Sunday, November 19, 2006

மிகப் பிடித்த திரைப்படங்கள்

திரைப்படங்கள் மீது எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. அதில் கலைக்கும் காதலுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதையே அதற்கு காரணம். வெகுஜன ஊடகமான இதில் இன்று ஆபாசமும் வன்முறையும் வக்கிரமும் மிகுந்து காணப்படுவதால் அதன் மேலிருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது.

ஞானராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’
வரலாற்றில் இன்றும் நிலைத்திருக்கும் மாமனிதர்களின் வாழ்க்கையை படம் பிடிப்பது இயல்பான காரியம் என்றாலும், இந்த திரைப்படம் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு பாரதியை புரிந்து கொள்ள மட்டுமல்லாமல் சுவாரசியமாக அதனை படம்பிடித்திருந்தார். அதன் தாக்கம் தான் எனது பாரதிப் பற்றை வளர்த்தது.

சத்தியராஜின் ‘புரட்சிக்காரன்’
நான் எதை நினைத்தேனோ அதை படமாக்கியிருந்தனர். சமூகத்தில் வேரூன்றியிருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு சாவு மணியடிக்க வேண்டும் என்கிற பெரியாரின் கொள்கையையே படமாக்கியது பிரமாதம். கடவுளை ஏற்பவர்கள் சிந்தனைக்கு இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன்.

கதிரின் ‘காதல் வைரஸ்’
எனது கதையோ என்று நினைக்கும் அளவிற்கு என் வாழ்வில் நான் அனுபவித்த பல சம்பவங்களை எனக்கு பட்டியலிட்டு ஞாபகபடுத்திய படம்.

செல்வராகவனின் ‘ரெயின்போ காலனி’
காதலின் வலியை வலிமையை உணர்த்திய காவியம். இன்றும் இந்த படத்தின் பாடல்களை தான் தினமும் முனுமுனுத்துக் கொண்டிருப்பேன். எனது நெஞ்சில் பதிந்த சில நினைவுகளை எழுப்பக்கூடிய வல்லமை இந்த படத்திற்கு உண்டு.

சீமானின் ‘தம்பி’
இந்த படத்தை பார்த்த பிறகு தான் கொள்ளைகளை திரைத்துறையில் பரப்ப முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ‘எமது ஆயுதங்களை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்’ என்ற பொதுவுடைமை பேரறிஞர் தோழர் மாவோவின் வைரவரிகளை கொண்டு தொடங்கும் இந்த படம் எதிர்காலத்திற்கான ஒரு அறைகூவல்.

மிகப்பிடித்த திரைப்பாடல்கள்
பாரதி- கேளடா மானிடா…
புரட்சிக்காரன் - தூங்கும் புலியை…
காதல் வைரஸ் - எந்தன் வாழ்வின்…
ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து…

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்