Tuesday, June 03, 2008

வலி உணரு - கவிஞர் கவிபாஸ்கர் கவிதை

வலி உணரு
கவிபாஸ்கர்

கடல் அலையில்
கால் நனைக்காதே
அது என் ஈழத்துத்
தோழர் தோழிகளின்
உப்புக் கண்ணீர்..

பக்கத்து ஊருக்கு
பரிசலில் போனவளே
பரிசலில் ஏறியதும்
மூக்கைப் பிடிக்காதே
அது மீன் கவுச்சி அல்ல...
ஈழ விடுதலைக்கு
சிந்திய இரத்தம்..

அடியே என்
அடி மனசில்
ஆணி அடித்தவளே..
பனை மரத்தில்
ஆணி அடிக்காதே
அது
ஈழப்போராளிகளின்
குகை வீடு....

கடல் ஆழத்தில்
மூழ்கு
வலம்புரி சங்கை எடு
தமிழீழ மக்களின்
அழுகுரல் கேள்

அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...

5 கருத்துகள்:

Anonymous said...

NAANREE ANNA
ORU EELA THAMILAN

Anonymous said...

அடியே என்னவளே,
இக் கவிதையை படிக்காதே,
இது
ஈழக்கிழவிகளின் ஓலம்.

Anonymous said...

சரி அப்படியே ஈழத்துக்கு போய் வேள்ளாட போராட்டம் செய்

சென்ஷி said...

//அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...
//

:))

கவி வரிகள் அருமை.. ஆனால் எதிர்பார்ப்புகளை மற்றவரின் மேல் திணிப்பது....

Anonymous said...

குச்சிகாரி மகனே

குறிப்பிடத்தக்க பதிவுகள்