Monday, December 18, 2006

அன்ரன் பாலசிங்கம்

அன்ரன் பாலசிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 
அன்ரன் பாலசிங்கம்
அன்ரன் பாலசிங்கம்

அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம், 1938 - டிசம்பர் 14, 2006 ; கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைடைக் கொண்ட இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22- 23 இல் ஜெனிவாவில் நடைபெற்ற , ஜெனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.

[ தொகு] சரிதம்

[ தொகு] ஆரம்ப வாழ்க்கை

ஆரம்பக்காலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழிப் பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். [1] [2] இங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியாதனால் இங்கிலாந்து குடியுருமை பெற்றார்.

[ தொகு] மணவாழ்க்கை

அவுஸ்திரேலியரான அடேல் ஆன்னை இலண்டனில் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

[ தொகு] விடுதலைப்புலிகளுடன் தொடர்பு

ஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழிபெயர்ப்பு உதவிகளையும் செய்தார்.

[ தொகு] உடல் நிலை பாதிப்பு

2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர். [3] [4].

[ தொகு] மறைவு

தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 அன்று தனது 68வது வயதில் லண்டனில் காலமானார்.

[ தொகு] தேசத்தின் குரல் விருது

மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு "தேசத்தின் குரல்" எனும் கௌரவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்துள்ளார். [5]

[ தொகு] அன்ரன் பாலசிங்கத்தின் மிதவாத போக்கு

அன்ரன் பாலசிங்கம் முதலில் மார்சிய வாதியாக இருந்தவர். பின்னர் அதில் இருந்து தன்னை விலத்தி, ஈழத் தமிழத் தேசியத்தை வரையறை செய்பவர்களில் ஒருவரானார். தமிழீழ விடுதலைப் புலிகளில் கற்றறிவு, அனுபவ ஆறிவு, ஆங்கில மொழி அறிவு, மிதவாத தன்மை [6], வெளிஉலக பார்வை தொடர்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை கொண்ட ஒரு மிக முக்கிய தலைவராக விளங்கினார். முற்போக்கான, மேற்ககுலகை புரிந்த ஆளுமையாக பிபிசி ஆய்வாளர்கள் இவரின் முக்கியத்துவத்தை பற்றிய ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளனர் [7]. இறுதி வரைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தாத தமிழீழப் போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் இருந்து செயலாற்றியதும் இவரின் மிதவாத போக்குக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு ஆகும்.

[ தொகு] இவரது நூல்கள்

  • Balasingham, Anton. (2004) 'War and Peace - Armed Struggle and Peace Efforts of Liberation Tigers', Fairmax Publishing Ltd, ISBN 1-903679-05-2
  • போரும் சமாதானமும்
  • விடுதலை

[ தொகு] இவற்றையும் பார்க்க

[ தொகு] மேற்கோள்கள்

  1. விழிப்பு தளத்தில் செய்தி
  2. [1]
  3. Anton Balasingham afflicted by rare cancer. தமிழ்நெட். இணைப்பு 2006-11-25 அன்று அணுகப்பட்டது. (ஆங்கிலம்)
  4. Tamil Tiger negotiator has cancer. பிபிசி . இணைப்பு 2006-11-25 அன்று அணுகப்பட்டது. (ஆங்கிலம்)
  5. பாலாண்ணைக்கு "தேசத்தின் குரல்" கௌரவம்: தமிழீழத் தேசியத் தலைவர் அறிவிப்பு
  6. இந்து செய்திகள்
  7. Brain behind the Tigers' brawn - பிபிசியின் ஆய்வு

[ தொகு] வெளியிணைப்புக்கள்

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com=
***********************************************

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்