள் அழிக்கப்பட்டு. தற்பொழுது, வெறும் 2 விழுக்காடு காடுகள் மட்டுமே அங்கு எஞ்சியுள்ளன. இவற்றின் விளைவாக, இந்த இரு நூற்றாண்டிகளில் நடக்காத மிகப்பெரிய நிலநடுக்கத்தை அந்நாடு உணர்ந்திருக்கிறது.

1990களில் முதன் முறையாக சனநாயக வழியில் ஹைய்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜீன் பெட்ரான்ட் ஒரு இராணுவ ஆட்சி மாற்றம் மூலம் தூக்கியெறியப்பட்டார். ஜீன் பெட்ராண்ட் நாடு கடத்தவும் பட்டார். அப்போது அதிபர் பதவி ஏற்றிருந்தவர் பில் கிளிண்டன். 1994இல் ஹைய்திக்கு அமெரிக்கப் படைகளை அனுப்பியதும் இவரே. இன்று அவர் தான் ஹைய்தி நிலநடுக்கம் குறித்த தகவல்களை அமெரிக்க அரசிற்கு உடனுக்குடன் வழங்கும் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாக அமெரிக்க அதிபர் ஒபாமாவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒபாமா அறிவித்துள்ள இன்னொரு பிரதிநிதி வேறு யாருமல்ல. ஈராக்கிலும் ஆப்கனிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, அமெரிக்க மக்களாலும் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஜார்ஜ் புஷ் தான் அவர். இவர்கள் இருவரும் ஹைய்தியில் நடக்கும் நிவாரணப் பணிக்கான நிதி திரட்டும் அமைப்புகளுக்குத் தலைமை தாங்குவார்களாம். இந்த இருவர் நியமனத்திலிருந்தே, அமெரிக்காவின் நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைத்திக்கு, நிவாரணப் பணிகளுக்காக, பொது நிதியிலிருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா 10 கோடி டாலர்கள் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு மாதம் ஒன்றிற்கு செலவிடப்படும் தொகையில் நூற்றிலொரு பங்கு இது. இது தவிர, ஜெர்மன் நாடு 2.2. இலட்சம் டாலர்களைக் கொடுக்கின்றதாம்.

அரசியல் நிலையற்ற தன்மை, சூறையாடப்பட்ட பொருளியல் என திக்குமுக்காடிய ஹைத்தியில் அவ்வப்போது உள்நாட்டுக் கலகங்கள் வெடிப்பதுண்டு. இதனால் ஐ.நா. பாதுகாப்புப் படைகள் சுமார் 12,000 பேர் அங்கு ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் இணைந்து பிற நாட்டு மீட்புக்குழுவினரும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தற்பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைத்திக்கு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளெல்லாம் உதவிகளையும், மீட்புக்குழுவினைரையும் அனுப்பி வந்த நிலையில், ஹைத்தியின் மிக அருகில் உள்ள அமெரிக்காவிலிருந்து ஆள் வரவில்லை. ஹைத்திக்கு மிக அருகில் உள்ள மியாமியிலும் பூர்ட்டொரீகொவிலும் அமைந்துள்ள அமெரிக்க தளங்களிலிருந்து கூட ஹைத்தியில் மீட்பு உதவிகளுக்கு யாரும் வரவில்லை. விசாரித்துப் பார்த்தப் போது, ஹைத்தியில் ‘பாதுகாப்புக் குறைபாடுகள்’ இருப்பதாக தெரிவித்தனர், அமெரிக்க பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகள். நிலநடுக்கத்தால் அந்நாட்டு அதிபர் மாளிகையே சிதறிக்கிடக்கும் நிலையில், அங்கு அமெரிக்கா எதிர்பார்க்கும் ‘பாதுகாப்பு’ இல்லையாம்.

நீண்ட யோசனைக்குப்பின், ஹைய்தி கடற்கரையை அமெரிக்கா அனுப்பிய, ‘கார்ல் வின்சன்’ (USS Carl Vinson) என்ற கப்பல் வந்தடைந்தது. நிவாரணப் பொருட்களும், மருத்துவர்களும் வந்திருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ஹைய்தி மக்களுக்கு, அதிர்ச்சியும் ஏமாற்றமுமே மிஞ்சியது.

அக்கப்பல், 19 ஹெலிகாப்டர்களை கொண்ட விமானம் மற்றும் ஏவுகணைகளைத் தாங்கிய போர்க்கப்பல் எனத் தெரிந்தது. இவ்வளவு மனிதநேயமிக்க அமெரிக்க அரசின் அதிபருக்கு ‘நோபல் பரிசு’ கொடுக்கப்பட்டதை எண்ணி அம்மக்கள் தன் தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான். நீண்ட யோசனைக்குப் பின், அக்கப்பலிலிருந்து 3 மருத்துவர்கள் இறங்கினர். அவர்கள் அமெரிக்கா சார்பாக, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ளனராம் நாம் நம்பித்தான் தொலைக்க வேண்டும்!

இது தவிர 2000 பேரோடு, USS Bataan எனப்படும், தரையிலும் கடலிலும் சென்று தாக்கக்கூடிய அமெரிக்கப் போர்க்கப்பல் ஹைய்தியை நோக்கிப் புறப்பட்டுவிட்டது. இவற்றோடு, 82வது விமானப்படைப் பிரிவின் 3500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஹைய்தியில் களமிறங்கியுள்ளனர். முன்பெல்லாம் ஹைத்தி மீது ஆக்கிரமிப்பு செய்திட போர் புரிந்து அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும். இப்பொழுது அக்காரியத்தை நிலநடுக்கம் செய்து விட்டதால், அமெரிக்காவிற்கு ‘நல்வாய்ப்பாகி’ விட்டது.

ஆக மொத்தம், தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளையும் சேர்ந்த சுமார் 12,000 அமெரிக்க இராணுவத்தினர் ஹைய்தி தீவை நோக்கி குவிக்கப்படுகின்றனர். இவற்றோடு உலகை நம்ப வைக்க வேண்டும் என்ற கட்டாயத்திலோ என்னவோ 300 மருத்துவர்களையும் கொண்டு வந்து நிறுத்தியது அமெரிக்கா.

23.01.10 அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளண்டன் ஹைய்தி அதிபர் ரேனே ப்ரேவல் ‘அழைப்பின்’ பேரில், அந்நாட்டுத் தலைநகரான போர்ட்-ஆவ்-பிரின்ஸ் நகருக்கு வருகை தந்தார். ஹைய்தியில் இறக்கப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கும் அதிகாரங்களை வழங்கும்படியான சட்ட திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என அப்பொழுது அவர் வலியுறுத்தினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கு நடக்கவிருக்கும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கான பங்கு என்ன என்பதும் குறித்தும் பேச்சுகள் நடந்தன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப் பிழைத்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள், உடைமைகளை இழந்தவர்கள் என எங்கும் சோகமயமான சூழலில் ஹைய்தி தலைநகரம் தத்தளித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், உலக உணவுத் திட்டத்தினர் (World Food Program - WFP) வழங்கும் நிவாரண உதவிகளை அம்மக்கள் பெறுவதற்குப் போட்டியிடுகின்றனர். இதனால், ஆங்காங்கு விநியோகித்தல் தொடர்பான சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. இவற்றைக் காரணம் காட்டி, நாடு சிச்கலான பாதுகாப்பற்றச் சூழலில் இருப்பதாக வர்ணித்தார், ஹைய்திக்கான அமெரிக்க இராணுவத் தளபதி கென் கீன். அதற்காகவே, இந்த இராணுவப்படைகள் வந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஹைய்தி தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்தை அமெரிக்க இராணுவம் அதன் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில், மீட்பு நடவடிக்கைகளுக்காக அங்கு வந்திருந்த பிரான்ஸ், இத்தாலி, பிரேசில் நாட்டு விமானங்கள் கூட தரையிறங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. அவசரகால மருத்துவமனையை தாங்கி வந்த பிரான்ஸ் விமானத்தை அமெரிக்க இராணுவம் தடுத்ததை, ஹைய்திக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் டிட்டியர் லீ பிரெட் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னார்ட் குஷ்நெர் ஆகியோர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பின்னர், இவ்வறிக்கை ஏனோ சில மணி நேரங்களில் திரும்பப் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 12 டன் மருந்துப் பொருட்களை கொண்டு வந்திருந்த எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் விமானம், 3 முறை திருப்பி அனுப்பப்பட்டதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. செஞ்சிலுவை சங்க விமானம் ஒன்று திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறுகின்றனர். ‘அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்த தீவிரச் சிந்தனை உயிர்களைக் காப்பாற்றுவதையும் தடை செய்கிறது’ என ‘இன்டர்வன்சியா’ Intervencion, Ayuday Emergencia எனப்படும் ஸ்பெயின் நாட்டு உதவிக்குழுவும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தது. இலங்கை முதல் துருக்கி வரை உதவியுள்ள தாம் இவ்வாறான செயல்பாடுகளை வேறெங்கும் எதிர் கொண்டதில்லை என்றும் அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.

ஹைய்தி நிவாரணப் பணிகளில் ஈடுபட, சின்னஞ்சிறிய நாடான கியூபாவிலிருந்து மட்டும் 344 மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்க, உலகையே ஆள்வதாக பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவிலிந்து வெறும் 300 மருத்துவர்கள் மட்டுமே வந்தனர். ஹைய்தி நிவாரணப் பணிகளுக்காக, தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (Doctors without Borders) அமைப்பு மட்டும் 800 மருத்துவர்களை அனுப்பியுள்ள நிலையில், அமெரிக்காவின் எண்ணிக்கை வியப்பையும் அதிர்ச்சியையுமே தருகின்றது.

இழவு வீட்டில் ஆதிக்கம் செலுத்த முனையும், அமெரிக்காவின் இது போன்ற இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஒன்றும் புதிதானதல்ல. 1993ல் பஞ்சத்தால் சீர்குலைந்து போன சோமாலியாவில் நுழைந்து, மேலாண்மை செய்த “பெருமை” இவர்களையே சேரும். அமெரிக்காவின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கு உலகெங்கும் உள்ள மனிதநேயர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டியது கடமை.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Saturday, April 10, 2010

அலைவரிசைப் பயன்பாடும் ஊழல் பண்பாடும் - க.அருணபாரதி


அறிவியல் வளர்ச்சியின் வீரியத்தை, முழுவதுமாக அபகரித்துக் கொண்ட முதலாளியம், அவ்வளர்ச்சியை தனதாக்கிக் கொண்டதன் மூலம் இலாப வெறியுடன் கூத்தாடுகின்றது. இதன் உச்சகட்டமாகத் தான், சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3ஜி அலைவரிசைப் பயன்பாடு.

வடநாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே நடுவண் அரசின் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்புத் துறை நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அலைவரிசை சேவை, சென்னையில் இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1860களில் உலகெங்கும் உள்ள தந்திச் சேவைகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union- ITU) எனப்படுகின்ற அமைப்பு, தற்பொழுது, உலகளவில் மின்காந்த அலைவரிசைகளை தொலைத் தொடர்புப் பணிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கும் அவற்றை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

இவ்வமைப்பு, அலைவரிசைகளை அதன் தன்மையையும், பயன்பாட்டையும் வைத்து, அவற்றை ஒன்றாம் தலைமுறை, இரண்டாம் தலைமுறை என பிரிக்கின்றது. முதல் தலைமுறை என்பது கம்பியில்லாத் தொலைத் தொடர்புக் கருவிகளான வாக்கி - டாக்கி போன்ற கருவிகளின் செயல்பாட்டை உள்ளடக்கியது. இரண்டாம் தலைமுறை என்பது, நாம் இன்றைக்கு பெரும்பான்மையாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்பியில்லாக் கைபேசிக் கருவிகளைக் கொண்டது.

அவ்வகையில் “மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம்” எனப்படுகின்ற Third Generation – 3G என்ற அலைவரிசைப் பயன்பாடு, நவீன வசதிகளைக் கொண்டதாகும். குரலொலிகளையும், குறுந்தகவல்களையும், படங்களையும் வெவ்வேறு நேரங்களில் தனித்தனியே பரிமாறிக் கொள்ளும் வகையில் இருக்கின்ற, தற்போதைய இரண்டாம் தலைமுறை கைபேசி அலைவரிசைக்கு பதிலாக, இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வலிமை கொண்ட 3ஜி மூன்றாம் தலைமுறை அலைவரிசைக்கு மாற்றப்படும்.

இதன் மூலம் இனி இணையம், தொலைக்காட்சி, பேசுபவரை பார்த்துக் கொண்டே பேச வழிவகுக்கும் ‘ஒளிப்படக் கலந்துரையாடல்’ (வீடியோ கான்பிரன்சிங்) வசதி, போன்ற பல சேவைகளை நாம் கைபேசியிலேயே பெறலாம்.

இரண்டாம் தலைமுறை கைபேசிகள் பரிமாறிக் கொள்ளும் தகவலுக்கான இடத்தை(Space) இந்த 3ஜி அலைவரிசையின் மூலம், அதிகரிப்பதால், அதிகமானத் தகவல்களை நாம் பறிமாறிக் கொள்ள முடிகின்றது. எனவே தான், இந்த அலைசரிசையை வைத்து நன்கு சம்பாதிக்க இயலும் என்பதால் இவற்றை வாங்குவதில், பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.

இவ்வகை புதிய அலை வரிசையை, உலகமய பன்னாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் விலை பேசவும், இதற்கான அனுமதி உள்ளிட்டவற்றை பேரம் பேசித் தரகு வேலை புரிவதற்கும், அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத்பவார், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 10 பேரைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை கடந்த மார்ச் மாதம் நடுவண் அரசு நியமித்திருந்தது நினைவிருக்கலாம். இதில், திட்டக்குழுத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவும் அடக்கம்.

நாட்டின் உணவு தானியக் கையிருப்பு குறைந்து வருவது குறித்தோ, விவசாயிகள் தற்கொலை குறித்து விசாரிக்கவோ எந்த சிறப்பு அமைச்சர்க் குழுவையும் அமைக்காத இந்த அரசு, முதலாளிகளுடன் பேரம் பேச மட்டும் சிறப்பு அமைச்சர் குழுக்களை அமைக்கிறது.

இவ்வாறான, கைபேசி களுக்கான இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்வதில் தான், நடுவண் தகவல் தொடர்புத் துறை அமைச்சரான இராசா, சுமார் 60,000 கோடி ரூபாய் பணத்தை ஊழல் செய்து சுருட்டியிருக்கிறார். ‘சுதந்திர’ இந்தியாவின் வரலாற்றில் இவ்வளவுப் பெரியத் தொகை சுருட்டப்பட்டது, இதுவே முதல் முறை என்ற போதும், தொலைத் தொடர்புத் துறையில் நடைபெறும் ஊழல்கள் இது ஒன்றும் புதிதல்ல.

கலாநிதி மாறன் குடும்பத்தினருக்கும், கருணாநிதிக்கும் இடையே தகராறு நிலவிய போது, மாறன் சகோதரர்களின் சன் தொலைக்காட்சி, தினகரன் இதழ் ஆகியவை இந்த ஊழல் குறித்து பெருமளவில் பெரிதாக செய்தி வெளியிட்டன. அமைச்சர் இராசாவும், தயாநிதி மாறன் பதவியில் இருந்த போது அரசுக்கு சுமார் 10, 000 கோடி நட்டம் ஏற்பட்டதை அம்பலப்படுத்தினார்.

முதலாளிகள் எப்பொழுதும், அவர்களைப் பாதுகாக்கும் முதலாளிய அரசு இயந்திரத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதில்லை. இதன் பின்னணியில் தான் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் சமரசம் ‘பேசி’க் கொண்டது, மாறன் குடும்பம். அமைச்சர் இராசாவின் அலைக்கற்றை ஊழலை, மாறன் குடும்பமும், ஊடகங்களும் அத்தோடு மறந்தன.

1980களில் பெரும்பாலும் கம்பிகளைக் கொண்டே இயங்கி வந்த தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை இன்று கம்பியில்லா தொழில்நட்பமாக(Wireless Technology) முன்னேறி இருக்கிறது. இந்த முன்னேற்றம் வெறும் விஞ்ஞான வளர்ச்சி மட்டுமல்ல, உலகமய முதலாளிகளின் பணச் சுரண்டலுக்கான தேடலின் வளர்ச்சியும் கூட.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 52.56 கோடி மக்கள் தொலைபேசி, கைபேசி இணைப்புகளை பெற்றிருக்கின்றனர். மேலும், மாதத்திற்கு சுமார் 1 கோடிய 30 இலட்சம் புதிய கைபேசி இணைப்புகளை பெற்றுத் தரும் பெரும் சந்தையாக, இந்திய தொலைத் தொடர்புத் துறை சந்தை விளங்குகின்றது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால், உலகமய நிறுவனங்களுக்கு இத்துறையில் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகின்றன என்பது எளிதில் விளங்கும்.

1990களில் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில், இலாபத்தில் இயங்கிய அரசுத்துறை நிறுவனங்களை வெளிப்படையாக, முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பது எப்படி என கண்டறிந்து, நடைமுறைப் படுத்துவதை, நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி. தொடங்கி வைத்தது. அப்பொழுது தான்,பெருமளவில் அரசே ஆதிக்கம் செலுத்தி வந்த தொலைத் தொடர்புத் துறையை தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் முறைகளைக் சட்டரீதியாகக் கண்டறிந்து, தொலைத் தொடர்புத் துறை ஊழல் முறைகேடுகளுக்கு பிள்ளையார் சுழி இடப்பட்டது.

உலகமயத்தின் வரவால், உலக வங்கி, பன்னாட்டுத் தொலைத் தொடர்பு ஒன்றியம்(ITU), இந்திய முதலாளிகளின் அமைப்பு (CII) போன்ற பல்வேறு முதலாளிய அமைப்புகள் தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய முதலீடு என்ற பெயரில், தனியார்மயத்தை ஏற்படுத்த நடுவண் அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தன. இதன் பின்னணியில் தான், இன்றைக்கு தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு 74 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதை நாம்
காண்கிறோம்.

நரசிம்மராவ், தனியார் தொலைத் தொடர்புத் துறையை முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்துவிடுவதற்கு உதவியாக, 1994இல் ‘தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை’ (National Telecommunications Policy [NTP]) என்ற கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அப்போது நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம், வீட்டில் மத்திய புலனாய்வுத் துறை(சி.பி.ஐ) 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 3.61 கோடி ரூபாயை கட்டுக்கட்டாகக் கைப்பற்றியது.

விசாரித்ததில், இதனை அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர் சீத்தாராம் கேசரி தான் தம்மிடம் கொடுத்ததாக அப்பாவித்தனமாகக் கூறினார், சுக்ராம். இது குறித்து, சி.பி.ஐ. நடத்திய தொடர் விசாரணையின் விளைவாக தொலைத் தொடர்புத் துறையில் நடந்த முறைகேடுகள் அம்பலமாயின. ஹைதராபாத் நகரைச் சேர்ந்த, அட்வான்ஸ்டு ரேடியோ மாஸ்ட்ஸ்(Advanced Radio Masts - ARM) என்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு முறைகேடாக தொலைத் தொடர்புக் கருவிகள் வழங்கியதில் ஊழல் நடந்தது தெரியவந்தது. இந்த மோசடி நிறுவனத்தை நடத்துபவர் ஏற்கெனவே அமைச்சர் சுக்ராமுடன் இணைந்து ரேடியோ ரிலே சிஸ்டம்ஸ் Radio Relay Systems எனப்படும் தொலைத் தொடர்புக் கருவிகள் வாங்கியதில் நடந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு தனியார் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, தரகு வேலை பார்த்து வரும், தொலைத் தொடர்புத் துறை ஒழுங்கு ஆணையம் (Telecom Regulatory Authority of India -TRAI) என்ற அமைப்பு, இதன் பின்னர் தான் 1997 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் அரசின் இந்த ஊழல்களில், ‘பாடம்’ படித்த பா.ச.க., தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உலகமய பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தவும், சுரண்டவும் சட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்பொழுது நடுவண் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், இந்தத் தரகு வேலைகளின் மூலம் பெருமளவு முதலாளிகளை வசப்படுத்தி, கட்சிக்கு நிதித் திரட்டினார். ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா இன்டிகாம் என தொடர்ந்து வடநாட்டு பன்னாட்டுத் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சந்தை மட்டுமே இங்கு விரிவுபட வேண்டும் என்ற உள்நோக்குடன், அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சியை வேண்டுமென்றே மட்டுப்படுத்தியப் ‘பெருமை’, இவரையே சேரும்.

இக் காலகட்டத்தில் தான், அயல்நாட்டுத் தொலைபேசி அழைப்பு களை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் றுவனம் மோசடி செய்தது அம்பலமானது. இது கண்டுபிடிக்கப்பட்டு அந்நிறு வனத்திற்கு விதிக்கப்பட்ட சிறு அபராதத் தொகையும் கூட இரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு பல்வேறு ஊழல்களைக் கடந்து தான், அதன் உச்சகட்டமாக அமைச்சர் இராசா நடத்திய சட்டப்பூர்வமான ஊழலும் நடந்தேறியிருக்கிறது. அமைச்சர் இராசா, திரும்பத் திரும்ப கூறி வருவது, நடந்தவை அனைத்தும் சட்டரீதியாகத் தான் நடந்தேறியுள்ளது, இவை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தெரியும் என்பதைத் தான். சட்டரீதியாகவே நடத்தப்பட்டுள்ள இந்த ஊழலில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பங்குள்ளது என்ற அளவில் தான் அவரதுக் கூற்றை புரிந்து கொள்ள முடிகிறது. தி.மு.க.விற்கும், காங்கிரசிற்குமான அந்த புரிந்துணர்வு அண்மையில் கூட அம்பலப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை சிக்கலில் நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு எதிராக கருணாநிதி கண்டனக் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்த சில நாட்களிலேயே, அமைச்சர் இராசாவின் அலுவலகம் மத்திய புலனாய்வுத் துறையினரால்(சி.பி.ஐ.) சோதனையிடப்பட்டது. அதன் பின்னர், நிலைமையை புரிந்து கொண்ட கருணாநிதி அக்கூட்டத்தை இரத்து செய்தார். ஆக, தி.மு.க.வின் இந்த அலைக்கற்றை ஊழல் குறித்து காங்கிரஸ் பேசாது. காங்கிரசின் அடாவடித்தனங்கள் குறித்து தி.மு.க.வும் பேசாது. இது தான் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ராசா கூறும் ‘சட்டப்படியான’ இவ்ஊழல், நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள முறை நாம் அறிந்தது தான். பொதுப்படையான ஏலம் விடப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அலைவரிசைகளை, முதலில் வரும் நிறுவனத்திற்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், தனக்கென அலுவலகம் கூட இல்லாத போலி நிறுவனங்களுக்கான ஸ்வான், யுனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றது, அமைச்சர் இராசாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.

இந்த அலைவரிசையை 2001ஆம் ஆண்டு என்ன விலைக்கு ஏலம் விட்டார்களோ அதே விலையில் தான் இப்பொழுதும் ஏலம் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, சுமார் 60,000கோடி மதிப்புள்ள அலைவரிசைகளை வெறும் 3000 கோடிக்கு விற்றனர். தனக்கென சொந்தத் தொலைத் தொடர்புக் கருவிக் கூட இல்லாத நிறுவனங்களுக்கு தான் இதுவும் விற்கப்பட்டது. அலைவரிசையை பெற்றுக் கொண்டதைக் காரணம் காட்டி, அந்த போலி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தங்களது பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை மட்டும் விற்று சுமார் 5500 கோடிக்கும் மேல் சம்பாதித்தன.

இந்த நிறுவனங்களின் பங்குகள் பலவும் கருணாநிதி குடும்பத்தினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலின் போது மக்களுக்கு வாரி இரைக்கப்பட்ட பணம், இவை போன்ற ஊழல் கொள்ளையிலிருந்து செலவு செய்யப்பட்டது தான் என்று நாம் ஊகித்தால் அது தவறல்ல.

தற்பொழுது, அரசுத்தறையின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 3ஜி எனப்படுகின்ற இந்த புதிய அலைவரிசைப் பயன்பாட்டை வைத்து பெருமளவில் இலாபம் பார்க்க, பன்னாட்டு தகவல் தொடர்பு நிறுவனங்கள் அனுமதி வேண்டிக் காத்துக் கிடக்கின்றன. இந்த அனுமதிக்கான ஏலங்களிலும் நிச்சயம் ஊழல் நிறைந்திருக்கும் என்று நாம் சந்தேகமின்றி நம்பலாம்.

முதலாளிகளின் இலாப வேட்கை மக்களைக் குதறுகின்ற இந்நேரத்தில், மண்ணுக்கேற்ற மாற்றுப் பொருளாதாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியும், மாற்றுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 2009 இதழ்

Thursday, March 04, 2010

நளினி விடுதலை: குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான எனது பேட்டி!

செவ்வணக்கம் தோழர்களே...

நளினி விடுதலை தொடர்பாக கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களுக்கு பதில் கொடு்க்கும் விதமாக, இளந்தமிழர் இயக்கம் சார்பில் புதிய ஆதாரம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். இது குறித்து “குமுதம் ரிப்போர்ட்டர்” இதழில் வெளியான எனது பேட்டியை இப்பதிவில் இடுகின்றேன்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித சண்டையும் இல்லை. ஆனால், பலர் என்னிடம் இளங்கோவனை ஏன் திட்டமிட்டுத் தாக்குகிறீர்கள் என்று கேட்கின்றனர். அதற்கான பதில் மிகவும் எளிதானது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எதிரி முகாமின் கோமாளி என்பதே அது.

பேட்டியை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்...

தோழமையுடன்,
க.அருணபாரதி
பேச: 9841949462
சீக்கியருக்கு ஒரு நீதி; தமிழருக்கு ஒரு நீதியா?

‘‘இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கியரை பஞ்சாபில் தியாகியாகக் கொண்டாடுகிறார்கள். அதை எதிர்க்கத் துப்பில்லாத தமிழக காங்கிரஸார், ராஜிவ் கொலை வழக்கில் கு ற்றம்சாட்டப்பட்டு, 19 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி போன்றோரை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள்.இப்படிச் சொல்ல அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை’ என்று புதிய சூட்டைக் கிளப்பியிருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர்.

இதுகுறித்து இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதியிடம் பேசினோம். முதலில் நளினி விவகாரம் பற்றிப் பேசினார் அவர்.

‘‘ஆயுள் தண்டனை என்பதை 14 ஆண்டுகள் என்று கிரிமினல் நடைமுறைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இந்த வரையறையை மீறி, தமிழக அரசு பத்தாண்டுக் காலம் தண்டனை அனுபவித்த எத்தனையோ ஆயுள் தண்டனைக் கைதிகளை தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்துள்ளது. ஆனால், 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தும் கூட, ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உள்ளிட்டோருக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இதற்கு அரசியலைத் தவிர வேறு முறையான சட்டக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நளினியின் மனமாற்றம், தாயின்றி வளரும் அவரது குழந்தை உள்ளிட்ட மனிதநேயக் காரணிகளை முன்வைத்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்.அவரை மட்டு மின்றி பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சிறை, மனிதர்களை மன மாற்றத்திற்கு உள்ளாக்கி திருத்த வே ண்டுமே தவிர, தண்டிப்பதற்கான சித்திரவதைக் கூடமாகிவிடக் கூடாது என்பதே எங்கள் இயக்கம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோள்.

நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்ல தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்குமே அருகதை கிடையாது. சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று சொல்ல இவர்கள் என்ன நீதிபதிகளா? நளினி விடுதலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நளினியை விடு விக்கக்கூடாது என்று
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்கள் கூறுவது, நீதிமன்ற அவமதிப்பாகும்.

‘ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நளினிக்கு, அந்தக் கொலை நிகழ்த்தப்பட இருப்பது குறித்து பின்புதான் தெரியும்; தெரிந்த நிலையிலும் கூட அவரால் அதிலிருந்து விடுபட முடியாத சூழ்நிலை இருந்தது’ என்று நீதிபதி தாமஸ் அவ்வழக்கின் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் புத்திசாலிகள் யாராவது ஒருமுறையாவது படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், நீதிபதியின் தீர்ப்பை அப்படியே புறம்தள்ளிவிட்டு, அந்தத் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக, நளினிதான் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தார் என்பதுபோல் ஈ.வி.கே.எஸ். இள ங்கோவன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சித்திரிக்கிறார்கள்.

நளினியை ‘தீவிரவாதி’ என்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து பேசி வருகிறார். நளினியா தீவிரவாதி? இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது சீக்கியர்களைப் படுகொலை செய்து, சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்! அந்தச் சம்பவத்தை ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்திக் கூட பேசியிருக்கிறார். கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைக் கடைப்பிடிக்கத் தெரியாமல் பதவி, பணத்திற்காக கோஷ்டிகள் அமைத்துச் சண்டையிடும் காங்கிரஸ்காரர்கள், தேச ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது கேலிக்கூத்து!

பல்கலை மாணவிகள் மூவரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள், ரிமோட் குண்டு மூலம் சிவகங்கை தி.மு.க. நகராட்சித் தலைவர் முருகனைக் கொன்றவர்கள், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, தா.கிருட்டிணன் போன்றவர்களைப் படுகொலை செய்தவர்கள், மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்து அங்கிருந்த மூன்று ஊழியர்களைக் கொன்றவர்கள் எல்லாம் இன்று கட்சி மற்றும் அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். சிலர் சமூக அந்தஸ்துடன் உலா வருகிறார்கள். அப்படியிருக்க யாரைப் பார்த்து தீவிரவாதி என்கிறார், இளங்கோவன்?

காங்கிரஸ்காரர்கள் ‘அன்னை’ என்று தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, அவரது பாதுகாவலர் பியாந்த் சிங் சுட்டுக் கொன்றார். அந்த பியாந்த் சிங்கை ‘வீரத்தியாகி’ என்று போற்றி எழுதி, பஞ்சாப்பில் உள்ள சீக்கிய மதப்பீடமான பொற்கோயிலில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு ள்ளது. ‘1984-ம் ஆண்டு பொற்கோயில் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதமாக, இந்திராகாந்தியைக் கொல்லும்போது உயிரிழந்த சீக்கிய வீரத்தியாகி, பியாந்த் சிங்’ என்று அந்தப் புகைப்படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறார்கள். பியாந்த் சிங் புகைப்படம் இந்த வாசகங்களுடன் பொற்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், எங்கள் இயக்கத் தோழர் ஒருவர் நேரில் சென்று பல தடைகளைத் தாண்டி அதைப் புகைப்படம் எடுத்து வந்திருக்கிறார். (அந்தப் புகைப்படத்தைக் காட்டுகிறார்)

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையவர் என்கிற குற்றச்சாட்டுக்காக நளினியை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் துணிவிருந்தால், சீக்கிய மதப் பீடத்தின் இந்தச் செயலைக் கண்டித்து பியாந்த் சிங்கின் புகைப்படத்தை நீக்கக் கோரி ஓர் அறிக்கையாவது விட முடியுமா? அதற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா? சீக்கியர்களிடம் ஷூவால் அடிவாங்கியும் கூட, அவர்களுக்கு எதிராகப் பொங்காத இவர்கள், தமிழர்களுக்கு எதிராக மட்டும் குமுறுவது ஏன்? தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா? தமிழர்களின் தந்தை பெரியாரையே அவமதித்துப் பேசிவிட்டு இவர்கள் தமிழகத்தில் நடமாட முடியும் என்கிற நிலை இருக்கும் போது வேறு என்ன சொல்ல?

பொற்கோயிலில் வைக்கப்பட்டுள்ள பியாந்த் சிங்கின் புகைப்படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வாசகத்தையும் தமிழகம் முழுக்க எங்கள் இளந்தமிழர் இயக்கம் பரப்புரை செய்ய உள்ளது. நளினி விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ்காரர்கள் முடிந்தால், அதைத் தடுத்துப் பார்க்கட்டும்!’’ என்று முடித்துக் கொண்டார் அருணபாரதி.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம். ‘‘நளினி ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை. முருகன் உடனிருந்த தொடர்பில் பயங்கரவாத அமைப்புடன் ஐக்கியமாகி இளந்தலைவர் ராஜிவ்காந்தியை அவர் கொன்றிருக்கிறார். பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.

தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது. இவர்கள் கேட்பது நளினியை எதிர்க்கும் நீங்கள், பின்லேடனை எதிர்ப்பீர்களா என்பது போல உள்ளது. பங்களாதேஷில் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர். அதனடிப்படையிலேயே நளினி விடுதலையை நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்றார் இளங்கோவன்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

குறிப்பிடத்தக்க பதிவுகள்