Sunday, November 12, 2006

வணக்கம் தோழர்களே...


சுயசரிதை எழுதும் அளவிற்கு நான் ஒன்றும் பெரும் சாதனைகள் படைத்தவனல்ல. உலகின் மூத்த இனமான தமிழினத்தின் 7 கோடி மக்களுள் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…
உலகில் பிறந்த எந்த உயிரினமும் எந்த பொருளும் பிறர் உதவியின்றி வாழ்ந்திட இயலாது. ஓவ்வொரு பொருளும் உயிரும் மற்றவற்றை சார்ந்தே வாழ வேண்டும் என்பது இயற்கை வகுத்துள்ள நியதி. இதற்கு மனிதன் மட்டும் விதிவிலக்கல்ல…
மனிதன் வாழ்வதற்கும் பிறரை வாழ்விப்பதற்கும் உறவுகளே முக்கிய காரணங்கள். இந்த உறவுகள் தாய், தந்தை, காதலி, சகோதரி, சகோதரன், நண்பன், தோழி என குடும்ப சூழலில் ஆரம்பித்து மொழி, இனம், நாடு, குடிமகன் என சகல விடயங்களிலும் உறவுகளே வாழ்கின்றன. ..அந்த உறவுகளுக்காகத் தான் மனிதன் வாழ்கிறான். போராடுகிறான்…
இப்படிப்பட்ட மனித உறவுகளுக்கு அடிப்படை காரணம் அன்பாகும். அதனால் தான் ஆன்மிகப் பெரியோர் அன்பே சிவமென கதைப்பர். அந்த அன்பு தன்னை சார்ந்தவர்களிடத்தில் மட்டுமே இருந்தால் பயன்தராது. பிறரையும் தன்னை சார்ந்தவன் போல கருதி தன்னுரிமை கெடாத வண்ணம் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்கிற சிந்தனையை முன்வைத்து எனது இணையதளத்திற்குள் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்….
என்னைப் பற்றி தெரிந்து கொள்ளவும் பிறர் புரிந்து கொள்ளவும் இந்த இணையதளம் உதவும் என நம்புகிறேன். இருக்கும் புதிய உறவுகளை வளப்படுத்தவும் புதிய உறவுகளை பெறவும் இந்த வலைதளம் உதவும் என மனதார நம்புகிறேன். எனது கவிதைகள், கட்டுரை, குறும்படங்கள் போன்ற படைப்புகளை இந்த இணையத்தில் பார்த்து ரசிக்கலாம். தங்கள் விமர்சனங்கள் எதுவானாலும் எமக்கு எழுதலாம்.
22 வயதாகும் நான் தற்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். மறுமலர்ச்சி என்கிற இணையத் தமிழ் மாத இதழையும் நடத்தி வருகிறேன்..
சமூகம், சமுதாயம், தத்துவம், கொள்கைகள் போன்ற உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள் தொடர்பு கொண்டு கருத்துக்கள் பரிமாற இந்த வலைதளம் மிகவும் உதவும் என எதிர்பார்க்கிறேன்…
தோழமையுடன்
க.அருணபாரதி

2 கருத்துகள்:

மாசிலா said...

வணக்கம். நல்வரவு தோழரே!

ஆரம்பமாகட்டும் தமிழுக்கு உங்கள் சேவை

நம்ம பூர்வீகமும் பாண்டிதாங்க.
ஹி! ஹி! ஹி!

நன்றி!

kugan said...

vanakkam sakothara;This is kugan from chennai.Native jaffna srilanka.keep on your works.It,s very nice to hear your works.keep going.Nanri.

குறிப்பிடத்தக்க பதிவுகள்