Friday, November 02, 2007
Tuesday, October 16, 2007
விடுதலைப் பொரில் தமிழ்களம் - கவிபாஸ்கர்
விடுதலைப் பொரில் தமிழ்களம்
வடக்கே
வந்தேமாதரம்
ஜெய்ஹிந்த்
இரட்டை சொற்றொடர்கள்
விடுதலை வேண்டி
உருண்டு புரண்டது
தெற்கே சிவகங்கை
சிங்கங்கள்
கர்ஜித்த கீதங்கள்
ஒருமித்த குரலாய்
பிறந்து எழுந்தது
இரட்டைக் கிளவியை
பிரித்தால் பொருள்
வராது
இலக்கண வாய்பாட்டில்..
இரட்டை சகோதரர்கள்
மருதிருவரை மறந்தால்
மறுத்தால் வீரம்
விளையாது
தமிழக வரலாற்றில்..
சிவகங்கை சீமை
இது
ஓட்டிப் பிறந்த
இரட்டை வீரர்கள்
முட்டி முளைத்த
இடம்
வேல் கம்பு
வீச்சருவாளிடம்
வெள்ளைக்கார பீரங்கி
மண்டியிட்ட மண்
ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்தாலும்
சாவு நிச்சயம்
போராட வா
என்று காற்று கிழிய
காதுகளின் ஓசை
ஒலித்த இடம்
தேச விடுதலை
துலைநிமிர
ஐநூறு தலைகள்
கயிறில் தலைகுனிந்து
தொங்கிய இடம்
வீரம் விளைந்த
நிலம்
அடிமை விலங்கு
அறுந்த இடம்
அந்நியரை விரட்ட
அணிதிரண்ட
விடுதலைப் போரின்
முதற்களம்
எங்கள் தமிழ்நிலம்
ஆம்.
முண்ணுக்காக
போராடிய அந்த
மருது சகோதரர்களின்
குரலோசை இன்று
செவிப்பறையில்
வந்து மோதுகிறது
வீரத்தால் சிந்திய
ரத்தம் இன்று
தேசத்;தின் அழுக்கை
துடைக்கிறது
தூக்குக் கயிறுக்கு
மட்டுமே
தலைகுனிந்த
மருது சகோதரர்களை
நாங்கள் தலைநிமிர்ந்து
வணங்குகிறோம்.
அவர்கள் வீரமரபு
வழியில்
நாங்கள் வாளேந்தி
செல்கிறோம்
Sunday, October 14, 2007
தோழருக்கு வணக்கம்
தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோறும் தங்கள் இல்லாம் நாடி வர சந்தாதாரர்கள் ஆகுங்கள்.
தமிழர் கண்ணோட்டம் மே மாத இதழ் 2007
தமிழர் கண்ணோட்டம் சூன் மாத இதழ் 2007
தமிழர் கண்ணோட்டம் சூலை மாத இதழ் 2007
தமிழர் கண்ணோட்டம் ஆகத்து மாத இதழ் 2007
தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் இதழ் 2007
படிப்பததோடு மட்டுமில்லாமல் தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
ஈழம் : இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது க.அருணபாரதி “ இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ” – 4 நாள் சுற்று(லா)...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...
-
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...
-
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...
-
ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...




