Wednesday, February 14, 2007

உரிமையைக் கேட்டால்...

உயிர்க் காக்கும் விவசாய
பயிர் வளர்க்க நீரில்லை..

உயர்-உச்ச நீதிமன்ற
உத்தரவிட்டும் கூட
உரிமையான நீரைப்
பெற்றுத் தர ஆளில்லை...

அரசியலின் பெயராலே
தமிழனின் வாழ் வழித்து
வாக்கு மட்டும் வாங்க வரும்
வக்கற்ற கட்சிகளுக்கு
புரிய வைக்க வேண்டும்..
நாம் கேட்கும் நீர்
பிச்சையல்ல
"உரிமை"..

சாதி மதம் கடந்து
கன்னடனாக அவனிருக்க
நீதி தனை உணர்த்த
தமிழனாக இருப்பது தவறா ?
பிரிவினைவாதமா ?

ஐயாயிரம் வருடங்களாக
தமிழனாக இருந்தவர்கள்
என்பதை மறந்து,
இருநூறு வருடங்களாகத் தான்
இந்தியன் என்கிறோம்...

வந்தாரை வாழ வைக்கும்
தமிழகமாம் இது...
வந்தாரை மட்டுமே
வாழ வைக்கும் தமிழகமாக
மாறியது எப்போது ???

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

--
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

2 கருத்துகள்:

ஈழம்.சுதர்சன் said...

மதிப்புகுரிய தோழரே,
உண்மையில் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் பாராட்டுக்குரியவை

ஈழம்.சுதர்சன் said...

மதிப்புகுரிய தோழரே,
உண்மையில் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் பாராட்டுக்குரியவை

குறிப்பிடத்தக்க பதிவுகள்