Friday, February 01, 2008

நினைவுப்பூக்கள்(கவிதை) - க.அருணபாரதி


நினைவுப்பூக்கள்
க.அருணபாரதி
 
வானத்தில் சிறகடிக்கும்
நட்சத்திர பூக்களாக
வாழ்வில் பூக்கின்றன
நினைவுப்பூக்கள்...
 
வாசம் மட்டுமல்ல
அதில் தேனும்
கண்ணீராய் இருக்கும்..
 
பாசக்கரங்கள் தொட்டால்
மெல்ல அத்தேனை
சுரக்கும்...
 
வாசம் உணரும்
போதெல்லாம்
மனம் இறந்து
பிறக்கும்..
 
மாசங்கள் கடந்தும்கூட
மனசெல்லாம்
வாடாமல் சிரிக்கும்..
 
பூக்களின் புன்னகை
பார்த்து நம் மனதும்
அதனுடன் போகும்...
 
தீக்கிரை ஆக்கினாலும்
அதன் நினைவுகள்
சருகாய் சாகும்..
 
நீருற்றி வளர்க்காமல்
விட்டாலும் - அது
தான்தோன்றித் தனமாக
வளரும்..
 
வேறினை பிடுங்க
நினைத்தால் - அது
முள்ளாய் கைகளில்
மிளிரும்..

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்