Friday, January 25, 2008

காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்

சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்துகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள எழுத்துக்களை தார்பூசி அழித்த தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை



இன்று(25-01-2008), 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்ட நாள் என்ற வகையில், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழ் மொழி காப்பதற்காக தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பு போக்கை கண்டிக்க அடையாளப் பூர்வமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் பேருந்துகளில் எழுதியுள்ள ஆங்கில எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்தியது.






இப்;போராட்டத்திற்கு தமிழ்த்தேசப் பொவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமை தாங்கினார். தமிழ் மொழியாக்கம் கூட இல்லாமல் ‘அல்ட்ரா டீலக்ஸ்’ என்றும் ‘எஸ்.இ.டி.சி’ என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை தோழர்கள் தார்பூசி அழித்தார்கள். அப்போது காவல்துறையினர் அங்கு வந்து தலைமை தாங்கிய தோழர் அ.பத்மநாபன், போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் வெற்றித்தமிழன், தனசேகர், சங்கர், மாரிமுத்து, நெய்வேலி பாலு, பெண்ணாடம் க.முருகன், பழனிவேல், பிந்துசாரன், க.காமராசு, செந்தில் ஆகியோரையும் மற்றவர்களையும் கடுமையாக தடியால் அடித்து துன்புறுத்தி இழிவாகப் பேசி அவமானப்படுத்தியுள்ளனர். குறிப்பாக காவல்துறையைச் சேர்ந்த தேன்தமிழ்வாணன் என்பவரும் அடையாளம் தெரிந்த இன்னொருவரும் கடுமையாக தடியால் அடித்துள்ளனர். இப்பொழுது (25-01-2008 பகல் 11.30 மணி) கைது செய்யப்பட்ட 16 பேரையும் கோயம்பேடு சந்தை பகுதியில் ஒரு கட்டடத்திற்குள் அடைத்து பூட்டி வைத்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும், நண்பர்களும் பார்க்கப் போனதற்கு காவல்துறையினர் பார்க்க அனுமதிக்கவில்லை.






காவல்துறைக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு பல்லாயிரக்கணக்கில் துண்டறிக்கை, சுவரொட்டி, பதாகை மூலம் விளம்பரபடுத்திவிட்டு பத்திரிக்கைகளுக்கும் அறிக்கை கொடுத்து விட்டு நடந்த இப்போராட்டத்தில் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது.




சட்டவிரோதமாகவும் சனநாயக விரோதமாகவும் நடந்து கொண்டு தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

2 கருத்துகள்:

Radha N said...

நண்பர்கள் செய்தது தவறு. எனவே அவர்களை காவல் துறையினர் கைது செய்தது சரியானது தான்.

Anonymous said...

machaan
you come to bangalore and roam aroung in the city bus for one day then you will know the problem of not having english in the bus boards

btw if put posters, announce and then commit a murder, should you be left free???

Who is going to bear the cost for all the damages you people do??

குறிப்பிடத்தக்க பதிவுகள்