Monday, October 13, 2008

பிரபாகரனின் இராசத்தந்திரம் - பெ.மணியரசன்

பிரபாகரனின் இராசத்தந்திரம்
பெ.மணியரசன்
 
"துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்க ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை நினைவு படுத்துகின்றன.
 
சுருக்கமாகச் சொன்னால், அரசியல் களத்தில் தாக்குதல் தந்திரத்தையும் படைநகர்வில் எதிர்த்தாக்குதல் தந்திரத்தையும் அவா கடைபிடிக்கிறார். அரசியல் களத்தில் எதிரியை முன்னேறித் தாக்குகிறார். போர் களத்தில் எதிரியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கிறார்.
 
அண்மையில் நடந்த சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கருதி, தாமாக முன்வந்து பத்து நாள் போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்தனர். ஆனால் சிங்களக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபட்ச இந்தப் போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை. சார்க் மாநாடு நடந்த போதே வன்னிப் பகுதிக்குள் விமானக்குண்டு வீச்சுகள் நடத்தினார்.
 
இந்தப் போர் நிறுத்தம் ஓர் அரசியல் தாக்கதலாகவே அமைந்தது. அதன்மூலம் சார்க் நாடுகளுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் பிரபாகரன் முகாமையான சில செய்திகளை விடுத்தார்.
 
1. விடுதலைப் புலிகள் ஆய்த வெறியர்கள் அல்லர். அரசியல் தீர்வையே அலாவி நிற்கின்றனர்.
 
2. சார்க் நாடுகளையம் பன்னாட்டு சமூகத்தையும் புலிகள் மதிக்கிறார்கள்: அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறார்கள்.
 
2. தமிழீழம் அமைந்தால் தெற்காசிய ஒற்றுமைக்கும் அமைதிக்கும் முன்னுரிமை கொடுத்து, சார்க் அமைப்பில் அது இணைந்து கொள்ளும்.
 
இராஜபட்சவுக்கு இரண்டு குணங்கள் இருக்கின்றன. ஒன்று பயங்கரவாத முரட்டுத்தனம், மற்றொன்று கோமாளித்தனம்.
 
அண்மையில் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளை வன்னிப்பகுதியிலிருந்து வெளியேற ஆணையிட்டது அவரது முரட்டுத்தனத்திற்கு எடுத்துக்காட்டு. ஐ.நா.மனித உரிமை அமைப்பு, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை ராஜபட்சயின் இந்த நடவடிக்கையை மனித உரிமைக்கெதிரானது என்று கண்டித்தன.
 
அவரது கோமாளித்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், பிரபாகரனைச் சிறைப்பிடித்துத் தில்லிக்கு அனுப்பி வைப்பேன் என்று சில நாட்களுக்கு முன் அவர் கூறியதைச் சுட்டலாம். இந்திய அரசு அவ்வாறான ஒரு கோரிக்கையை ஏற்கெனவே எழுப்பி வைத்துள்ளது. ஆனால் அதை அண்மைக் காலங்களில் வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. சிங்களத்திற்கு ஆய்தங்கள் வழங்கினாலும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தும்படிதான் அரசியல் அரங்கில் இந்தியா வலியுறுத்திவருகிறது.
 
இவ்வாறான காலச்சூழலில் பிரபாகரனைப் பிடித்து ஒப்படைப்பது பற்றி பேசுவது பிதற்றலாக அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
 
முரட்டுத்தனமும் கோமாளித்தனமும் இணைந்த கலவை மனிதராக ராஜபட்ச இருப்பதால், புலிகளுடன் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையை ஒருதலைச் சார்பாக முறித்துக் கொண்டார்.
 
ஆனால், விடுதலைப் புலிகளோ பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தான் வெளிநடப்பு செய்தோம்; உடன்படிக்கையை இன்றுவரை நாங்கள் முறிக்கவில்லை. அந்த உடன்படிக்கைக்கு உயிர் கொடுக்கவே விரும்பகின்றோம் என்றனர்.
 
இந்த அரசியல் உத்தி, விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற சிங்கள அரசின் பன்னாட்டுப் பரப்பரையை முனைமழுங்கச் செய்துள்ளது. வட அமெரிக்கத் தலைவர்களில் ஒருவரான ஹிலாரி கிளிண்டன், புலிகள் பயங்கரவாத அமைப்பினர் அல்லர் என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். அமெரிக்க வல்லரசு, புலிகள் அமைப்பைத் தடை செய்திருந்தாலும் புலிகளுடன் பேசும்படி ராஜபட்சயை வலியுறுத்துகிறது.
 
உடன்படிக்கையை ஒருதலைச் சார்பாக முறித்துக் கொண்டதுடன் புலிகளுடன் பேச முடியாது என்று ராஜபட்ச கூறுகிறார். அத்துடன் அவா நின்றாரா? இருதரப்பையும் இணைக்கப்படுத்தி,  உடன்படிக்கைக்கு வழி செய்த நார்வேயையும் குற்றம் சாட்டி, அந்நாட்டுத் தலைவர்கள் வெளியேறும்படிச் செய்தார்.
 
இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐ.நா.மன்றமும் பல நேரங்களில் இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் சம தட்டில் வைத்துப் பேசுகின்றன. இருதரப்பும் அமைதிப் பேச்சுக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றன. ஓர் அரசையும் அதை எதிர்க்கும் விடுலை அமைப்பையும் சம தட்டில் வைத்து, பேச்சு நடத்த உலகநாடுகள் வலியுறுத்தும் போக்கு அவ்வளவு எளிதாக வந்துவிட்டதா?
 
இந்த நிலை வர, பன்னாட்டு ஏற்பிசைவு வர விடுதலைப்புலிகள் தலைமை என்ன பாடுபட்டிருக்கும்? எவ்வளவு மூளை உழைப்பும் பொறுமையும் விட்டுக்கொடுப்பும் இழப்பும், தொலைநோக்கும் தேவைப்பட்டிருக்கும். இவ்வாறான அரசியல் உத்தி எதுவும் ராஜபட்சவுக்குக் கிடையாது. போர் நடவடிக்கைகளில் ஊதாரித் தனமாக செலவிட்டு நாட்டைத் திவாலாகிவட்டார். சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து மேலும் மேலும் ஆய்தங்கள் வாங்கிப் போர் நடத்தி, சிங்கள மக்களுக்கும் வறுமை மற்றும் வேலை இன்மையைப் பரிசாகத் தந்துள்ளார். ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பறிக்கிறார்.
 
மூன்று லட்சம் ஈழத்தமிழர்களைக் காட்டு மரங்களின் கீழும் புதர்களின் மறைவிலும்வசிக்கும்படி விரட்டியுள்ளார். ராஜபட்ச வகுத்த அரசியல் உத்தி, இந்தியவை விடுதலைப்புலிகளுக்கு எதிராக நேரடிப் போரில் இறக்கி விடுவதுதான். அதுபலிக்கவில்லை. ஆய்தங்களும் பயிற்சியும் கொடுப்பதடன் இந்தியா நிற்கிறது.
 
இந்தியா, விடுதலைப் புலிகள் தோற்பதையே விரும்புகிறது. இருந்தும் நேரடிப் போரில் ஏன் இறங்கவில்லை?
 
ஒன்று தமிழ்நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பு; தமிழ்நாட்டு கட்சிகள் சிலவற்றின் எதிர்ப்பு. இன்னொன்று, விடுதலைப் புலிகள் இந்தியா குறித்துக் கையாண்டு வரும் அரசியல் உத்தி. பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக இந்தியா, பன்னாட்டுக் கடல்பரப்பில் விடுதலைப் புலிகளின் படகுகளையும் கப்பல்களையும் வழி மறித்தாலும், பல வகையான ஆத்திர மூட்டல்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செய்தாலும், படைக்கருவிகளையும் படையாட்கள் சிலரையும் சிங்களப்படைக்கு ஆதரவாக அனுப்பி வைத்தாலும், இந்தியாவை ஆத்திர மூட்டும் எந்த நடவடிக்கையிலும் விடுதலைப் புலிகள் இறங்கவில்லை.
 
இந்தியாவை நோக்கி நீட்டிய நேசக்கரத்தை பிரபாகரன் இன்னும் மடக்கவில்லை. பொறுமையும், சகிப்புத்தன்மையும் மிக்க இந்த அணுகுமுறை சிறந்த அரசியல் உத்தியாக உள்ளது. இந்தியாவிற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. விடுதலைப்புலிகள் மீது விரல் நீட்டிக் குற்றம் சுமத்த முடியாத நெருக்கடி இந்திய உளவுத்துறைக்கு உள்ளது.
 
இவ்வளவு கனபரிமானம் கொண்ட விடுதலைப் புலிகளின் இராசத்தந்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ராஜபட்ச திணறுகிறார். அவருக்கே உரிய கோமாளித்தனத்துடன் செப்டம்பர் 25-இல் சிறிது நேரம் தமிழில் பேசி, தமிழர்களைச் சமமாக நடத்துவது போல் நாடகம் நடத்தியிருக்கிறார். இது ஒரு கோமாளித்தனம் தவிர, இராசத்தந்திரம் அல்ல.
 
விடுதலைப்புலிகள் ஆய்தங்களை ஒப்படைத்துச் சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா.வில் அவர் தமிழி்ல் பேசினால் என்ன? சிங்களத்தில் பேசினால் என்ன? விடுதலைப் புலிகளுக்கு ஏற்பிசைவு வழங்குகிறேன், சமநிலையில் பிரபாகரனுடன் பேசத் தயார் என்று அவர் சிங்களத்தில் பேசியிருந்தால் தமிழர் நெஞ்சமெல்லாம் குளிர்ந்திருக்கும். உலக அரங்கிலும் அவர்க்கொரு மதிப்பு ஏற்பட்டிருக்கும். சின்னத்தனம் தவிர வேறு சிந்தியாத ராஜபட்சயால் அவ்வாறு அரசியல் காய் நகர்த்த முடியாது.
 
பிரபாகரன் ஏன் முழுப்போர் நடத்தாமல், எதிர்த்தாக்குதல் மட்டும் நடத்துகிறார்? அவரது இந்த அணுகுமுறையில் பலவகையான, அரசியல் மற்றும் படைத்துறை உத்திகள் பொதிந்து கிடக்கின்றன.
 
முதலில் பன்னாட்டு அரசியல் குறித்த ஒரு தொலை நோக்கு இதில் அடங்கியுள்ளது. பன்னாட்டு அரசியலில் நிலையற்ற தன்மை அதிகரித்துப் பரவி வருகிறது. இது இன்னும் அதிகரிப்பது விடுதலை இயக்கங்களுக்கு வாய்ப்பானது.
 
அமெரிக்க வல்லரசின் ஒரு கால் ஈராக்கில் மாட்டியிருக்கும்போதே இன்னொரு காலை அது ஈரானில் விடப்பார்க்கிறது. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்துள்ள பாகிஸ்தான் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கி, அதன் எல்லைக்குள் புகுந்து, அல்கொய்தாவினரையும் தலிபான்களையும் எதிர்த்துக் குண்டு வீசுகிறது; சுடுகிறது. தேடுதல் வேட்டை நடத்துகிறது.
 
இந்த அத்துமீறல்கள் அமெரிக்க பாகிஸ்தான் உறவில் விரிசல் உண்டாக்கியுள்ளது. இந்த விரிசலை இந்தியா பயன்படுத்த விரும்புகிறது.
 
பாகிஸ்தான் மற்றும் காசுமீர் சிக்கல்களில் இந்தியாவுக்கு உதவிட வேண்டுமெனில், ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரிலும், பின்னர் நடத்தக் கருதியுள்ள ஈரான் போரிலும் அமெரிக்காவுக்கு இந்தியா உதவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும்.
 
ஜார்ஜியாவில் அமெரிக்கப் படைத்தளம் இருப்பதை ரசியா எதிர்க்கிறது. அமெரிக்க வல்லரசுடன் காகசஸ் மலைப்பகுதியில் போர் மூண்டாலும் சங்திக்கத் தயார் என்று ரசியக் குடியரசுத் தலைவர் மெத்வதேவ் அறைகூவல் விட்டுள்ளார்.
 
ஆக, ஈராக், ஈரான், ஜார்ஜியா, ஆப்கான், பாகிஸ்தான் வரை அமெரிக்க வல்லரசு 2009இல் போர் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வாய்ப்புண்டு. குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கைன் வெற்றி பெற்றாலும், அல்லது சனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெற்றாலும் நெருக்கடி இவ்வாறுதான் இருக்கும். ஆப்கான் பொரைத் தீவிரப் படுத்துவதிலும் ஈரான் மீது போர் தொடுப்பதிலும் ஒபாமா ஆர்வமாக உள்ளார்.
 
அமெரிக்க - இந்திய அணு ஆற்றல் ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களுக்க இந்தியா துணை புரிய வேண்டும் என்ற விதிகளைக் கொண்டுள்ளது.
 
எனவே ஈராக்கிலிருந்து - பாகிஸ்தான் வரை பரவி நடைபெறவுள்ள ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்காவும், அதற்குத் துணையாக இந்தியாவும் ஈடுபட்டிருக்கும் பொது இலங்கை அரசுக்குப் படைவகை ஆதரவு தருவது கடினம். மெலும் இக்காலத்தில் காசுமீர் விடுதலைப் போர் தீவிரமடையும். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் விடுதலைப் போர்களும தீவிரப்படும் சூழல்கள் உருவாகியுள்ளன.
 
எனவே ஈழ விடுதலைப் போருக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளில் ஒருவகை பலவீனம் ஏற்படலாம்.
மேற்கண்ட வாய்ப்பு பற்றி ஊகிக்கும் போதே, ஒரு வேளை இதற்கு மாறாக நிகழ்வுகள் நடக்கவும் வாய்ப்புண்டு. தெந்காசிய மண்டலத்தில் இந்திய அரசு ஆதிக்கம் செய்துகொள்ள அமெரிக்க வல்லரசு துணைபுரியவும் கூடும். அவ்வாறான சூழலில் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் புலிகளுக்க உண்டு.
 
ஆக்கிரமிப்புப் போர்களுக்கப்பால் உலகமயத்தால் அமெரிக்க வல்லரசின் பொருளியல் வேகமாக சரிந்து வருவதைக் கவனிக்க வேண்டும். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளியல் சரிவைச் சரி செய்ய அமெரிக்கா படாதபாடு படவேண்டி வரும். தொற்று நோயாளித் தோளில் கைப்போட்டு அந்நோய் தொற்ற வாய்ப்பளித்தவரைப் போல், அமெரிக்கப் பொருளியலுடன் இணைக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளியலும் சரிவைச் சந்தித்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. மிகவும் தொளதொளப்பான ஏறுக்கு மாறான கூட்டணி ஆட்சி தான் ஆட்சி நடத்தும்.
 
இவ்வாறு அரசியல் நிலையற்ற தன்மை பன்னாட்டரசில் ஏற்படும்போது, இலங்கைப் பொருளியலும் அரசியலும் எப்படி இருக்கும்! ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது இலவம் பஞ்சு என்னவாகும்!
 
இலங்கைப் பொருளியல் ஏற்கெனவே திவாலாகிவிட்டது. அது மேலும் சீரழியும். அரசுக்கெதிரான சிங்கள மக்கள் கடுமையாகப் போராடும் அளவிற்கு நெருக்கடி முற்றும் வாய்ப்புண்டு.
 
இது ஒருபுறம் இருக்க, ராஜபட்சவின் குடும்ப ஆட்சி, ஆளும் இலங்கை சுதந்திரக்கட்சிக்குள்ளேயே புழுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மகிந்த ராஜபட்சவின் தம்பி கோத்த பாய ராஜபட்ச இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர்; அவரின் இன்னொரு தம்பி, பசில் ராஜபட்ச அமைச்சர் பொறுப்பில்!
 
இந்தப் புழுக்கத்தை எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்ளும். சிங்கள அரசியல் மேலும் உறுதியற்ற நிலை தோன்றும்.
 
முழுப்போரில் இறங்காமல் தக்க நேரத்திற்காகப் பிரபாகரன் காத்திருப்பதற்கான முகாமையான காரணங்களில் இவையும் அடங்கும். அதே வேளை எதிர்த்தாக்குதல் கடுமையாக நடக்கிறது.
 
2007 ஏப்ரல் 6 ஆம் பக்கல்(தேதி) சிங்கள அரசின் பலாலி கூட்டுப்படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய விமானத் தாக்குதல் ஒரு பதிலடிச் சமர்தான். அடுத்து அக்டோபர் மாதம் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது புலிகளின் விமானப் படையும் தரைப்படையின் சிறப்பு அணிகளும் பெருந்தாக்குதல் நடத்தின. அது மிகப்பெரிய இழப்புகளை சிங்களப் படைக்கு உண்டாக்கியது. கிட்டத்தட்ட 22 போர் விமானங்கள் தகர்ந்தன. பெருமளவு ஆய்தங்களைப் புலிகள் கைப்பற்றி மீண்டனர். புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தி விட்டு பாதுகாப்பாகத் திரும்பின.
 
2008 செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் பககல்களில், நாச்சிகுடா, வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன் குளம் பகுதிகளில் சிஙகளப் படையினரின் முன்னேற்றத்தை மறித்துப் புலிகள் தாக்கியதில் 75 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டனர். 20 உடல்களை கிளிநொச்சியில் வைத்துப் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகள் ஒப்படைத்தனர்.
 
நாச்சிகுடா, வன்னேரிக்குளம் சமரில் சிங்கள அரசு சீனத்திடமிருந்து வாங்கிய இலேசுரக டாங்கு எதிர்ப்பு ஏவுகணையைக் களமிறக்கி இருந்தது. சிங்களப் படையினரால் முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்ட இந்த சீன ஏவுகணை அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. புலிகளின் எதிர்த்தாக்கதலில் அவர்கள் பின் வாங்கும்படி ஆனது. அந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் 20 படையாட்கள் கொல்லப்பபட்டனர். பத்து சடலங்களைப் புலிகள் கைப்பற்றினர்.
 
இந்தத் தோல்வி சிங்களப் படையின் மனஉறுதியைத் தகர்த்திருக்கும். ஏனெனில் நவீன ஏவுகணையின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து அவர்கள் களமிறங்கினர். அந்நம்பிக்கை தகர்ந்தது.
 
வன்னிமண்டலத்தில் மன்னார்-பூநகரி நெடுஞ்சாலை ஏ32-ஐக் கைப்பற்றும் நோக்குடன் சிங்களப்படை போர் புரிகிறது. அத்திசையிலான முன்நகர்வைத் தடுத்து வருகிறார்கள் புலிகள். பெருமெடுப்பில், ஆள் இழப்புகளையம் ஆய்த இழப்புகளையம் சிங்களப்படை சந்திக்கிறது. ஏ32 நெடுஞ்சாலையை கைப்பற்றியபின் ஏ9, நெடுஞ்சாலையை முழு அளவில் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது தான் சிங்களப் படைநகர்வின் திட்டம்.
 
கடந்த செப்டம்பர் 9 -ஆம் பக்கல் அதிகாலை, சிங்கள அரசின் வவுனியா படைத்தலைமையகத்தின் மீது புலிகளின் வான்படை, தரைப்படையின் சிறப்பு அணிகள், கர்னல் கிட்டு பீரங்கிப் படை அணிகள், துணைத்தளபதி மதியழகி தலைமையிலான கரும்புலிப்படை ஆகிய இவை அனைத்தும் ஒருங்கிணைந்து தாக்கின. இது கூட பதிலடித் தாக்குதல் தான். அப்பகுதியை விடுவிக்கும் போர் அல்ல.
 
சிங்கள அரசின் வவுனியா ஜோசப் படைத்தளம், வன்னிப்படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு நடுவமாகவும், வான்புலிகளைக் கண்காணிக்கும் ராடார் மையமாகவும் செயல்படுகிறது. இந்திய அரசு கொடுத்த ராடார்கள் இந்திரா ஐ.ஐ. இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியா வழங்கியுள்ள எல் 70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இங்கு நிறுவப்பட்டிருந்தன.
 
இவை எல்லாவற்றையும் தாக்கித் தகர்த்தனர் புலிகள். கரும்புலிகள் பத்து பேர் வீரச்சாவெய்தினர். புலிகளின் 11 சடலங்களைக் கைப்பற்றியதாக சிங்களப்படை கூறியது. புலிகளின் இரு போர் விமானங்கள் பாதுகாப்பாக நிலைக்குத் திரும்பின.
 
அன்று அதிகாலை 3.05 மணியளவில் புலிகளின் இருவிமானங்களும் 25 கிலோ எடையுள்ள நான்கு குண்டுகளை வீசின. ஒரு குண்டு இந்திரா ராடாரை முற்றிலும் சேதப்படுத்தியது புலிகளின் விமானமொன்றைச் சுட்டு வீழ்த்தியதாக சிங்களப்படை கூறிக்கொண்டது. ஆனால் அது உண்மைச் செய்தி அல்ல என்று பின்னர் தெரியவந்தது.
 
சிங்களப் படைக்குக் கமுக்கமாக படைக்கருவிகள் வழங்கி வரும் இந்திய அரசு 40 மி.மீ. எல் 70 தன்னியிக்க எதிர்ப்புத் துப்பாக்கிகள், நிசாந் வகை ஆளில்லாத உளவு விமானங்கள், ஒளிக்கதிர்(லேசர்) மூலம் வழி நடத்தப்படும் குறிதவறாத குண்டு வழி நடத்திகள்(Laser Designators for PGMs) போன்ற ஆய்தங்களை வழங்கியுள்ளது. அவை மட்டுமின்றி படைத்துறை ஆட்களையும் இந்தியா அனுப்பியுள்ள கமுக்கம், புலிகளின் வவுனியாத் தளத்தாக்குதலில் அம்பலமானது. அங்கு பணியிலிருந்த இந்தியப் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த ராடார் பொறியாளர்களான ஏ.கே.தாக்குர், சிந்தாமணி ரவுத் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
 
புலிகளின் இவ்வகை எதிர்த்தாக்குதல்கள் எதைக் காட்டுகின்றன? அவர்களின் போர்த்திறன் கூடியுள்ளதே தவிர குறையவில்லை என்பதையே காட்டுகின்றன.
 
சந்திரிகா குமாரதுங்கா 'வெற்றி உறுதி' (ஜெயசிக்குறு) என்ற பெயரில் வன்னிக்குள் புகுந்து போர் நடத்தியபோதுதான் அவரது தோல்வி உறுதியானது. வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் இதயம் போன்றது. போர் நடத்த புலிகளுக்கு வாய்ப்பான பகுதி. அதிலும் வன்னியின் மேற்குப் பகுதியைவிடக் கிழக்குப் பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டது. மணலாற்றுக் காடு, நெடுங்கேணிக்காடு, இரணைமடுக்காடு என கதிரொளி நுழைய முடியாக்காடுகள் இருக்கின்றன. இங்கதான் கிளிநொச்சி உள்ளது.
 
இப்பொழுது பிரபாகரன் இருவகையான சமர் உத்திகளைக் கடைபிடிக்கிறார் என நாம் ஊகிக்கலாம். ஒன்று போரை நீடித்து, சிங்களப்படையினரைக் களைப்படையச் செய்வது, இரண்டு, வன்னிக்காட்டுக்குள் எதிரியை இழுத்து, சுற்றி வளைத்துத் தாக்குவது.
 
எனவே, இப்பொழுது முழுப்படைவலிவையும், போர்க் கருவிகளையும் சமரில் இறக்கிவிட அவர் விரும்பவில்லை.
 
கடற்புலிகள் இன்னும் சமரில் இறக்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பன்னாட்டு அரசியலில் விரைவாகப் பரவிவரும் நிலையற்ற தன்மை, 1929இல் ஏற்பட்டது போன்ற முதலாளிய பொருளியல் மந்தநிலை, அமெரிக்க வல்லரசின் ஈராக்-ஈரான்-காகஸ்-ஆப்கன்-பாகிஸ்தான் வரையிலான போர் நடவடிக்கைகள் - இதில் இந்தியாவும் துணைச் சக்தி ஆதல் - இந்தியாவில் காசுமீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் தீவிரமடையும் விடுதலைப் போர்கள், இலங்கையின் பொருளியல் சீரழிவு, இராஜபட்சயின் குடும்ப அரசியல் - பதிவ ஆசை இவை எல்லாம் வருங்காலத்தில் புலிகளுக்கு அரசியல் கதவை அகலமாகத் திறந்து விடும்.
 
நீண்டு கொண்டே போகும் போர் சிங்களப் படைகளைக் களைப்படையச் செய்யும். அவர்களுடைய படைத் தொகையில் 40 ஆயிரம் பேர் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையுள்ள ஒரு பெரும் படை ஆற்றல், செயல்படாமல் அங்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் இப்பொழுது யாழ்ப்பாணத்தை நோக்கப்போவதில்லை.அதற்குரிய காலம் வரும்.
 
கிழக்கு மாநிலத்தைக் கைப்பற்றி விட்டதாக இராசபட்ச தம்பட்டம் அடிக்கிறார். ஆனால் அம்மாநிலம் முழுமையாக அவர் கையில் இல்லை. அதன் பல்வேறு பகுதிகள் புலிகள் வசம் இருக்கின்றன.
 
விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவு 10.08.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை இணையதளத்தில் வந்துள்ளது.
 
"அரச பயங்கரவாதத்தின் உச்சமாகத் திகழும் மகிந்த ராஜபட்ச அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை மீட்டுவிட்டதாக வெற்றிவிழா நடத்திய நாள்தொட்டு இன்றுவரை சிறிலங்கா படையினருக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அதிகாரிகள் உட்பட 92 படையாட்கள் கொல்லப்பட்டார்கள். 208 பேர் படுகாயமடைந்தார்கள். யால படைமுகாம் தீயிட்டு எரிக்கப்பட்டது. உலங்கு வானூர்தி உட்பட மூன்று பவல் கவச வாகனங்கள், இரண்டு ஜீப்புகள், எட்டுக்கும் மேற்பட்ட இதர வாகனங்கள் அழிக்கப்பட்டன."
 
அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கும் தெற்கே சிங்களப் பகுதியை ஒட்டி உள்ளது. அங்கேயே சிங்களப்படைக்கு இவ்வளவு சேதங்களைப் புலிகள் ஏற்படுத்துகிறார்கள் எனில் மற்ற பகுதிகளில் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.
 
சிங்களப் படை வெற்றிமேல் வெற்றி குவிப்பது போலவும், புலிப்படை பின்வாங்கிச் செல்வது போலவும், ஒரு போலித் தோற்றம் ஏடுகளால், இதர ஊடகங்களால் இங்கு பரப்பப்பட்டு வருகிறது. சிங்களப் படை தரும் செய்தியை சிந்தாமல் சிதறாமல் அப்படியே தரும் செய்தி ஊடகங்கள், விடுதலைப்புலிகள் தரும் செய்திகளை விடுதல்கள் பல செய்தே வெளியிடுகின்றன. சில செய்திகளை வெளியிடவே மறுக்கின்றன.
 
தமிழ் இன உணர்வாளர்கள் சரியான செய்திகள் தெரியாமல் கவலுறுகின்றனர். கவலைப்படத் தேவை இல்லை. களநிலைமைகள் வலுவாக இருக்கின்றன.
 
அதே வேளை தமிழ்நாட்டில் நாம் செய்ய வேண்டிய சனநாயகக் கடமைகளை, மனித உரிமைக் கடமைகளைச் செய்ய வேண்டும்.
 
இந்திய அரசு, ஈழத்தமிழர்களைக் கொல்ல, சிங்கள அரசுக்குப் படைக்கருவிகளை வழங்குவதுடன் பயிற்சியும் தருகிறது. படையாட்களையும் அனுப்பி வைக்கிறது. ஈழத்தமிழர்களைக் கொல்ல மட்டுமல்ல, தமிழக மீனவர்களைக் கொல்லவும் துணை புரிகிறது.
 
தமிழ் உணர்வாளர்கள், சனநாயகர்கள், மனச்சான்ற பிளவுபடாத மனித உரிமையாளர்கள் உள்ளிட்ட முற்போக்காளர்களைத் திரட்டி இந்திய அரசின் தமிழ் இன எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்ப்போம்.
 
இந்திய அரசே,
 
இலங்கை அரசுக்குப் படைக்கருவிகள் தராதே
 
சிங்களப் படையினர்க்குப் பயிற்சி தராதே
 
இந்தியப் படையாட்களை இலங்கைக்கு அனுப்பாதே
 
தமிழக மீனவர்களைச் சுடும் சிங்களப் படையினரைச் சுட்டு வீழ்த்து
 
என முழங்குவோம் !
 
குறிப்பு : தரவுகள், புதினம், பதிவு இணையத்தளங்கள்
 

16 கருத்துகள்:

Anonymous said...

Dear Arunabarathi,

Thanks for the article you published on your blogs. After reading this article we little bite relaxed ourself. Yes we hope Probas stategy should work and God has to give a chance to our Eeelam tamil to achieve their long desire, Tamil Eeelam". We as a blood relative of the Eeelanm Tamil has to strongly contemp the Genocide of Sinhala Government of Sri Lanka.-Guru-Dubai

Unknown said...

அருமையான அலசல்.
நன்றி தோழரே!

Anonymous said...

இலங்கைப் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட வேண்டிய ஆய்வுரை. வாழ்த்துக்கள்.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

Really superb article

Anonymous said...

arumayana alasal
vaalthukal
anpudan sanjay

Anonymous said...

அருமையான அலசல்.
நன்றி தோழரே!

sanjay said...

nanry sakotharaa

Anonymous said...

Thank You very much for this post.

nourishtamils said...

anna unkaludaiya aakam mikavum nanraka irukirathu
meelum unkaludaiya aakankalai ethirpakinrom
nanri .

Anonymous said...

ஆங்காங்கே அவரவர் செய்ய வேண்டியதைச் செய்து
அகில உலகமும் சிங்கள இனவெறியை,
தமிழ் இனப் படு கொலையைப்
புரிந்து கொள்ளச் செய்தல் வேண்டும்.
தமிழரல்லாதார் புரிந்து கொள்ளச் செய்வதே தலையாயக் கடமை.

Anonymous said...

இந்திய அமைதிப்படை தாக்குதல் நடத்திய போது இங்கே வந்து காலில் விழுந்து புதுக்கோட்டை முத்து லாட்ஜில் ஒளிந்து கொண்டிருந்த பிரபாகரனா புலி

சீ கோழையை தலைவனாகக் கொண்டதால் தான் அங்கே தமிழன் உரிமை பெறவில்லை

Anonymous said...

ஓடி ஒளியும் கோழையடா பிரபாகரன்

மத்தவனை சண்டை போடச் சொல்லிட்டு ஏசியிலே உட்கார்ந்துஇருக்கும் கோழை அவன்

Anonymous said...

இந்திய அரசினை ஆட்டுவிக்கும் ஒரு சிலரின் கபடத்தன்மையை எடுத்துக்காட்டிய வன்னித்தாக்குதலின் பின்னணியில், தமிழக மக்களின் உணர்ச்சி அலயைத் தூண்டிய திரு த. பாண்டியனின் கூட்டு உண்ணா நிலை எதிர்ப்பு இன்றுள்ள இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திரு. மன்மோகன் சிங் வலுவற்ற ஒரு மனிதர். இவரின் பின் மறைமுகமாக செயல்படுபவர்களை எதிர்க்கும் வலு மக்களிடமிருந்துதான் வரவேண்டும். இதை தமிழக மக்கள் புரிந்து ஒற்றுமையுடன் செயற்பட தூண்டும் மணியரசனின் இவ்வலசலுக்கு நன்றி. இதை இணைத்த நம் தமிழ் இளைஞன் அனுபாரதிக்கும் நன்றி
நல்லவன்

Anonymous said...

Excellent Post...

Anonymous said...

very gud post.

Anonymous said...

எனது நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமே இல்லை - ஜனாதிபதி.: கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் பிரபாகரன்.

கடந்த வாரம் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசு உட்பட இலங்கையை ஆட்சி செய்த சகல அரசுகளும் புலிகள் இயக்கத்தை ஜனநாயக வழிக்கு கொண்டுவர பல பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் அவர்கள் அதற்கு எந்த காலகட்டத்திலும் இணங்கவில்லை என்றும் இலங்கையில் எதிர்வரும் காலங்களில் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்றும் இலங்கைத்தீவில் புரையோடிப்போய் இருக்கும் இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு அரசியல் தீர்வே என்றும் அது பயங்கரவாதம் ஒழிக்கப்படும் சமநேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மறுபுறத்தில் இன்று இந்திய தமிழ் நாட்டு அரசியல் வாதிகளில் ஒருபகுதியினர் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் முகமாக பல்வேறுபட்ட போராட்டங்களிலும் ஒன்று கூடல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயங்களில் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவது என்ன? என்ற கேள்விக்கு பதில், ஒன்றும் இல்லை என்றே வருகின்றது. ஆக செய்வதறியாது திகைப்படைந்து நிற்கும் பாமர மக்கள் ஏமாற்றப் படுகின்றார்கள் என்பது ஒன்று மட்டுமே உண்மை. இந்தியாவிலே பாரிய போராட்டங்கள் இடம் பெறுகின்றன, தமிழ்நாட்டு அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றது. அன்று போல் இலங்கையின் இறையாண்மையை மீறி இந்திய அரசு இலங்கையின் எல்லையினுள் நுழைந்து எமக்கு சாப்பாட்டுபார்சல் தன்னும் போடும் என எதிர்பார்க்கும் மக்கள் ஏமாற்றமடைய இருக்கின்றார்கள்.

ஜெயலலிதா பூரண எதிர்ப்பு!

இங்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்று கூறும் போது அங்கு தனக்கென ஓர் தனி இடத்தை வைத்துக்கொண்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவி செல்வி. ஜெயலலிதா, இந்திய பிரதமரை படுகொலை செய்த குற்றத்திற்காக பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தினது தலைவரும் இந்தியாவின் அதியுயர் மதிப்புக்குரிய உயர் நீதிமன்றத்தினால் குற்றாவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முதல்தர பயங்கரவாதியுமாகிய பிரபாகரனது யுத்தத்தை எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாதென்றும் இங்குள்ள அரசியல்வாதிகள் பிரபாகரனக்கு ஆதரவாக செயல்படுவார்களேயானால், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் மறுபுறத்தில் அங்கு தமிழர்கள் அனாவசியாமான முறையில் பாதிப்புகளுக்கு உள்ளாவது கவலை தருகின்றது என்றும், தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டியது எமது கடமை என்றும் அதேநேரம் பயங்கரவாதத்திற்கு துணைபோவது உசிதமானதல்ல என்றும் தனது தீர்க்கமான முடிவை வெளிப்படையாக கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ள நிலையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் இலங்கை ஒர் இறையாண்மை உள்ள நாடு என்பதை மட்டும் தமிழக அரசு மறந்து விடக்கூடாது என கூறியிருப்பதானது தமிழக அரசுக்கான ஒரு சொல்லில் பதிலாகவே அமைந்துள்ளது. (One word Answer) அதாவது இலங்கை என்பது ஓர் இறையாண்மை உள்ள நாடு அவர்களது உள்வீட்டு விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கு தலையிட எந்த அதிகாரமும் கிடையாது. அந்த வகையில் தமிழக அரசினது நாடகங்களுக்காக நாம் எமது எல்லையை மீறி பிறிதொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்பதே அவர் கூறியுள்ள கருத்தாகும்.

இலங்கையின் இறையாண்மையில் பிறர் தலையிட முடியாது என்பதையே தமிழ்ச்செல்வனும் கூறியிருந்தார்.

இந்த இடத்தில் அன்றைய புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான தமிழச்செல்வன் அவர்கள் புலிகளியக்கத்தை ஐரோப்பிய யூனியன் தடை செய்ய முயன்ற போது "எம்மைத் தடை செய்ய ஐரோப்பிய யூனியனுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது" என கேட்டிருந்த அந்த கேள்வியை எடுத்து நோக்குவோம். அந்த இடத்தில் இருந்து நாம் சிந்திப்போமாக இருந்தால் அன்று அவர் எதைக் கூறியிருந்தார்? இலங்கை ஓர் இறைமையுள்ள நாடு. தனி இறைமையுள்ள ஒர் நாட்டின் பிரஜைகள் நாம். இங்கே ஓர் உள்நாட்டு போர் இடம்பெறுகின்றது. நாம் பயங்கரவாத செயல்பாடுகளை இந்த நாட்டில் மேற்கொள்ளலாம். அது எமக்கும் எமது அரசிற்கும் இடையேயான பிணக்கு. நாம் எமது நாட்டிலே மேற்கொள்கின்ற தீண்டத்தகாத நடவடிக்கைகளுக்கு எமது அரசே எம்மைத் தண்டிக்க முடியும் இது ஏனைய நாடுகளுக்கு அப்பாற்பட்ட விடயம். அவ்வாறு அவர்கள் தங்களது மூக்கை இங்கு நுழைக்கும் போது அது இலங்கையினுடைய இறைமையை மீறுகின்ற செயலாகும் என்பதே அவர் கூறிய கருத்தாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்திருந்தார்.

தமிழக அரசியல்வாதிகளின் எதிர்வரும் தேர்தலை ஒட்டிய நாடகம்.

இன்று தமிழக அரசியல்வாதிகள் எதிர்வரும் தேர்தலில் இந்திய பாமர மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பற்காக இலங்கை பிரச்சினையை துருப்புச் சீட்டாக எடுக்க முனைவது இங்குள்ள மக்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளும். காரணம் புலிகளின் சகல நயவஞ்சகத்தனங்களையும் உணர்ந்தவர்களாக புலிகளின் இரும்புப் பிடியில் உள்ள மக்கள் புலிகளின் கொடூரங்களில் இருந்து விடுபடுவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதுடன் தொடர்ச்சியாக அம்மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

புலிகள் தனிமைப் படுத்தப்படுவது நிச்சயமானதாகி விட்டநிலையில் புலிகளின் ஆயுத பலத்தால் பாரளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு என தம்மைக் கூறிக்கொள்வோர் தமது இருப்பை தக்க வைத்தக் கொள்ளும் நோக்குடன் புலிகளை காப்பாற்ற எடுக்கும் முயற்ச்சி இந்திய அரசியல்வாதிகளை பிழையான வழிக்கு இழுத்துச் செல்கின்றது. இந்திய அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என தம்மைக் கூறிக்கொள்வோரினதும் சுய ரூபங்களை புரிந்து கொள்ள எத்தனிக்க வேண்டும்.

புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் இருந்து திட்டமிட்டே வெளியேறினார்கள்.

புலிகள் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு கிடைக்க இருந்த அனைத்து தீர்வுகளையும் புறக்கணித்து வந்தது மட்டுமல்ல தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கக் கூடிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தை, அதனூடாக உருவாக்கப்பட்ட இணைந்த வட-கிழக்கு மாகாண சபையை தமது ஆயத பலம் கொண்டு கலைத்தெறிந்தார்கள். இலங்கை அரசு பேச்சுக்கு அழைத்திருந்த காலகட்டங்களில் ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை திட்டமிட்டபடியே முன்வைத்து அவற்றில் இருந்து விலகி வந்திருக்கின்றார்கள்.

இறுதியாக இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இலங்கை அரசு மிகவும் இதயசுத்தியுடன் செயல்பட்டுள்ளது என்பதற்கு நியாயமான சான்றுகள் உள்ளன. ஊதாரணத்திற்கு எடுத்து கொள்வோமேயானல் பேச்சுவார்த்தைகளில் ஓர் முடிவை எட்டியிராத போதிலும் இராணுவ முகாம்களை வாபஸ்பெறுவது மிகவும் எச்சரிக்கத்தக்க விடயமாக இருந்தும் அரசு வட-கிழக்கு பிரதேசத்தில் இருந்த பல முகாம்களை வாபஸ்பெற்றிருந்தது. பாதுகாப்பு வலயங்களாக பிரகடணப்படுத்தியிருந்த ஏராளமான கடல்பரப்பை மக்களின், மீனவர்களின் வரையறையற்ற பாவனைக்கு அனுமதி வழங்கியிருந்தது. கட்டம் கட்டமாக புலியுறுப்பினர்களை அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் நுழைய அனுமதி வழங்கியிருந்தது. இவை யாவும் முற்றிலும் இராணுவத்தினருக்கு அச்சுறத்தலான விடயமாக இருந்த போதிலும் அரசு விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராகவே இருந்து வந்தது. மறுபுறத்தில் சமஸ்டி முறையிலான தீர்வொன்றிற்கு உடன் பட்டிருந்த அரசு அமைப்பொன்றை நிறுவியதுடன் புலிகள் அவ்நிறுவனத்தினூடாக பல வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்தும் நேரடியாக நிதியுதவியைப் பெற அனுமதியையும் வழங்கியிருந்ததுடன் ஏகப்பட்ட விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கியிருந்தது.

ஆனால் புலிகள் மக்களின் தேவைகளில் அக்கறை கொள்ளாமல் தமது இராணுவ பலத்தை பெருக்குவதிலேயே முனைப்புடன் செயல்ப்பட்டார்கள். மீனவர்களின் மக்களின் நடமாட்டத்திற்காக அரசு விலக்கிக் கொண்ட பாதுகாப்பு வலயங்களின் ஊடாக ஆயத தளபாடங்களையும் வெடிமருந்துகளையும் கொண்டு வந்து குவித்ததுடன் அரசினால் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.

புலிகள் முன்வைத்த நிபந்தனைகளில் சிலவற்றைத் தருகின்றேன்.

1. வடகிழக்கு கடல்பரப்பில் தரையிலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்தினுள் புலிகளை சுயமாக ஆயதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்
2. வடகிழக்கின் சகல பிரதேசங்களிலும் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் புலிகளை ஆயதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்.
3. யாழ்ப்பாணத்தில் உள்ள ஈபிடிபி யினரை அங்கிருந்து வெளியேற்றுவதுடன் அங்கு அவ்வியக்கத்தின் செயல்ப்பாடுகளுக்க தடைவிதிக்க வேண்டும்.
4. ஏனைய இயக்கங்களின் ஆயதங்களைக் களைய வேண்டும். (இந் நிபந்தனையை அரசு நிறைவேற்றி இருந்தது.)
5. தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அரசு பிரகடணம் செய்ய வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள நிபந்தனைகளில் தமிழ் மக்களுக்கு கிடைக்க கூடிய தீர்வுகள் அல்லது இலாபங்கள் யாது? ஆக புலிகள் காலாகாலமா தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் தம்மை இராணுவ ரீதியாக பலப்படுத்திக் கொள்ள முனைந்துள்ளார்களே தவிர தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயன்றது கிடையாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதயம் தமிழ் மக்களில் சுதந்திர அரசியலுக்கு விழுந்த பலத்த அடி.

கடந்த போர் நிறுத்த ஓப்பந்தத்தை தமது இராணுவத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்திய புலிகள் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் நுழைந்து மாற்று இயக்க போராளிகளையும் அவ்விக்கத்திற்கு எதிராக தீவிரமாக செயல்ப்பட்ட இராணுவப் புலனாய்வாளர்களையும் அதன் அதிகாரிகளையும் கொண்றொழித்தார்கள். மக்களை அரசிற்கெதிரான கோஷங்களில் இறக்கினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் ஓர் போலிக் கூத்தைமைப்பை உருவாக்கினார்கள். இக் கூட்டமைப்பின் உருவாக்கமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு விழுந்த முதலாவது அடி எனலாம். தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரம் புலிகளின் ஆயுத பலத்தினுள் முடக்கப்பட்டது.

யார் இந்தக் கூட்டமைப்பினர்? எதற்காக இக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது? எவ்வாறு உருவாக்கப்பட்டது? என சற்று விரிவாகப் பார்போம். புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக இருக்கும் நோக்கத்துடனேயே ஆயுதங்களை கொண்டு மக்களை அடக்கி வைத்திருக்கின்றார். அதேநேரம் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் தனது கட்டப்பாட்டினுள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமது ஆயுத பலத்தின் மூலம் மக்களின் வாக்குகளை அபகரித்து தனது கைப்பொம்மைகளை பாரளுமன்றம் அனுப்பி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அபகரித்துக் கொண்டார். தனது கபட நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சிறு குழுவிற்கு தேசியக் கூட்டமைப்பு என்றும் பெயர். இக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஈபிஆர்எல்எப் என்கின்ற அணியை எடுத்துக்கொள்வோம். அவ்வமைப்பு சட்டரீதியாக ஈபிடிபி யாக, ஈபிஆர்எல்எப் (நாபா அணி) ஈபிஆர்எல்எப (சுரேஸ் அணி) யாக ிளவு பட்டு அதன் ஒரு அங்கமே இன்று இந்த கூட்டமைப்புடன் புலிகளை ஆதரித்து நிற்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியை எடுத்துக் கொள்வோமேயானால் அது இரண்டு பிரிவுகளாக பிரிந்து அதன் தலைவர் ஆனந்தசங்கரி புலிகளுக்கு எதிரான கருத்துக்களை பலமாக முன்வைத்து வருகின்றார். தமிழீழ விடுதலை இயக்கம் என்கின்ற ரெலோவை எடுத்துக் கொள்வோமேயானால் அது இரு பிரிவுகளாக செயல்ப்பட்டு வருவதுடன் இன்று புலிகளுடன் இணைந்திருந்து தம்மை ரெலோ என அடையாளப்படுத்தி கொள்ளும் சிவாஜிங்கம் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் ரெலோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் அவர்கள் புலிளால் ரெலோவினுள் புகுத்தப்பட்ட புலிகள் எனவும் அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் கூறிவருகின்றனர்.

மேற்படி இந்த நபர்கள் தமிழ் மக்களால் காலம் காலமாக நிராகரிக்கப்பட்டிந்தவர்கள். இவர்கள் இன்று புலிகளின் ஆயுத பலம் கொண்டு பாராளுமன்றம் சென்றுள்ளதுடன் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் மகுடம் சூடி உள்ளனர். இவர்கள் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக முடியும் இக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கின்ற தமிழ் அமைப்புக்களின் எண்ணிக்கையை ஒரு முறை பார்த்தால் இவர்களின் தேசியத்தில் உள்ள பாசிசம் புரியும். ஓட்டுமொத்தத்தில் புலிகளின் பாசிச செல்பாடுகளுக்கு அரசியல் அங்கீகாரம் பெறுவதற்காக ஆயுத முனையில் மக்களின் வாக்குகளை அபகரித்து பாராளுமன்றம் சென்ற இவர்கள் புலிகளின் ஆயுத கலாச்சாரம் முடிவுக்கு வரும்போது தமது அரசியல் வாழ்வும் முடிவுக்கு வரும் என்ற பயத்தினால் புலிகளைக் காப்பாற்ற இன்று தமிழக அரசியல்வாதிகளை பிழையான வழிக்கு திசை திருப்புகின்றனர்.

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் செய்யவேண்டியது.

இலங்கைத் தீவிலே இடம் பெறுகின்ற யுத்தங்களின்போது தமிழர் தரப்பினர் மிகுந்த இழப்புகளுக்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் இவ்யுத்தத்தினால் தமிழர் தரப்புக்கு மாத்திரமே பாதிப்பு என்ற விவாதத்திற்கே இடமில்லை. சிங்கள மக்கள் என்றுமே அச்சத்தில் வாழ்கின்றார்கள். தென்பகுதி பாடசாலை மாணவர்கள் குண்டுப்பீதியுடன் வாழ்கின்றார்கள், வடகிழக்கு பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ள முப்படையினரதும் குடும்ப அங்கத்தவர்கள் எந்த நிமிடத்திலும் மரணச்செய்தி ஒன்று வரலாம் என்ற ஏக்கத்துடன் தமது வாழ்நாட்களைக் போக்குகின்றார்கள். எனவே இலங்கைத் தீவில் இன ஐக்யமும் சாந்தியும் சாமாதனமும் வேண்டும் என இதய சுத்தியுடன் விரும்பும் மனிதர்கள் பக்கசார்பில்லாமல் இருதரப்பினருக்கும் ஓர் தீர்வை நோக்கி நகர வேண்டி அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

புலிகளது ஆயுதங்கள் என்பது சிங்கள அரசிற்கு அச்சுறுத்துலாக அமையாவிட்டாலும் அது தமிழ் மக்களின் இயல்பு வாழ்விற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்துலானது. எனவே தமிழக அரசில்வாதிகள் புலிகள் தமது ஆயதங்கைளை கைவிட வேண்டும் என அழுத்தங்களைக் கொடுப்பதுடன் இலங்கையிலே அதன் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து கட்சி மாநாட்டில் பங்குபற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கேட்டுக்கொள்ள வேண்டும்.

இலங்கையிலே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் செயல் வேகம் மிக குறைவாக இருந்தாலும் அதற்கான 50 விழுக்காடு பொறுப்புகள் தமிழ் கூட்டமைப்பையே சாரும். தம்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனக் கூறிக் கொள்வோர் இவ்வமர்வுகளில் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் அங்கு என்ன விதமான தீர்வுகள் எமது மக்களுக்கு பொருத்தமானதென்பதை இவர்களால் முன்மொழிய முடியும் என்பதுடன் இலங்கை அரசு எவ்வித தீர்வையும் தமிழ் மக்களுக்கு தர முன்வராது எனும் பிரபாகரனின் மந்திரத்தை இவர்களும் ஓதுவதானது தீர்வுகளை இழுத்தடிக்க முயலும் தீய சக்கிகளுக்கு உறுதுணையாக அமையும். எனவே தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் புலிகள் மீதும் தமிழ் கூட்டமைப்பு மீதும் தகுந்த அழுத்தத்தை பிரயோகிப்பது இந்நிலையில் பொருத்தமானதாகும்.

விருகோதரன் VIII

- இலங்கைநெற்
http://www.thenee.com/html/211008-2.html

குறிப்பிடத்தக்க பதிவுகள்