Wednesday, April 04, 2007

நாம் யார் ? தமிழனா இந்தியனா ?

நாம் யார் ? தமிழனா இந்தியனா ?
க.அருணபாரதி
 
''தமிழ்'' என்பது ஒரு மொழி மட்டும் என்று யார் சொன்னது ?
 
இனம் என்பது மானுடவியல்(Anthropology) கூற்றுப்படி
மொழி, இடம், பண்பாடு, கலாச்சாரத்தின் படி இயற்கை வழிப்பட்ட ஒர் மக்கள் கூட்டமே இனமாகும்...
 
(இது ஓர் அறிவியல்.. யாரம் 'இனப்பிரிவினை''இனப்பாகுபாடு''இனபேதம்'' என்று கொதிக்கவேண்டாம்..)
 
தமிழருக்கு
ஒரு பண்பாடு (தமிழ்ப் பண்பாடு),
ஒரு மொழி  (தமிழ்),
ஒரு வாழ்வியல் நெறி  (திருக்குறள்),
ஒரு நிலப்பகுதி  (குறி்ஞ்சி, மருதம் உள்ளிட்ட நிலங்கள்)..
 
இப்படி பல வகைகளில் தனித்து விளங்கும் தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒர் தேசிய இனம்... 
 
குமரிக்கண்டம் முதல் சங்கஇலக்கியங்கள் காலம்வரை அதற்கான ஆதாரங்கள் ஏராளம் இருக்கின்றன..
காண்க::
 
இதில் குமரிக் கண்ட வரலாறு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது
 
இதில் ஏனைய மொழி வரலாறு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது 
 
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணாரிடமிருந்து ஒரு வரியை பார்ப்போம்..
 
ஒரு கேள்விக்கான பதிலை மழுப்பாமல், தெளிவாக பதிலாக சொல்ல வேண்டும்.. இது ஓர் இலக்கண விதி.. இதனை இளம்பூரணார் எப்படி விளக்குகிறார் பார்ப்போமா ?
 
''நும் நாடு யாதேனில்
தமிழ்நா டென்று ரைக்க''
 
அதாவது இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பிருந்தே ''தமிழ்நாடு'' என்கிற நாடு இருந்ததற்கான ஆதாரணமாக இதனைக் கொள்ளலாம்....
 
அது மட்டுமல்லாமல் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தே தமிழினம் ஒர் உலக வல்லரசாக வாழ்ந்து ஆண்டுகொண்டிருந்தது...
ஆனால் தமிழ் மன்னர்கள் எந்த வொரு நாட்டையும் அடிமைப்படுத்தி ஆளவில்லை.. அந்தந்த நாடுகளின் மீது படையெடுத்து வென்றதும் அங்கு ஒரு கல்வெட்டோ அல்லது தமிழர் கொடியையோ நடுவார்கள்.. பின் அந்த நாட்டை சார்ந்த ஒருவனை அரசனாக போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.. இப்படி தான் நடந்தது.
 
(அமெரிக்கா மற்ற நாடுகளில் அரசு அமைப்பது போல.. ஆனால் அமெரிக்கா போல தமிழக மன்னர்கள் மற்ற நாடுகளை கொள்ளையடிக்கவும் இல்லை அடிமை முறையில் நடத்தவும் இல்லை.. )
 
கனகவிசயன் என்ற தெலுங்கு மன்னர் ஒரு முறை கண்ணகியை தவறாக பேசிவிட்டார்.. அதனால் ஆத்திரம் கொண்ட சேர மன்னன் நெடுஞ்சேரலாதன், அவன் மீது படையெடுத்து இமயமலையிலிருந்து தமிழகம் வரை அவன் தலையில் கல்லெடுத்து வர வைத்து அந்தக் கல்லைக் கொண்டு கண்ணகிக்கு கோயில் எழுப்பியது வரலாறு... அந்த கோயில் இன்றும் சேரநாடான கேரளத்தில் இருக்கிறது...
 
இப்படி தமிழகம் ஒரு தனி நாடாகவும், தனித் தேசிய இனமாகவும் விளங்கியதற்கு நம்மிடம் பல வரலாற்று சிறப்புமிக்க ஆதாரங்கள் உள்ளன..
 
பின்னால் வந்த முகமதியர் படையெடுப்பாலும், பிற இனத்தவர் படையெடுப்பாலும் இங்கிருந்த தமிழகத்தின் நிலப்பகுதியும் ஆட்சிப்பகுதியும் சுருண்டன.. பின்னர் இந்நிலத்தை ஆண்டவர்கள் டில்லி ராஜ்யத்துடன் மக்களின் அனுமதி பெறாமலேயே இணைத்தனர்... அப்பொழுது கூட இந்தியா என்கிற நாடு உலகில் இல்லை...
 
சிந்து நதிக்கரையோரம், இந்தி மொழி பேசும் மக்கள், இந்து பண்பாட்டை பின்பற்றுவதால் இவை அனைத்தும் கலந்து ''இந்தியா'' என்கிற பெயர் ஏற்படுத்தப்பட்டது... அதனை நாங்கள் 'இந்தி'-'இந்து'-'இந்தியா' என்று சொல்லுவோம்..
 
வெள்ளையர் வந்த போது அவனை விரட்ட இந்த பரத கண்டம் எனப்பட்ட ''இந்தியத் துணைக் கண்டம்'''-{இப்பொழுதிருக்கும், இந்தியா, பாகிஸ்தான்,வங்காளதேசம் இவையணைத்தும் இந்தியத் துணைக் கண்டம்} ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என தலைவர்கள் விரும்பினர்..
 
அதற்காக ''பாரத தேசம், பாரத நாடு, இந்தியா'' என்கிற செயற்கையான நாடும் பெயரும் தோற்றுவிக்கப்பட்டது.. இந்தியத் துணைக்கண்டம் விடுதலையடைய எல்லோரும் பாடுபட வேண்டும் என இணைக்கப்பட்ட பல நாடுகளின் கூட்டமைப்பு தான் இந்தியா..
 
அதாவது இந்தியா என்கிற வார்த்தையை 1700 பிற்பட்ட இலக்கியங்களிலும் ஆவணங்களிலும் மட்டுமே காண முடியும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை..
 
இவ்வாறு தான் இந்தியா என்கிற செயற்கையான நாடு உருவானது... இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் எங்காவது இந்தியா ஒரு தேசம் என்று கூறிப்பிடப்பட்டுள்ளதா என்றால் இல்லை .....
 
அனைவரும் காண்க :: இந்திய அரசியலமைப்பு சட்டம்::http://lawmin.nic.in/legislative/Art1-242%20(1-88).doc
 
இதில் எங்காவது India is a Nation, Indian is our Nationality என்று பொருள் படும் படி குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்..
 
(குறிப்பு:: கண்ட்ரோல் + எஃப் (Ctrl+F)  அழுத்தி தேடவும்  )
 
எங்கும் கிடைக்காது.. ஏனெனில் இந்தியா ஒர் துணைக்கண்டம் என்பதையும், இந்தியா ஒர் ஒன்றியம்(யூனியன்-Union) என்பதையும் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது..
 
அரசியலமைப்பு பிரிவு 1-ல் இவ்வரிகளை காணலாம்..

(1) India , that is Bharat, shall be a Union of States.

 
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America)  -- State என்னும் வரையறைக்கு நாடுகளின் மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது அங்கு.. அங்கு நிலவுவது பிடரல்(Federal) எனப்படும் கூட்டாட்சி அமைப்பு..
 
அதே போன்ற அமைப்பு தான் இங்கும் இந்தியாவிலும் நிறுவப்பட்டீருக்க வேண்டும்.. ஆனால் இந்தியா Quasi-fedral எனப்படும் பாதி கூட்டாட்சி அமைப்பின் படி உள்ளது.. இதன் படி மத்திய அரசே மாநிலங்களின் மேல் அதிகாரம் செலுத்தும்..
 
தமிழர்கள் தனி நாடாக, தனித் தேசிய இனமாக இருந்து பின்னர் இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.. அதற்கு காரணம் இந்திய விடுதலையின் போது ஏற்பட்ட ஒற்றுமையுணர்வும், வடஇந்தியத் தலைவர்கள் மீது நமது தமிழகத் தலைவர்கள் கொண்ட பாசமும் தான் காரணம்..
 
அவ்வாறு இந்திய ஒன்றியத்தில் இருப்பது ஒன்றும் தவறல்ல.. ஆனால், இந்திய ஒன்றியத்தில் நாம் இணைந்து விட்டதால் நமது தேசிய இன, மொழி மற்றும் நில வரையரை அடையாளங்களையும் உரிமைகளையும் பறிப்பதற்கு அவர்கள் திட்டமிடும் போது நாம் என்ன செய்வது ??????
 
2000 வருடங்களாக அரியணையிலிருந்த தமிழை அகற்றிவிட்டு, இந்தி ஆங்கில மொழிகள் இங்கு வளர யார் காரணம் ??
 
96 சதவீதம் தமிழர்களே வாழ்ந்த தமிழ்நிலங்களான தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை தமிழர்களை கேட்காமலேயே கேரளாவிற்கு அளிக்க யார் தைரியம் கொடுத்தது ????
 
நமது தமிழகத்திலிருந்து மின்சாரம், உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொண்டு நமக்கு நீர் கூட தர மறுக்கும் கர்நாடகத்திற்கு யார் தைரியம் அளித்தது ?
 
நெய்வேலியிலிருந்து மின்சாரம் யாரைக் கேட்டு தமிழகத்திற்கே விலை கொடுத்து விற்கிறது மத்திய அரசு ??
 
நமது மாநில எல்லைகளை நம்மைக் கேட்காமலேயே மத்திய அரசு மாற்றலாம் என்கிற அதிகாரம் அவர்களுக்கு எப்படி உள்ளது ??
காண்க:: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 3
 
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அவரவர் தாய்மொழி உயர்நீதிமன்றத்திலிருக்கும் போது தமிழை மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொண்டுவர மத்திய அரசு மறுப்பது ஏன் ?
 
இவ்வாறு பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.. இதற்கெல்லாம் பதில் அறிய விரும்பாமல் ''போனால் போகட்டும் போடா'' என்று இந்தியன் என்கிற போலி அடையாளத்தில் நான் தமிழக உரிமைகள் பறிபோவதை விரும்பவில்லை..
 
ஏனெனில் இந்தியன் என்பது காலத் தேவைக்கேற்ப உருவாக்கப்ட்ட  அரசியல் உருவக பெயர் தான்..
 
இந்தியாவிற்கு பொது மொழி இல்லை.. பொது பண்பாடு இல்லை.. பொது நிலவரையறை கூட இல்லை..அப்படியிருக்க இந்தியன் என்பது இனம் அல்ல.. அதனால் நமது தேசிய இனம் தமிழே...
இந்தியன் என்கிற இனம் இதுவரை இருந்ததில்லை..
 
நாம் பிறப்பாலும் மொழியலும் இனத்தாலும் தமிழரே...
நாம் இந்தியர் அல்ல..
இந்தியக் குடியுரிமை பெற்ற மக்கள் தாம்..
 
Our Nationlity    : Tamil
Our Citizenship :  Citizen of India
 
இந்த அரசியல் கருத்துக்களை மறைத்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க முயலும் வடஇந்திய பெரு முதலாளிகளும், அவர்களின் அரசியல் தரகர்களான 'இந்தி'ய தேசிய கட்சிகளும், அவர்களுக்கு ஊடகங்களான ஊடகங்களும் தான் இந்தியா ஒரு பழம்பெரும் தேசமாகவும், இந்துக்களின் தேசமாகவும் சித்தரித்து ஆதாயம் தேட முற்படுகின்றன..
அவர்களது போலி பிரச்சாரத்திற்கும் உண்மைக்கு புறம்பான பல தகவல்களையும் கொண்டு பரப்பபட்டு வரும் கோட்பாடுகள் தாம் இன்று வெகு மக்கள் கோட்பாடாகிவிட்டது.. அதனை மாற்றியமைக்க நாம் ஒற்றுமையுடன் நமது உரிமைக்காக போராட வேண்டும்..
 
ஞாபகம் இருக்கட்டும்.. நாம் கேட்பது யாசகம் அல்ல, ஆண்டாண்டு காலமாக நமக்கு இருக்கும் உரிமைகளை தான்...


--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்