Saturday, May 26, 2007

இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்

இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்
(சில ஆதாரங்களுடன்)
க.அருணபாரதி
 
            தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்பட வைக்க பல ஆண்டுகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு  ஒரு வழியாக தற்பொழுது தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது அத்திட்டத்தை செயல்படுத்தினால் இராமர் பல லட்ச வருடங்களுக்கு முன்பு கட்டியதாக மதவாதிகளால் சொல்லும் இராமர் பாலம் இடிபடும் என்று கூறி மதவாத சக்திகள் பூச்சாண்டிகள் காட்டி வருகின்றன.
 
                கடந்த 2002ம் ஆண்டு, இலங்கைக்கும் தமிழகத்திற்கும் நடுவே இயற்கையாகவே உருவான சில தொடர்ச்சியானதும் விட்டுவிட்டுமாய் இருக்கக்கூடிய மணல் திட்டுகளை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் புகைப்படமெடுத்து வெளியிட்டது. பழைமைவாத கருத்துக்களில் ஊறிய மத கும்பல்கள் 'அது நிச்சயம் இராமர் கட்டிய பாலம் தான்.. அதே தான்..' என புல்லரித்து கிளம்பின. வைஷ்ணவா நெட்வொர்க் மற்றும் இந்தோ லிங்க் ஆகிய இணையங்கள் தாம் முதன் முதலில் அதனை இராமர் பாலம் என நாசா ஒத்துக்கொண்டுவிட்டதாக கூறி பொய்களை அவிழ்த்துவிட்டது. (வைஷ்ணவ நெட்வொர்க் தளத்தின் செய்தி:  http://www.vnn.org/world/WD0210/WD07-7592.html ). 
 
            தற்பொழுது சேது சமுத்திரதிட்டத்தை செயல்படுத்தப்படும் பொழுது இச்சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. சங்கராச்சாரியார்கள் நால்வர் பெங்களூரில் இராமர் பாலம் குறித்து விவாதித்தனர். இது குறித்த துவாரகா பீட சங்கராச்சாரியார் வரூபானந்த ஜி மகராஜ் கூறியுள்ள கருத்து `தினமணி'யில் வெளிவந்தது (சென்னை, 24.5.2007, பக்கம் 5) அச்செய்தி வருமாறு:

``இக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ராமர் கட்டிய பாலத்தை காக்கக் கோரி மத்திய அரசிடம் மனு அளிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுபற்றி விசாரிக்கும்படி டி.ஆர். பாலுவுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பாலு அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக பாலத்தை இடித்து சேது கால்வாய் அமைக்கவே அவர் தீவிரம் காட்டி வருகிறார். இப்பிரச்சினையில் அரசியல் கலப்படமில்லை.
 
பாலத்தை இடிப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும். அப்படியிருந்தும் பாலத்தை இடிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை எதிர்த்து, வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக உள்ளோம் என்று எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். இதுபோல் நான்கு சங்கர மடத்தின் சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தீர்மானித்துள்ளோம்.
 
பாலத்தை இடிக்காமல், வேறு பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆட்சேபணை இல்லை. இது தொடர்பாக மத்திய அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம்.
 
இந்தப் பாலத்தை அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புகைப்படம் எடுத்துள்ளது. ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
 
இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல.
மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும்.
விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.
 
இந்திய  செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களிலும் இந்தப் பாலம் இன்னும் வலுவுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.
 
கடலுக்கு அடியில் 6 அடி கீழே இது கட்டப்பட்டுள்ளது. அதிக குளிர்ச்சி நீரையும், அதிக வெப்ப நீரையும் தாங்கக் கூடியது இந்தப் பாலம்.
 
இந்தப் பாலத்தை இடித்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட விசையைத் தூண்டிவிட்டதுபோல் ஆகிவிடும். இதனால் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பாலத்தை இடிக்கும் நடவடிக்கை எடுப்பதன்மூலம் நாட்டுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறார் மத்திய அமைச்சர் பாலு.''
இவ்வாறு கூறியிருக்கிறார் துவாரகா பீடாதிபதி. (பார்க்க:
http://viduthalai.com/20070525/news04.htm)
 
மேலுள்ள காரணங்களுக்காகத் தான் சேது சமுத்திரத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக ஆராய்வோம்.
 
ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
 
முதலில் அறிவியல் படித்தவர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு எத்தனை வருடங்களாக மனிதன் இருக்கிறான் என்பதற்கு விடை தெரிந்தால் இந்த கூற்று பொய்யென சுளீரென மண்டையில் உரைக்கும். அதையும் மறுத்து 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இருந்தார்கள் என்று இன்னும் நம்புபவர்கள், இதற்கு எதையேனும் ஆதாரமாக காட்டினால் உலகத்திற்கே அது பெரும் பரிசாக அமையும். உலகமே அவர்களை பாராட்டும். எவரேனும் செய்வார்களா என தெரியவில்லை... வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நல்ல திட்டத்தை எதிர்க்கும் மதவாதிகளுக்கு அறிவியல் தெரிந்திருந்தும் இவ்வாறு கற்பனைகளைக் கூறுவது மத உணர்வுகளை தூண்டி ஆதாயமடைவதுவே அன்றி வேறில்லை...
 
இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும். விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.
 
இதற்கு நான் விளக்கமளிப்பதை விட அந்த புகைப்படத்தை எடுத்த நாசா விண்வெளி நிலைய அதிகாரி ஹெஸ் சொல்வதைக் கேட்போம்.
 
NASA said the mysterious bridge was nothing more than a 30 km long, naturally-occuring chain of sandbanks called Adam's bridge. Hess said his agency had been taking pictures of these shoals for years.
 
அவை வெறும் இயற்கையாகவே உருவான மணல்திட்டுகள் தாம் என நாசாவே சொன்ன பிறகும் அதை நம்பிக் கொண்டிருப்பது, "தான் பிடித்த முயலுக்கு மூணே கால்" என்று வாதிடும் சிறுபிள்ளைத்தன வாதமாகும். ஒருவேளை இதனையும் மறுப்போர் எனது முதல் கேள்விக்கான பதிலை பூர்த்தி செய்துவிட்டு இவற்றை திரும்ப படிக்கவும்.
 
There is no evidence of a human presence in the subcontinent, he says, before roughly 250,000 to 300,000 years ago. It is generally believed man's hominid ancestors did not leave their African home until about two million years ago
Communication experts say that false, suspect news finds much greater circulation than normal because of the internet.
 
அந்த தகவல் எப்படி வெளியானது எப்படி அதனை வைஷ்ணவ நெட்வொர்க் - இந்தோ லிங்க் போன்ற பார்ப்பன பாசிச  சக்திகள் வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் வெளியிட்டனர் என்பது குறித்தும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த செய்தி பணம் சம்பாதிக்க உதவியது என்பதையும்  மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்க.  அந்த புகைப்படத்தை எடுத்த நாசாவே  அதனை இயற்கையாகவே உருவான பாலம் என்று சொல்கிறது.  ஆனால், அதனை நம்ப மறுத்து அதனை சாட்சாத் " விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது" என்று சிலர் சொல்லும் பொழுது,  நாசாவில் உள்ளவர்களின் கருத்துக்களை விட அறிவியல் தெரிந்த ''அதிமேதாவிகள்'' இந்தியாவில் உள்ளதை காண முடிகிறது.
 
இந்தப் பாலத்தை இடித்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட விசையைத் தூண்டிவிட்டதுபோல் ஆகிவிடும். இதனால் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
 
"ஒழுங்கா சாமியை கும்பிடு.. இல்லைனா சாமி கண்ணை குத்திடும்" என்று சிறுபிள்ளைகளை மிரட்டும் பூச்சாண்டி வகை சார்ந்த இந்த வாதத்தை எந்த வகையில், எந்த அடிப்படையில் அவர் குறிப்பிட்டார் என்பது அவருக்கே வெளிச்சம். கடலோரம் வசிக்கும் பாமர மக்கள் பயங்கொள்ளும் வகையில் இக்கருத்தை தெரிவித்து அதன் மூலம் மக்கள் மனதில் மத உணர்வுகளை தூண்டிவிட்டு, பாபர் மசூதி, குஜராத் போல மதவெறிக் கலவரத்தை நடத்த திட்டமிடும் இந்து மத வெறியர்களை என்ன சொல்லி திருத்துவது?
 
மேலும் இது குறித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் புகைப்படத்தை கீழே காண்க.
அதில் தொடர்ச்சியாகவா மணல் திட்டுகள் உள்ளன? என்று தங்கள் கண்களை உற்று நோக்கிக் கண்டு தெளிவு பெறுக.
 
    கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந் ஜெயலலிதாவின் அறிக்கை இது.
 
Jaya ridicules MDMK leader's claim on Sethusamudram projectChennai, Sep 8 (UNI) Dismissing as ''pathetic, comical and absurd''
Minister J Jayalalithaa today asserted that if anyone could claim credit for bringing the project to fruition it was only her and no one else
 
      இத்திட்டத்தை கொண்டு வந்தது "நான் தான்! நான் தான்! நானே தான்"  என்று மார்தட்டி அறிக்கை விட்டு வைகோ, டி.ஆர் பாலு என அனைவரிடமும் சண்டை போட்ட ஜெயலலிதாவின் இன்றைய காலகட்ட அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு...
 
ஜெயலலிதா அறிக்கை
 
அவரது அறிக்கையிலிருந்து....
ராமர் பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் நாசா கூறி உள்ளது. நாம் இந்த பாலத்தை ராமர்பாலம் என்று அழைக்கின்றோம். ஆங்கிலேயர்கள் இதை ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கின்றார்கள். ஆக இதன் உண்மையை நாசாவே துல்லியமான புகைப்படங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது.
இந்த எந்த அளவிற்கு பொய் என்பதனை மேலேயே விரிவாக் கண்டு விட்டோம்..
 
             இது போன்ற பொய்களையும் புரட்டுகளையும் அறிக்கையாக வெளியிடும் ஜெயலலிதாவிற்கு அன்று சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வந்தது நான் தான் என்று சொல்லும் பொழுது ''ராமர் பாலம்" கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது சேது சமுத்திரத் திட்டம் பற்றி எதுவுமே தெரியாத தமிழக முதல்வராக அவர் இருந்துள்ளாரா? என்பவற்றுக்கான பதிலை தங்களிடமே விட்டுவிடுகிறோம்...
'ஆரிய மாயை' எழுதி ஆரியர்களைப் பற்றி புட்டுபுட்டு வைத்த அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அம்மையார், அண்ணா வழியில் தான் நடந்ததாக உதாரணம் சொல்ல ஒரு நிகழ்வு கூட காட்டமுடியாது என்பது அவருக்கே தெரியும்.  தான் ஒரு பாப்பாத்தி தான் என்று ஆரியத் திமிரோடு தனது சாதியை சட்டப்பேரவையிலேயே பேசிய இந்த திராவிடக் கட்சித் தலைவர்,  இராமர் பெயரால் இத்திட்டத்தை தடுப்பது ஒன்றும் வியப்பில்லை. பா.ச.க, விஷ்வ ஹிந்து பரிசித், சிவசேனை, சங்பர்வார் போன்ற மதவாத பாசிச கும்பல்களுடன் தானும் உண்டு என்பதை இது போன்ற நிகழ்வுகளின் மூலம் ஜெயலலிதா அடிக்கடி நினைவுபடுத்துகிறார்.
   
            பெரியாரின் சமூகநீதி பகுத்தறிவு சிந்தனையால் சிவந்த நம் தமிழ் மண்ணில் மதவாத கும்பல்களின் ஒப்பாரியை அடக்கி வைக்க வேண்டியது நம் கடமையாகும்.
 
மேலும் சில செய்திகள்:

-
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Thursday, May 24, 2007

"கைநிறைய சம்பளம்.. மனம் நிறைய வெறுப்பு...."

"கைநிறைய சம்பளம்.. மனம் நிறைய வெறுப்பு...."

தகவல் தொழிற்நுட்ப உலகின் புதிய நெருக்கடி

க.அருணபாரதி

தகவல் தொழிற்நட்பத் துறை மீது சவாரி செய்யும் உலகமயமாக்கலின் வளர்ச்சி உளவியல், வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மேற்கத்திய கலாசாரத்தை புகுத்துவதிலும், தனித்தன்மை வாய்ந்த இம்மண்ணின் கலாசாரங்களை அழிப்பதிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வருவது கண்கூடு. தமிழகத்தில் ஆங்கிலம் பேசி தான் வாழ முடியும் என்கிற போலித்தனமான நிலைமையை பெற்றெடுத்திருப்பது இதற்கொரு முன்னுதாரணமாகும். தற்பொழுது அதன் தாக்கங்கள் பல்வேறு வடிவங்களில் மக்களை தாக்குகின்றன.

தகவல் தொழிற்நுட்பத்துறையில் பணிபுரிவோர்க்கு வேலைப் பளு அதிகமாக கொடுக்கப்பட்டு சம்பளமும் தாராளமாக வழங்கப்படுகிறது. சம்பளம் அதிகமாக கொடுக்கப்படுவதால் உழைப்புச் சுரண்டல் இங்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. சாதாரண மென்பொறியாளர் சுமார் 14 மணி நேரம் உழைப்பதை நிறைய இடங்களில் பார்க்க முடியும். வெளிப்பணியேற்ற மையங்கள் எனப்படும் 'பி.பி.ஒ' நிறுவனங்களில் பணிபுரிவோர் இதை விடக் கடுமையாக உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகினறனர். காப்பீடு, மருத்துவம், அலுவலகப் பணிகள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பணிகளை இந்தியத் துணைக் கண்டத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து செய்திட முடியும். அதனை செய்பவர்கள் தாம் பி.பி.ஓ நிறுவனங்கள். வெளிநாட்டவருக்கு இணையான ஆங்கில அறிவு, காப்பீடு உள்ளிட்ட சில துறைகளில் பொருட்களை தொலைபேசியில் பேசி விற்க செய்யும் திறமை உள்ளிட்ட பல திறன்களை பெற்றவர் தாம் இதில் பணியாற்ற முடியும். 8 மணி நேர வேலை கோட்பாடு இங்கு பெயரளவில் கூட இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை பெற்றேத் தீர வேண்டும் அல்லது பொருட்களை விற்றுத் தீர வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுவதும் உண்டு. அதற்காக மிகவும் சிரத்தையுடன் அந்த இலக்கை அடைவதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு வாடிக்கையாளர்களை இவர்களால் அடைய முடியாவிட்டால் அவர்களை பணி நீக்கம் செய்திடவும் அந்நிறுவனங்களால் முடியும். ஏனெனில் அவர்கள் நிரந்தர பணியாளர்கள் முறையில் பணியமர்த்தப்படுவது இல்லை. இது போன்ற நடவடிக்கைகளாலும், வேலை நிரந்தரமின்மை, பயம், மனஉளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்ட பல கூறுகளாலும் பணியாளர்கள் பெரிதும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். 'இன்றைய பி.பி.ஒ நிறுவன பணியாளர்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டு சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அல்லது ரோமானிய கப்பல்களில் அடைத்து வைக்கப்பட்டு கடின வேலைகள் செய்த அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அந்த அடிமைகளுக்கு சாப்பாடு தவிர வேறு எதுவும் கிடையாது. வெளி உலகத்தைப் பார்க்கக் கூட அனுமதி கிடையாது. கப்பலின் அடித்தளத்தில் அடைந்து கிடக்க வேண்டும். அதே போல இந்திய தொழிலாளர்களையும் பணத்தை மட்டுமே காட்டி சக்கையாகப் பிழிந்து விடுகிறார்கள்", இதை சொல்வது நாமல்ல. இந்தியாவின் தகவல் தொழிற்நுட்பத் தலைநகரம் எனப்படும் பெங்களுரில் உள்ள வி.வி.கிரி நேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் லேபர் ( VV Giri Institute of Labour, Bangalore) என்கிற மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற நிறுவனம். சுமார் இருநூறு பேரிடம் ஆய்வு நடத்தி இந்தக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார்கள். (பார்க்க: சூனியர் விகடன், 1.1.06 )

கடந்த மார்ச் மாதம் புனேவில் நடைபெற்ற போதை விருந்து ஒன்று நடைபெற்றது. அதற்கான ஏற்பாடுகளை கணிணி நிறுவனங்களே செய்ததும் அம்பலமானது. அதில் கலந்து கொண்ட தகவல் தொழிற்நுட்பத்துறை ஊழியர்கள் உட்பட சுமார் 280 பேர் கைது செய்யப்பட்டனர். இது போன்ற விருந்துகள் சென்னையிலும் நடந்திருப்பதாகவும் அதில் 25 ஆண்களை கைது செய்து, காவல்துறையினர் விடுவித்ததும் தெரியவந்துள்ளது (தினமலர் 06-03-2007). கடந்த 2001 ஆம் ஆண்டு (29-10-2001) அன்று, அமெரிக்காவில் பணிபுரிந்து விட்டு இந்தியாவிற்கு திரும்பிய 24 வயதே ஆன கணிணி மென்பொறியாளர் புதுதில்லியில் கேசவபுரத்தில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அவர் தன் வேலையில் மனநிறைவில்லாததையும், வேலைக் காரணமாக தன் வீட்டையும் குடும்பத்தினரையும் மகிழ்ச்சி படுத்த முடியாமைக்கும் வருந்தியுள்ளார் (செய்தி: IANS). கடந்த 2002 ஆம் ஆண்டு சனவரி மாதம் சப்பான் நாட்டைச் சேர்ந்த கணிணி மென்பொறியாளர் அதிக வேலை பளுக் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அந்த ஊழியரின் குடும்பம் அந்நிறுவனத்திடம் நிவாரணம் கோரிய போது அதனை அந்நிறுவனம் ஏற்காமல் தள்ளுபடி செய்தது. இதனால் கொதித்துப் போன அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்நிறுவனத்திடம் நிவாரணம் பெற போராடி வெற்றியும் பெற்றனர். உலகில் தற்கொலை செய்து கொள்வோர் அதிகமுள்ள நாடு சப்பான் என்பதும் குறிப்பிடத் தக்கது. வேலை பளுக் காரணமாக சுமார் 652 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தேசிய காவல் நிறுவனம்(செய்தி: NPயு) தெரிவிக்கிறது. தற்பொழுது இது போன்ற தற்கொலைகள் இந்தியத் துணைக் கண்டத்திலும் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு எனப்படும் பெங்களுரில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. கடந்த சில வருடங்களாக பெங்களுரின் தற்கொலைகள் மிகவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என காவல் துறையினர் தெரிவித்தனர்(பார்க்க இந்து:26-11-2006).

இது போன்ற தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாயிருக்கும் வேலைபளுவும் மனஅழுத்தமும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரியாமலிருக்க பல நிறுவனங்கள் பணம் உள்ளிட்ட சலுகைகள் அளித்தும், நடன விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தியும் அவர்களை மகிழ்ச்சிபடுத்துகின்றன. சில நிறுவனங்கள் இதற்கென நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மது உள்ளிட்ட பல போதை பொருட்களும் கூட கிடைக்க வழிசெய்வது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அதிக பணவரவாலும், மன அழுத்தம் காரணமாகவும் இளைஞர்கள் தவறான காரியங்களில் ஈடுபட வழிகள் அதிகமாகின்றன. மது, மங்கை என வாழ்வை அனுபவிக்கத் தொடங்கி கலாச்சாரத்தையும் சீரழிக்க முற்படுகின்றனர். சில பன்னாட்டு நிறுவனங்கள் பணியாளர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்கவும் அதற்கென நிதியும் ஒதுக்கி அதிர்ச்சியடைய செய்துள்ளன. அதனை டேட்டிங் அலவன்ஸ் என்பர். இந்தியாவில் விப்ரோ நிறுவனம் அது போன்ற அலவன்ஸ் கொடுத்ததால், தன் கணவர் வேறொரு பெண்ணுடன் சென்று விட்டார் என்று அவர் மனைவி கான்பூர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். பின்னர் அது போன்ற அலவன்ஸ் தங்கள் நிறுவனத்தில் இல்லையென அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. கடந்த மாதம், நாடு முழுதும் உள்ள 3000 தகவல் தொழிற்நுட்பத்துறை ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் பல தகவல்கள் வெளிப்பட்டன. தகவல் தொழிற்நுட்பத் துறை ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் இல்லற வாழ்வில் நாட்டமின்றி இருக்கின்றனர் என்றும் அவர்களது குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்றும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது (தினகரன் 28-04-2007).


மனஅழுத்தத்தை போக்க யோகா, மனப்பயிற்சி உள்ளிட்ட பல வழிகள் இருக்கிற போதும் பல நிறுவனங்கள் மேற்கத்திய பாணியில் 'டிஸ்கொத்தே', நடன விருந்து என்று தன் ஊழியர்களிடம் அயல்நாட்டு கலாச்சாரத்தை புகுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்பினால் தகவல் தொழிற்பத்துறையினர் மற்ற துறையினரைவிட அதிக சம்பளம் பெறுவதால் மற்றவர்களுக்கு ஏற்படும் மனக்குறைவு தான் இக்குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் காரணம் என சாக்கு சொல்லுகின்றனர். ஆனால் இவற்றால் பாதிக்கப்படப்போவது நமது பிற்கால சந்ததியினரே என்பதை உணர மறுக்கின்றனர். ஒருபுறம், காடுகள் அழிக்கப்படுதல் மற்றும் வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் உலகம் அச்சுறுத்தல் பெற்றிருக்கும் போதே, உலகமயம் விவசாய நிலங்களை பறிக்க திட்டமிடுகிறது. மறுபுறம், வேலை பளு அதிகம் கொடுத்து உழைப்பு சுரண்டலை தீவிரப் படுத்தி பணியாளர்களை மனஅழுத்தத்தில் ஆரம்பித்து தற்கொலை வரை கொண்டு செல்கிறது. மனிதகுலத்திற்கு எதிரான உலகமயத்தின் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

குறிப்பு: இக்கட்டுரை 'சற்றுமுன்' கட்டுரைப் போட்டியின் 'சமூகம்' பிரிவிற்காக எழுதப்பட்டது...

--
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Monday, May 21, 2007

மீனவர்கள் கடத்தல் உளவுத்துறை சதியா? - செய்தி அலசல்


புதினம் செய்தி ஆய்வு
முடிவுக்கு வந்தது இந்திய உளவுத்துறையின் "மீனவர்" கடத்தல் நாடகம்


தமிழக மீனவர்கள் கடத்தல்- சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மீனவர் கடத்தல் தொடர்பான ஒரு செய்தி ஆய்வு:

4 மார்ச்  2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம்

29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

(தினமணி மார்ச் 30: சிறிலங்கா கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி

களியக்காவிளை, மார்ச் 30: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 மீனவர்கள் உயிர் இழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் அருகேயுள்ள சின்னத்துறை மீனவக் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கா. சதீஷ் (26), கா.ஜஸ்டின் (24), தோ.தீஸஸ் தாஸ் (37), மரிய ஜான் (50), லினீஸ் (52) அருள் லாம் தூஸ் (31), நீரோடி கிராமத்தைச் சேர்ந்த ஜெரின் (17), மரிய ஜான் லூயிஸ் (32), ஈஸ்டர்பாய் (30) ஆகிய 9 மீனவர்கள் கடந்த 23 ஆம் நாள் விசைப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து 45 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிறிலங்கா கடற்படைக் கப்பல், திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. இதில் சதீஸ், ஜஸ்டின், மரிய ஜான், லினீஷ் ஆகிய 4 மீனவர்கள் பலியானார்கள். மேலும் துப்பாக்கிச் சூட்டில் தீசஸ் தாஸ் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

31 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை: சிறிலங்கா அரசு- இந்திய கடற்படை மறுப்பு

(Hindu Mar 31, 2007)

Navy Chief won't rule out LTTE role in firing on Indian fishermen

Sandeep Dikshit
`Sri Lankan Navy has asked to exercise restraint'
`State Government not warning fishermen enough' 
 
NEW DELHI: The Chief of the Naval Staff, Admiral Sureesh Mehta, did not rule out the involvement of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in the recent incidents of firing on Indian fishermen in order to create a misunderstanding between the two countries.

Basing his views on assurances given by the Sri Lankan Naval chief, Admiral Mehta said the purpose could be to create a rift between the two nations.

"I had personally spoken to the Chief of the Sri Lankan Navy five days back [following another incident of firing on Indian fishermen] and he assured me that his men had no intention of harassing fishermen in this manner. The Sri Lankan Navy has also issued strict instructions asking its personnel not to open fire on Indian fishermen who had strayed into Lankan waters," he told newspersons on Friday.

In a recent meeting between top officers from the Sri Lankan security establishment and the Indian High Commission in Colombo, the Sri Lankan navy chief had shown maps to prove that his ships were nowhere in the vicinity when incidents of firing on Indian fishermen took place.

"It could be a tactic by the LTTE to create a rift," he observed.

The navy chief also regretted that the State Government was not doing enough to warn fishermen about the perils of entering Sri Lankan waters at a time when conflict was raging in and around the Island nation. "There are some systems that should have been put in place."

With about 3,000 boats crossing over into the international waters everyday, Admiral Mehta wanted the boats to carry some kind of locational indication instrument so that the Indian authorities were aware of their whereabouts and could alert the forces of the other side in case they inadvertently crossed over in the waters controlled by Sri Lanka

1 ஏப்ரல் 2007: கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலை: புலிகள் மீது பழிபோட இந்திய உளவுத்துறை சதி
 
1 ஏப்ரல் 2007: கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தொடர்புபடுத்துவது விசமப் பிரச்சாரம்: இளந்திரையன் கடும் கண்டனம்

தாயகத் தமிழ் உறவுகளும் ஈழத் தமிழர்களும் இணைந்து நல் உறவைப் பேணுவதையும் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாப அலைகள் உருவாவதையும் விரும்பாத மற்றும் கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற தீய சக்திகளுடன் இப்படுகொலைகளை மூடிமறைக்க வேண்டும் என்று கருதுகிற சிறிலங்கா அரசும் இணைந்து இச்சம்பவத்தில் எங்களை தொடர்புபடுத்தி மிக மோசமான விசமப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

தாய்த் தமிழக உறவுகளும் ஈழத் தமிழ் உறவுகளும் ஒரே இரத்தமாக இருப்பதால் ஒன்றாக இணைந்து நம்முடைய உறவைப் பேணுவதன் மூலம் இத்தகைய தீய சக்திகளுக்கும், நாடு இன பேதமின்றி தமிழ் மக்களை குறிவைத்துப் படுகொலை  செய்கின்ற சிறிலங்கா அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் இளந்திரையன்.

12 ஏப்ரல் 2007: தூத்துக்குடி அருகே 6 சிங்களர்கள் கைது: குமரி மீனவர்களை சுட்டுக்கொன்றவர்களா?

தூத்துக்குடி அருகே இந்தியக் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களர்களை கடலோரக் காவல் படையினர் புதன்கிழமை கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

12 ஏப்ரல் 2007:

URL: http://www.thehindu.com/2007/03/12/stories/2007031205801200.htm

 

Sri Lanka refutes allegations

 

The Sri Lanka Government said on Sunday that reports of the death of an Indian fisherman in firing by its Navy were "instigated by the LTTE with a vested interest." It reiterated the proposal for joint monitoring of the International Maritime Boundary Line (IMBL) by the Indian and Sri Lanka Navies.

 

The statement said that it was reasonable to assume that the reports were being instigated by the LTTE in an attempt to damage the strong bilateral relationship between India and Sri Lanka.

13 ஏப்ரல் 2007: கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்களுக்கு 5 மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் தொடர்பு இல்லை (தினமணி)

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இந்திய கடலோர காவல் படையினர் புதன்கிழமை காலையில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கே 28 கடல் மைல் தொலைவில் இரண்டு வள்ளங்களில் கன்னியாகுமரி மாவட்டம், மேல முட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

இரண்டு வள்ளங்களிலும் தலா 6 பேர் வீதம் 12 பேர் இருந்தனர். இந்த வள்ளங்களுக்கு அருகே ஒரு விசைப்படகு கேட்பாரின்றி நின்றது. அந்தப் படகு இலங்கையைச் சேர்ந்தது. அதில் "மரியா' என பெயர் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து 12 பேரையும் கடலோரக் காவல் படையினர் சிறை பிடித்தனர். பின்னர், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணை: கடந்த 29 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரை சுட்டுகொன்ற நபர்கள் வந்த படகில் மரியா என எழுதப்பட்டிருந்ததாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. தற்போது இலங்கை மீனவர்கள் வந்த படகிலும் மரியா என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கடந்த 29 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட படகில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், நீரோடிதுறையைச் சேர்ந்த கி. ஜெரின் (18), ரீ.அருளாந்ததூஸ் (31), மரியஜான் லூயிஸ் (41) ஆகியோரை காவல்துறையினர் தூத்துக்குடிக்கு இரவோடு இரவாக அழைத்து வந்தனர். பிடிபட்ட இலங்கை படகு "மரியா' மற்றும் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் அவர்களிடம் காட்டினர். இந்த விசாரணையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளதாக எஸ்.பி.ஜான் நிக்கல்சன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விபரம்:

இலங்கை யாழ்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த அந்தோனி பிள்ளை மகன் அருள்ஞானதாசன் (20), மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த கிறிஸ்டி மகன் ராபின் (23), வன்னி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுப்பையா செல்வராசா மகன் செல்வகுமார் (19), யாழ்ப்பானம் குறுநகர் முதலாம் குறுக்கு தெருவைச் சேர்ந்த மரியான்பிள்ளை மகன் பொனிபாஸ் (28), மன்னார் முள்ளிக்குளத்தை சேர்ந்த தவராசா மகன் அருண் (19), முத்தையா மகன் ரவிக்குமார் என்ற ரவி (24) ஆகிய 6 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை தமிழ் மீனவர்கள் ஆவர்.

இவர்கள் கடந்த மாதம் 14 ஆம் நாள் தேதி மன்னார் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க வந்துள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பும் வேளையில் 5 ஆம் நாள் படகு இயந்திரத்தில் கோளாறாகி நின்று விட்டதாம்.

கன்னியாகுமரி மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் தான் இலங்கை மீனவர்களுக்கு உதவியுள்ளனர். எனவே இரண்டு வள்ளங்களிலும் சென்ற மேல முட்டத்தைச் சேர்ந்த செ.சகாயவின்ஸ் (25), தீ.நெல்சன் (34), ம.அந்தோனி (38), ஆ.முத்தப்பன் (36), ஜெ.சபின் சுதாகர் (18), அ.ஸ்டார்லின் (25) ஆகிய 6 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புள்ளது என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியாகக் குற்றம்சாட்டிய நாளில்தான் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் சிங்களவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.

சிறிலங்காவின் அறிக்கையும் சிறிலங்காவில் மட்டும் வெளிவரவில்லை. தமிழகத்தில் உள்ள இந்து நாளேட்டிலும் வெளிவந்துள்ளது.

ஓரு பதற்றமான நிலையில் இப்படி ஒரு செய்தி வந்திருக்கும் சூழலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரித்தவர் பொறுப்புள்ள காவல்துறை அதிகாரியான தூத்துக்குடி கண்காணிப்பாளர் நிக்கல்சன்.

அவர் நடத்திய விசாரணையில்தான் கைது செய்யப்பட்டவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து.

17 ஏப்ரல் (தினமணி) "மீனவர் சுடப்பட்டதில் சிறிலங்கா கடற்படைக்கு தொடர்பில்லை. அண்மையில் கடலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் மறுத்துள்ளது.

தினமணியில் (15.4.2007) வெளியான "சிறிலங்கா கடற்படை சுட்டதில் பலியான 5 மீனவர்கள் குடும்பத்தாருக்கு அரசுப் பணி நியமன உத்தரவு" என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு துணைத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்மையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான கன்னியாகுமரி மீனவர்கள் சிறிலங்கா கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில்தான் மரணம் அடைந்தனர் என்ற தொனியில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கும் சிறிலங்கா கடற்படைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ள வேளையில் அக்கடற்படை மீது குற்றம் சுமத்தியிருப்பது உகந்ததல்ல என அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றது யார் என்று தெரியாத நிலையிலேயே "நிரூபிக்கப்பட்டு விட்டதாக"க் கூறுவது என்பது கண்ணை மூடிக்கொண்டு அல்லது ஒரு திட்டமிட்ட பொய் கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்பட்டிருப்பது அல்லாமல் வேறு எதுவுமே இல்லை.

ஏப்ரல் 17 ஆம் நாளுக்குப் பின்னர் ஏப்ரல் 28 ஆம் நாள்தான் தமிழக காவல்துறைத் தலவைர் முகர்ஜியின் அறிக்கை வெளியாகிறது.

அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியாகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எனப்படுவோரின் வாக்குமூலம் ஒன்றும் வெளியாகிறது.

27 ஏப்ரல் 2007 : விடுதலைப் புலிகள்தான் சுட்டனர்: தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி அறிக்கை

அந்த அறிக்கையில்

- கைது செய்யப்பட்ட மீனவர்களை காவல்துறையினர் கஸ்டடி எடுத்த நாள்: ஏப்ரல் 20

- கியூ பிரிவுக்கு மாற்றப்பட்ட நாள்: ஏப்ரல் 23

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம், இந்து நாளேடு போன்ற தமிழின எதிரிகளும் சம்பவம் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தியக் கடற்படைத் தளபதியோ சம்பவம் நடந்த மறுநாளே பகிரங்கமாக தமிழ்நாடு அரசு மீது கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுகிறார்.

தமிழக அரசும் வாய்மூடி மௌனமாகக் கிடக்கிறது.

சிறிலங்கா கடற்படையும் அதே போன்ற அறிக்கை விடுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டனர். அவர்கள் விசாரிக்கப்பட்ட சூழலும் பதற்றமான ஒரு காலட்டத்தில்தான். விசாரித்ததும் தமிழகக் காவல்துறையின் பொறுப்புள்ள அதிகாரிதான்.

பிறகு ஏன் தமிழகக் காவல்துறை மீண்டும் விசாரிக்க வேண்டும்?

300-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறிவிட்டதே என்பதற்காகவா?

அல்லது

இந்தியத் தளபதி கூறிவிட்டாரே என்பதற்காகவா?(May 31 Hindu)

அல்லது

விடுதலைப் புலிகளை எப்படியும் தமிழகத்தின் உறவிலிருந்து பிரித்தே ஆக வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கம - இந்திய உளவுத்துறையினர் கூட்டுச்சதியினை நிறைவேற்றவா?

அல்லது

சிறிலங்காவில் இந்தியாவும் கடலில் கூட்டு சுற்றுக்காவல் மேற்கொள்ள வேண்டும் என்று கனவு காணும் இந்த சகுனிகளின் சதித்திட்டத்தை நிறைவேற்றவா?

சரி

வாக்குமூலம் கொடுத்தவர் கடல் புலிகள் எனில்

ஏன் நாங்கள் கடல்புலிகள்தான் என்பதற்கான ஆதாரங்களைச் சொல்லவில்லை. அவர்களுக்கென அடையாள அட்டை இருக்குமே? அதனைத்தான் கடலில் தூக்கி எறிந்திருந்தாலும் தங்களுக்கான இயக்கப் பெயர், எண்கள் இருக்குமே? அதனையும் "கஸ்டடியில்" மறந்து விட்டார்களா? சொல்லிக் கொடுத்த வாத்திமார் மறந்துவிட்டாரா?

சரி

ஏப்ரல் 12 ஆம் நாள் வாக்குமூலம் கொடுத்தோர் கைது செய்யப்பட்ட செய்தி தமிழக ஏடுகளில் வெளிவருகிறது

ஏப்ரல் 13 ஆம் நாள் அவர்கள் தமிழர்கள் என்றும் மீனவர்கள் என்றும் புகைப்படங்களுடன் வெளிவருகிறது.

இவர்கள் விடுதலைப் புலிகள் எனில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு இது தெரியாமல் இருக்குமா?

அல்லது

இவர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதனைத் தெரிந்து கொண்டும்

ஆமாம், கடத்தப்பட்ட மீனவர்கள் எங்களது கஸ்டடியில்தான் இருக்கிறார்கள் என்று "போன் மூலம்" தமிழக காவல்துறை கஸ்டடியில் இருந்தவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்களா? கஸ்டடியில் இருந்தவர் போன்மூலம்தான் முகாமில் இருந்தோரைத் தொடர்பு கொண்டதாக தமிழகக் காவல்துறை தலைவர் முகர்ஜியின் அறிக்கைதான் கூறுகிறது.

தற்போது திரும்பி வந்துள்ள மீனவர்கள் கூறுகிறார்கள், தாங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில்- சாப்பாடு கூட எடுத்து வர முடியாத ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தோம் என்றும் சிறை போன்ற முகாம் என்றும் வீடு போன்ற பகுதி என்றும் கூறுகின்றனர்.

தமிழகக் காவல்துறை வலுவான நெட்வேர்க்கில்தான் உள்ளது போல்....

இப்படியான இடங்களுக்கு சிறிலங்கா அரசாங்கமும் தொலைபேசி வசதி செய்தி கொடுக்கிறது போல்-

தற்போது மீனவர்கள் திரும்பிவிட்டனர்.

பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திரும்பிய மீனவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக கரை சேர்ந்த உடனேயே ஊடகத்தாரைக் கூட்டி அங்கேயே புலிகளை அம்பலப்படுத்தாமல் சென்னைக்கு வரவழைத்து சென்னையிலும் கரையிலும் யாரிடமும் பேசவிடாமல் கடைசியாக மீண்டும் ஒரு வாக்குமூலத்தை சொல்ல வைத்திருக்கிறார்கள்.

சிங்களக் கைதிகள் சொல்லாத ஒரு அபாண்டத்தை தமிழக மீனவர்கள் மூலம் காவல்துறை சொல்ல வைத்திருக்கிறது.

புலிகளின் பிடியில் சிக்கிக் கொண்ட கைதிகள் எவரேனும் ஒருவராவது புலிகள் மீது குற்றம் சுமத்தியது உண்டா?

தங்களை நடத்திய விதம் குறித்து குறை கூறியது உண்டா?

பிரிந்து செல்லும்போது கொடுத்த பேட்டிகள் எத்தனை எத்தனையோ வெளியாகி உள்ளன. ஒன்றிலாவது ஒரு குறையாவது சொல்லப்பட்டது உண்டா?

திரும்பிய தமிழக மீனவர்கள் சொல்லியிருப்பதாக இன்று வெளியான செய்தியில் சிரிக்காமல் சிந்திப்பதற்காக நீங்கள் படிக்க வேண்டிய வரிகள்:

"ஹெல்மட் அணிந்து முகத்தை முற்றும் மறைத்துக் கொண்டு ஒருவர் எங்களை சந்தித்து உங்களை விரைவில் கேரள கடற்பகுதியில் கொண்டு போய் விடுகிறோம் என்று கூறினார். வானூர்தியில் சென்று பார்வையிட்டு வருவதாக கூறி சென்றார்."

என்னது கேரள கடற்பகுதியை விடுதலைப் புலிகள் வானூர்தியில் சென்று பார்வையிட்டனர்.

கேரள கடற்கரை பகுதி இருப்பது அரபிக் கடல் என அறிந்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இருப்பது வங்கக் கடல் என அறிந்திருக்கிறோம்.

வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே மன்னார் கடலில் "பாரிய" படைபலம் பொருந்திய இந்தியப் பேரரசின் கடற்படை உள்ளது.

அன்னியக் கொள்வனவுகளால் கொழுத்துக் கிடக்கும் சிங்களக் கடற்படை உள்ளது.

இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் மட்டுமல்ல- வான்படையின் கண்ணிலும் மண்ணைத் தூவி அரபிக் கடலில் உள்ள கேரள கடற்கரைப் பகுதியை புலிகள் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை விடுதலைப் புலிகள்

வங்கக் கடல் தாண்டி

அரபிக் கடலை தொட்ட விடுதலைப் புலிகள்

இந்துமா சமுத்திரத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஆம்.

"மீண்டும் வந்த போது தமிழக கடல் பகுதியிலேயே உங்களை விட்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எங்களுடைய டிரைவர் (மலையாளி சைமன்) எங்கே என்று கேட்டோம். அவரை ஏற்கனவே படகில் அனுப்பி வைத்து விட்டோம். நீங்கள் கரைக்கு சென்ற பிறகு உங்களை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மாலைதீவு கடற்படையினரிடம் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இராமேஸ்வரம் நடுக்கடலில் எங்களை மீனவர்களிடம் ஒப்படைத்தார்கள்"

இதில் எங்கே மாலைதீவு வந்தது?

புலிகள் எப்படி மாலைதீவில் இயங்குகிறார்கள்?

மாலைதீவானது

வங்கக் கடலிலும் இல்லை

அரபிக் கடலிலும் இல்லை

இந்துமா சமுத்திரத்தில்

அமெரிக்கா- இந்தியா- பிரித்தானியா- சிறிலங்காவின் கூட்டுக் கண்காணிப்பு வலயத்தில் உள்ள பிரதேசம்.

அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்காதீர்கள்

தெற்காசியாவில் காலூன்றுவதற்காக பிரித்தானியாவிடமிருந்து பெற்ற டிகாகோ கார்சிகோ தீவு மாலைதீவுக்கு கீழேதான் உள்ளது.

புளொட் அமைப்பைக் கொண்டு 1989-களில் அங்கு சதி நடத்திய இந்தியாவின் றோவுக்கு எப்போதும் மாலைதீவு மீது "காதல்" உண்டு.

அதற்கும் அப்பால்

மாலைதீவு அருகே மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்தோர் பேசியது தமிழ் அல்ல- மலையாளம் என்று அந்நாட்டு அரசாங்கமே அறிவித்துவிட்ட நிலையில்

மாலைதீவு பகுதியில் எமது இயக்கத்தின் செயற்பாடு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்ட நிலையில்

தமிழக முகர்ஜிவாலாக்களுக்குத்தான் என்னே அறிவு! அடம்பிடிக்கிறார்களே!

தெளிவாகச் சொல்கிறோம்

இந்தக் கடத்தலின் பிதாமகனே இந்திய றோதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துலகத்தின் அனுசரணையைப் பெறுவதற்கான ஒருநிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க விடாமல் தமிழகத்தின் புலிகள் ஆதரவு நீடித்து நிற்கிறது. தமிழக அரசும் அதற்கேற்ப ஈழத் தமிழர் ஆதரவு நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக மத்திய ஆளும் அரசை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதிக்கு வேட்டு வைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல்- காவல்துறை நாடகம்தான் இது.

தமிழக காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தாலும்

தமிழகத்தில் பால்ரசு குண்டு கைதுகள் முதல் கஸ்பாரின் சங்கமம் வரையான அனைத்து புலிகள் தொடர்பான பிரச்சனையில் எம்.கே.நாராயணன் தலையிட்டுக் கொண்டிருப்பதையும் அதனை தடுக்க முடியாமல் தமிழகக் காவல்துறை பணிந்தாக வேண்டிய "இந்திய அரசியல் கட்டமைப்பு" இருக்கிறது. இது இந்திய அரசியல் அவதானிகளுக்கும் ஊடகத்தாருக்கும் அறிந்த விடயம்தான்.

அந்த எம்கே.நாராயணன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பவர்தான் என்பதை தமிழகம் நன்கறியும். இப்போது நடந்துள்ள கடத்தல் நாடகத்தில் "கப்டன்" பாத்திரம் வகித்தவர் கேரளத்தைச் சேர்ந்த சைமன் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழக மீனவர்களை புலிகள் கடத்திச் சென்றதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு

அரசியல் ரீதியாக

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரனைக் கொண்டு கடத்தியது புலிகள்தான்- சுட்டது புலிகள் என்று தொடர்ச்சியாக கேட்க வைத்துவிட்டு

அதன் மூலம் கருணாநிதிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது இந்திய உளவுத்துறை.

(ஞானசேகரனுக்கு நெருங்கிய நண்பர் யார் தெரியுமா? இராமநாதபுரம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹசன் அலி. ஹசன் அலியைப் பற்றி நக்கீரன் வாரமிருமுறை இதழ் வெளியிட்ட விவரம் என்னவெனில் "மகிந்தவுக்கு நெருக்கமானவர்- ஈழத்  தமிழ் அகதிகளை மிகக் கேவலமாக நடத்தியவர் என்பதுதான்)

இந்திய உளவுத்துறைக்கு பணிந்தாக வேண்டிய தமிழகக் காவல்துறையும் வாக்குமூல வசனங்களை விட்டுக் கொண்டிருக்கிறது.

எத்தனை பொய்யை அவிழ்த்து

எத்தனை அவதூறுகளை அள்ளி வீசினாலும்

"தானாடாவிட்டாலும் தசையாடும்" எங்களின் தொப்புள் கொடி உறவைத் துண்டிக்க எந்த வல்லூறாலும் முடியவே முடியாது.
 
நன்றி: புதினம்
 
மேலும் ஒரு ஆதாரம்...
 
பார்க்க ::  கடத்தியது சிறீலங்காகடற்படைதான் - கடத்தப்பட்ட மீனவச்சிறுவன்.

http://www.yarl.com/videoclips/view_video.php?viewkey=295f8076b1c5722a46aa
 
 
 

குறிப்பிடத்தக்க பதிவுகள்