Saturday, October 25, 2008

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் “இந்தி”யத் தேசிய ஒருமைப்பாடு

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும்
"இந்தி"யத் தேசிய ஒருமைப்பாடு
க.அருணபாரதி

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்டக் கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது. என்ன செய்ய? "குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்."

"இந்தி"ய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, அதன் அவைத் தலைவர் எம்.கண்ணப்பன் ஆகியோர் முதலில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இராமேசுவரத்தில சிங்கள இனவெறி அரசிற்கு ஆயதங்கள் வழங்கும் "இந்தி"ய அரசைக் கண்டித்து திரைக் கலைஞர்கள் நடத்தியப் பொதுக் கூட்டத்தில், பிரிவினையைத் தூண்டிப் பேசியதாக இயக்குநர்கள் சீமான, அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழகக் காவல்துறை இவர்கள் மீது ("இந்தி"ய) தேசத் துரோகக் குற்றத்தின் மிகப்பிரபலமான 123(பி) பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த பிரிவில் இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற திட்டத்துடன் சட்டவிரோ செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Act -1967) சிலப் பிரிவுகளின் படியும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இவர்கள் செய்த குற்றம் தான் என்ன? எவ்வகையில் இவர்கள் பிரிவினைக்குத் தூண்டினார்கள்? இவர்களைப் பிரிவினைக்குத் தூண்டியது எது? கைது செய்யப்பட்டவர்கள் தனிநபர்கள் அல்ல. தமிழ்த் தேசிய இன மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் தலைவர்கள், கலைஞர்கள். குற்றங்களை செய்தவர்களை விட அதனைச் செய்யத் தூண்டுபவர்களுக்குத் தான் அதிக தண்டனையாம். சட்டம் கூறுகிறது. அப்படியெனில் இவர்களை "இக்குற்றச் செயலுக்கு" தூண்டியது எது என்று ஆராய்வோம்.

இந்தியா ஒரு தேசமல்ல. தனக்கென தனிப்பண்பாடு, மொழி, பொருளியல் என பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைக் கண்டமே ஆகும். இப்படி வாழ்ந்த பல்வேறு நாடுகள் அடக்குமுறையாலும் மக்களின் அனுமதியின்றும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா என்ற ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட துணைக்கண்டங்களில் ஒற்றையாட்சி (Unitary) எனப்படும் அரசியலமைப்பு, தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தி சில தேசிய இனங்கள் கொழுக்கவும் சில தேசிய இனங்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் செல்லவும் வழிவகுக்கும்.

இதற்கு மாற்றாக கூட்டாட்சியையும் சிலர் முன்மொழிவர். அந்த கூட்டாட்சியும் ஒவ்வொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டுமே தவிர ஒரு தேசிய இனத்தின் ஒற்றைச் சார்பு தலைமையில் அமையக்கூடாது. இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் கட்டமைக்கப்பட்டது தான் "இந்தி"ய அரசியலமைப்புச் சட்டம்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பல்வேறு தேசிய இனங்களின் மீதும் "இந்தி" மொழி ஆதிக்கம் செலுத்தவும், "இந்தி" பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் மற்ற அயல் தேசிய இனங்கள் மீது அவர்கள் அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தவும் வழிவகுத்திருக்கிறது. அப்படி தான் செயல்படுத்தப்பட்டும் வருகின்றது.

1965-ல் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற "இந்தி"ய அரசை எதிர்த்துப் போராடி மறத்தமிழர்கள் 300க்கும் மேற்பட்டவர்களை "இந்தி"ய தேசிய இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்தத் தமிழனால் மறக்க இயலும்?

இப்படிப்பட்ட இந்திய அரசக் கட்டமைப்பில் சிக்குண்ட பல தேசிய இனங்கள் ஒன்றோடு ஒன்றோடு மோதும் போது அவற்றிற்கு நடுவராக இருந்து தீர்க்க வேண்டிய இந்திய அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது? வேடிக்கைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டதைத் தவிர? இதற்குக் காரணம் அதன் ஒற்றைச் சார்புத் தன்மை தான் என்பதை எவரால் மறுக்க இயலும்?

காவிரிச் சிக்கலில் கர்நாடகம் தமிழக நீர் உரிமையை மறுத்து இந்திய அரசின் உச்சநீதிமன்றத்தையும் மதிக்கத் தவறியது. தமிழர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டார்கள். இந்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக பிரச்சினையைத் தீர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் அது நடக்கவில்லை. வேடிக்கைப் பார்த்தது "இந்தி"யா. இதே நிலை தான் மற்றப் பிரச்சினைகளிலும் தொடாகின்றது.

இந்தியா என்ற கட்டமைப்பை மறுத்து கர்நாடகம் செய்த அராஜகங்களை இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கும். ஆனால் தமிழன் செய்தால் அவன் மீது தேச விரோத முத்திரைக் குத்தும். ஒவ்வொருத்தருக்கும் ஒருவகைப்பட்ட நீதி. இது தானே பார்ப்பனியம். இப்படித் தானே இந்திய அரசு செயல்பட்டது. செயல்பட்டுக் கொண்டு்ம் இருக்கிறது.

மலையாளிகள் முல்லைப் பெரியாறுப் பிரச்சினையிலும் கன்னடாகள் காவிரி நீர் சிக்கலிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை மறுத்தும் இந்திய அரசின் உச்சபட்டச நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தை எதிர்த்தும் பேசலாம். செயல்படலாம். என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இந்திய தேசியம் கட்சிகளும், இந்தியத் தேசிய வாதிகளுக்கும் அதைத் தடுக்க வக்கில்லை. பேசுவதற்குத் துப்பில்லை. ஆனால் தமிழகம் தனது நீண்ட காலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் தடுக்கப்படுவதைக் கண்டித்து பந்த் நடத்தினால் மட்டு்ம் இந்திய அரசின் உச்சிகுடுமி மன்றம் ஞாயிற்றுக் கிழமை விடுப்பு என்றாலும் அவசர அவசரமாகக் கூடிக் கண்டிக்கும். இது தான் இந்திய தேசியமா..?

இவற்றிக்கு எல்லாம் மேலாக "இந்தி"ய அரசு ஈழப்பிரச்சினைத் தொடர்பில் என்ன செய்து கொண்டிருக்கிறது? "இந்தி"ய அரசு தனது ஆரிய இனவெறித் தன்மையுடன் சிங்கள அரசிற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் இராணுவ உதவிகளையும் இன்ன பிற உதவிகளையும் திட்டமிட்டு பல வருடங்களாக செய்து வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இதனைப் பல்வேறு சமயங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் வெளிப்படுத்தியும் அதனை தமிழக அரசோ "இந்தி"ய அரசோக் கண்டுகொள்ளாமல் இருந்தன. அண்மையில் தான் இவ்வுதவிகள் அம்பலப்படுத்தப்பட்டதோடு அதனை இந்த நிமிடம் வரை "இந்தி"ய அரசு மறுக்கவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

"இந்தி"ய அரசு சிங்களனுக்கு உதவ வேண்டிய அவசியம் என்ன? அவனுக்கு உதவினால் இந்தியாவிற்கு கிடைக்கும் லாபம் தான் என்ன? பாகிஸ்தான், சீனம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிங்களனுக்கு ஆயுதங்களை வெளிப்படையாகக் கொடுப்பது உலகில் அனைவருக்கும் தெரியும். இது இந்திய அரசுக்கும் அதன் பாதுகாப்புத் துறைக்கும் தெரியாதா? தெரியும். இருந்த போதும் அவாகள் அமைதி காத்தார்கள். தம் இன எதிரிகளான தமிழர்கள் தானே அழிகிறார்கள் என்பதால் அமைதி காத்தார்கள். ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது சில புன்முறுவல்களையும் தமிழக மீனவர்கள் கொல்ப்பட்ட போது வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பார்கள், இந்த "இந்தி"யத் தேசிய வாதிகள்.

அண்டை நாடு ஆயதங்கள் வாங்கிக் குவிப்பதால் நம் நாட்டிற்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற எண்ணம் "இந்தி"ய பாதுகாப்புத் துறைக்கு ஏன் ஏற்படவில்லை? ஏன் தமது அடிமையான தமிழக மீனவனை சிங்களப் படைகள் சுட்டுக் கொன்ற போது கூட அவன் மீதும் "இந்தி"யன் என்ற முத்திரைக் குத்தியுள்ளோமே என்ற எண்ணம் கூட அவர்களுக்கில்லை. உயிரைப் பணயம் வைத்து தமிழக மீனவாகள் பிடித்து வரும் மீன்களுக்கு அந்நிய செலாவணி வரி கேட்டு பிச்சை எடுக்க மட்டும் வந்துவிடுவார்கள் இந்த "இந்தி"ய வரிப் பொறுக்கிகள். இதுவே பாகிஸ்தான் தனது படைகளை எல்லையில் குவித்தாலோ சீனா படைகளை குவித்தாலோ இந்தியத அமைதியாக இருந்திருக்குமா? அப்படியெனில் சிங்களன் ஆயதங்கள் குவித்த போது இந்திய அரசு அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தானும் ஆயுதங்களை வழங்கியது எதற்காக?

ஏற்கெனவே நீர்சிக்கல்களால் அயல் தேசிய இன மாநிலங்கள் "இந்தி"ய கட்டமைப்பை மதிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது என்னடா "இந்தி"யத் தேசியம் என்று பல முணுமுணுப்புகள் தமிழகத்தில் எழந்திருந்ததை எவராலும் மறுக்க முடியாது. மின்வெட்டால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுதுகூட நம் தமிழ் மண்ணில் உள்ள நெய்வேலி மண்ணிலிருந்து மின்சாரத்தைப் பிடுங்கி இந்த நீர்தரமாட்டோம் என்று அடம்பிடிக்கும் அடாவடி அயல் தேசிய இனத்தவருக்கு பகிர்ந்தளிக்கிறது "இந்தி"ய அரசு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நாடு என்று நாம் "இந்தி"யாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் தலைமையோ நம் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்க ஆய்தங்கள் வழங்கி உதவிப்புரிகிறதே என்ற வலி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையா இல்லையா? இந்த உண்மையை எவ்வளவு நாள் நாம் பொத்திப் பொதத்தி வைக்க இயலும்?

பிரிவினைக்குத் தூண்டியது கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களை அவ்வாறு பேச வைத்த அயல் தேசிய இனங்களும் அதைக் கண்டு கொள்ளாமல் கள்ள மவுனம் சாதிக்கும் "இந்தி"ய அரசுமே ஆகும். இதனை முதலில் "இந்தி"யத் தேசிய வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல, விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று பார்ப்பன இந்தியத் தேசியக் கும்பல் வெறிக்கூச்சல் போடுகின்றது. அப்படியெனில் முதலில் ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பிலும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக் கணிப்பிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்த பெரும்பான்மை தமிழக மக்களை சிறையில் தள்ளுவார்களா இந்த "இந்தி"யத் தேசியவாதிகள்? இப்படிச் செய்தால் தமிழ் மக்களின் கோப நெருப்பே உங்களைப் சுட்டுப் பொசுக்கிவிடும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக போராடுவதை திசைத்திருப்பும் விதமாக செயல்படும் இப்போக்கைக் கண்டித்து மக்கள் அணி திரள வேண்டும். ஏனெனில், கைது செய்யப்படுவது மனிதர்கள் தானேத் தவிர மக்கள் மனிதில் உள்ள கருத்துக்கள் அல்ல!




--
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------

Friday, October 17, 2008

ஈரோட்டில் இந்து நாளேடு தீ வைத்து எரிப்பு

ஈரோட்டில் இந்து நாளேடு தீ வைத்து எரிப்பு

ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்கள் தமிழகத்தில் வலுப்பெற்ற நிலையில் அப்போராட்டங்களை 'குறுகிய இனவெறி' என்று சிறுமைப்படுத்தி, தமிழின வெறுப்பைக் கக்கி 'இந்து' ஏடு 14-10-2008 அன்று விசமத்தனமானக் கட்டுரை ஒன்றைத் தீட்டியது. இதைக் கண்டு கொந்தளித்த தமிழ் இன உணர்வாளர்கள் கோவையில் அக்கட்டுரை வந்த அன்றே "இந்து" அலுவலகத்தின் வாயிலை முற்றுகையிட்டு அப்பத்திரிக்கையின் பார்ப்பனிய திரிபுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி கைதானார்கள். பெரியார் திராடவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் அப்போராட்டத்தில் பங்கேற்றன.

இந்நிலையில் நேற்று ஈரோட்டில், சுமார் 2400 'இந்து' பத்திரிக்கைகள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புத் தோழர்களால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. காவல்துறை இருவரை கைது செய்ததுடன் வழக்கும் பதிவு செய்துள்ளது.


Copies of The Hindu set ablaze

Staff Reporter



Protests in Erode: Copies of The Hindu and Business Line were set on fire at the Erode bus stand on Thursday morning. At right, a pro-LTTE handbill found at the site warned The Hindu against publishing 'anti-Tamil' reports and accused it of 'betraying' Tamils' interests .— Photo: M. Govarthan

ERODE: A group of five persons led by the district organiser of the Periyar Dravidar Kazhagam (PDK) set fire to 2,400 copies of The Hindu and 390 copies of the Business Line at the bus stand here on Thursday morning.

They were protesting against the paper's criticism of the pro-LTTE campaign in the State. As a result, several parts of the town did not get their regular copies.

According to newspaper agents and hawkers, the group arrived at the paper-sorting point around 5 a.m., shouting pro-LTTE slogans.

It also distributed handbills in support of the banned organisation.

The group, led by Kumaragurubaran, district organiser of the PDK, and M. Jayakumar, of the Tamil Desiya Podhu Udaimai Katchi, attempted to snatch newspaper bundles from distributor V. Balasubramaniam. When he resisted this, he was overpowered.

He was also abused and threatened with dire consequences.

The group then set ablaze copies of the two dailies, said agent R. Mohan Kumar.

Another agent O. Sivanesan said the group had come ready with bottles of petrol. Then, it fled the scene.

The Erode Town Police visited the spot and registered a case against Kumaragurubaran, Jayakumar and a few others under sections 506 (i) (criminal intimidation), 147 (rioting), 323 (voluntarily causing hurt), 294 (b) (destroying, damaging or defiling objects) and 427 (mischief, and thereby causing damage to property) of the IPC.

Site : http://www.thehindu.com/2008/10/17/stories/2008101755601400.htm

Thursday, October 16, 2008

தமிழின எழுச்சியை பொறுக்க முடியாத பார்ப்பனிய சக்திகள் - க.அருணபாரதி

தமிழின எழுச்சியை பொறுக்க முடியாத பார்ப்பனிய சக்திகள்
க.அருணபாரதி

சிங்கள இனவெறி அரசின் கோரப்பற்களில் சிக்கி ஏற்கெனவே சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயகத் தமிழகத்தில் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களை அழித்திட ஆரிய இனவெறியுடன் செயல்பட்டு வரும் இந்தியத் தேசிய அரசிற்கு இந்த எழுச்சி அச்சமூட்டுகின்றது. ஆரிய இந்தியத் தேசியத்தின் நிழலில் நடனமாடும் 'இந்து' உள்ளிட்ட ஆரியப் பார்ப்பனிய சக்திகளும் இந்த அச்சத்தால் கலக்கமடைந்துள்ளனர் என்பதை அண்மை நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

சிங்கள அரசிற்கு மகிந்த ராஜபக்ச தலைமையேற்றதிலிருந்து, ஈழத்தமிழினத்தை முழுமையாக அழித்தொழிக்க உறுதிபூண்டு செயல்பட்டுவருகின்றது. சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்கள் மீது தொடுத்துள்ள இப்போரால் சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதை உலகமே நன்கு அறியும். சிங்கள இனவெறி அரசு பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்படும் சிங்கள மக்கள் மீது கூட கவலை கொள்ளாமல், ராஜபக்ச அரசு தனக்கே உரியஇனவெறியுடன் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் இராணுவத்திற்கே அதிக நிதியை செலவிட்டு வந்தது. (காண்க : லைவ் மிண்ட், வால் ஸ்ட்ரீல் பத்திரிக்கை இணையம், http://www.livemint.com/2008/10/10000123/Sri-Lanka-earmarks-record-amou.html?d=1).

கடந்த 2006 ஆம் வருடம் சிறீலங்கா அரசு தனது இராணுவ செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையான 96 பில்லியன் ரூபாய், 2007 ஆம் வருடம் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 139.6 பில்லியன் ரூபாயாக உயர்ந்தது. (காண்க: http://www.wsws.org/articles/2007/may2007/sri-m16.shtml). இவையெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் இந்திய அரசு சுமார் 100 மில்லியன் டாலர் நிதியை வெறும் 2 சதவீத வட்டிக்கு சிங்கள அரசின் இராணுவத்துறைக்கு கடனாக வழங்கி தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆரிய இனப்பகையுடன் உதவி புரிநத்தது. (செய்தி ஆதாரம் : http://economictimes.indiatimes.com/Features/The_Sunday_ET/Dateline_India/India_works_on_100_mn_soft_loan_package_for_Lanka/rssarticleshow/2986652.cms).
இதன் உச்சமாக, அண்மையில் உலக வங்கி இனி தன்னிடம் கடன் பெறவே முடியாத நிலைக்கு பொருளாதாரம் வீழ்ந்துவிட்டதாக வெளியிட்ட 28 நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் இடம்பெற்றிருந்தது. (பார்க்க : ராய்டர்ஸ் செய்தி இணையம், http://www.alertnet.org/thenews/newsdesk/N09664381.htm).

இந்திய அரசு சிங்கள அரசிற்கு வெறும் நிதிஉதவி மட்டும் செய்யவதோடு
நின்றுவிடவில்லை. மாறாக ஆய்த உதவியையும் தொடர்ந்து செய்து தன் ஆரியச் சார்பை வெளிப்படுத்தி வருகி்ன்றது.
கடந்த 9.10.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான்படை தாக்குதலில் வவுனியாவிலுள்ள சிங்கள இராணுவ தலைமையகத்தில் 10 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டதுடன் இரண்டு இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம்பட்டனர். இவர்கள் இந்தியா ஏற்கெனவே கையளித்த இராடார்களை கையாள இந்திய இராணுவம் அனுப்பிய பொறியாளர்கள் என்றும் தெரியவந்தது. இலங்கை இனச்சிக்கலுக்கு இராணுவத் தீர்வு கூடாது. அரசியல் தீர்வு தான் காண வேண்டும் என்று பேசிப் பேசி மழுப்பியே நாட்கள் கடத்தி வந்த இந்திய அரசின் பார்ப்பனிய சூழ்ச்சி அத்தாக்குதல் மூலம் வெளி உலகிற்கு அப்பட்டமாய் அம்பலமானது.

இராணுவத் தீர்வுக் கூடாது என்று வெளியில் அறிக்கை வெளியிட்டு விட்டு இராணுவத் தளவாடங்களை இலங்கைக்கு அனுப்பி ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு நேரடித் துணை புரிவதன் மூலம் தனது ஆரிய பார்ப்பனிய இனவெறியை தமிழினத்தின் மீது இந்திய அரசுக் கட்டவிழ்த்துள்ளது என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஏனெனில், இந்திய அரசு சிங்கள அரசிற்கு இராணுவ உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குவது ஒன்றும் புதிதான நடவடிக்கை அல்ல. கடந்த 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு அரசுக்கு 3 போர்க் கப்பல்களை அனுப்பி சிங்கள இராணுவத்தின் கடற்ப்படை பிரிவுக்கு பயிற்சி நேரடிப் பயிற்சியே அளித்தது இந்திய அரசு. (செய்தி ஆதாரம் : http://www.lankanewspapers.com/news/2005/3/1019.html)

அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை தீவிரப்படுத்தியிருந்த காலகட்டத்தில் சிங்கள இனவெறி அரசிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதன் முதலாக விடுதலைப் புலிகள் வான்படை விமானங்களைக் கொண்டு சிங்கள படைகளை தாக்கினர். செஞ்சோலை ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்ற தமிழ் குழந்தைகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது உலகமே அந்த அரச பயங்கரவாத செயலைக் கண்டித்த போதும் கண்களை மூடிக் கொண்டு வாய்மூடி மவுனியாய் இருந்த இந்திய அரசு, புலிகளின் வான்படைத் தாக்குதல் தமக்கு மிகவும் கவலைப் படுவதாக தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக புலிகளின் விமானப் படையை எதிர்கொள்ள சிங்கள அரசிற்கு உதவும் வகையில் ராடார்கள் உள்ளிட்ட படைக் கருவிகளை வழங்க 5 - சூன் -2005 அன்று முடிவெடுத்தது. (செய்தி ஆதாரம் : http://www.indiadaily.com/editorial/3027.asp)

இம்முடிவை எதிர்த்து தமிழக அரசியல் கட்சியான ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா உதவக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 12-சூன்-2005 அன்று கடிதம் எழுதினார். இதனை அவர் நேரிலும் வலியுறுத்திப் பேசிய போது பிரதமர் அவ்வாறு உதவிகள் எதுவும் செய்யப்போவதில்லை என்றும் வாய்க்கூசாமல் தெரிவித்தார். (பார்க்க : http://www.hindu.com/2005/06/12/stories/2005061204681000.htm)

"குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு" என்ற இந்திய அரசின் இலங்கைத் தொடர்பான வெளியுறவுக் கொள்கையின்படி பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. இரண்டு நவீன ரக ராடார்களை இந்தியா கையளித்தது. அதில் ஒன்று தான் கடந்த மாத வான்தாக்குதலில் புலிகள் அழித்த 'INDRA-II' என்ற ராடார் கருவி.

இது போன்ற இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கு நடவடிக்கைகள் தொடர்ந்து வந்துள்ளதை அவ்வப்போது ஆதாரங்களுடன் தமிழ்த் தேசிய அமைப்புகளும் சில தேர்தல் அரசியல் கட்சிகளும் அம்பலப்படுத்தி பல போராட்டங்களையும் நடத்தி வந்த போதும் அதனை இங்குள்ள பார்ப்பனிய ஊடகங்கள் வெளியிடாமல் கள்ள மவுனம் சாதித்தன.
ஆனால் சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக எங்காவது புலிகள் தாக்கினால் அதனை பெரிதாகக் காட்டுவதும், "புலிகள் 100 பேர் பலி - 200 பேர் பலி" என்று சிங்கள அரசுச் சொல்லும் செய்திகளை கிளிப்பிள்ளைகளாக வாந்தி எடுப்பதும் இப்பார்ப்பனிய ஊடகங்கள் தலையாய பணியாக செய்தன.
தமிழர்களின் தாயகப்பகுதிகளுக்குச் சென்று செய்திகள் சேகரிக்க எந்த ஊடகங்களும் சிங்கள அரசால் அனுமதிக்கப்படுவதில்லை என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்? போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய பணிகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பையும், தொண்டு நிறுவனங்களையும் கூட தமிழர் பகுதிக்குள் அனுமதிக்காத சிங்கள இனவெறி அரசு ஊடகவியலாளர்களை மட்டும் அனுப்புமா? என்ன என்பது நடுநிலையாளர்களுக்கே வெளிச்சம்.
ஆனால், தமிழகத்தில் தற்பொழுது எழுந்துள்ள எழுச்சியால் பல செய்திகளை வெளியிட வேண்டியக் கட்டாய நிலைக்கு பார்ப்பனிய ஊடகங்களும் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. அதன் ஒரு பகுதிதான், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேடு புலிகளுக்கு தமிழகத்தில் பெரும்பான்மையானோர் ஆதரவாக இருக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட நேர்ந்தது. அக்கிரகாரத்து "ஆனந்த விகடன்"கூட புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை அட்டையில் போட்டுத் தான் பல லட்சம் பிரதிகள் அதிகமாக விற்பனையானது.

இருந்த போதும், இந்த எழுச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆரியப் பார்ப்பனிய சக்திகள் வழக்கம் போல இப்பொழுதும் தன் ஓலவாயால் ஒப்பாரி வைக்கின்றன. ஈழத் தமிழர்களின் இன்னல்களை கவனத்திற்குக் கொண்டு வர இந்திய பொதுவுடைமைக் கட்சி உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை நடத்தியது. தன் கட்சியும் அதில் பங்கு பெறும் என அறிவிப்பு வெளியிட்டார் அ.தி.மு.க. தலைவி செயலலிதா. ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனை சிறையில் அடைக்க வேண்டும் என்று சர்வாதிகாரக் குரலில்
சட்டமன்றத்திலேயே பேசிய செயலலிதாவின் அ.தி.மு.க. உண்ணாவிரதத்தில் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு ஓங்கிய நிலையில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து தனது பார்ப்பனியச் சார்பை உறுதி செய்தார் அம்மையார்.
ஈழத்தமிழர்களின் "சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் ஆனால் அதற்காக போராடும் விடுதலைப் புலிகளை எதிர்ப்போம்" என்று அறிக்கையும் விடுத்தார் அம்மையார். தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் துறக்க "நேரிடும்" என்று ஒருவழியாக இந்திய அரசுக்கு தமிழக அரசு மிரட்டல் விடுத்த போதும் அதனை சிங்களர்களின் குரலில் நாடகம் என்கிறார்.

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக் குரலை உலகிற்கு உரைப்பவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கமே என்கிற எளிய உண்மையைக் கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் செயலலிதா நிச்சயம் இல்லை. ஆனால் அம்மையாரை ஏதோ ஒன்று தடுப்பதாக தெரிகிறதே அது என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அதன் பின்னால், 'துக்ளக்' சோ, சுப்பிரமணிய சுவாமி, 'இந்து' நாளேடு என்.ராம் உள்ளிட்ட ஆரிய பார்ப்பனியக் கூட்டாளிகளின் சதிவலைச் சங்கிலித் தொடர் தான் தெரியும்.

இதனை அம்பலப்படுத்துவது போல் இந்து நாளேடு 14-10-2008 அன்று தன் ஆசிரியர் குழுசில் இருக்கும் பார்ப்பன பெண் ஒருவரை வைத்துக் கட்டுரை ஒன்றைத் தீட்டியது. சிங்கள சந்திரிகாவிடம் "சிங்கள ரத்னா" விருது பெற்ற இந்து ஆசிரியர் என்.இராமின் விசுவாசம் அக்கட்டுரையை படிப்பவர்களால் நன்கு உணர முடியும். சம்பந்தமில்லாத விசயங்களுக்கு ஒரு பிரச்சினையை எப்படி திசைத் திருப்ப வேண்டும் என்று பயிற்சியே எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு அக்கட்டுரையில் பார்ப்பனிய திரிபும் தமிழின வெறுப்பும் வெளிப்பட்டது.

ஓர் அரசு தன் மக்கள் என்று சொல்லக் கொண்டே அவர்கள் மீது கண்மூடித்தனமாக விமானங்களில் குண்டு வீசிக் கொண்டிருப்பதைக் கண்டிக்க வக்கற்ற, துப்பற்ற "இந்து" ஏடு, அதனை எதிர்த்துப் போராடும் மறத்தமிழர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்துக் கட்டுரை வெளியிடுகின்றது.
இக்கட்டுரை வெளிவந்த அதே தினத்தில் கோவையில் பெரியார் தி.க., ஆதித் தமிழர் பெரவை உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் இன உணர்வாளர்கள் அணியணியாய் சென்று அப்பத்திரிக்கையை எரித்து அதன் அலுவலக்தின் வாயிலிலேயே முற்றுகையிட்டு கைதாகி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழ் இனத்தையேக் கொல்லத் துடிக்கும் ஆரியப் பார்ப்பனியப் சக்திகளை சுதந்திரமாக உலவ விட்டுவிட்டு, போராடியத் தோழர்கள் மீது வழக்கம் போல வழக்குப்பதிவு செய்தது, தமிழக அரசு. மறுநாள் (16-10-2008) அன்று ஈரோட்டில் 'இந்து' ஏடு தமிழ் இன உணர்வாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டு பல தோழர்கள் கைதாகி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில், பெயரிலேயே பார்ப்பனர்களாக வெளிப்படும் பார்ப்பனர்கள் சிலர் அக்கட்டுரையைப் பாராட்டி கடிதம் வேறு எழுதியிருந்தனர். அதனை வெளியிட்டு தானே மகிழ்ந்து கொண்டது, 'இந்து'.

இவை அடங்குவதற்குள் 15-10-2008 அன்று 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு' பார்ப்பனிய முகாமின் கோமாளித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் கட்டுரை ஒன்றை மிகுந்த அக்கரையுடன் பிரசுரித்தது. "புலிகள் பயங்கரவாதிகள்" என்ற பழைய பல்லவியை அதில் மீண்டும் மீண்டும் பாடியிருந்தார் சுவாமி. மேலும் அதில் ஈழத்தில் இனப்படுகொலை என்பதேக் கிடையாது என்று அதில் தெரிவித்திருந்தார் ("We can say there is no genocide of Tamils in Sri Lanka" - Swamy ). அவருக்கு பதிலளிக்கும் விதமாக அதற்கு மறுநாள் வெளிவந்த நக்கீரன் வார இதழின் அட்டைப் படத்தில் சிங்கள இனவெறியர்களால் காயமுற்ற பிஞ்சுக் குழந்தைகளின் பட ஆதாரங்களைக் வெளியிட்டது. சு.சுவாமியின் தரம் தாழ்ந்த அந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது, இந்திய அரசுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில தமிழ் இன உணர்வாளரும் திரை இயக்குனரான சீமானும் பேசிய வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. "நாம் இன்னும் சனநாயகவாதிகளாக, மானமற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு சாட்சியே
சுப்பிரமணியம் சுவாமி போன்றோரை சுதந்திரமாகத் திரியவிட்டு வேடிக்கைப்
பார்ப்பது தான்". அவரது வரிகளில் எவ்வளவு உண்மைகள் புதைந்து கிடக்கின்றன!

இவை மட்டுமல்லாமல், 'டைம்ஸ் நவ்' என்கிற ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஈழப்பிரச்சினையொட்டி தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவை பற்றி செய்தி வெளியிட்டது. அதில் ஈழப்பிரச்சினையை பற்றி கருத்துக் கேட்கப்பட்ட "அறிவுஜீவிகள்" யார் யார் தெரியுமா? 'துக்ளக்' சோவும், சுப்பிரமணியம் சுவாமியும் தான்.
இந்த ஊடகம் மட்டுமல்ல மற்ற ஊடகங்களும் கூட தமிழர் எழுச்சி்யைக் கொச்சைப்படுத்துவதிலும் தமிழீழ மக்களின் போராட்டத்தை தீவிரவாதமாக சித்தரிப்பதையுமே வழக்கமாகக் கொண்டிருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இந்திய ஊடகங்களில் பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்துவது ஆரியப் பார்ப்பனர்களே என்பது தான் இதற்குக் காரணம். இதனை, கடந்த 2006 ஆம் ஆண்டு "வளரும் கல்வியைப் பற்றிய கல்வி மையம்" (Centre for the Study of Developing Societies) என்கிற அமைப்பு நடத்திய ஆய்வில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினர். (செய்தி ஆதாரம் : http://www.thesouthasian.org/archives/2006/social_profile_of_indian_media.html).
மக்கள் தொகையில் வெறும் 8 சதவிகிதமே உள்ள பார்ப்பனர்கள் இந்திய ஊடகங்களில் 71 சதவிகிதம் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று அந்த ஆய்வின் முடிவு தெரிவித்தது.
சிங்கள அரசின் இனவெறியால் வன்னிக் காடுகளில் விலங்குகள் போல உலகமே எதிர்கொள்ளாத மனித உரிமை மீறல்களை எதிர் கொண்டுள்ள ஈழத்தமிழனம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆதரவு அலையால் சிறிதாவது ஆறுதல் பெறும் என்ற நம்பிக்கையே நம்மை மேலும் எழுச்சி பெற வைக்கிறது. இச்சமயத்தில் இவ்வெழுச்சியை பொறுக்க முடியாத ஆரிய பார்ப்பனிய சக்திகளை புறக்கணிப்பது மட்டும் நமது கடமையல்ல எதிர்காலத்தில் அவை பயங்கொள்ளுமாறு எழாத வண்ணம் அடக்கி வைப்பதும் நமது கடமையாகும். அதற்கான வழிவகைகளில் ஈடுபடுவோம். ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாய் தாயகத் தமிழகத்தில் வெறும் அலையாக அல்லாமல் ஆழிப்பேரலையாய் எழுவோம்!


-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------

Monday, October 13, 2008

பிரபாகரனின் இராசத்தந்திரம் - பெ.மணியரசன்

பிரபாகரனின் இராசத்தந்திரம்
பெ.மணியரசன்
 
"துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்க ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை நினைவு படுத்துகின்றன.
 
சுருக்கமாகச் சொன்னால், அரசியல் களத்தில் தாக்குதல் தந்திரத்தையும் படைநகர்வில் எதிர்த்தாக்குதல் தந்திரத்தையும் அவா கடைபிடிக்கிறார். அரசியல் களத்தில் எதிரியை முன்னேறித் தாக்குகிறார். போர் களத்தில் எதிரியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கிறார்.
 
அண்மையில் நடந்த சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கருதி, தாமாக முன்வந்து பத்து நாள் போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்தனர். ஆனால் சிங்களக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபட்ச இந்தப் போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை. சார்க் மாநாடு நடந்த போதே வன்னிப் பகுதிக்குள் விமானக்குண்டு வீச்சுகள் நடத்தினார்.
 
இந்தப் போர் நிறுத்தம் ஓர் அரசியல் தாக்கதலாகவே அமைந்தது. அதன்மூலம் சார்க் நாடுகளுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் பிரபாகரன் முகாமையான சில செய்திகளை விடுத்தார்.
 
1. விடுதலைப் புலிகள் ஆய்த வெறியர்கள் அல்லர். அரசியல் தீர்வையே அலாவி நிற்கின்றனர்.
 
2. சார்க் நாடுகளையம் பன்னாட்டு சமூகத்தையும் புலிகள் மதிக்கிறார்கள்: அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறார்கள்.
 
2. தமிழீழம் அமைந்தால் தெற்காசிய ஒற்றுமைக்கும் அமைதிக்கும் முன்னுரிமை கொடுத்து, சார்க் அமைப்பில் அது இணைந்து கொள்ளும்.
 
இராஜபட்சவுக்கு இரண்டு குணங்கள் இருக்கின்றன. ஒன்று பயங்கரவாத முரட்டுத்தனம், மற்றொன்று கோமாளித்தனம்.
 
அண்மையில் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளை வன்னிப்பகுதியிலிருந்து வெளியேற ஆணையிட்டது அவரது முரட்டுத்தனத்திற்கு எடுத்துக்காட்டு. ஐ.நா.மனித உரிமை அமைப்பு, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை ராஜபட்சயின் இந்த நடவடிக்கையை மனித உரிமைக்கெதிரானது என்று கண்டித்தன.
 
அவரது கோமாளித்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், பிரபாகரனைச் சிறைப்பிடித்துத் தில்லிக்கு அனுப்பி வைப்பேன் என்று சில நாட்களுக்கு முன் அவர் கூறியதைச் சுட்டலாம். இந்திய அரசு அவ்வாறான ஒரு கோரிக்கையை ஏற்கெனவே எழுப்பி வைத்துள்ளது. ஆனால் அதை அண்மைக் காலங்களில் வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. சிங்களத்திற்கு ஆய்தங்கள் வழங்கினாலும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தும்படிதான் அரசியல் அரங்கில் இந்தியா வலியுறுத்திவருகிறது.
 
இவ்வாறான காலச்சூழலில் பிரபாகரனைப் பிடித்து ஒப்படைப்பது பற்றி பேசுவது பிதற்றலாக அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
 
முரட்டுத்தனமும் கோமாளித்தனமும் இணைந்த கலவை மனிதராக ராஜபட்ச இருப்பதால், புலிகளுடன் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையை ஒருதலைச் சார்பாக முறித்துக் கொண்டார்.
 
ஆனால், விடுதலைப் புலிகளோ பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தான் வெளிநடப்பு செய்தோம்; உடன்படிக்கையை இன்றுவரை நாங்கள் முறிக்கவில்லை. அந்த உடன்படிக்கைக்கு உயிர் கொடுக்கவே விரும்பகின்றோம் என்றனர்.
 
இந்த அரசியல் உத்தி, விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற சிங்கள அரசின் பன்னாட்டுப் பரப்பரையை முனைமழுங்கச் செய்துள்ளது. வட அமெரிக்கத் தலைவர்களில் ஒருவரான ஹிலாரி கிளிண்டன், புலிகள் பயங்கரவாத அமைப்பினர் அல்லர் என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். அமெரிக்க வல்லரசு, புலிகள் அமைப்பைத் தடை செய்திருந்தாலும் புலிகளுடன் பேசும்படி ராஜபட்சயை வலியுறுத்துகிறது.
 
உடன்படிக்கையை ஒருதலைச் சார்பாக முறித்துக் கொண்டதுடன் புலிகளுடன் பேச முடியாது என்று ராஜபட்ச கூறுகிறார். அத்துடன் அவா நின்றாரா? இருதரப்பையும் இணைக்கப்படுத்தி,  உடன்படிக்கைக்கு வழி செய்த நார்வேயையும் குற்றம் சாட்டி, அந்நாட்டுத் தலைவர்கள் வெளியேறும்படிச் செய்தார்.
 
இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐ.நா.மன்றமும் பல நேரங்களில் இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் சம தட்டில் வைத்துப் பேசுகின்றன. இருதரப்பும் அமைதிப் பேச்சுக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றன. ஓர் அரசையும் அதை எதிர்க்கும் விடுலை அமைப்பையும் சம தட்டில் வைத்து, பேச்சு நடத்த உலகநாடுகள் வலியுறுத்தும் போக்கு அவ்வளவு எளிதாக வந்துவிட்டதா?
 
இந்த நிலை வர, பன்னாட்டு ஏற்பிசைவு வர விடுதலைப்புலிகள் தலைமை என்ன பாடுபட்டிருக்கும்? எவ்வளவு மூளை உழைப்பும் பொறுமையும் விட்டுக்கொடுப்பும் இழப்பும், தொலைநோக்கும் தேவைப்பட்டிருக்கும். இவ்வாறான அரசியல் உத்தி எதுவும் ராஜபட்சவுக்குக் கிடையாது. போர் நடவடிக்கைகளில் ஊதாரித் தனமாக செலவிட்டு நாட்டைத் திவாலாகிவட்டார். சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து மேலும் மேலும் ஆய்தங்கள் வாங்கிப் போர் நடத்தி, சிங்கள மக்களுக்கும் வறுமை மற்றும் வேலை இன்மையைப் பரிசாகத் தந்துள்ளார். ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பறிக்கிறார்.
 
மூன்று லட்சம் ஈழத்தமிழர்களைக் காட்டு மரங்களின் கீழும் புதர்களின் மறைவிலும்வசிக்கும்படி விரட்டியுள்ளார். ராஜபட்ச வகுத்த அரசியல் உத்தி, இந்தியவை விடுதலைப்புலிகளுக்கு எதிராக நேரடிப் போரில் இறக்கி விடுவதுதான். அதுபலிக்கவில்லை. ஆய்தங்களும் பயிற்சியும் கொடுப்பதடன் இந்தியா நிற்கிறது.
 
இந்தியா, விடுதலைப் புலிகள் தோற்பதையே விரும்புகிறது. இருந்தும் நேரடிப் போரில் ஏன் இறங்கவில்லை?
 
ஒன்று தமிழ்நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பு; தமிழ்நாட்டு கட்சிகள் சிலவற்றின் எதிர்ப்பு. இன்னொன்று, விடுதலைப் புலிகள் இந்தியா குறித்துக் கையாண்டு வரும் அரசியல் உத்தி. பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக இந்தியா, பன்னாட்டுக் கடல்பரப்பில் விடுதலைப் புலிகளின் படகுகளையும் கப்பல்களையும் வழி மறித்தாலும், பல வகையான ஆத்திர மூட்டல்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செய்தாலும், படைக்கருவிகளையும் படையாட்கள் சிலரையும் சிங்களப்படைக்கு ஆதரவாக அனுப்பி வைத்தாலும், இந்தியாவை ஆத்திர மூட்டும் எந்த நடவடிக்கையிலும் விடுதலைப் புலிகள் இறங்கவில்லை.
 
இந்தியாவை நோக்கி நீட்டிய நேசக்கரத்தை பிரபாகரன் இன்னும் மடக்கவில்லை. பொறுமையும், சகிப்புத்தன்மையும் மிக்க இந்த அணுகுமுறை சிறந்த அரசியல் உத்தியாக உள்ளது. இந்தியாவிற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. விடுதலைப்புலிகள் மீது விரல் நீட்டிக் குற்றம் சுமத்த முடியாத நெருக்கடி இந்திய உளவுத்துறைக்கு உள்ளது.
 
இவ்வளவு கனபரிமானம் கொண்ட விடுதலைப் புலிகளின் இராசத்தந்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ராஜபட்ச திணறுகிறார். அவருக்கே உரிய கோமாளித்தனத்துடன் செப்டம்பர் 25-இல் சிறிது நேரம் தமிழில் பேசி, தமிழர்களைச் சமமாக நடத்துவது போல் நாடகம் நடத்தியிருக்கிறார். இது ஒரு கோமாளித்தனம் தவிர, இராசத்தந்திரம் அல்ல.
 
விடுதலைப்புலிகள் ஆய்தங்களை ஒப்படைத்துச் சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா.வில் அவர் தமிழி்ல் பேசினால் என்ன? சிங்களத்தில் பேசினால் என்ன? விடுதலைப் புலிகளுக்கு ஏற்பிசைவு வழங்குகிறேன், சமநிலையில் பிரபாகரனுடன் பேசத் தயார் என்று அவர் சிங்களத்தில் பேசியிருந்தால் தமிழர் நெஞ்சமெல்லாம் குளிர்ந்திருக்கும். உலக அரங்கிலும் அவர்க்கொரு மதிப்பு ஏற்பட்டிருக்கும். சின்னத்தனம் தவிர வேறு சிந்தியாத ராஜபட்சயால் அவ்வாறு அரசியல் காய் நகர்த்த முடியாது.
 
பிரபாகரன் ஏன் முழுப்போர் நடத்தாமல், எதிர்த்தாக்குதல் மட்டும் நடத்துகிறார்? அவரது இந்த அணுகுமுறையில் பலவகையான, அரசியல் மற்றும் படைத்துறை உத்திகள் பொதிந்து கிடக்கின்றன.
 
முதலில் பன்னாட்டு அரசியல் குறித்த ஒரு தொலை நோக்கு இதில் அடங்கியுள்ளது. பன்னாட்டு அரசியலில் நிலையற்ற தன்மை அதிகரித்துப் பரவி வருகிறது. இது இன்னும் அதிகரிப்பது விடுதலை இயக்கங்களுக்கு வாய்ப்பானது.
 
அமெரிக்க வல்லரசின் ஒரு கால் ஈராக்கில் மாட்டியிருக்கும்போதே இன்னொரு காலை அது ஈரானில் விடப்பார்க்கிறது. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்துள்ள பாகிஸ்தான் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கி, அதன் எல்லைக்குள் புகுந்து, அல்கொய்தாவினரையும் தலிபான்களையும் எதிர்த்துக் குண்டு வீசுகிறது; சுடுகிறது. தேடுதல் வேட்டை நடத்துகிறது.
 
இந்த அத்துமீறல்கள் அமெரிக்க பாகிஸ்தான் உறவில் விரிசல் உண்டாக்கியுள்ளது. இந்த விரிசலை இந்தியா பயன்படுத்த விரும்புகிறது.
 
பாகிஸ்தான் மற்றும் காசுமீர் சிக்கல்களில் இந்தியாவுக்கு உதவிட வேண்டுமெனில், ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரிலும், பின்னர் நடத்தக் கருதியுள்ள ஈரான் போரிலும் அமெரிக்காவுக்கு இந்தியா உதவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும்.
 
ஜார்ஜியாவில் அமெரிக்கப் படைத்தளம் இருப்பதை ரசியா எதிர்க்கிறது. அமெரிக்க வல்லரசுடன் காகசஸ் மலைப்பகுதியில் போர் மூண்டாலும் சங்திக்கத் தயார் என்று ரசியக் குடியரசுத் தலைவர் மெத்வதேவ் அறைகூவல் விட்டுள்ளார்.
 
ஆக, ஈராக், ஈரான், ஜார்ஜியா, ஆப்கான், பாகிஸ்தான் வரை அமெரிக்க வல்லரசு 2009இல் போர் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வாய்ப்புண்டு. குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கைன் வெற்றி பெற்றாலும், அல்லது சனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெற்றாலும் நெருக்கடி இவ்வாறுதான் இருக்கும். ஆப்கான் பொரைத் தீவிரப் படுத்துவதிலும் ஈரான் மீது போர் தொடுப்பதிலும் ஒபாமா ஆர்வமாக உள்ளார்.
 
அமெரிக்க - இந்திய அணு ஆற்றல் ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களுக்க இந்தியா துணை புரிய வேண்டும் என்ற விதிகளைக் கொண்டுள்ளது.
 
எனவே ஈராக்கிலிருந்து - பாகிஸ்தான் வரை பரவி நடைபெறவுள்ள ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்காவும், அதற்குத் துணையாக இந்தியாவும் ஈடுபட்டிருக்கும் பொது இலங்கை அரசுக்குப் படைவகை ஆதரவு தருவது கடினம். மெலும் இக்காலத்தில் காசுமீர் விடுதலைப் போர் தீவிரமடையும். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் விடுதலைப் போர்களும தீவிரப்படும் சூழல்கள் உருவாகியுள்ளன.
 
எனவே ஈழ விடுதலைப் போருக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளில் ஒருவகை பலவீனம் ஏற்படலாம்.
மேற்கண்ட வாய்ப்பு பற்றி ஊகிக்கும் போதே, ஒரு வேளை இதற்கு மாறாக நிகழ்வுகள் நடக்கவும் வாய்ப்புண்டு. தெந்காசிய மண்டலத்தில் இந்திய அரசு ஆதிக்கம் செய்துகொள்ள அமெரிக்க வல்லரசு துணைபுரியவும் கூடும். அவ்வாறான சூழலில் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் புலிகளுக்க உண்டு.
 
ஆக்கிரமிப்புப் போர்களுக்கப்பால் உலகமயத்தால் அமெரிக்க வல்லரசின் பொருளியல் வேகமாக சரிந்து வருவதைக் கவனிக்க வேண்டும். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளியல் சரிவைச் சரி செய்ய அமெரிக்கா படாதபாடு படவேண்டி வரும். தொற்று நோயாளித் தோளில் கைப்போட்டு அந்நோய் தொற்ற வாய்ப்பளித்தவரைப் போல், அமெரிக்கப் பொருளியலுடன் இணைக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளியலும் சரிவைச் சந்தித்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. மிகவும் தொளதொளப்பான ஏறுக்கு மாறான கூட்டணி ஆட்சி தான் ஆட்சி நடத்தும்.
 
இவ்வாறு அரசியல் நிலையற்ற தன்மை பன்னாட்டரசில் ஏற்படும்போது, இலங்கைப் பொருளியலும் அரசியலும் எப்படி இருக்கும்! ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது இலவம் பஞ்சு என்னவாகும்!
 
இலங்கைப் பொருளியல் ஏற்கெனவே திவாலாகிவிட்டது. அது மேலும் சீரழியும். அரசுக்கெதிரான சிங்கள மக்கள் கடுமையாகப் போராடும் அளவிற்கு நெருக்கடி முற்றும் வாய்ப்புண்டு.
 
இது ஒருபுறம் இருக்க, ராஜபட்சவின் குடும்ப ஆட்சி, ஆளும் இலங்கை சுதந்திரக்கட்சிக்குள்ளேயே புழுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மகிந்த ராஜபட்சவின் தம்பி கோத்த பாய ராஜபட்ச இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர்; அவரின் இன்னொரு தம்பி, பசில் ராஜபட்ச அமைச்சர் பொறுப்பில்!
 
இந்தப் புழுக்கத்தை எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்ளும். சிங்கள அரசியல் மேலும் உறுதியற்ற நிலை தோன்றும்.
 
முழுப்போரில் இறங்காமல் தக்க நேரத்திற்காகப் பிரபாகரன் காத்திருப்பதற்கான முகாமையான காரணங்களில் இவையும் அடங்கும். அதே வேளை எதிர்த்தாக்குதல் கடுமையாக நடக்கிறது.
 
2007 ஏப்ரல் 6 ஆம் பக்கல்(தேதி) சிங்கள அரசின் பலாலி கூட்டுப்படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய விமானத் தாக்குதல் ஒரு பதிலடிச் சமர்தான். அடுத்து அக்டோபர் மாதம் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது புலிகளின் விமானப் படையும் தரைப்படையின் சிறப்பு அணிகளும் பெருந்தாக்குதல் நடத்தின. அது மிகப்பெரிய இழப்புகளை சிங்களப் படைக்கு உண்டாக்கியது. கிட்டத்தட்ட 22 போர் விமானங்கள் தகர்ந்தன. பெருமளவு ஆய்தங்களைப் புலிகள் கைப்பற்றி மீண்டனர். புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தி விட்டு பாதுகாப்பாகத் திரும்பின.
 
2008 செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் பககல்களில், நாச்சிகுடா, வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன் குளம் பகுதிகளில் சிஙகளப் படையினரின் முன்னேற்றத்தை மறித்துப் புலிகள் தாக்கியதில் 75 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டனர். 20 உடல்களை கிளிநொச்சியில் வைத்துப் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகள் ஒப்படைத்தனர்.
 
நாச்சிகுடா, வன்னேரிக்குளம் சமரில் சிங்கள அரசு சீனத்திடமிருந்து வாங்கிய இலேசுரக டாங்கு எதிர்ப்பு ஏவுகணையைக் களமிறக்கி இருந்தது. சிங்களப் படையினரால் முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்ட இந்த சீன ஏவுகணை அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. புலிகளின் எதிர்த்தாக்கதலில் அவர்கள் பின் வாங்கும்படி ஆனது. அந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் 20 படையாட்கள் கொல்லப்பபட்டனர். பத்து சடலங்களைப் புலிகள் கைப்பற்றினர்.
 
இந்தத் தோல்வி சிங்களப் படையின் மனஉறுதியைத் தகர்த்திருக்கும். ஏனெனில் நவீன ஏவுகணையின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து அவர்கள் களமிறங்கினர். அந்நம்பிக்கை தகர்ந்தது.
 
வன்னிமண்டலத்தில் மன்னார்-பூநகரி நெடுஞ்சாலை ஏ32-ஐக் கைப்பற்றும் நோக்குடன் சிங்களப்படை போர் புரிகிறது. அத்திசையிலான முன்நகர்வைத் தடுத்து வருகிறார்கள் புலிகள். பெருமெடுப்பில், ஆள் இழப்புகளையம் ஆய்த இழப்புகளையம் சிங்களப்படை சந்திக்கிறது. ஏ32 நெடுஞ்சாலையை கைப்பற்றியபின் ஏ9, நெடுஞ்சாலையை முழு அளவில் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது தான் சிங்களப் படைநகர்வின் திட்டம்.
 
கடந்த செப்டம்பர் 9 -ஆம் பக்கல் அதிகாலை, சிங்கள அரசின் வவுனியா படைத்தலைமையகத்தின் மீது புலிகளின் வான்படை, தரைப்படையின் சிறப்பு அணிகள், கர்னல் கிட்டு பீரங்கிப் படை அணிகள், துணைத்தளபதி மதியழகி தலைமையிலான கரும்புலிப்படை ஆகிய இவை அனைத்தும் ஒருங்கிணைந்து தாக்கின. இது கூட பதிலடித் தாக்குதல் தான். அப்பகுதியை விடுவிக்கும் போர் அல்ல.
 
சிங்கள அரசின் வவுனியா ஜோசப் படைத்தளம், வன்னிப்படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு நடுவமாகவும், வான்புலிகளைக் கண்காணிக்கும் ராடார் மையமாகவும் செயல்படுகிறது. இந்திய அரசு கொடுத்த ராடார்கள் இந்திரா ஐ.ஐ. இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியா வழங்கியுள்ள எல் 70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இங்கு நிறுவப்பட்டிருந்தன.
 
இவை எல்லாவற்றையும் தாக்கித் தகர்த்தனர் புலிகள். கரும்புலிகள் பத்து பேர் வீரச்சாவெய்தினர். புலிகளின் 11 சடலங்களைக் கைப்பற்றியதாக சிங்களப்படை கூறியது. புலிகளின் இரு போர் விமானங்கள் பாதுகாப்பாக நிலைக்குத் திரும்பின.
 
அன்று அதிகாலை 3.05 மணியளவில் புலிகளின் இருவிமானங்களும் 25 கிலோ எடையுள்ள நான்கு குண்டுகளை வீசின. ஒரு குண்டு இந்திரா ராடாரை முற்றிலும் சேதப்படுத்தியது புலிகளின் விமானமொன்றைச் சுட்டு வீழ்த்தியதாக சிங்களப்படை கூறிக்கொண்டது. ஆனால் அது உண்மைச் செய்தி அல்ல என்று பின்னர் தெரியவந்தது.
 
சிங்களப் படைக்குக் கமுக்கமாக படைக்கருவிகள் வழங்கி வரும் இந்திய அரசு 40 மி.மீ. எல் 70 தன்னியிக்க எதிர்ப்புத் துப்பாக்கிகள், நிசாந் வகை ஆளில்லாத உளவு விமானங்கள், ஒளிக்கதிர்(லேசர்) மூலம் வழி நடத்தப்படும் குறிதவறாத குண்டு வழி நடத்திகள்(Laser Designators for PGMs) போன்ற ஆய்தங்களை வழங்கியுள்ளது. அவை மட்டுமின்றி படைத்துறை ஆட்களையும் இந்தியா அனுப்பியுள்ள கமுக்கம், புலிகளின் வவுனியாத் தளத்தாக்குதலில் அம்பலமானது. அங்கு பணியிலிருந்த இந்தியப் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த ராடார் பொறியாளர்களான ஏ.கே.தாக்குர், சிந்தாமணி ரவுத் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
 
புலிகளின் இவ்வகை எதிர்த்தாக்குதல்கள் எதைக் காட்டுகின்றன? அவர்களின் போர்த்திறன் கூடியுள்ளதே தவிர குறையவில்லை என்பதையே காட்டுகின்றன.
 
சந்திரிகா குமாரதுங்கா 'வெற்றி உறுதி' (ஜெயசிக்குறு) என்ற பெயரில் வன்னிக்குள் புகுந்து போர் நடத்தியபோதுதான் அவரது தோல்வி உறுதியானது. வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் இதயம் போன்றது. போர் நடத்த புலிகளுக்கு வாய்ப்பான பகுதி. அதிலும் வன்னியின் மேற்குப் பகுதியைவிடக் கிழக்குப் பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டது. மணலாற்றுக் காடு, நெடுங்கேணிக்காடு, இரணைமடுக்காடு என கதிரொளி நுழைய முடியாக்காடுகள் இருக்கின்றன. இங்கதான் கிளிநொச்சி உள்ளது.
 
இப்பொழுது பிரபாகரன் இருவகையான சமர் உத்திகளைக் கடைபிடிக்கிறார் என நாம் ஊகிக்கலாம். ஒன்று போரை நீடித்து, சிங்களப்படையினரைக் களைப்படையச் செய்வது, இரண்டு, வன்னிக்காட்டுக்குள் எதிரியை இழுத்து, சுற்றி வளைத்துத் தாக்குவது.
 
எனவே, இப்பொழுது முழுப்படைவலிவையும், போர்க் கருவிகளையும் சமரில் இறக்கிவிட அவர் விரும்பவில்லை.
 
கடற்புலிகள் இன்னும் சமரில் இறக்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பன்னாட்டு அரசியலில் விரைவாகப் பரவிவரும் நிலையற்ற தன்மை, 1929இல் ஏற்பட்டது போன்ற முதலாளிய பொருளியல் மந்தநிலை, அமெரிக்க வல்லரசின் ஈராக்-ஈரான்-காகஸ்-ஆப்கன்-பாகிஸ்தான் வரையிலான போர் நடவடிக்கைகள் - இதில் இந்தியாவும் துணைச் சக்தி ஆதல் - இந்தியாவில் காசுமீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் தீவிரமடையும் விடுதலைப் போர்கள், இலங்கையின் பொருளியல் சீரழிவு, இராஜபட்சயின் குடும்ப அரசியல் - பதிவ ஆசை இவை எல்லாம் வருங்காலத்தில் புலிகளுக்கு அரசியல் கதவை அகலமாகத் திறந்து விடும்.
 
நீண்டு கொண்டே போகும் போர் சிங்களப் படைகளைக் களைப்படையச் செய்யும். அவர்களுடைய படைத் தொகையில் 40 ஆயிரம் பேர் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையுள்ள ஒரு பெரும் படை ஆற்றல், செயல்படாமல் அங்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் இப்பொழுது யாழ்ப்பாணத்தை நோக்கப்போவதில்லை.அதற்குரிய காலம் வரும்.
 
கிழக்கு மாநிலத்தைக் கைப்பற்றி விட்டதாக இராசபட்ச தம்பட்டம் அடிக்கிறார். ஆனால் அம்மாநிலம் முழுமையாக அவர் கையில் இல்லை. அதன் பல்வேறு பகுதிகள் புலிகள் வசம் இருக்கின்றன.
 
விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவு 10.08.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை இணையதளத்தில் வந்துள்ளது.
 
"அரச பயங்கரவாதத்தின் உச்சமாகத் திகழும் மகிந்த ராஜபட்ச அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை மீட்டுவிட்டதாக வெற்றிவிழா நடத்திய நாள்தொட்டு இன்றுவரை சிறிலங்கா படையினருக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அதிகாரிகள் உட்பட 92 படையாட்கள் கொல்லப்பட்டார்கள். 208 பேர் படுகாயமடைந்தார்கள். யால படைமுகாம் தீயிட்டு எரிக்கப்பட்டது. உலங்கு வானூர்தி உட்பட மூன்று பவல் கவச வாகனங்கள், இரண்டு ஜீப்புகள், எட்டுக்கும் மேற்பட்ட இதர வாகனங்கள் அழிக்கப்பட்டன."
 
அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கும் தெற்கே சிங்களப் பகுதியை ஒட்டி உள்ளது. அங்கேயே சிங்களப்படைக்கு இவ்வளவு சேதங்களைப் புலிகள் ஏற்படுத்துகிறார்கள் எனில் மற்ற பகுதிகளில் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.
 
சிங்களப் படை வெற்றிமேல் வெற்றி குவிப்பது போலவும், புலிப்படை பின்வாங்கிச் செல்வது போலவும், ஒரு போலித் தோற்றம் ஏடுகளால், இதர ஊடகங்களால் இங்கு பரப்பப்பட்டு வருகிறது. சிங்களப் படை தரும் செய்தியை சிந்தாமல் சிதறாமல் அப்படியே தரும் செய்தி ஊடகங்கள், விடுதலைப்புலிகள் தரும் செய்திகளை விடுதல்கள் பல செய்தே வெளியிடுகின்றன. சில செய்திகளை வெளியிடவே மறுக்கின்றன.
 
தமிழ் இன உணர்வாளர்கள் சரியான செய்திகள் தெரியாமல் கவலுறுகின்றனர். கவலைப்படத் தேவை இல்லை. களநிலைமைகள் வலுவாக இருக்கின்றன.
 
அதே வேளை தமிழ்நாட்டில் நாம் செய்ய வேண்டிய சனநாயகக் கடமைகளை, மனித உரிமைக் கடமைகளைச் செய்ய வேண்டும்.
 
இந்திய அரசு, ஈழத்தமிழர்களைக் கொல்ல, சிங்கள அரசுக்குப் படைக்கருவிகளை வழங்குவதுடன் பயிற்சியும் தருகிறது. படையாட்களையும் அனுப்பி வைக்கிறது. ஈழத்தமிழர்களைக் கொல்ல மட்டுமல்ல, தமிழக மீனவர்களைக் கொல்லவும் துணை புரிகிறது.
 
தமிழ் உணர்வாளர்கள், சனநாயகர்கள், மனச்சான்ற பிளவுபடாத மனித உரிமையாளர்கள் உள்ளிட்ட முற்போக்காளர்களைத் திரட்டி இந்திய அரசின் தமிழ் இன எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்ப்போம்.
 
இந்திய அரசே,
 
இலங்கை அரசுக்குப் படைக்கருவிகள் தராதே
 
சிங்களப் படையினர்க்குப் பயிற்சி தராதே
 
இந்தியப் படையாட்களை இலங்கைக்கு அனுப்பாதே
 
தமிழக மீனவர்களைச் சுடும் சிங்களப் படையினரைச் சுட்டு வீழ்த்து
 
என முழங்குவோம் !
 
குறிப்பு : தரவுகள், புதினம், பதிவு இணையத்தளங்கள்
 

Saturday, October 11, 2008

சிங்களர்க்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?
இந்திய அரசைக் கண்டித்து

ஆர்ப்பாட்டம்

இடம் : மெமோரியல் அரங்கு, சென்னை.
காலம் : 13-10-2008, திங்கள், மாலை 4 மணி

இந்திய அரசே...

சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத்தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்கவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்!

ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு, உடை, மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத்தடை போட்டாய்!

இந்திய அரசே.
சிங்களப் படைக்;குப் போர்க்கப்பல், நவீனப்படைக்கருவிகள், ரேடார் கருவிகள், வெடிமருந்துகள் வழங்கியதுடன் பயிற்சி அளிக்கவும் 256 படைத்துறையினரை அனுப்பி உள்ளாய்!

ஈழத்தமிழர்களைக் கொல்வதற்குத் தானே இவை அனைத்தையும் கொடுத்தாய்!

சிங்களன் உனக்குப் பங்காளி; தமிழன் உனக்குப் பகையாளியா?

இப்பொழுது, வன்னிப்பகுதியில் சிங்கள அரசு விமானக்குண்டு வீச்சு நடத்தி அன்றாடம் தமிழர்களை இனப்படுகொலை செய்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும்; உயிர்காக்க வீடுகளை விட்டு வெளியேறி காடுகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவுக்குள் 6 1/2, கோடி தமிழர்கள் இருந்தும், ஈழத்தில் உள்ள 35 லட்சம் தமிழர்களைப் பாதுகாக்க முடியவில்லை.
கேட்க நாதியற்ற இனமாகத் தமிழ் இனம் தவிக்கிறது.
இளைஞர்களே, இனியும் ஏமாற வேண்டாம்,
வீறுகொண்டு எழுங்கள்; வீதிக்கு வாருங்கள்;
-------------------------------------------------------------------------------
கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
இந்திய அரசே
  • 1. சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக்கருவிகள் அனைத்தையும் திரும்பப் பெறு

    • 2. சிங்களபடைக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத்துறையினர் அனைவரையும் திரும்ப அழை.
    • 3. இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப்படையினர்க்கும காவல்துறையினர்க்கும் பயிற்சி கொடுக்காதே.
    • 4. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிங்கள அரசுக்கு அரசியல், பொருளியல், படைவகை உதவி எதுவம் செய்யாதே!
    -------------------------------------------------------------------------------
    தலைமை:
    தோழர் பெ.மணியரசன்,
    பொதுச் செயலாளர்,
    தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
    -------------------------------------------------------------------------------
    முன்னிலை
    தோழர் தியாகு,
    பொதுச் செயலாளர்,
    தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
    -------------------------------------------------------------------------------
    தோழர் விடுதலை இராசேந்திரன்,
    பொதுச் செயலாளர்,
    பெரியார் திராவிடர் கழகம்.
    -------------------------------------------------------------------------------
    வாழ்த்துரை
    தோழர் சி.மகேந்திரன்,
    இணைச் செயலாளர்,
    இந்தியப் பொதுவுடைமைக் கட்சி.
    -------------------------------------------------------------------------------
    இவண்
    தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,
    தொடர்புக்கு: 20/7, முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை -17.
    பேச : 044 - 24348911

    குறிப்பிடத்தக்க பதிவுகள்