Wednesday, February 28, 2007

தமிழன் மலமள்ள ரசிக்கும் திராவிட கட்சிகள்

தமிழன் மலமள்ள ரசிக்கும் திராவிட கட்சிகள்

 
இந்தியாவை 50 ஆண்டுகாலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியும், அதனோடு மாற்றி மாற்றி 40 ஆண்டுகாலமாக கூட்டணி வைத்திருந்த திராவிட கட்சிகளும் மக்களை நரகப்படுகுழியில் தள்ளி தூக்கு போட்டுக் கொண்டு சாகும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளன.

சமீபத்தில் தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வுதரத்தை ஆராய்ந்த லயோலா கல்லூரி திமுக ஆட்சியில் விலைவாசிகள் விண்ணை முட்டிவிட்டதாக சொல்லியிருக்கிறது. இதற்கு முழுக்க, முழுக்க மத்திய அரசும் அதை தாங்கி நிற்கும் திமுகவுமே காரணம் என்கிறார் இடதுசாரி அரசியல் விமர்சகர் சோலை.அடிப்படை பொருட்களின் விலைவாசி உயர்வு பற்றி லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு பின்வரும் அபாய அறிவிப்பை செய்கிறது.

"அரிசியைத் தவிர, இதர எண்ணெய், பருப்பு வகைகள், சமையல் பொருள்களின் விலைகள் கிராமங்களில் வானத்தில் ஏறிக் கூத்தாடுகின்றன என்று, கருத்துக் கணிப்பு சிவப்பு விளக்குக் காட்டியிருக்கிறது.

இதனை நாமே கிராமங்களில் நேரடியாக உணர முடிந்தது. என்ன இது? அரிசி விலையைக் குறைச்சுட்டு எண்ணெய், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு விலைகளைக் கலைஞர் உயர்த்திவிட்டாரே என்று பாமரத்தனமாக மக்கள் கேட்டனர். என்ன பதில் சொல்வதென்று மௌனமானோம். .."

விலைவாசி உயர்விற்கும் மாநில அரசுக்கும் சம்பந்தமில்லை. மத்திய அரசின் கொள்கைகளால்தான் விலைவாசியை விண்ணில் ஏற்றி விளையாடுகின்றன என்று பதில் சொல்லலாம். ஆனால், டெல்லியிலும் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் அமர்ந்திருக்கிறதே என்று அவர்கள் எதிர்க் கேள்வி கேட்பார்கள்.

விலைவாசி விண்முட்ட காரனம் என்ன?திமுக,பாமக காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகள் தான் காரனம் என்கிறார் சோலை. கடும் வார்த்தைகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சாடுகிறார் சோலை

"வணிகத்தில் யூக வியாபாரத்தை மத்திய அரசு அனுமதித்தது. கூண்டிற்குள் பசியெடுத்துப் படுத்திருந்த பெரிய வணிகர்களைத் திறந்துவிட்டது. எந்த உணவுப் பொருளை வேண்டுமானாலும் நீங்களே கொள்முதல் செய்யலாம் என்று அனுமதித்தது. அவ்வளவுதான். கொள்முதல் செய்து அவர்கள் பதுக்கி வைத்துவிட்டார்கள். யூக வணிகம் விலைவாசியை உயர்த்திக் கொண்டே போகிறது. இந்த லட்சணத்தில், 'விலைவாசியைக் கட்டுப்படுத்தப் போகிறோம்' என்று நிதி அமைச்சர் வேறு தமாஷ் செய்கிறார்.

எந்த அளவிற்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது என்பதனை தீபாவளியின்போது சாதாரண மக்களும் உணர்ந்து கொள்வார்கள். அந்த ஆதங்கத்தை இப்போதே அவர்கள் கருத்துக்கணிப்பாளர்களிடம் கவலையோடு தெரிவித்திருக்கிறார்கள்"

தரிசு நிலத்தை விவசாயிகளுக்கு வினியோகிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நேர்ந்துள்ளன என்கிறது லய்யோலா கல்லூரியின் கருத்துகணிப்பு.பல ஆண்டுகளாக தரிசு நிலங்களில் விவசாயம் செய்து வந்தவர்களிடமிருந்து அவற்றை பிடுங்கி கழக கண்மணிகளுக்கு தாரை வார்த்துள்ளதாம் திமுக அரசு. இதனால் அடித்தட்டு மக்களிடையே கடும்கோபமும், கொந்தளிப்பும் நிலவுகிறதாம். இதை கடுமையாக கண்டிக்கும் சோலை "அரசு தரிசு நிலங்களை ஏற்கெனவே நிலம் உள்ளவர்கள், வசதியானவர்கள் ஆக்கிரமித்திருந்தால், அதனைக் கைப்பற்றுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தரிசு நிலம்தான் ஒரு விவசாயியின் உடைமை என்றால், அதற்குப் பரிகாரம் காணவேண்டும். அந்தத் தரிசு நிலத்தைப் பண்படுத்த அந்த விவசாயி இரவு பகலாக எந்த அளவிற்கு ரத்தமும் வியர்வையும் சிந்தியிருப்பான்? இப்படி ஒரு சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால், அடிபட்டு வீழ்ந்து மூச்சுக் காற்றில் முனகிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தத் தவறுகளே ஊன்று கோல்களாகிவிடும்." என்கிறார்.

தமிழகத்தில் கொள்ளை நோய்கள் தாண்டவமாடுகின்றன. இந்தியா முழுக்க டெங்கு, சிக்குன் குனியா என விஷநோய்கள் மக்களை கொன்று குவிக்கின்றன. உண்மையான புள்ளிவிவரங்களை கூட வெளியிட மறுக்கும் தமிழக அரசு சிக்குன் குனியாவில் இதுவரை ஒருவர் கூட சாகவில்லை என புளுகு மூட்டையை அள்ளி தெளித்து கோயபல்ஸ் பாணியில் விளம்பரங்களை அள்ளி தெளிக்கிறது. இந்த விளம்பரங்களுக்கு செலவு செய்யும் காசை சிக்குன்குனியாவில் சாகிறவர்களுக்கு செலவு செய்தாலாவது பயன்பாடாக் இருக்கும் இல்லையா?

ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் மக்கள் நோய்வந்து சாக சினிமா காரர்களுக்கு காசை அள்ளிதெளித்து அவர்களிடமிருந்து மலர்கிரீடமும், தங்கபேனாவும் வாங்கி விழா கொண்டாடிக் கொள்கிறார் கலைஞர்.


மத்தியில் உள்ள சுகாதார துறை அமைச்சர் அன்புமணி என்ன கிழிக்கிறார் என்றே தெரியவில்லை. நோய் இருக்கிறது என ஒத்துகொள்வதை விட நோயே இல்லை என சாதிக்கும் போக்கு தான் மத்திய சுகாதார அமைச்சரகத்திடம் காணப்படுகிறது. இதை பற்றி குறிப்பிடும் பதிவர் சிவபாலன் பல அதிர்ச்சி தகவல்கலை தெரிவிக்கிறார். "டெல்லியில் தலைகாட்டிய டெங்கு நோய் இன்று 18 மாநிலங்களில் பரவி 56 உயிர்களை பலிவாங்கியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3500 பேர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். கொள்ளை நோய் என அறிவிக்காவிட்டாலும் நிலைமை மோசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை 3500க்கும் அதிகமானோர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மட்டும் புதிதாக 28 பேர் டெங்கு நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இம் மருத்துவமனையில் 6 ஆயிரம் பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நிலைமை மோசமானவர்கள் மட்டுமே மருத்துவமனையில் வைத்து கவனிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்."

இதை விட கேவலம் என்னவென்றால் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும், 40 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகளும் , ஆறாண்டு காலம் ஆட்சி செய்த பா.ஜ.கவும், இன்னும் தம் மக்களை மலம் அள்ள வைக்கும் நிலையில் தான் வைத்திருக்கின்றன என்பதுதான். இந்தியாவில் மலம் அள்ளும் தொழிலை இன்னும் 6.76 லட்சம் பேர் செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கோவையில் 40 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு பிறகும் தமிழன் மலம் அள்ளும் நிலைமையை பாருங்கள்.
இந்த மாதிரி மனித மலத்தை மனிதன் அள்ளும் கேவலத்துக்கு முழு பொறுப்பும் மாநில அரசுகளும் மத்திய சுகாதார துறையும் தான் என தெரிவிக்கிறது பிரண்ட்லைன் பத்திரிக்கை. 40 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் இதற்கு என்ன பதில் சொல்ல போகின்றன?மத்திய சுகாதார துறை அமைச்சகம் இதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

தமிழனை இன்னும் மலம் அள்ள வைத்து, அவர்களின் பிரதிநிதி நான் என மார்தட்டிக்கொண்டு, புரட்சி தலைவி, தமிழன தலைவர் என பட்டங்களை சுமந்துகொண்டு அடிப்படை மக்களின் பயன்பாட்டுக்கு உள்ள பொருட்களின் விலையை விண்முட்ட ஏற்றிவிட்டு, சினிமாகாரர்களுக்கு ஒட்டுமொத்தமாக வரிவிலக்கு அளித்து கோடீஸ்வர கோமான்கள் வீட்டில் ஏசி ஓடவும், இவர்களுக்கு ஒட்டு போட்ட மக்கள் பீ அள்ளவும் வைத்த திராவிட கட்சிகள் இனி மேலும் நாட்டை ஆண்டால் தமிழ ்நாடு சுடுகாடாகிவிடும்.


--
செல்வன்
தனிமடல் தொடர்புக்கு: holyape@gmail.com


நன்றி செல்வன்

Tuesday, February 27, 2007

என்னையும் இந்தியனாக மாற்றுங்கள்...

இனவெறி என்பது

பிற இனத்தவரை தாழ்மையாக கருதுவதும்.. 
பிற இனத்தவரின் உரிமைகளை மறுப்பதும்..
பிற இனத்தவரை அடிமை போல நடத்துவதும்..
பிற இனத்தவரிடம் பாகுபாடு காட்டுவது ...

கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதில் அனுப்பி தாங்கள் கூறியதை நியாயப்படுத்தவும் ::::::
 
இதற்கு பதிலலித்து விட்டு என்னையும் இந்தியனாக மாற்றுங்கள்...

தமிழர்கள் இது வரை யாருடைய உரிமைகளையாவது மறுத்திருக்கிறார்கள் ??? எந்த இனத்தவரையாவது அடிமைபோல நடத்தி அவர்களை பாகுபாடுடன் நடத்தியிருக்கிறார்களா ? தமிழர்களின் உரிமையை ஏன் மற்றவர்கள் மறுக்கின்றனர் ?? இதற்கு தங்கள் பதில் இருந்தால் நன்றாக இருக்கும்..

மராட்டியத்தில் கூலி வேலை செய்த தமிழர்களை அடித்து விரட்டினர் சிவசேனைய மராட்டிய படைகள்.. அதற்கு அவர்கள் சொன்ன பதில் 'மும்பை நகரம் மராட்டியர்க்கே'  ஏன் அவ்வாறு கூறி விரட்டினர் ????

ஆசியாவிலேயே அதிகம் குடிசை மக்கள் வசிக்கும் பகுதி மும்பை தாராவி பகுதி.. அங்கு யார் வசிக்கிறார்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளவும்..
இங்கு தமிழகத்தில் எத்தனை மார்வாடிகள் கால் மேல் கால் போட்டுக் கொண்டு வட்டித் தொழிலில் தமிழர்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கினறனர் என்hதை பார்க்கவும்...

கேரளாவிலிருந்து தமிழகத்தில் வந்த மலையாளிகள் 3 லட்சம் தேனீர் கடைகள் வைத்துள்ளனர்.. அதற்கான நன்றியை கூட முல்லை பெரியாறு பிரச்சனையில் காட்ட மறுக்கின்றனர்.. கடலில் கலக்கும் வீணாகும் நீரில் சில டி.எம்.சியைக் கூட மறுக்கின்றனர்.. ஏன் ??????

ஒரு மலையாளி (அந்தோணி) ராணுவ அமைச்சராக இருக்கும் ஒரே காரணத்திற்காக முல்லை பெரியாற்று அணைக்கு சம்பந்தமே இல்லாத கப்பற் படை ஏன் வந்தது ? யார் உத்தரவிட்டார் ? மலையாள இன உணர்வு தானே காரணம் ?

கேரளாவிற்கு தினமும் அரிசி, பருப்பு, இறைச்சி என எவ்வளவோ செல்கிறது ... ஏன் அவர்களுக்கு நம் மீது மட்டும் இப்படியொரு தாழ்மையான எண்ணம்... 96 சதவீதம் தமிழர்கள் வசித்த தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் ஏன் கேரளத்தோடு இணைக்கப்பட்டது,..? யார் இணைத்தது ??? ஏன் இணைத்தனர் ???

ஆந்திரர்கள் பாலாற்றில் அணை கட்டுவதற்கு தைரியமூட்டியது யார் ? அது தவறா ??? சரியா ???

உலகில் எங்குமே அனுமதிக்கப்படாத ரசியாவின் அணுமின் நிலையத்தை தமிழகத்தை தவிர இந்தியாவில் எந்த மாநிலமும் பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை.. அதனால் மத்திய அரசு தமிழகத்தில் அதை அமைக்க தீவிரம் காட்டியது ஏன் ??? புதிய அறிவியல் சோதனைகளுக்கு பயன்படும் எலி போன்ற சிறு உயிரினங்களை போல ஏன் மத்திய அரசு தமிழர்களை கருதுகிறது ??

ரயில்வே துறைத் தேர்வுக்கு ஏன் பிஹாரில் மட்டும் விளம்பரம் செய்து இந்தியா முழுக்க நடப்பதாக சொல்லப்பட்டது ?? அம்மாநிலத்திற்கு மட்டுமான தேர்வு எனில் அதை எழுத பிஹாரிகள் சென்னைக்கு ஏன் வரவேண்டும் ?? ஏன் அத்தேர்வு மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்டடபோதும் தமிழகத்திற்கு அறிவிக்கப்படவில்லை ஏன் ??? யார் அதை செய்தது ? ரயில்வே துறை அமைச்சருக்கு இன உணர்வு ஏன் ?

இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற சீக்கியனுக்கு பிரதமர் பதவி... தன்னையும் கற்பழித்து தன் அண்ணன் மார்களை கண் முன்னேயே கொன்ற இந்திய அமைதிப் படையினரை எதிர்த்து அதை அனுப்பிய ராசீவ் காந்தியை அழித்த சுபா என்கிற தமிழச்சியைக் காட்டி ஒர் இனத்தின் விடுதலையையே தடுப்பது ஏன் ?? தமிழர்களிடம் மட்டும் ஏன் இந்த பாகுபாடு ??

உப்புத் தொழிலில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது தமிழகம்.. குஜராத் இரண்டாம் இடம்.. திடீரென அயோடீன் குறைவு என ஏன் தமிழகத் தொழிலை மட்டும் தடை செய்து குஜராத்தை முதலிடத்திற்கு  போனது எப்படி ? நம்மை விட குறைந்த அயோடின் சக்தி கொண்ட குஜராத் உப்புத் தொழிலை ஏன் காங்கிரஸே தடை செய்யவில்லை ?????

நம்முடைய தமிழ் நிலமான கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக வழங்கியது யார் ???

நாகப்பட்டினம் மீனவர்களை தினமும் சுட்டு அட்டுழியம் செய்யும் இலங்கை அரசை என்றாவது இந்திய அரசு கண்டித்ததா ? என்ன நடவடிக்கை எடுத்தனர் ??  குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் படையினர் சுட்டால் அதற்கு உலகையே கூப்பிட்டுக் காட்டும் மத்திய அரசு ஏன் தமிழர்களிடம் பாகுபாடு காட்டுகிறது ?? தமிழர்களும் இந்தியர்கள் தானே ??

தாங்கள் பழம் பெரும் நாடு என்னும் இந்திய நாடு இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் ஏதேனும் உண்டா ??? தெரிந்து கொள்ள ஆசை.. கூறுங்களேன் தோழரே....

இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி திறமை கெட்டு போய் விடும் என்று கூறிவிட்டு சுமார் 75 வருடங்களாக இடஓதுக்கீடு அமல் படுத்தும் தமிழகத்திற்கு ஏன் வடநாட்டவர்கள் மருத்துவத்திற்கு தமிழகம் வருகிறார்களே ,,? இங்கு தான் தகுதியும் திறமையும் கெட்டுப் போய்யிருக்குமல்லவா ??? ஏன் அதை உச்சநீதி மன்றம் மறு ஆய்வு செய்ய சொன்னது ???

குடியரசுத் தலைவர் கலாம்.. ஒரு தமிழனாய். இலங்கை பிரச்சனைக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ?? ஒரு குடியரசுத் தலைவராய் நாட்டிற்று புதிதாக ஏதேனும் செய்திருக்கிறாரா ? அவர் தன்னிச்சையாக மக்களுக்காக எடுத்த ஏதாவது ஒரு திட்டத்தினை சொல்லவும்..

முதன் முதலில் 1805  வேலூரில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் ஏன் மறக்கடிக்கப்பட்டு 1857 கலகம் மட்டும் பாட புத்தகங்களில் முதலிடம் பெற்றது ??

'இந்தியாவில் அனைவரும் சமம் '- நியாயப்படுத்துக...
ஏன் நாகாவை மட்டும் தனித் தேசிய இனமாக இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 371(ஏ) பிரிவு அங்கீகரிக்கிறது ? மற்ற இனங்களான தமிழ், மலையாளம், பிஹாரிகள், மராட்டியர்கள், கன்னடர்கள் ஆகியவற்றை ஏன் மறுக்கிறது ???

மகாராட்ரம், காசுமீர், அசாம், மெகாலயா, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மற்ற மாநிலத்தவர் ஏன் நிலம் வாங்கக்கூடாது ? அதை ஏன் அரசியலமைப்பு சட்டம் 351 முதல் 355 வரை உள்ளிட்ட பிரிவுகள் ஏன்  மறுக்கின்றன ? அது இந்தியா தானே ?? ஏன் இந்த பாகுபாடு ? மகாராட்டிரம் முன்னேறாத மாநிலமா ?

மேலே என் அறிவுக்கு எட்டிய வற்றுக்கும் எனக்கு தெரிந்தவற்றுக்கும் தான் கேள்வி கேட்டுள்ளேன்.. தங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. இவற்றுக்கான பதிலை மற்றவர்களும் எழுதலாம்..

நான் தமிழ் இன வெறியன் இல்லை. உலகை ஆண்ட தமிழினம் வீழ்ந்து கிடப்பதை எண்ணி வேதனைப்படும் பலருள் ஒருவன். 5000 வருட தமிழன் என்கிற அடையாளம் மறந்து இந்தியன் என்கிற போலி அடையாளத்தை மறுப்பவன்..

இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது தமிழர்களாய் இருந்தும் 'இந்தி"ய அடையாளம் பேணுபவர்கள் தான்....

இதற்கு பதிலலித்து விட்டு என்னையும் இந்தியனாக மாற்றுங்கள்... என் தமிழ் அடையாளத்தை எப்படி தகர்ப்பது என யோசியுங்கள்...

ஒரு மனிதன் சாதி இல்லாமலும், மதம் இல்லாமலும் வாழ முடியும்..
மொழி இல்லாமல் வாழ்ந்த மனிதப்பிறவி இதுவரை இல்லை..
ஏனெனில் மொழியும் இனமும் இயற்றை அளித்தது.. அதை பாதுகாப்பது நம் கடமை.. அதை பிறர் அழிக்க நினைத்தால் வேடிக்கை பார்ப்பது மடமை...

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழோடு....
தோழமையுடன்
க.அருணபாரதி

Monday, February 26, 2007

பிளவை நோக்கிய பாதையில் இலங்கை - இலக்கியன்

பிளவை நோக்கிய பாதையில் இலங்கை..
இலக்கியன்
 
பூகோள ரீதியாக இந்தியாவின் கீழே கண்ணீர் துளி போல அமைந்திருக்கும் இலங்கை இன்று இரத்தத் துளியாக மாறியிருக்க காரணம் எது? சுதந்திர இலங்கை அமைய பெற்ற பின்னர் சிங்கள இனவெறிக்கு இலங்கையை நகர்த்திய பண்டாரநாயகாவின் ஆட்சியும் அதை தொடந்து வருகிற இனவெறி கொள்கைகளும் அடிப்படை காரணம். பல படுகொலைகளை, யுத்தங்களை, இடப்பெயர்வுகளை சந்தித்து நார்வே நாட்டின் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ரணில் விக்கிரம சிங்கே தலைமையில் அமைந்த அரசும் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்காலிக சமாதானம் கொண்டுவந்தது.

விமான குண்டு வீச்சுக்களை சந்தித்து பழக்கப்பட்டுப்போன மக்களும் பாதிக்கப்பட்ட தென்னை, பனை மரங்களும் குண்டு சத்தங்களை கேட்டு பல மாதங்கள் கடந்திருந்தது. சமாதானம் பேச கைகோர்த்தபடி புலிகள் இயக்கத்தை உடைக்கும் 'சாணக்கிய' வேலையில் ஈடுபட துவங்கி வடக்கு, கிழக்கு என பிரிவினையை தூண்டி கிழக்கு மாகாண தளபதி கருணாவை பகடைக் காயாக பயன்படுத்தியது. அதை தொடர்ந்து வெடித்த மோதலில் பிரபாகரன் அனுப்பிய படையால் கருணாவும் அவரது அணியினரும் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு துரத்தப்பட்டனர். தொடர்ந்து மறைமுகமாக மோதல் துவங்கியது. இந்த மோதலை உருவாக்கிய பெருமை றா, சி.ஐ.ஏ மற்றும் இலங்கை அரசை சார்ந்ததாக கருதப்படுகிறது. தொடர்ந்து இராணுவம் மறைமுக தாக்குதல்களில் ஈடுபட, புலிகள் மறைமுக தாக்குதலை துவங்க இன்று சமாதான புறாவின் இறக்கை பறிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் சாகடிக்கப்படுகிறது. இந்த மறைமுக யுத்தத்தில் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ் மக்கள். குடும்பம் குடும்பமாக படுகொலை, பாலியல் பலாத்காரம், காணாமல் போதல் என ஒரு பக்கம். பயத்திலும் பீதியிலும் குடும்பம் குடும்பமாக மண்ணை, உறவுகளை இழந்து படகில் ஆபத்தான பயணம் செய்து 'அகதி' என்ற முத்திரை குத்தப்பட்டு இராமேஸ்வரம் கரையில் சேர்வது இன்னொரு பக்கம். தமிழகம் நோக்கி வரும் வளியில் ஆபத்தில் சிக்கி பிணங்களாக கரையில் ஒதுங்குவது இன்னொரு அவல நிலை. இப்படியான இவர்கள் வாழ்வில் எதற்காக இந்த சோகங்கள்.
 
 
வங்காலை படுகொலை காட்சிகள்
 
 
 
சமீபத்தில் இலங்கை, மன்னார் வாங்காலையில் தமிழ்க் குடும்பம் ஒன்றை படுகொலை செய்து வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டதில் சிறு வயது குழந்தைகள் இருவரும் அடக்கம். வீட்டு கூரையில் கயிற்றால் கட்டி தொங்கவிட்டு சித்திரவதை செய்து கொல்லப்படும் அளவு இந்த சிறார்கள் செய்த கொடுந்தவறு என்ன? தமிழர்களாக ஒரு தமிழ் குடும்பத்தில் இலங்கை அரசின் ஆளுகையில் பிறந்தது அவர்கள் செய்த தவறா? தந்தையை கண் முன்னே கட்டி தொங்க விட்டு கதற கதற கொலை செய்ததை பார்த்த சாட்சிகளாக அவர்கள் இருந்திருப்பார்கள் என்பதாலா? இத்தனை கொடுமைகளையும் நிகழ்த்திய வெறியர்கள் அந்த மழலைகளின் அன்னையாரை பாலியல் பலாத்காரம் செய்து, கட்டி தொங்க விட்டு சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். இந்த படுகொலையை இரவோடு இரவாக நடத்தியது யார்? அந்த பகுதியில் பகல் வேளையில் இராணுவம் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும்,கொடிய ஆயுதங்களுடன் மாலை வேளையில் நடமாடியதாகவும் அப்பகுதி மக்கள் சாட்சியளிப்பதில் சந்தேகம் இராணுவத்தை நோக்கி செல்கிறது.
 
Tamilwin.com 

அண்மையில் வவுனியா மாவட்டத்தில்
அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தில்
கொல்லப்பட்டவர்

இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இப்படி தமிழர்களுக்கு எதிரான கொலைகள் அதிகரித்து வருவது அரசாங்கம் சமாதானம் மீது நம்பிக்கை இல்லாமல் படுகொலைகளை மீண்டும் ஆயுதமாக கையில் எடுப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னர் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்தவர்களையோ, வாங்காலை படுகொலையில் ஈடுபட்டவர்களையோ இதுவரை கைது செய்து முறையான விசாரணைக்கு உட்படுத்தவில்லை. அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் யாராக இருப்பினும் மக்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவர்களும் குற்றவாளிகளே.

இலங்கை அரச அதிபர் மகிந்தா ராஜபக்சே கண்களை மூடி நடத்துகிற படுகொலைகளே இலங்கை என்ற அவரது ஒற்றை தேச கொள்கையை உடைக்கப் போகிற வலுவான ஆயுதம். முரண்பாடுகளின் முடிவு மோதல்களும், மோதல்கள் பிரிவினையிலும் முடிவது அறிவியல் தத்துவம். இலங்கை, தமிழீழம் என இரண்டு தேசங்களை உருவாக்க இலங்கை இராணுவமும் அரச இயந்திரமும் படுகொலைகளில் ஈடுபட, உலகக்காவல்காரனும், ஐரோப்பிய கூட்டமைப்பும் மனித உரிமைகளை சவப்பெட்டியில் ஆணியடித்து அடக்கம் செய்கிறது. விடுதலைக் குரல் கொடுத்த மக்கள் வென்றதும் வல்லமை பொருந்திய அரசுகள் வீழ்ந்ததும் வரலாற்றின் பக்கங்களில் பலவற்றை காணலாம். அந்த பட்டியலில் விரைவில் தமிழீழ மக்களும், இலங்கை அரசும் இரு வேறு இடங்களில் இடம் பெறுவர். எல்லைக் கோடுகளை விட மனித மதிப்பீடுகள் உயர்ந்தவை. விடுதலைக்காக எல்லையை பங்கிடலாம், எல்லைக்காக மனித மாமிசத்தை கூறு போடலாமா?

Saturday, February 24, 2007

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நகல் எரிப்பு போராட்டம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நகல் எரிப்பு போராட்டம்
23-02-2007
 

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய முன்னணி இயக்கம் சார்பில் தமிழத் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தினர் தமிழகமெங்கும்  தீர்ப்பின் நகல் எரித்தனர்.. தலைநகர் சென்னையில-13 , சிதம்பரத்தில்-40, தஞ்சையில்-33, மதுரையில்-17, தூத்துக்குடி-15 என சுமார் 200 பேர் தமிழகம் முழுதும் கைது செய்யப்பட்டனர்.

 http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20070223115035&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நகல் எரிப்பு: மதுரையில் 17 பேர் கைது

மதுரை, பிப். 24: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு நகல் எரிப்புப் போராட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 17 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய முன்னணி இயக்கம் சார்பில் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன் தீர்ப்பின் நகல் எரிக்கப்பட்டது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோரை பாதுகாப்புக்கு இருந்த போலீஸôர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், பாதுகாப்பையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டோர் தீர்ப்பின் நகல்களை எரித்தனர்.

இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்ட 17 பேரை திடீர்நகர் போலீஸôர் கைது செய்தனர்.
 
 

 தஞ்சையில்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நகல் எரிப்பு போராட்டம்
33 பேர் கைது


தஞ்சாவூர்,பிப்.24-

தஞ்சையில் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் நகலை கொளுத்திய 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊர்வலம்

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித்தீர்ப்பு தமிழக மக்களை ஏமாற்றுவதாகவும், வஞ்சிப்பதாகவும் இருப்பதாகக் கூறி, தமிழ் தேசப்பொதுவுடைமை கட்சி, தமிழ் தேசிய முன்னணி ஆகியவை காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு நகலை கொளுத்தும் போராட்டத்தை அறிவித்து இருந்தன. அதன்படி நேற்றுகாலை தமிழ் தேசப்பொதுவுடைமை கட்சியினர் மற்றும் தமிழ் தேசிய முன்னணியினர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு ஒன்று திரண்டனர்.

அங்கிருந்து மாவட்ட துணைச் செயலாளர் குழ.பால்ராசு தலைமையில் சுமார் 33 பேர் ஊர்வலமாக புறப்பட்டனர். அண்ணாசிலையை கடந்து ஊர்வலம் வந்தபோது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், குமரவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, சுதா மற்றும் போலீசார் ஊர்வலத்தை வழி மறித்தனர். இதற்கு மேல் செல்ல அனுமதி கிடையாது என்று போலீசார் கூறினர்.

ஆனால் ஊர்வலத்தில் கலந்து கொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். "ஓசூருக்குள் கர்நாடகக்காரர்கள் நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை உங்கள் போலீசார் தடுத்து நிறுத்தாமல் போராட்டம் நடத்த வழி விட்டார்கள். நாங்கள் தமிழக மக்களுக்காக போராட்டம் நடத்துகிறோம். எங்களை மட்டும் தடுத்து நிறுத்துகிறீர்கள்'' என்று போலீ சாரிடம் போராட்டக் காரர்கள் கூறினர்.

நகலை கொளுத்தினர்

அதன்பின்பு போலீசார் அவர்களை ஊர்வலமாக செல்வதற்கு அனுமதித்தனர். போராட்டக்காரர்கள் ஊர்வலமாக பழைய பஸ் நிலையம் முன்பு வந்தவுடன் மீண்டும் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்போது லேசான பதட்டம் ஏற்பட்டது. அதன்பின்பு ஒவ்வொருவரும் காவிரி இறுதித்தீர்ப்பு நகலை கையில் வைத்து கொளுத்தினார்கள்.

நகலை கொளுத்த விடாமல் தடுப்பதற்காக போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் வட்டமாக நின்று கொண்டு நடுவில் காவிரி இறுதித்தீர்ப்பை கொளுத்தினார்கள். பின்பு ஒவ்வொருவரும் தங்கள் கையில் தனித்தனியாக இறுதித்தீர்ப்பு நகலை எடுத்துச் சென்று கொளுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

33 பேர் கைது

சுமார் ஷி மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. அதன்பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட துணைச் செயலாளர் குழ.பால்ராசு கூறியதாவது:-

தமிழக அரசு காவிரி இறுதித்தீர்ப்பில் சில திருத்தங்கள் கோரி நடுவர் மன்ற மறு ஆய்வுக்கு அனுப்புவது அநீதியான தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக அமையும். எனவே அவ்வாறு மறு ஆய்வு மனு போடாமல் இந்த நடுவர் மன்றத்திற்கு மாற்றாக புதிதாக ஒரு நடுவர் மன்றம் அமைத்து, ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்குமாறு கால வரம்பிட்டு ஆணையிடக்கோரி உச்சநீதிமன்றத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.

இந்த தீர்ப்பு வரும்வரை ஏற்கனவே இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தருவதை உறுதிப்படுத்த வேண்டும். காவிரி இறுதித்தீர்ப்பு நகலை கொளுத்தும் போராட்டம் தஞ்சை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 10 இடங்களில் நடந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
 
 

 

Wednesday, February 14, 2007

உரிமையைக் கேட்டால்...

உயிர்க் காக்கும் விவசாய
பயிர் வளர்க்க நீரில்லை..

உயர்-உச்ச நீதிமன்ற
உத்தரவிட்டும் கூட
உரிமையான நீரைப்
பெற்றுத் தர ஆளில்லை...

அரசியலின் பெயராலே
தமிழனின் வாழ் வழித்து
வாக்கு மட்டும் வாங்க வரும்
வக்கற்ற கட்சிகளுக்கு
புரிய வைக்க வேண்டும்..
நாம் கேட்கும் நீர்
பிச்சையல்ல
"உரிமை"..

சாதி மதம் கடந்து
கன்னடனாக அவனிருக்க
நீதி தனை உணர்த்த
தமிழனாக இருப்பது தவறா ?
பிரிவினைவாதமா ?

ஐயாயிரம் வருடங்களாக
தமிழனாக இருந்தவர்கள்
என்பதை மறந்து,
இருநூறு வருடங்களாகத் தான்
இந்தியன் என்கிறோம்...

வந்தாரை வாழ வைக்கும்
தமிழகமாம் இது...
வந்தாரை மட்டுமே
வாழ வைக்கும் தமிழகமாக
மாறியது எப்போது ???

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

--
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Tuesday, February 13, 2007

கேலிக்குறியான 'இந்திய' ஒருமைப்பாடு - ஐ.பி.என் தொலைக்காட்சி அம்பலம்

'தமிழன்' என்றாலேயே முகம் சுளித்துக் கொண்டு 'இந்தியன்' என்று கூறுமாறு பெருமைக் பட்டுக் கொள்ளும் 'இந்தி'ய தேசியவாதிகளுக்கு ஐ.பி.என் தொலைக்காட்சியின் நெற்றியடி செய்திக் குறும்படம்...
200 வருட இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியன் என்று சொல்பவர்களே !
5000 வருடங்களாக தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழன் என சொன்னால் தவறா ? பிரிவினைவாதமா ???

ஓ.. தமிழன் மட்டும் தமிழனென்று சொல்லக்கூடாது.. ஆனால் கன்னடன் கன்னடனாக, மராட்டியன் மராட்டியனாக மற்றவர்கள் அவரவர்களாக இருக்கலாமோ ????

value='http://features.ibnlive.com/videos/embed/33387/C1520A46F5A03B820B85FADC2E7111C8385B6EFE0E8D09D692202B007C9F6465250AF9776187481B42E0EC7A9A0B83F19C6669118A745B72F748D35EA7C37F7619368966673F10FE6268F6451657BAF97D9A0B92F29D666911'>

தமிழர்களுக்கெதிராக கன்னடர்கள் அட்டகாசம்

தமிழர்களுக்கெதிராக கன்னடர்கள் அட்டகாசம், 'ஞே' என வேடிக்கை பார்க்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள்


 

அமெரிக்காவில் குண்டு வெடித்தால் ஐரோப்பாவிலும் அது எதிரொலிக்கிறது, ஈராக்கில் குண்டு விடித்தால் மேல்விசாரத்தில் தூக்கம் கெடுகிறது, காஸ்மீரத்துப் பண்டிதர்களுக்காகக் கூடக் குரலெழுப்பினார்கள் சிலர், ஆனால் பெங்களூரில் தமிழர்கள் வீடுகள் எரிந்தாலும், கன்னடர்களின் பயமுறுத்தலாலும், ஆர்ப்பாட்டங்களாலும் தமிழர்களைப் பயந்து நடுங்கச் செய்து, தமிழர்களின் வியாபாரங்களை மூடச் செய்தாலும், தமிழ்படங்களை ஓடாமல் செய்து, தமிழ்நாட்டுப் பேருந்துகளைத் தடுத்தாலும், தமிழர்களைத் தமது சொந்த நாட்டிலேயே, ஜேர்மனியில் யூதர்கள் எப்படி நாசிகளுக்குப் பயந்து நடுங்கினார்களோ அதே போல் கன்னட வெறியர்களைக் கண்டு அவர்களைப் பயந்து நடுங்கச் செய்தாலும், அது மட்டுமல்ல கன்னட வெறியர்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள் தீவட்டிகளுடன் வந்து வெருட்டினாலும் கூடத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒரு ஆர்ப்பாட்டமோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் எனக்கென்ன போச்சு என, ஞே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்.

தமிழ் நாட்டுத் தமிழர்களின், தமிழுணர்வும், தமிழின உணர்வும் முற்றாக அற்றுப் போய் விட்டதா அல்லது தமிழ் நாட்டில் இன்னமும் பொருளாதார, அரசியல் அதிகாரங்கள் தமிழரல்லாதவர்களின் கைகளில் இருப்பதால் தமிழர்களின் தன்மானம் நசுக்கப்பட்டு விட்டதா?

தமிழ்நாட்டுத் தமிழர்கள், தமிழுக்காகத், தமிழர்களுக்காகக் குரலெழுப்பினால் அவர்களை இந்தியாவுக்கு எதிரானவர்களாகவும், இந்திய ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிப்பவர்களாகவும், குறுகிய மனப்பான்மையுள்ளவர்களாகவும், "பகுத்தறிவுகள்" எனவும் சாயம் பூசி அவர்களுக்கு மேல் பாய்ந்து குதறுகின்ற இந்தியாவின் போலி தேசியவாதிகள் எல்லாம் கன்னடவெறியர்களுக்கெதிராக மூச்சு விடாமல் இணையத்தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் மெளனம் சாதிக்கிறார்கள்.

அரசியல்வாதிகளாக மாறிய தமிழரல்லாத நடிக, நடிகைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும் போதெல்லாம் தீக்குளித்தும், கைவிரல்களை மட்டுமல்ல கைகளையும் வெட்டிக் கொண்ட தமிழ்நாட்டு மானத்தமிழர்கள் அயல் மாநில வெறியர்கள் தமிழர்களை அச்சுறுத்தியும், நிம்மதியாக வாழ விடாமல் துன்புறுத்தியும், ஆர்ப்பாட்டங்கள் செய்தும் அவர்களின் வியாபார நிலையங்களைப் பகிஸ்கரிப்புச் செய்தும் தமிழர்களைச் சொந்த நாட்டிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்குகிறார்களே, அதையெல்லாவற்றையும், அவர்களின் சகோதரர்களாகிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் பார்த்துக் கொண்டிருப்பதன் காரணமெதுவாக இருக்கும்?

தமிழ்நாட்டில் உழைத்த பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்யும்
ரஜனிகாந்தின் கட் அவுட்டுக்குக் கற்பூரம் காட்டிக் காவடியெடுக்கும் தமிழ்நாட்டின் திராவிட திலகங்களுக்கு கர்நாடகத்தில் அடி வாங்கும் தமிழர்களுக்காக ஒருநாளைக்காவது ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தி, கர்நாடகாவிலுள்ள தமிழர்கள் அனாதைகளல்ல, அவர்களுக்கும் அறுபது கோடி சகோதரர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கன்னட வெறியர்களுக்கு உணர்த்த தெரியவில்லை என்பது தான் மிகவும் வேதனை தரும் விடயம்
.

தமிழர்களின் இந்தக் கையாலாகாத் தனத்தை நொந்து தான் " சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே", செய்வதறியாரடி என்றார் பாரதியார்.

கன்னடர்களில் படித்தவர்கள் படிக்காதவர்கள், தமிழ்நாடு போட்ட பிச்சையில் வயிறு வளர்த்த கன்னட நடிக, நடிகைகள், கன்னட அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழர்களைத், தமிழ் நாட்டின் நலன்களை எதிர்க்கிறார்கள், அங்கு வாழும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை நரகமாக்குகிறார்கள், இதே நடைமுறைகளைத் தான் ஆரம்பத்தில் இலங்கையில் சிங்களவர்களும் மேற்கொண்டார்கள், அப்படியான கலவரங்களிலெல்லாம் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு வட, கிழக்கிற்கு ஓடிப் போகக் கூடியதாக இருந்தது.


ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒடி வரவும் முடியாமல், தலை முறை, தலைமுறையாக பெங்களூரில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தார்மீக ஆதரவையாவது வழங்காது விட்டால் அதை விடக் கையாலாகாத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

இவ்வளவுக்கும் தமிழ்நாட்டுக்குக் காவேரி நீரைக் கொடுக்கச் சொல்லி விட்டார்களே என்பதற்காகத் தான் அங்கு வாழும் தமிழர்களைத் துன்புறுத்துகிறார்கள், அதற்காக என்றாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் பொங்கியெழுந்து தமது உணர்வுகளைத் தெரிவித்திருக்க வேண்டாமா?

கன்னடர்கள் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடும் திரையரங்குகளை எரிக்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் என்னடாவென்றால், உலகத்திலேயே தலைசிறந்த ஒப்பனைக் கலைஞராகிய ரஜனிகாந்தின் ஒப்பனையாளர், எப்படா ரஜனியின் உண்மையான தோற்றத்தை மறைத்து, ரஜனியை மீண்டும் கண்ணெடுத்துப் பார்க்கக் கூடிய ஜென்மமாக மாற்றிக் காட்டுவார், நாங்களும் காசைக் கொடுத்து அதைப் பார்த்திட்டுக் கைதட்டுவோமென்று பார்த்த கண்கள் பூத்துப் போகக் காத்திருக்கிறார்கள் .

திராவிடக் கட்சிகளின் குடுமிச்சண்டையாலும், போட்டி பொறாமையினாலும், தமிழ்நாட்டிலிருந்து எந்தவித ஆதரவுப் போராட்டத்தையும் காணாத கர்நாடக தமிழர்களின் கட்சிகள் கூடக் கன்னடவெறியர்களிடம் தப்பி உயிர்வாழ்வதற்கு வேறு வழியில்லாமல் தமிழர்களுக்கெதிரான வன்முறைக்கும் கடையடைப்புக்கும் தமிழர்களே ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்களாம்.

தமிழ்நாட்டில் கர்நாடகத்துக்கோ, ஆந்திராவுக்கோ அல்லது கன்னடர்களுக்கும், தெலுங்கர்களுக்குமெதிராக வன்முறைகளோ ஆர்ப்பாட்டங்களோ நடந்தால் கன்னடர்களும், தெலுங்கர்களும் ஆதரவளிப்பார்களா?

தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஒற்றுமையின்மையும், கையாலாகாத்தனமும், தமது வலிமையைத் தாம் உணராமல் வந்தான் வரத்தானிடம் ஆட்சியையும், அதிகாரத்தையும் கொடுத்து விட்டுக் கைகட்டி, வாய்புதைத்து நிற்கும் ஏமாளிக் குணமும் போகும் வரை தமிழினம் உருப்படாது.


"கொலைவாளினை எடடா
மிகுகொடியோர் செயல்அறவே!
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா"


"தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

தலை மீது சுமக்கின்றான்

அடிமை என்னும் சொல்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்
இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!

திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!
உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம்போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன? "

Sunday, February 11, 2007

இம்மாத தலைப்புகள் சனவரி 15- பிப்ரவரி 15 07

கட்டுரைகள்




 

முக்கிய நிகழ்வுகள்

கர்நாடகத்தில் தமிழர்கள் விரட்டப்படுகின்றனர்







 
கவிதைச் சரங்கள்
 


போகி -முழுநிலவன் 

கடவுளைப் புரிதல் - வைரமுத்து   

வெறித்தனமாய் காதலிக்கிறேன்! - கமல் 

கடவுளாகலாம் வாங்க - தரன்   

உண்மைக்காதல் .....?- சக்திதாசன்   

நீயொரு புதுக்கவிதையடி - இலக்கியன்   

 
வேலைவாய்ப்புக் களம்
 

கதைகள் கேட்போமா ...

என் தோழி -ரசிகவ் ஞானியார்
வெள்ளைச்சாமி -ச.சங்கர்

பெண்மை போற்றுவோம்
 


வரலாறு பேசுகிறது
 

தலைவர்களைத் தெரிந்து கொள்வோம்

பாவாணர் வாழ்க்கை குறிப்பு


  இணையற்ற இணைய தமிழ்







 புத்தக விமர்சனம்

 
***********************************************
தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

குறிப்பிடத்தக்க பதிவுகள்