Friday, September 14, 2007

எமது நெஞ்சங்களை உலுக்குகிறது பழ. நெடுமாறனின் போராட்டம்: யாழ். பொது அமைப்புக்களின் ஒன்றியம்

எமது நெஞ்சங்களை உலுக்குகிறது பழ. நெடுமாறனின் போராட்டம்: யாழ். பொது அமைப்புக்களின் ஒன்றியம்
வியாழக்கிழமை 13 செப்ரெம்பர் 2007 19:44 ஈழம்ஸ தாயக செய்தியாளர்ஸ

மனிதப் பேரவலத்தை நாளாந்தம் அனுபவித்து பட்டினிச்சாவை எதிர்நோக்கும் எமக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்து வருவதற்காக தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் நடத்தி வரும் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருவது எமது நெஞ்சங்களை உலுக்குகிறது என்று யாழ்ப்பாணம் பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


யாழ். பொது அமைப்புக்களின் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

யாழ்.குடாவை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலையானது சிறிலங்கா அரசினால் மூடப்பட்டுள்ளதால் சகிக்கமுடியாத மனிதப்பேரவலத்தை நாளாந்தம் அனுபவித்து பட்டினிச்சாவை எதிர்நோக்கும் சகோதர தமிழ் உறவுகளுக்காக தமிழக உறவுகளிடம் சேகரித்த உணவு மற்றும் மருந்துப் ருட்களை யாழ்ப்பாணம் அனுப்ப கடந்த ஏழு மாதகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் இந்திய மத்திய- தமிழக மாநில அரசுகள் உதவாத நிலையில் யாழ்ப்பாணம் நோக்கிய தியாகப்பயணத்தை தமிழர் தேசிய இயக்கத் லைவரும் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான பழ. நெடுமாறன் மேற்கொண்டபோது தமிழக காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி எம்மை வந்து தாக்கிய போது இடிவிழுந்து போனோம்.

இந்திய அரசு மற்றும் தமிழக அரசு மனிதாபிமான ரீதியில் யாழ். குடா மக்களுக்கு உதவியிருக்க வேண்டும்.

அவர்கள் அவ்வாறு உதவாமல் இருப்பது மனிதாபிமானத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது இந்தியாவிற்கு அழகல்ல.
ஏழு மாத கால முயற்சி தோற்றுப்போன நிலையில் படகுகள் மூலம் உணவுப்பொருட்களை கொண்டுவர முன்னேற்பாடாக மதுரை திருச்சி நகரங்களிலிருந்து தியாகப் பயணத்தை தொடங்கிய போது வழிநெடுகிலும் நின்று தமிழக உறவுகள் வாழ்த்தி அனுப்பியது ஈழத்தமிழர் நெஞ்சங்களை குளிரச் செய்தது.

கடந்த ஓராண்டாக சிறிலங்கா அரசு ஏ-9 வழியை மூடியிருப்பதால் யாழ்ப்பாண மக்கள் திறந்த வெளிச்சிறைக்குள் அடைபட்டுள்ளது போல் வாழ்கின்றனர்.

அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சிறிலங்காவில் நடத்தப்படுகின்றனர். நாளாந்தம் கொலைகளும் ஆட்கடத்தலும் நிகழ்கின்றன. இச்சூழ்நிலையில் தான் பழநெடுமாறன் வருகை தர இருந்தார். அதனை இந்திய அரசு தடுத்திருப்பது ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாகியிருக்கிறது.

தமிழக உறவுகளால் எடுத்து வரப்பட்ட உணவை தடுத்த இந்திய அரசுஇ ஏ-9 பாதையை திறக்க சிறிலங்காவை வற்புறுத்த வேண்டும். இதனை மனிதாபிமானத்தின் பேரால் கேட்கிறோம்.

இந்நேரத்தில் கடந்த ஏழு மாத காலத்தில் யாழ்ப்பாண குடா மக்களிற்குரிய உணவு மருந்து எடுத்து வரப் போராடிய பழ. நெடுமாறனுக்கும் தமிழக உறவுகளிற்கும் ஈழத்தமிழர் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்.

இந்தியப் படை தடுத்தாலும் சிறிலங்காப் படை சுட்டாலும் எம் யாழ்ப்பாண மக்களுக்கு உணவு மருந்து எடுத்து செல்லப்படும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறியும் தமிழக காவல்துறை தடுத்த போது சாகும் வரை உண்ணாநிலை இருந்த நேரத்தில் பழ.நெ டுமாறன் கைது செய்யப்பட்டதும் ஈழத்தமிழர் நெஞ்சங்களை உலுப்பியுள்ளது.

இந்த உணர்வு பூர்வமான தியாகப்பயணத்தை மேற்கொண்ட ஈழத்தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினருக்கும் தமிழக உறவுகளுக்கும் ஈழத்தமிழர் சார்பிலும் யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் சார்பிலும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 நன்றி: புதினம்
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்