Friday, May 11, 2007

ஈழதமிழர்கள் கைது: புதுச்சேரியில் கண்டன பேரணி

ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை
விடுதலை செய்யக்கோரி
புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி
 
புகைப்படம்: தினகரன்
நன்றி : தினமலர்
------------------------------------------------------------------------------------------------------------------------

ஈழதமிழர் கைது பிரெஞ்சு தூதரகம் நோக்கி கண்டன பேரணி

புதுச்சேரி, மே 11: பிரான்சு நாட்டில் 17 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டன பேரணி நடத்தி யது.

சிங்காரவேலர் சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் பாமக துணை பொதுச்செயலாளர் அனந்த ராமன் எம்.எல்.ஏ., அம்பேத் கர் தொண்டர் படை மூர்த்தி, மீனவர் விடுதலை வேங்கை கள் மங்கயர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், விடுதலை சிறுத்தைகள் பாவாணன், வணங்காமுடி, பெரியார் திராவிடர் கழகம் லோகு.அய்யப்பன், மதிமுக சந்திர சேகரன், பகுஜன்சமாஜ் தங்க,கலைமாறன், ராஷ்டிரிய ஜனதாதளம் சஞ்சீவி, கவுன்சிலர் சக்திவேல் உள் பட பல்வேறு சமுக அமைப் புகளை சேர்ந்த வர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  பேரணி பழைய பஸ் நிலையம், அண்ணாசாலை வழியாக பிரெஞ்ச் தூதரகம் நோக்கி சென்றது. பேரணியில் பிரெஞ்சு அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட் டது.
அம்பலத்டையார் மடம் வீதி, மிஷன்வீதி சந் திப்பில் போலீசார் பேரணி யில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் பிரெஞ்சு தூத ரகத்திற்கு சென்று பிரெஞ்சு தூதரிடம் மனு கொடுத்த னர்.  
 நன்றி: தினகரன்
------------------------------------------------------------------------------------------------------------------------
பிரான்ஸில் ஈழத் தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரியில் கண்டனப் பேரணி

புதுச்சேரி, மே 11: பிரான்ஸில் கைது செய்யப்பட்ட 17 ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பிரெஞ்ச் தூதரக அலுவலகம் நோக்கி பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் வியாழக்கிழமை கண்டனப் பேரணி நடத்தின.

ஈழத்தமிழர்கள் சிங்கள அரசின் நடவடிக்கைகளால் துயரம் அடைந்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்று அதனை ஈழத்தமிழர்களுக்கு அங்கிருந்த 17 ஈழத்தமிழர்கள் அனுப்பி வைத்தனர். இந் நிலையில் இலங்கை அரசின் பேச்சை நம்பி பிரான்ஸ் அரசு அந்த 17 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளது.

இந்த 17 ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் பிரெஞ்ச் தூதரக அலுவலகம் நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. இப் பேரணிக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். பாமக எம்எல்ஏ ஆர்.கே.ஆர்.அனந்தராமன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இருதயராஜி, அம்பேத்கர் தொண்டர் படையைச் சேர்ந்த தி.மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஆ.பாவாணன், வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பைச் சேர்ந்த மங்கையர் செல்வன், வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல், செந்தமிழர் இயக்கம் தமிழ்மணி, மதிமுக சந்திரசேகரன் உள்ளிட்ட பல்வேறு இயங்கங்கள் பங்கேற்றன.

பின்னர் 10 பேர் கொண்ட குழுவினர் புதுச்சேரி பிரெஞ்ச் தூதரக பெண் அதிகாரி ஜெல் ராயட்டை சந்தித்து ஈழத் தமிழர்கள் 17 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர்.
நன்றி : தினமணி
------------------------------------------------------------------------------------------------------------------------
புதுச்சேரியில்
ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம்
பிரெஞ்சு தூதரகத்தில் மனு கொடுக்கப்பட்டது

புதுச்சேரி, மே. 11-

புதுவையில் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம் நடந்தது. மேலும் பிரெஞ்சு தூதரகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது.

ஈழத்தமிழர்கள் கைது

பிரான்சு நாட்டில், புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களுக்கு அனுப்பி வைத்த 17ஈழத்தமிழர்களை சிங்கள அரசின் புகாரினை தொடர்ந்து பிரான்சு அரசு கைது செய்துள்ளது.

இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஊர்வலம்

புதுவையிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கைதான ஈழத்தமிழர்களை விடுவிக்கக்கோரி ஊர்வலம்-ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் நேற்றுகாலை சிங்காரவேலர் சிலையருகில் திரண்டனர்.

அங்கிருந்து கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். அனந்தராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டம்

ஊர்வலத்தில் அம்பேத்கார் தொண்டர் படை மூர்த்தி, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பாவாணன், வணங்காமுடி, ம.தி.மு.க. சந்திரசேகரன், பகுஜன்சமாஜ் கட்சி இருதயராஜ், செந்தமிழர் இயக்க தமிழ்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக அம்பலத்தடையார் மடத்துவீதியை அடைந்தது. அதற்குமேல் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அதைத்தொடர்ந்து ஊர்வலமாக வந்தவர்கள் அங்கேயே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்பின் முக்கிய பிரமுகர்கள் பிரெஞ்சு தூதரகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
நன்றி : தினத்தந்தி 

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்