Monday, December 31, 2007

தன்மானமில்லா தமிழர்களின் புகலிடமான காங்கிரஸ்

தன்மானமில்லா தமிழர்களின்
புகலிடமான காங்கிரஸ்
(இன்றைய தமிழக காங்கிரஸ் பற்றிய ஒர் பார்வை)
க.அருணபாரதி
 
'இந்தி்'யத் தேசிய காங்கிரசின் தோற்றம்
              அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் இதே காங்கிரசு கட்சி தான்.  வடநாட்டு பார்ப்பன பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இந்தி மொழியை மற்ற மாநிலங்களில் திணிப்பதை அதன் செயல் திட்டமாகவே செயல்படுத்தவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை அவர்களுக்கு பின் வளர்ந்த தேர்தல் கம்யூனிஸ்டுகள், பாரதீய சனதா போன்ற தேசியக் கட்சிகளும் நிரூபித்தன. அவை அவ்வப்போது அம்பலப்பட்டும் வருகின்றன.
 
தமிழக காங்கிரசின் கொள்கை
             "ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர் திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதம் தேவையற்றது. தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் இறந்த விடுதலைப்புலிகளையும் மதிக்காமல் அவர்கள் மேடையிலேயே இறந்த போதும் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அதை உதாசீனப்படுத்தி ஈழத்திற்கு படைகளை அனுப்பியது சரியான நடவடிக்கை தான். அங்குள்ள தமிழ் பெண்களை இந்திய இராணுவம் கற்பழித்ததும் இளைஞர்களை கொன்று குவித்ததும் சரியே. ஈழத்தமிழர்கள் எங்கள் தலைவரை என்ன காரணத்துக்கு என தெரியாமலேயே கொன்று விட்டனர். அவர் ஒரு அப்பாவி. எனவே அம்மக்கள் இனி செத்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். எமக்கு மூவாயிரம் ஆண்டு தமிழ் மொழியின் உறவை விட 50 ஆண்டு கால காங்கிரசும் அவாகளது பேரன் பேத்திகளின் உறவே போதும். அது தான் நாங்கள் இன்னும் வடநாட்டு பனியா சக்திகளுக்கும் அதன் மகள் மகன்களுக்கும் பல்லக்கு தூக்கி அடிமை சேவகம் புரிந்திட உதவுகிறது. இந்திய தேசியம் பேசுவோம். ஆனால் கட்சிக்குள் கூட எல்லோரும் ஒற்றுமையாக இருக்க மாட்டோம்". இது தான் தமிழக காங்கிரசின் எழுத்திலேறாமால் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கொள்கை அறிக்கை.
 
ஈழப்பிரச்சனையில் காங்கிரசின் நிலைப்பாடு
            ஈழப்பிரச்சனைக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தீர்வு தனி ஈழமே. இதனை விடுதலைப்புலிகள் என்றோ உணர்ந்து விட்டனர். உலக நாடுகளும் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். ஆனால் காங்கிரசின் தீர்வு என்ன? ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்க்கு உரிமையாம். அக்கட்சி சொல்கிறது. இப்படிப்பட்ட மாய வாதங்களை சொல்லி தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை 'இந்தி'யனிடம் அடகு வைத்ததை போல, சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க சொல்கிறார்கள். தன் மானமுள்ள தமிழர்கள் ஏற்காமாட்டார்கள் என்பதனை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது. அதனை காங்கிரசும் உணர்ந்திருக்கிறது. அப்புறம் ஏன் தனி ஈழத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்கள் தலைவரை கொன்று விட்டனராம். இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவர் தானே. அவா பிரதமராக இருந்த போது அவரை சுட்டுக் கொன்ற சீக்கியர்களை எதிர்த்து இதே காங்கிரஸ் தொண்டர்கள் தான் வன்முறையை ஏவீ அவர்களை கொன்று குவித்தனர். பின்னர், சுட்டுக் கொன்ற சீக்கியனின் மனைவியையே தேர்தலில் நிக்க வைத்து பாராளுமன்றத்திற்கும் அனுப்பினர். அது மட்டுமில்லாமல் சீக்கிய இனத்தை சேர்ந்த ஒருவருக்கு பிரதமர் பதவியே கொடுத்தார்கள்.
 
            ஆனால், ஈழப் போராளிகள் ராசீவ் காந்தியை கொன்றுவிட்டனர் என்று கூறி, நாளும் கொடுமை அனுபவித்து வரும் ஈழமக்களை மேலும் தன்பத்தில் ஆழ்த்துவதில் இவர்களுக்கு என்ன அக்கறை? இந்திரா காந்தியை சட்டுக் கொன்றவனின் மனைவிக்கு நாடாளுமன்ற பதவி கொடுத்த காங்கிரஸ் நண்பர்களே  ஏன் தமிழர்களிடம் மட்டும் இந்த பாகுபாடு?
 
            பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் 'இந்தி'யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு?  தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது பயங்கரவாதம் என சொல்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், அக்கட்சி வட கிழக்கு மாநிலங்களில் சுயநிர்ணய உரிமை கோரி போராடும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் இந்திய அரசே நடத்தும் பேச்சுவார்த்தைகள் பற்றி கண்டு கொள்ளவில்லை? கருத்து சொல்லவில்லை?
 
        இந்த பாகுபாட்டைத் தான் 'இந்தி'ய தேசியம் என்கிறோம்.
 
ராசீவ்காந்தியின் சாதனைகள் 
            ராஜீவ் காந்தி என்கிற அரசியல் கோமாளியின் முட்டாள்தனமான முடிவுகளால் இந்திய அரசால் ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனரே அது பற்றி வாய் திறக்க எந்த தமிழகக் காங்கிரஸ்காரனாலும் முடியுமா? போபர்ஸ் ஊழல் வழக்கால் உள்நாட்டு அரசியலில் நாராடிக்கப்பட்டு காரி உமிழப்பட்ட ராசீவ்காந்திக்கு திடீரென பிறந்த அக்கறை தான் ஈழப்பிரச்னையில் அவரது தலையீடு.  எந்த நாடு நாங்கள் அகிம்சையால் சுதந்திரம் பெற்றோம் என உலகநாடுகளிடம் பீற்றிக் கொண்டு போலி வேடமிட்டதோ அந்த நாட்டை எதிர்த்து அகிம்சை முறையில் உண்ணாவிரத அறப்போர் தொடங்கினார் விடுதலைப்புலி திலீபன். எதற்காக?  ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என்று கோரிக்கையை வைத்து. அந்த கோரிக்கையை உதாசீனப்படுத்தி, திலீபன் அந்த உண்ணாவிரத மேடையிலேயே நீர் கூட அருந்தாமல் வீரமரணமெய்த வைத்தவர் தானே இந்த ராசீவ்காந்தி. அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்த ஈழத்தாய் அன்னை பூபதியும் மரணமெய்திட செய்தவர் தானே இந்த ராசீவ் காந்தி.
 
        கடந்த 07.11.2007 அன்று வெளிவந்த துக்ளக் வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் சோ, விடுதலைப் புலிகளின் இயக்கம் தடைசெய்யப்படாமல் இயங்கியக் காலத்திலேயே அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்லலாமா என ராசீவ்காந்தி ஆலோசனை  நடத்தியது உண்மை தான் என வாக்குமூலமே அளித்துள்ளார். அது பற்றி சூடு, சொரணையுள்ள எந்த காங்கிரஸ்காரனாவது வாய்திறந்தானா? ஒர் இயக்கத்தின் தலைவரை அவ்வியக்கம் தடை செய்யப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே அதன் தலைவரை சுட்டுக் கொல்ல ஆலோசனை நடத்தியவன் அரசியல் தலைவனா? அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் அப்பாவி காங்கிரஸ் தமிழர்கள் திருந்துவார்களா?
 
      ராசீவ் காந்தியின் ஆணையால் ஈழத்திற்கு இந்திய இராணுவம் சென்றது. சிங்களன் மட்டுமல்ல 'இந்தி'யனும் தமிழனுக்கு எதிரிதான் என நிரூபித்தது. சிங்கள அரசும் செய்யத் துணியாத அட்டூழியங்களை அடுக்கடுக்காக செய்தது இந்திய இராணுவம். தமிழ் பெண்களை பாலியல் சித்தரவதைக்குள்ளாக்கி, அவர்களை கற்பழித்ததற்கான தடையங்கள் சிக்கிவிடக் கூடாதென, அவர்களது பிறப்புறுப்பிலும் துப்பாக்கியால் சிதைத்த கொடூரங்களையும் அரங்கேற்றினர் "இந்தி"ய இராணுவத்தினர். இந்திய இராணுவத்திலிருந்த ஒன்றிரண்டு தமிழர்கள் தன் மொழி மற்றும் இன உணர்வால் தமிழாகள் சிலரை தப்பியோடும்படி எச்சரித்ததை கண்டு பொறுக்காத மற்ற இராணுவத்தினர், தமிழ் இராணுவ வீரர்களையும் கொன்றனர். அதனால், அப்போரில் இறந்தவர்களின் பெயர்களைக் கூட இன்றுவரை வெளியிடாமல் வைத்திருக்கிறது 'இந்தி'ய அரசு. இந்த "சாதனை"களுக்கெல்லாம் சொந்தக் காரர் தானே இந்த ராசீவ் காந்தி.அவரது கொலை சம்பவம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு ஒர் இனத்தின் விடுதலைக்கே தடையாக நிற்பது தான் காந்தி உங்களுக்கு கற்றுத் தந்த அகிம்சையின் பயன்பாடா? இது தான் தங்கள் அகிம்சை வழியின் லட்சணமா?
 
        அகிம்சை பற்றி பேசுவதற்கான தகுதி காங்கிரசுகாரர்களுக்கு என்றோ போய்விட்டது. மற்ற கட்சிகள் அதன் எதிர்கட்சிகளுடன் தான் சண்டை போடுவர். அடித்துக் கொள்வர். ஆனால், இதிலோ அனைத்திலும் வித்தியாசமாக அந்த கட்சிக்குள்ளேயே தினமும் ஒரு சண்டைக் கட்சி அரங்கேறுகிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரமரணத்திற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்தால் இரத்தக் கண்ணீர் வடித்ததாக அறிக்கை விட்ட காங்கிரஸ்காரர்களே... அது இரத்தக் கண்ணீர் அல்ல. தங்கள் கட்சிக்குள் சிலர் பதவிக்காக மண்டையை உடைத்துக் கொண்டதால் சத்தியமூர்த்திபவனில் வழிந்த இரத்தம்.
 
அம்மணமாகும் 'இந்தி'யத் தேசியம்
எழுச்சி பெறும் தமிழ்த் தேசியம்
 
            வெறும் 50 வருடங்களாக காங்கிரஸ் உயிருடன் இருக்கும் காங்கிரசு அமைப்புக்குள் இருக்கும் தொண்டர்களுக்கு, மூவாயிரம் வருடங்களாக நாம் தமிழராக இருக்கிறோம் என்ற உணர்வு ஏன் இங்குள்ளவர்களுக்கு இல்லை? நம் தமிழர்களை தானே ஈழத்தில் தினம் தினம் சுட்டுக் கொல்லப்பட்டு மடிகின்றன சகோரதரனும், கற்பழித்து கொல்லப்படுகிற அக்கை தங்கைகளும் நம்முடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் தானே என்ற உணர்வு ஏன் இவர்களுக்கு இல்லை? வடநாட்டு பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் தலைமையில் உள்ள கொள்கைகளற்ற கொள்ளைக்கட்சியின் மீது இவர்களுக்கு அபிமானம் பிறந்தது எப்படி,? சுயலாபங்களுக்குகாக, தன் சொந்த தேசமான தமிழ்த் தேசத்தை மறந்து விட்டு வடநாட்டு பனியாக்களுக்குக பல்லக்குத் தூக்கும் துரோகிகளின் கூடாரமாக இக்கட்சி மாற்றமெடுத்தது எதனால்?
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழர்களின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கும் பொழுது இந்திய தேசியம் பேச வக்கற்ற காங்கிரசுக்கு, தமிழர்களின் உறவுகள் ஈழத்தில் செத்து மடிகின்ற போது மட்டும் வாய்திறப்பது எதனால்? கேரளத்தில் இருந்து கொண்டும், கர்நாடகத்தில் இருந்து கொண்டும், ஆந்திராவில் இருந்து கொண்டும் தமிழனுக்கு நீர் தரக் கூடாது என செயல்படும் கம்யூனிஸ்டு, பா.ச.க, காங்கிரசுவாதிகள் உள்ளிட்ட 'இந்தி'ய தேச ஏமாற்று சக்திகள் தமிழகத்திலும் அதையே சொல்ல வேண்டியது தானே? இங்கு ஒரு பேச்சு, அங்கு ஒரு பேச்சு? இது தான் 'இந்தி'யத் தேசியம்.
 
       இந்த 'இந்தி'யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். 'இந்தி'யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. காங்கிரசில் உள்ள தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்.
 
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

16 கருத்துகள்:

Anonymous said...

அட கூமுட்டை.........

அமிழ்து - Sathis M R said...

//எமக்கு மூவாயிரம் ஆண்டு தமிழ் மொழியின் உறவை விட 50 ஆண்டு கால காங்கிரசும் அவாகளது பேரன் பேத்திகளின் உறவே போதும்.//

இது ஒவ்வொரு முறையும் நான் நண்பர்களிடம் ஈழத்தைப் பற்றி வாதிடும் போது எடுத்து வைக்கும் வாதம். பதவிக்காக மனிதன் எவ்வாறு உணர்வுகளைக் கொன்றுவிடுகிறேன். இதில் அவன் மட்டுமல்லாது மக்களையும் மழுங்கடிக்கும் பிரச்சாரம் வேறு செய்கிறான். இவர்களாக நாட்டின் எல்லைக் கோடுகளை வரைந்து கொள்வார்களாம், மக்கள் தங்கள் உணர்வுகள அதற்குள்ளே கட்டிக் காத்துக் கொள்ளவேண்டுமாம், என்ன ஒரு சர்வாதிகாரம்?!

Anonymous said...

Sir,

Dont tak without knowing the history. Rajiv Gandhi had great proposal for Srilankan Tamils. But everything was spoiled by LTTE and Jeyawardane. If you ask proof I can give you lot.LTTE want to rule Tamils and they dont want any body else to exist so they will kill everybody. But peace forces should keep quiet Is it.?. They will bomb Army and run into hospitals, the army should keep quiet Is it.?. Its LTTE who spoiled the good solution that could have come to Tamil People. Tell me how Rajiv is responsible for some men in army killing tamil guys.?.You know how the fight started.?. Please understand and write. 1989 to 1991 was the worst period in Tamil Nadu where LTTE after spoiling Tamils in eelam they started spoiling Tamils in TamilNadu where you will hear bomb and killing every where including cold blood murder of Padmanaba which ended up in killing our innocent Prime minister Rajiv. You are talking abou Sikh who killed Rajiv, you know we hanged him to death.? But what happened to Prabaharan. I promise you that you will not get eelam till Prabaharan is hanged to death.

Unknown said...

தோழர் ஸ்டென் கருத்திற்கு நன்றி..

1987ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை பற்றி பிரபாகரனிடம் தெரிவித்த பின்னர், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை எனத் தெரிந்ததும், அவர் தங்கியிருந்த ஓட்டல் அசோகாவில் அவரை சிறை வைத்துவிட்டு, கொல்லைப் புறம் வழியாக ஓடி சென்று அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடித்தது யார்?
பேச்சுவார்த்தைக்கு ஒருவரை அழைத்து பின் அவரை அந்த அறையிலேயே பூட்டி சிறை வைத்துவிட்டு பின்பறமாக ஒடிச் சென்ற பிரதமராகத் தானே ராசீவ் காந்தி இருந்தது தங்களுக்கு தெரியுமா?
அந்த ஒப்பந்தம் கையெழுத்தான செய்தியை பூட்டி அறைக்குள் தொலைக்காட்சியில் பிரபாகரனே தெரிந்து கொண்டார். இது தான் ராசீவ்காந்தியின் அப்பாவித்தனமா?
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு தமிழர் பகுதிக்குள் அனுப்ப வேண்டாம் என விடுதலைப்புலிகளும் மற்ற தமிழ் தலைவர்களும் கேட்டுக் கொண்டதை ராசீவ் ஏன் மதிக்கவில்லை?
கீழே அமைதிப்டை தளபதி ஒருவரின் பேட்டியை படியுங்கள். அவருக்கே தெரியாமல் தான் ஒப்பந்தம் கையெழுத்தானதாம்.Mitlitary is in Dark என அவரே குறிப்பிட்டிருக்கிறார். இந்திய இராணுவத்திற்கே தெரிவிக்கப்படாமல் தான் அந்த அரைகுரை ஒப்பந்தம் கையெழுத்தானது.
http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm

பிரபாகரன் கொல்லப்படாமல் ஈழத்திற்கு விடுதலை கிடைகாது என்பதிலிருந்தே தங்கள் காங்கிரஸ் பாசம் புரிகிறது. சீக்கியனை தூக்கிலிட்டுவிட்டோம் என கூறுகிறீர்களே? அப்படியெனில் தாணு, சிவராசன் உள்ளிட்டோர் உயிரோடு தான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீரா?

இந்நேரம் ராசீவ்காந்தி இருந்திருந்தால், ஈழமும் 'இந்தி'யத்தை போல சிங்களரின் அடிமை மாநிலமாக மாறியிருக்கும். நல்லவேளை அது நடக்கவில்லை..

தோழமையுடன்
க.அருணபாரதி

Unknown said...

அனானிக்கு..

அனானியின் காங்கிரஸ் அபிமானம் தெளிவாக வெளிப்படுகிறது.
வடநாட்டுகாரனுக்கு பல்லக்கு தூக்கினால், அவர்களை போல தங்களுக்கும் கோழைத்தனம் வந்துவிடுமோ?
பெயரை சொல்லியே வசைபாடுங்கள்.
பயம் வேண்டாம்..

தோழமையுடன்
க.அருணபாரதி

Unknown said...

அமிழ்துவின் வருகைக்கு நன்றி..

தோழமையுடன்
க.அருணபாரதி

Anonymous said...

ஸ்தான், முதலில் வரலாறு படித்துத் தெரிந்துக் கொண்டு எழுத வரவேண்டும்

Check the below link
http://in.news.yahoo.com/060702/211/65kad.html

Thanks

Anonymous said...

தேசிய அரசியல் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தேசிய இன உணர்வுகளை புறந்தள்ளுவது அதன் அழிவுப் பாதையை அதுவே தேடுவதற்கான அறிகுறியாகும்.

நல்ல கட்டுரை தோழர்..

Anonymous said...

First of all I am not anonymous.
Dear Friend, I would like to reitirate that, Rajiv had a deep interest in Tamil People dying in eelam. That's why the pact was formed. It was very clear route for Tamil people in eelam to get into democratic mode. But LTTE spoiled it. You said LTTE never agreed to the pact. But then why did Prabaharan announced in the public that he believe India and thats why he is giving back the arms.?. After telling this when LTTE realised that they did not have popular vote among Tamils they began to destroy the pact.Now Rajiv became scapegoat in the foil played between Jayawardane and LTTE.IPKF which was acting as a police force, forced to act as Military by LTTE because of its wrong doing, like killing the CM and doing all kinds of atrocities, Having been destroyed by IPKF, LTTE joined with Premadasa starts fighting with IPKF. In this process some criminals in IPKF marred the image of IPKF by raping and killing innocent Tamils. IPKF has taken action against most of its soldires by bringing them to Miltary court. But you know who became prey and scape goat in all these ?. The innocent Tamil people and Rajiv, Rajiv had alredy lost his life, Tamil people are still loosing thier life. Tell me what is the best pact/agreement LTTE has got for Tamil people in all these 16 yeaRA which is better than Rajiv-Jeyawardane agreement.?. You had mentioned that eelem would have became another Tamil nadu which is under India. You know what is the statee of Tamil Nadu and eelam.?. Tamil people in India need not fear for thier life, they need not pay tax to LTTE, they need not run to other countries to settle down,they nedd not fear when LTTE will come and ask his/her kid to join LTTE.neither they need to fear for Srilankan army?. They are having a peaceful life, studying well and finding jobs in various places across counry and making thier parents happy. They choose their own leaders, they fix India's fortune. Hope you know that 40 seats from Tamilnadu only helped Congress to from the Gov in center.Now I believe you would have understood the diff between eelam and TamilNadu. This is what Rajiv wanted eelam people to have.But now what's happeneing in eelam ?.But day will come, I am sure This will be achieved by eelam with the help of India once Prabaharan the killer became martyar.Dont blame Rajiv for everything.

Thanks
Stan

Unknown said...

தோழர் ஸ்டேன் அவர்களே...

ராசீவ்காந்தி அரசியல் அனுபவமற்றவர். ஈழப்பிரச்சனையில் அவரை வழிநடத்தி சென்றவர்களின் பின்னால் அவர் நடந்தார். சுயபுத்தியில்லை. பிரபாகரனை ரூமில் புட்டியது தான் அவரது உயர்ந்த அரசியல் நாகரிகமும் பண்பும் என்கிறீர்களா?
பிரபாகரன் ஒரு சில நிபந்தனைகளுடன் அந்த ஒப்பந்தத்தை ஏற்றார் என்பது உண்மையே. ஆனால் அந்த ஒப்பந்தங்களை சிறீலங்கா இராணுவம் காலில் போட்டு துச்சமென மதித்த போது கைகட்டி நின்றிருந்த ராசீவ் காந்தி ஏன் வேடிக்கை பார்த்தார்? ஏன் அதை கண்டு கொள்ளவில்லை ?
அவருக்கு தேவை. விளம்பர அரசியல் தான்.. மக்களின் பிரச்சனை தீர வேண்டும் என்பதில்லை. அவரது விளம்பர அரசியல் இன்று மிகவும் சீரழிந்து அவர்களது பேரன், பேத்தியைக் கூட தேசத் தலைவர்களாக பேசித் திரியும் பிததர்களை உருவாக்கி விட்டிருக்கிறது...

நீங்களே சொல்லுகிறீர்களே ”some criminals in IPKF” அவர்கள் யார்? தமிழர்களா? தமிழர் அல்லாதவர்களா? தாங்கள் சொல்வது போல் அந்த சிறியக் கூட்டத்தை சேர்ந்தவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர் கணக்கு காட்ட முடியுமா? ஆதாரமில்லாமல் தெரியாமல் உளறாதீர்கள்...

3000 வருடங்களாக தனித்தே ஆண்ட தமிழினம் வெள்யைர்கள் மற்றும் வடநாட்டவர்கள் சூழ்ச்சியால் தில்லியிடம் வீழ்ந்து. இந்திய தேசத்துள் அடிமையாய் கிடக்கிறது. அந்த அடிமை தேசமான தமிழ்நாட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாகவா இருக்கிறார்கள்? இங்கு கிடைக்கும் வரிகளில் சரிபாதியை மத்திய அரசு தான் பிடுங்கி செல்கிறது. நமக்கு தண்ணீர் வாங்கி தர துப்புக் கெட்ட மத்திய அரசு, நமது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தயங்கி உச்சநீதீமன்றத்திலிருந்து உத்தரவு போடுகிறது. வடநாட்டு 'இந்தி்'ய பார்ப்பன பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகள் கீழ் அடிமைப்பட்டு தமிழ்நாடு கிடப்பதை போல ஈழம் சிங்களவரிடம் அடிமைபட்டு கிடக்கக்கூடாது. அதற்கு தடைகள் வந்தால் உடைப்போம். தமிழினத்தை தலைநிமிரச் செய்வோம். ஓட்டு பொறுக்கி தேர்தல் கட்சிகள் நம் இனத்தை வட நாட்டவனிடம் விற்று விட்டு பதவி சுகம் தேடுவதையெல்லாம் நமக்கு 'இந்தி'யாவில் கிடைக்கும் மரியாதை என்று எண்ணிக் கொள்வது அறிவீனம். இந்தியத் தேசியத்தில் மூழ்கி இழந்தது தான் அதிகம். தண்ணீரை கூட மற்ற மாநநிலங்கள் தர மறுக்கின்றன. இப்படிப்பட்ட தமிழ்நாடு தான் தங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்றால் நீங்கள் ஈழத்தை மட்டுமல்ல தமிழ் இனத்தை மற்ற ஆதிக்க இனத்தவரிடம் விற்று விட துடிக்கும் தேர்தல் அரசியல் ஒட்டு பொறுக்கிகளுடன் கைக்கோர்த்துக கொண்டு செயல்படுங்கள். சிங்களவரின் பணத்திற்கும் பதவிக்கும் மயங்கி அவர்களிடம் அடங்கிப் போன சில தமிழ் தலைவர்கள் தான் தங்களுக்கு கண்ணில் படும். அவர்கள் செய்யும் இனத்துரோகம் பற்றி கேட்கும் போது குருடாகிவிடும்.
வாழ்க தங்கள் அரசியல் பார்வை !
வீழ்க இனத்துரொகம் !

Anonymous said...

அய்யா,
தனி சோழ நாடு உருவாக போராடுங்களேன்.வேணும்னா ஜெயிலுக்கு கூட போங்க.நான் உங்களுக்கு செவ்வணக்கம் போட்டுவிட்டு போகிறேன்.

bala said...

//தனி சோழ நாடு உருவாக போராடுங்களேன்//

மக்கு அனானி,
இந்த மாறி கேட்க ஆரம்பித்தா அதற்கு முடிவு இருக்குமா?அப்புறம் நம்ம லக்கி அய்யா வந்து தனி குற நாடு கேட்பார்;சொறி.அரசு அய்யா வந்து தனி சொறி நாடு வேண்டும் என்று போராட ஆரம்பித்து விடுவார்.என்ன கொடுமை இது?

பாலா

sirajudeen said...

I was schoolmet at calve college. now isaw your blog, its very superb. i want learn about net publishing .pls help me my contact no 9994688903

சிவா சின்னப்பொடி said...

இந்தியப் பேராயக்கட்சியினர் அதாவது காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் இந்திய விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களை செய்தவர்கள் என்றெல்லாம் இன்னமும் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தத் தகுதியை இவர்கள் இழந்து நீண்ட நாட்களாகிவிட்டது.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்; யுலியன் வாலாபாக் படுகொலை பிரித்தானிய முடியாட்சியின் கொடுரத்தனத்துக்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டு வருகிறது.அப்பாவி மக்களை நாயை சுடுவதைப் போல சுட்டுக் கொன்ற பிரித்தனிய படையினரின் கொலை வெறியை இந்திய வரலாற்றாளர்கள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிருக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியினர் இந்தகைய கொடுமைமிக்க அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி அளப்பரிய தியாகம் செய்து இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததாக மார் தட்டிக் கொள்கிறார்கள்.

ஆனால் அதே காங்கிரஸ் அரசால் வழி நடத்தப்பட்ட இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பேரில் ஈழத்தில் என்ன செய்தது?
யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குள் புகுந்து அப்பாவி நோயாளர்கள் மருத்துவர்கள் மருத்துவ தாதிகள் என்று 20 க்கும் மேற்பட்டவர்களைவ ஈவிரக்கமின்றி சுட்டுப்படுகொலை செய்ததை சொல்லவா?…..விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்த அப்பாவி மக்களை கட்டி இழுத்து வந்து தரையில் வரிசையாக படுக்க வைத்து யுத்த டாங்கியை ஏற்றிப்படுகொலை செய்த வெறித்தனத்தை செல்லவா?வடமாரடாட்சிக் கோட்டம் உடுப்பிட்டி என்ற இடத்தில் கலைவிழி என்ற பெண் குழந்தை பெற்று 24 நாட்களே ஆன நிலையில் வீட்டில் இருக்க அவளைப் பார்ப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அவளது சொந்தத் தம்பி வந்திருந்தான்.அவளது கணவன் அன்றைய சமையலுக்கு வேண்டிய பொருட்களை வாங்க சந்தைக்குச் சென்றிருந்தான்.அந்த நேரம் பார்த்து இந்திய காங்கிரசின் அமைதிப்படை அந்த இடத்தை சுற்றிவழைத்த தேடுதல் நடத்தியவாறு அவளது வீட்டுக்கு வந்தது.யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் அல்லது அவர்களை ஆதரிப்பவர்கள் என்று இந்திய படை கருதுகிறது என்பதையும் பல மாணவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது என்பதையும் பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்திருந்த அந்தப் பெண் தனது சொந்தச் சகோதரனை காப்பாற்றுவதற்காக அவனை தனது கணவன் என்று கூறிவிடுகிறாள்.அந்த நேரம் பார்த்து அவளது கணவன் விடு திரும்ப அவன் மூலமாக உண்மையைத் தெரிந்து கொண்ட இந்திய படை “உனக்கு யார் உண்மையான கணவன் என்பதை நிருபிக்க அவளது சொந்தத் தம்;பியுடன் அவளது கணவன் மற்றும் தங்களின் (16 பேர்) முன்பாக உடலுறவு கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி அசிஙப்படுத்துகிறது.
அவளது 24 நான்கு நாள் குழந்தையினதும் அவளது கணவனதும் தலையில் துப்பாக்கியை வைத்து அந்த கொடூரத்தனத்தை அரங்கேற்ற வைத்த அதைப் பார்த்து இரசிக்கிறது.இறுதியில் அந்தப் பச்சிளம் குழந்தை உட்பட அந்த நால்வரையும் சுட்டு விட்டு செல்கிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் அந்தப் பெண் அவளது குழந்தை அவளது தம்பி அனைவரும் கொல்லப்பட அவளது கணவன் உயிர் தப்பி இதற்கான சாட்சியாக இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான்

குழந்தை பெற்று 24 நாட்களே ஆன ஒரு பெண்ணை அவளது தம்பியைக் கொண்டே பலர் முன்னிலையில் வல்லுறவுகொள்ள வைத்து ரசித்த கொடூரத்தை பிரித்தானிய காலணி இராணுவம் இந்திய சுந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் செய்ததாக வரலாறே இல்லை?புப்ரித்தானிய காலணி அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி மேற்கொண்ட உண்ணா நோன்புப் போராட்டங்களைப் பற்றி பெருமை பேசும் காங்கிரசார் அதை வழியை பின் பற்றி உண்ணா நோன்பிருந்த தியாகி திலீபனுக்கும் அன்னை புபதிக்கு என்ன செய்தார்கள்?
காங்கிரஸ் காரர்களால் கொடுமையான பிரித்தானிய அரசு என்று வர்ணிக்கப்படும் அந்த அரசு மகாத்தா காந்தியை சாக விடவில்லையே. திலீபனையும் அன்னை புபதியையும் சாகவிடாமல் தடுத்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு உண்ணா நோன்பு அகிம்சை பற்றி பேசுவதற்கு தகுதி இருந்திருக்கும்.

இன்றைக்கு தமிழகத்தில் வீச்சருவாள் வெட்டுக்கம்பு அடிதடி கலாச்சார அரசில் நடத்தும் காங்கிரசார் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வாச்சவமால்களை விடும் காங்கிரசார் தங்களது ஆட்சிக்காலத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு தயாரா? ஆல்லது இந்திய மட்டத்திலேயாவது நேர்மையான நீதியாளர்களைக் கொண்டு நீதியான ஒரு விசாரணையை நடத்த தயாரா?

இதைச் செய்வதற்கு நீங்கள் தயாராக இல்லை என்றால் தயவு செய்து தியாகம் விடுதலை அகிம்மை என்பதைப் பற்றி எல்லாம் பேசாதீர்கள்.
இந்திய நலன் என்று செல்லிக் கொண்டு மேற்குலக ஏகாதிப்பத்தியங்களுக்கு அப்பாவி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை விற்காதீர்கள்

சிவா சின்னப்பொடி said...

இந்தியப் பேராயக்கட்சியினர் அதாவது காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் இந்திய விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களை செய்தவர்கள் என்றெல்லாம் இன்னமும் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தத் தகுதியை இவர்கள் இழந்து நீண்ட நாட்களாகிவிட்டது.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்; யுலியன் வாலாபாக் படுகொலை பிரித்தானிய முடியாட்சியின் கொடுரத்தனத்துக்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டு வருகிறது.அப்பாவி மக்களை நாயை சுடுவதைப் போல சுட்டுக் கொன்ற பிரித்தனிய படையினரின் கொலை வெறியை இந்திய வரலாற்றாளர்கள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிருக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியினர் இந்தகைய கொடுமைமிக்க அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி அளப்பரிய தியாகம் செய்து இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததாக மார் தட்டிக் கொள்கிறார்கள்.

ஆனால் அதே காங்கிரஸ் அரசால் வழி நடத்தப்பட்ட இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பேரில் ஈழத்தில் என்ன செய்தது?
யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குள் புகுந்து அப்பாவி நோயாளர்கள் மருத்துவர்கள் மருத்துவ தாதிகள் என்று 20 க்கும் மேற்பட்டவர்களைவ ஈவிரக்கமின்றி சுட்டுப்படுகொலை செய்ததை சொல்லவா?…..விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்த அப்பாவி மக்களை கட்டி இழுத்து வந்து தரையில் வரிசையாக படுக்க வைத்து யுத்த டாங்கியை ஏற்றிப்படுகொலை செய்த வெறித்தனத்தை செல்லவா?வடமாரடாட்சிக் கோட்டம் உடுப்பிட்டி என்ற இடத்தில் கலைவிழி என்ற பெண் குழந்தை பெற்று 24 நாட்களே ஆன நிலையில் வீட்டில் இருக்க அவளைப் பார்ப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அவளது சொந்தத் தம்பி வந்திருந்தான்.அவளது கணவன் அன்றைய சமையலுக்கு வேண்டிய பொருட்களை வாங்க சந்தைக்குச் சென்றிருந்தான்.அந்த நேரம் பார்த்து இந்திய காங்கிரசின் அமைதிப்படை அந்த இடத்தை சுற்றிவழைத்த தேடுதல் நடத்தியவாறு அவளது வீட்டுக்கு வந்தது.யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் அல்லது அவர்களை ஆதரிப்பவர்கள் என்று இந்திய படை கருதுகிறது என்பதையும் பல மாணவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது என்பதையும் பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்திருந்த அந்தப் பெண் தனது சொந்தச் சகோதரனை காப்பாற்றுவதற்காக அவனை தனது கணவன் என்று கூறிவிடுகிறாள்.அந்த நேரம் பார்த்து அவளது கணவன் விடு திரும்ப அவன் மூலமாக உண்மையைத் தெரிந்து கொண்ட இந்திய படை “உனக்கு யார் உண்மையான கணவன் என்பதை நிருபிக்க அவளது சொந்தத் தம்;பியுடன் அவளது கணவன் மற்றும் தங்களின் (16 பேர்) முன்பாக உடலுறவு கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி அசிஙப்படுத்துகிறது.
அவளது 24 நான்கு நாள் குழந்தையினதும் அவளது கணவனதும் தலையில் துப்பாக்கியை வைத்து அந்த கொடூரத்தனத்தை அரங்கேற்ற வைத்த அதைப் பார்த்து இரசிக்கிறது.இறுதியில் அந்தப் பச்சிளம் குழந்தை உட்பட அந்த நால்வரையும் சுட்டு விட்டு செல்கிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் அந்தப் பெண் அவளது குழந்தை அவளது தம்பி அனைவரும் கொல்லப்பட அவளது கணவன் உயிர் தப்பி இதற்கான சாட்சியாக இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான்

குழந்தை பெற்று 24 நாட்களே ஆன ஒரு பெண்ணை அவளது தம்பியைக் கொண்டே பலர் முன்னிலையில் வல்லுறவுகொள்ள வைத்து ரசித்த கொடூரத்தை பிரித்தானிய காலணி இராணுவம் இந்திய சுந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் செய்ததாக வரலாறே இல்லை?புப்ரித்தானிய காலணி அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி மேற்கொண்ட உண்ணா நோன்புப் போராட்டங்களைப் பற்றி பெருமை பேசும் காங்கிரசார் அதை வழியை பின் பற்றி உண்ணா நோன்பிருந்த தியாகி திலீபனுக்கும் அன்னை புபதிக்கு என்ன செய்தார்கள்?
காங்கிரஸ் காரர்களால் கொடுமையான பிரித்தானிய அரசு என்று வர்ணிக்கப்படும் அந்த அரசு மகாத்தா காந்தியை சாக விடவில்லையே. திலீபனையும் அன்னை புபதியையும் சாகவிடாமல் தடுத்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு உண்ணா நோன்பு அகிம்சை பற்றி பேசுவதற்கு தகுதி இருந்திருக்கும்.

இன்றைக்கு தமிழகத்தில் வீச்சருவாள் வெட்டுக்கம்பு அடிதடி கலாச்சார அரசில் நடத்தும் காங்கிரசார் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வாச்சவமால்களை விடும் காங்கிரசார் தங்களது ஆட்சிக்காலத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு தயாரா? ஆல்லது இந்திய மட்டத்திலேயாவது நேர்மையான நீதியாளர்களைக் கொண்டு நீதியான ஒரு விசாரணையை நடத்த தயாரா?

இதைச் செய்வதற்கு நீங்கள் தயாராக இல்லை என்றால் தயவு செய்து தியாகம் விடுதலை அகிம்மை என்பதைப் பற்றி எல்லாம் பேசாதீர்கள்.
இந்திய நலன் என்று செல்லிக் கொண்டு மேற்குலக ஏகாதிப்பத்தியங்களுக்கு அப்பாவி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை விற்காதீர்கள்

Anonymous said...

stanகூறியது ...
Sir,

Dont tak without knowing the history. Rajiv Gandhi had great proposal for Srilankan Tamils. But everything was spoiled by LTTE and Jeyawardane. If you ask proof I can give you lot.LTTE want to rule Tamils and they dont want any body else to exist so they will kill everybodய்......"


ஈழ‌த் த‌மிழ‌ருக்கும் சிங்கள‌வ‌ருக்கும் இடையில் போர் என்றால் இரு த‌ர‌ப்பின‌ரும் உட‌ன்பாட்டில் கையெழுத்து போட்டிருக்க‌ வேண்டும். ந‌ட‌ ந்த‌து என்ன‌? சிங்க‌ள‌ அர‌சோடு ராஜீவ் கையெழுத்துப் போட்டார். ஏன்???????????

இந்த உடன்படிக்கையில் என்ன இருக்கிறது?

1. திருகோணமலையில் உள்ள 185 எண்ணைக் கிடங்குகளை இந்தியாவுக்கு தரப்பட்டால் புலிகளை முற்றாக அழிக்க, புலிகளின் ஆயுதங்களைக் களைய இந்திய அமைதிப்படை இலங்கை அரசுக்கு உதவும்.

முக்கிய குறிப்பு+ தற்போது 185 எண்‌ணைக் கிட‌ங்குக‌ளும் இ ந்திய‌ ஆயில் கார்ப்ப‌ரேச‌ன் நிர்வாக‌த்தின் கீழ் கொண்டு வர‌ப்ப‌ட்டுள்ள‌து. இத‌ற்கு ஈழ‌த் த‌மிழ‌ர் கொடுத்த‌ விலை ப‌ல‌ ஆயிர‌ம் உயிர். இ ந்த‌ உண்மையைக்கூட‌ பேச‌ முடிய‌த‌ பேடிக‌ள்தான் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ளும் த‌மிழ‌க‌ப் ப‌த்திரிகைக‌ளும்.

யாருக்கு வ‌ர‌லாறு தெரியாது?????????????????

த‌மிழ‌ன்

குறிப்பிடத்தக்க பதிவுகள்