Monday, December 17, 2007

தமிழா உன்கொடி ஏறுமடா...


தமிழா உன்கொடி ஏறுமடா...
தாய் போல
தன்னுடைய
தாய்மொழியை
நேசித்தவன்..
 
வாய்ப் பேச்சால்
உலகத்தையே
வாயடைக்க
செய்தவன்..
 
தீயருக்கும்
திகட்டாமல்
விருந்தோம்பல்
படைத்தவன்..
 
நேயம் கொண்டு
எறும்பிற்கும்
அரிசிமாக் கோல
உணவு கொடுத்தவன்..
 
சங்கம் வளர்த்து
தன் மொழியை
சரியாமல்
வளாத்தவன்..
 
எங்கும் இன்று
அடிபட்டு ஓயாமல்
அழுபவன்..
 
தமிழன்..
 
ஈழத்தில் ஓங்கிநிற்கும்
உன் கையை
பலப்படுத்து..
 
ஈனத்துரோகிகளை
கண்டெடுத்து
தளைபடுத்து...
 
வானத்தில் மலர்த்தூவ
உன்கொடி ஏறுமடா...
அந்நாளில் உன்புகழை
உலகமே கூறுமடா...

 
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
 
மேலும் கவிதைகளுக்கு : புரட்சிப்பூக்கள்

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்