Wednesday, June 18, 2008

திருச்சியில் ஒரு புரட்சி

காடு வரை பாடை தூக்கிச்சென்று நீத்தார்க்கு பெண்களேஇறுதிச் சடங்கு நடத்திய புதுமைநிகழ்வு திருச்சியில் நடந்தது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மக்கள் திரள் அமைப்பான தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத்தலைவர் தோழர் கவித்துவன்.இவரது தாயார் திருமதி மூக்காயிஅம்மாள் கடந்த 16-05-2008பிற்பகல் திருச்சியில் காலமானார்.அவரது இறுதிச்சடங்குகள் மே 17-இல் நடைபெற்றன.மூக்காயி அம்மாளின்உடலை எடுத்துச்செல்ல பாடைக்கட்டுவதிலிருந்து பாடைத்தூக்குவதிலிருந்து சுடுகாட்டில்இறுதி நிகழ்ச்சிகளை நடத்துவதுவரை அனைத்தையும் பெண்களேசெய்து முடித்தனர்.நீத்தார் உடலோடுபெண்கள் வீதித்தாண்டி வரக்கூடாதுஎன்ற பிற்போக்கு சம்பிரதாயத்தைஅப்பெண்கள் உடைத்தெறிந்தனர்.

தோழர் கவித்துவன் மனைவியும்மகளிர் ஆயத்தின் செயல் வீராங்கனையுமான தோழர் சுகுணக்குமாரி,பெரியார் மகளிர் இயல் மையத்தைச் சார்ந்த தோழர்கள் புவனா,பெரிசியா மற்றும் தோழர் அனுராதா ஆகிய நான்கு பெண்களும்சோ;ந்து எல்லாப் பணிகளையும் செய்து முடித்தனர்.“தொடக்கத்தில் உறவினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும்நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்கு பிறகு அவர்களே தமது கருத்தை மாற்றிக்கொண்டு தொடர்ந்து இது போல செய்யுங்கள்” என்று கூறியதாகதோழர் கவித்துவன் தெரிவித்தார்.

நன்றி : புதிய தமிழர்ர் கண்ணோட்டம், சூன் மாத இதழ்

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்