Wednesday, May 09, 2007

"சிங்கள அப்பாவி மக்கள் எங்களது இலக்கு அல்ல" - புலிகள்

''நாங்கள் வீசுகிற ஒவ்வொரு குண்டும் இலங்கை ராணுவத்தின் விமானக் கட்டுமானங்களுக்கு எதிரானதுதானே தவிர சிங்கள அப்பாவி மக்கள் மீது அல்ல''
 - சு.ப.தமிழ்ச்செல்வன்  -
 
தமிழக மீனவர் பிரச்சனை குறித்த உண்மை நிலவரம்
 
புதன்கிழமை 9 மே 2007 05:31 ஈழம் புதினம் நிருபர்
 
"எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்பளித்து விடக்கூடாது."

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:

"குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை புலிகளுக்குச் சொந்தமான 'மரியா' என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல்இ தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள் விடுதலப் புலிகள் என்று ஆதாரத்துடன் தமிழக காவல்துறை இயக்குநர் முகர்ஜி கூறியிருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன?"

"இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும்இ 12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் இலங்கை கடற்படைதான் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதான் எங்கள் விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல். புலிகள் மீது திட்டமிட்டு பழி சுமத்துவதற்காகவே இலங்கை கடற்படை இப்படியொரு காரியத்தை செய்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்ததுஇ நடக்கிறது என்பதெல்லாம் விரைவில் அப்பட்டமாக வெளிஉலகுக்கு வரும்போதுஇ புலிகள் மீது பொய்யை வாரி இறைத்திருப்பதை உலகம் உணரும். இலங்கைக் கடற்படையின் மோசமான எண்ணத்துக்கு ஈடுகொடுப்பது போல தமிழகக் காவல்துறையும் ஏன் இப்படியெல்லாம் அவதூறு சொல்கிறது என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை. தமிழக மக்கள் மீதும் மீனவர்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர்கள்தான் எமது போராளிகள். இதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. இலங்கைக் கடற்படையினர் மீனவர்களுக்கு எதிராக நடத்தும் பல்வேறு கொடுமைகளில் இருந்து மீனவர்களை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அப்படி இருக்கும்போதுஇ காவல்துறைத் தலைவர் முகர்ஜி சொல்லியிருக்கும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது!"

"கடத்தப்பட்டு உங்கள் முகாமில் இருப்பதாகச் சொல்லப்படும் மீனவர்களை மீட்க தமிழக அரசு தரப்பிலிருந்துஇ உங்கள் தரப்பிடம் மூன்று நாட்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இறுதிவரையில் நீங்கள் அவர்களை விடுவிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஒரு தகவல். அதுமட்டுமல்லஇ தமிழகத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ஐந்து கடற்புலிகள் ஈழத்தில் அடைத்து வைத்திருப்பதாகச் சொல்லப்படும் மீனவர்களுக்காக அங்கிருக்கும் புலி தளபதி ஒருவரிடம் தமிழகத்தில் இருந்து வாக்கி-டாக்கி மூலமாக பேசியதாக வரும் தகவல் குறித்தெல்லாம் என்ன சொல்கிறீர்கள்?"

"இதுவும்கூட தவறான தகவல்தான். இலங்கைக் கடற்படையாலும் அதனோடு சேர்ந்து இயங்கும் கூலிப்படையாலும் மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்படுகின்ற நாடகமாகவேத்தான் நாங்கள் இதனைப் பார்க்கிறோம். இதில் எங்களுக்கு இன்னொரு பெருத்த சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. தமிழக காவல்துறையோடும் உளவுத்துறையோடும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அவர்கள்இ புலிகளின் பெயரால் இப்படியான உரையாடல்கள நடத்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏனென்றால்இ இதுநாள் வரையில் அதிகாரப்பூர்வமாக தமிழகக் காவல்துறையோடு எமது அமைப்பின் உறுப்பினர்களோ தளபதிகளோ நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதில்லை. அப்படி இருக்கும்போதுஇ அவர்கள் எங்களோடு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றால் எப்படி? குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால்இ மீனவர்களை நாங்கள் கடத்தி வைத்திருக்கவில்லை என்கிறபோதுஇ அவர்கள் ஏன் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? அப்படிப் பேசினால் அது அபத்தமாக இருக்காதா? தமிழக மக்களுக்கும் புலிகள் இயக்கத்துக்குமான அன்பைஇ பாசத்தைஇ உறவை கெடுக்கும் விதமாகவே இதெல்லாம் நடக்கிறது என்ற எங்கள் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது."

"எல்லாவற்றையும் நீங்கள் தெளிவாக மறுக்கிறீர்கள். ஆனால்இ உங்கள் 'மரியா' படகில் வந்த கடற்புலிகளோ மீனவர்களை சுட்டுக் கொன்றது புலிகள்தான் என்று தெளிவுபடச் சொல்கிறார்களே...?"

"ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதுநாள் வரையில் 'மரியா' படகில் பிடிபட்டது கடற்புலிகள் என்று எங்கள் தரப்பிலிருந்து யாராவது ஒப்புக் கொண்டிருக்கிறார்களா? அப்படி இருக்கும்போதுஇ அவர்கள் வாக்குமூலம் கொடுத்தார்கள் என்று சொல்லிஇ எதையாவது தமிழகக் காவல்துறை சொல்லிக் கொண்டிருக்குமானால்இ அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? அப்படியே அவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகச் சொன்னாலும்இ அந்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை யார் சோதித்தறிவது? எமது அமைப்புக்கு எதிரானவர்கள் மூலமாக திட்டமிட்டு ஏன் இப்படியொரு நாடகம் நடத்தப்படக் கூடாது? கொஞ்சம் பொறுங்கள்... எல்லா உண்மைகளும் விரைவில் வெளியே வந்துவிடும்!"

"தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக புலிகள் தரப்பில் அறிக்கை ஒன்று விடப்பட்டிருக்கிறது. அதில்இ 'காணாமல் போன மீனவர்கள் பற்றி அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள் என்றும் மீனவர்கள் பற்றி தகவல்கள் கிடத்தால் அவர்களை மீட்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம்...' என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே?"

"ஆமாம்இ பாதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள். அவர்களுக்காக நாங்கள் உதவுவோம். இந்த விஷயத்தில் எமது தலைமை கரிசனத்தோடும் அக்கறையோடும் இருக்கிறது. மீனவர்கள் கடத்தல் நாடகத்திலும் மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்ல நாங்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்."

"ஒருவேளை மீனவர்களை மீட்கும் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவைப்பட்டுஇ நீங்கள் தமிழக அரசோடு பேச வேண்டியிருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?"

"மீனவர்களை மீட்பதற்கும் அவர்களின் பாதுகாப்பு நிலைமைகளை உறுதிப்படுத்வதற்கும் தமிழக அரசு எடுத்து வருகிற அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் உறுதுணயாக இருப்போம். சிங்கள கடற்படையாலோ கூலிப்படையாலோ நிகழ்த்தப்பட்ட இந்தச் செயலை முடிவுக்குக் கொண்டு வந்துஇ தமிழக மீனவர்கள் சிறுபாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இது தொடர்பாக எத்தனைமுறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்ப்பளித்து விடக்கூடாது."

"அண்டை நாட்டுப் பிரச்சினைதான் என்றாலும் ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வந்திருக்கிறார்கள். சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணருகிறீர்களா?"

"நடப்பது என்னவென்று தமிழக மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கும் சூழ்நிலையில் அவர்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் பரிவும் பாசமும் எப்படிக் குறையும்? அதற்கு வாய்ப்பே இல்லை! இப்படி தமிழக மக்கள் மனங்களில் இருந்து எங்களை பிரித்தெடுக்க சிங்கள அரசு போடும் நரித் திட்டங்கள் பலிக்காது. எங்களுக்கு எதிராக இந்திய அரசையும் திருப்பிவிடும் முயற்சிகளையும் சிங்கள அரசு செய்து வருகிறது. எங்களைப் பொறுத்த வரையில் பொய்கள் வேகமாகத்தான் பரவும். ஆனால்இ இறுதியில் அதை பரப்புகிறவர்கள் மீதே அசிங்கத்தைப் பூசும். உண்மைக்கு சோதனை வந்தால்இ அதனை பொறுமையாக எதிர்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. அதைத்தான் புலிகள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்."
 
"சமீபத்தில் மூன்றாவது முறையாக நீங்கள் கொழும்பில் வான்வழித் தாக்குதல் நடத்தினீர்கள். அதில் இந்தியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்குகள் பலவும் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகிறதே..."

"சமாதான காலத்தில் நாங்கள் யுத்த தர்மப்படி எவ்வித தாக்குதலிலும் ஈடுபடாமல் இருந்தபோதுஇ தொடர்ந்து தமிழ் மக்கள் மீது விமானத்தாக்குதல நடத்தியது சிங்கள விமானப்படை! பலமுறை எச்சரித்தோம்... உரியவர்களிடம் முறையிட்டோம். ஆனால்இ சிங்கள ராணுவம் வான்வழித் தாக்குதலை நிறுத்தவில்லை. அதன்பிறகுதான் புலிகள் தரப்பில் வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தமானோம். சிங்கள ராணுவத்துகுத் தேவையான எரிபொருளைக் கொடுக்கும் கட்டுமானங்களை அழிப்பதுதான் எங்கள் விமானப்படையின் நோக்கம். வான் வழியாக நாங்கள் வீசுகிற ஒவ்வொரு குண்டும் இலங்கை ராணுவத்தின் விமானக் கட்டுமானங்களுக்கு எதிரானதுதானே தவிரஇ சிங்கள அப்பாவி மக்கள் மீது அல்ல. அப்படி இருக்கும் போதுஇ நாங்கள் நல்லுறவைப் பேண விரும்பும் இந்திய அரசுக்கு எதிராக எங்களின் விமானப்படையை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம்!"

"கிட்டத்தட்ட சிங்கள அரசு-புலிகள் என இரண்டு தரப்பும் முழுமையான போரில் குதித்துவிட்ட இந்த சூழ்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கிறதா?"

"இலங்கை அரசைப் பொறுத்தவரையில் இன அழிப்புப் போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பல லட்சம் மக்களை அகதிகளாக்கி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறார்கள். நாங்கள் நடத்துவது எமது மக்களை காக்கும் தற்காப்புப் போர்தான். மீண்டும் ஒரு சமாதானச் சூழலைக் கொண்டு வர நார்வேஇ பிரிட்டன் போன்ற நாடுகள் முயன்று வருகின்றன. என்றாலும்இ சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பு போர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி பேச்சுக்காக நார்வே மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த அமைதித் தூதுவர்கள் எம்மைச் சந்திக்க எடுத்த முயற்சிகளையும் இலங்கை அரசுதான் தடுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையெல்லாம் நடக்குமா என்பது தெரியவில்லை. அப்படி இருக்கும்போது எங்கள் மக்களை காக்க நாங்களும் ஆயுதப்போர் நடத்தத்தானே வேண்டும்?"
 
நன்றி: புதினம்
 

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்